Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போக்கு மாற்றம் - சேனாதி - மாவிலாற்றில் தொடங்கி இரு வருடங்களுக்கும் மேலாக நீடித்துச்செல்லும் நாலாம் கட்ட ஈழப்போரின் பிந்திய நிலைவரப்படி, இரு தரப்பும் கைவசம் வைத்துள்ள தேர்வுகளின் அடிப்படையில் போரின் போக்கை ஆராயும்போது, புதிய பரிமாணங்கள் தென்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதற்காக நிறுத்தப்பட்ட படைகளை 'எக்காரணம் கொண்டும் அகற்றமாட்டோம்" என்று சிறிலங்கா தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா பலமுறை சத்திய வாக்குத் தந்திருந்தபோதும், அங்கே அண்மைக்காலத்தில் நடந்த நிகழ்வுகள், வேறுவிதமான யதார்த்தத்தைச் சொல்கின்றன. வன்னிப்போர் அரங்கிலே, கால அட்டவணை மற்றும் படைய வளங்களின் அடிப்படையில் கொழும்பின் கையை மீறிச் சென்று கொண்டிருக்க…

  2. உள்ளிருந்து ஒரு குரல் - புரட்டாதி 2008 மன்னாரின் முள்ளிக்குளத்துக்கும் கீரிசுட்டானுக்குமிடையே சோலைக் காடொன்று உண்டு. காட்டின் ஒரு திசையில் போனால் விளாத்திக்குளம் வரும். அங்கே லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் சில கண்காணிப்பு நிலைகளை அமைத்தார்கள். விளாத்திக்குளத்தின் பின்புறமாக ஒரு திசையில் சோலைக் காட்டினுள் புகுந்த 2 ஆம் லெப். மாலதி படையணியின் ஒரு அணி தமிழ்தென்றலின் வழிகாட்டலில் கண்காணிப்பு நிலைகளுக்கான இடங்களைத் தேர்வு செய்து, இயற்கையான மரக்காப்புகளுடன் நின்றுகொண்டு, தேவையான அகழிகள் சிலவற்றைத் தம் தேவைக்கேற்ப வெட்டியது. காட்டிடையே எழுந்த இந்த முன்னரண் தொகுதிக்கு வலப்புறம் கோயில்மோட்டை இருந்தது. அவர்களும் இவர்களுமாக வேலை செய்து போர் முன்னரங்கை இணைக்க வேண்டும்…

  3. மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று தெற்கு பிரதேசபைக்குட்பட்ட வேடமுனை கிராமம்பகுதியில் விடுதலைப்புலிகள் என்று எண்ணி படையினர் இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுட்டிருந்த படையினர் இரு அணிகள் நேருக்கு நேர் சந்தித்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்திலேயே இவர்கள் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tamilwin

  4. விதுரன் வன்னியில் யுத்த நிலைமை மோசமடைகிறது. பூநகரி மற்றும் கிளிநொச்சி நோக்கிய படை நகர்வு மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக மௌனம் சாதித்து வந்த புலிகள் போர்க்கோலம் பூண்டு விட்டதால் இனி வன்னிக் களமுனை அதிரப்போகிறது. இதுவரை இருந்த நிலைமை இனியில்லையென்ற நிலையில் புலிகளின் பதிலடியை இனி ஒவ்வொரு கணமும் படையினர் எதிர்கொள்ளப் போகின்றனர். வன்னியை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதற்காக அரசும் படைத்தரப்பும் எதனையும் செய்யத் தயாராகிவிட்டன. வன்னியிலுள்ள நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றிவிட்டு வன்னியை முழுமையாகக் கைப்பற்றிவிடுவதற்காக சர்வதேச சமூகத்துடனும் சர்வதேச தொண்டர் அமைப…

  5. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி எரிவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் அவர்களுடைய சகோதரியின் கணவர் ஒட்டுகுழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.45 மணியளவில் களுவாஞ்சிக்குடி பழைய காவல் நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீட்டிற்கு சென்ற இனிய பாரதியின் தலைமையிலான குழுவினர் இவரை சுட்டுக்விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. கொல்லப்பட்டவர் 60 அகவையுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சாமித்தம்பி கந்தபோடி என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்ட பின்னர் உறவினர்களினடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்து…

  6. இந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடலாம் எனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அதனை இலக்காகக் கொண்டே இராணுவத் திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "இராணுவத்தளபதி களநிலைமைகளைச் சரியாக ஆராய்ந்து, எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் கிளிநொச்சியை அடைந்துவிடலாம் என ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கிறார். இந்தக் கால வரையறையை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது திட்டங்களை வகுத்துள்ளோம்" என்றும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போர் மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் அவர், மோதல…

  7. தமிழக மீனவர்களை காக்க பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம் சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் பலமுறை தான் வலியுறுத்தி இருப்பதை குறிப்பிட்டுள்ளார். முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 முறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் தமிழக மீனவர்கள் 8 பேர் பலியாகி உள்ளனர்; மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளன…

    • 12 replies
    • 1.7k views
  8. கிழக்கில் காணாமல் போனோரது குடும்பங்களுக்கு நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என மாகாண முதலமைச்சர் சிவேநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் கிழக்கில் காணாமல் போனோருக்காக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலான தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளின் அடிப்படையில் நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் இவ்வாற…

  9. மிகவும் வல்லமை படைத்த போராளிகளைக் கொண்ட புலிகள் அமைப்பைத் தோல்வியுறச் செய்வது எளிதான காரியமல்ல என்று வோல் ஸ் ரீட் ஜேர்னல் (WALL STREET JOURNAL) என்னும் நாழிதழ் தனது ஆகஸ்ட் 28ம் திகதிய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து பிரசுரமாகும் அந்த இதழின் ஆசிரிய தலையங்கத்தில் மேரும் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கை இராணுவம் வடக்கு முனையில் தமிழ் புலிப் போராளிகளுக்கு எதிரான முழு அளவிலான தாக்குதலை இரண்டு மாத காலமாக மேற்கொண்டு வருகின்றது. கால் நூற்றாண்டு காலமாக நாட்டைக் கலக்கி வந்த யுத்தத்திற்கு முடிவு காணப்படலாம். அந்தப் பிராந்தியத்தில் பெருமளவு பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் புலிகளின் தலைநகர் கிளிநொச்சியையும் விரைவில்…

  10. சட்டவிரோத ஆயுத முகவர்களின் மூலம் அதி நவீனரக ஆயுதங்களை புலிகள் சீனாவிலிருந்து அண்மையில் கொள்வனவு செய்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை, இறுதிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் உக்ரேய்னிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. உடனடியாக ஆயுதங்களை விநியோகிக்குமாறு புலிகளின் தலைமைத்துவம் உக்ரேய்னில் உள்ள ஆயுத முகவர் நிறுவனமொன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரேய்ன் சட்டவிரோத ஆயுத சந்தையில் மிகவும் குறைந்த விலையில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரியவருகிறது. ரி-56 துப்பாக்கியொன்று 4000 முதல் 5000 ரூபாவிற்…

  11. தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் வயதெல்லை 15 ஆக குறைக்கப்படவுள்ளதென ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஏ.ஜீ. தர்மதாஸ தெரிவித்துள்ளார். 1968ம் ஆண்டு 32ம் இலக்க ஆட்பதிவு சட்டமூலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நடைமுறை அமுலப்;படுத்தப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டைகளுக்குப் பதிலாக கைவிரல் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு காரணிகளைக் கொண்ட நவீன அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவம் ஒப்படைக்கப்பட்டு பத்து தினங்களுக்குள் அடையாள அட்டைகளை விநியோகிக்க கூடிய வகையில் புதிய நடைமுறைகள் மாற்றியமைக்கப்படவுள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  12. மட்டக்களப்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.கிழக்கில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி நிதி உதவிகளை வழங்க உள்ளது. இதற்கென சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டு மட்டக்களப்பில் முதலாவது சர்வதேச கிரிக்கட் போட்டியைத் நடாத்துவது குறித்தான சாத்தியங்களை இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று அண்மையில் கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் கண்டறிந்ததாகத் தெ…

  13. வீரகேசரி வாரவெளியீடு - புலிகள் நடத்திய விமான தாக்குதலில் எந்தவிதமான இராணுவ முக்கியத்துவமோ பாதிப்போ இல்லை. அவர்களை ஆதரிக்கும் சமூகத்தை ஆசுவாசப்படுத்துவதற்காகவே புலிகள் திருகோணமலை துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திவயின சிங்கள பத்திரிகையின் வார வெளியீட்டுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, புலிகளின் விமானப்படையினர் இதுவரை ஆறு தடவைகள் தாக்குதல்களை நடத்தி உள்ளனர். எமது விமானப் படையினரோ இக்காலக் கட்டத்தில் ஆறாயிரம் தடவைகள் விமான தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அவர்களின் விமானங்களில் முப்பது கிலோ எடை உள்ள குண்டை மாத்திரமே கொண்டு செல்ல முடியும். எமது விமானங்க…

    • 4 replies
    • 1.5k views
  14. இச்சட்டமூலம் முஸ்லிம் பள்ளிவாயில்களில் சத்தமிடும் ஒலிபெருக்கிகளின் குரல்வளையை நசுக்கும் நோக்கிலேயே பொதுநலச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. அந்நேரம் தெரியாத அநீதி இப்போது தெரிகிறதாம். தனக்கு தனக்கு என்றால்.......அடிக்குமாம். ஆதாரம் வீரகேசரி வாரவெளியீடு

  15. வடக்கில் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை தம்மால் தீர்மானிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன "எந்தவொரு நபரும் தான் விரும்புகின்ற பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறார். அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை எம்மால் வழங்க முடியாது" என ஐ.நாவின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், அப்பகுதியில் வாழும் மக்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றவே ஐ.நா அதிகாரிகள் அங்கு தங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்ட…

    • 1 reply
    • 939 views
  16. கனடாவிலிருந்து வந்த மதகுருவிடம் நவீனரக தொடர்பாடல் கருவிகள் [07 - September - 2008] [Font Size - A - A - A] *கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணை வெளிநாடொன்றிலிருந்து நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை நள்ளிரவு இலங்கை வந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவரிடமிருந்து மிகவும் சக்தி வாய்ந்ததும் மிக நவீன வசதிகள் கொண்டதுமான தொடர்பாடல் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒலிபெருக்கிக் கருவிக்குள் மறைத்து வைக்கப்பட்டவாறு இவை கொண்டுவரப்பட்டபோதே சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் ஒன்றின் பேரிலேயே இந்த மதகுரு கொண்டுவந்த பொருட்களை சோதனையிட்டபோது ஒலிபெருக்கிக் கருவிக்குள் சுமார் 12 லட்சம் ரூபா பெ…

  17. இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் இந்தியா சென்றிருக்கிறார். சார்க் மகாநாட்டை முன்னிட்டு சிறிலங்கா வந்திருந்த உயர்மட்டக் குழு சம்பந்தரை சந்தித்து, இந்தியாவிற்கு தமிழர் மீது இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தி அவரை மகிழ்வித்திருந்தது. தற்போது மீண்டும் அவ்வாறானதொரு மகிழ்விப்பிற்காக சம்பந்தரை இந்தியா அழைத்திருக்கலாம். நீண்டகாலம் தனது சொந்தத் தொகுதியான திருகோணமலைக்கு செல்லாதிருந்த சம்பந்தர் சமீபத்தில் பலத்த பாதுகாப்புடன் திருகோணமலைக்குச் சென்று கந்தசாமியை தரிசித்துவிட்டு தற்போது இந்தியாவிலுள்ள சில நாராயணன்களை தரிசிக்கச் சென்றிருக்கிறார். அவர் என்ன செய்தி கொண்டு வரப் போகின்றார் என்ற ஆவல் விடயமறிந்த எ…

  18. வன்னிக்கள நிலவரம் மேலும் மோசமாகப்போவதாக லக்பிம ஆங்கில செய்திதாள் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் நாளொன்றுக்கு 10 தமிழீழ விடுதலைப்புலிகளை கொல்வதாக கூறுகின்ற போதும்இ கடந்தவாரம் வன்னியில் படையினர் மீது நடத்திய தாக்குதல்; அவர்கள் இன்னும் பலமாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தியுள்ளது என லக்பிம குறிப்பிட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று 57 -1 வது படைப்பிரிவைச்சேர்ந்த ; நான்காவது சிங்கப் படையணி வன்னேரிக்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளைத் தாக்கியது. சிறியரக ஆயுதங்களைக் கொண்டே இந்ததாக்குதல் நடத்தப்பட்டது. அதன் மூலம் சுமார் 600 மீற்றர் பிரதேசத்துக்குள் படையினர் முன்னேறினர். லெப்டினன்ட்கள் மங்கல ராஜித மற்றும் சமந்த திராணகம ஆகியோர் படையினரின…

    • 5 replies
    • 3.2k views
  19. வன்னி மக்கள் அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. சொந்த மண்ணில் வாழவிடு இல்லாது போனால் அந்த மண்ணிலே சாகவிடு என்று தன்மானத்தைக் காத்துக் கொள்ளவே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அவர்கள் நிராகரிக்கிறார்கள். இப்படிக் கூறியுள்ளார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன. வன்னி மக்களை வவுனியாவுக்கு வருமாறு ஜனாதிபதி உட்பட அரச உயர்மட்டத் தலைவர்கள் அழைத்தாலும் அந்த மக்கள் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேறமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். வவுனியாவுக்கு வன்னி மக்களை அழைக்கும் அரசின் முயற்சி குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:- யுத்தத்தைத் திணித்திருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நிவாரணங்களையும் உணவுப…

  20. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஏழாம் வட்டாரத்தில் உள்ள வடிவேல் என்பவரின் வீடு கருணா குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளது. கருணாகுழுவின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதியின் தலைமையிலான குழுவினரே வீட்டுக்குத் தீவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 8மணியளவில் இச்சம்பம் இடம் பெற்றுள்ளது. இந்த தீவைப்புக் காரணமாக ஒன்றரை லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இப்பிரதேசத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும் சில தினங்களுக்கு முன்னர் இக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  21. அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் வன்னிக்குள் செல்வது வெள்ளி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மற்றும் ஏ9 வீதிகளை நோக்கி படையினர்ஷெல் தாக்குதலை மேற்கொண்டு வருவதானாலேயே இந்தத் தடையை ஏற்படுத்தியதாகப் படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு செல்லும் அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் ஓமந்தையூடாக பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை நள்ளிரவு கிளிநொச்சி நகரில் படையினர் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் போரூட் அமைப்பினரின் கட்டிடத்திற்கு அருகிலிருந்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. இந்நிலையில் கிளிநொச்சியில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பணிகள் படை நடவடிக்கையால் பெரிதும் முடங்கிய…

  22. வன்னிக்குள் ஆழ ஊடுருவியுள்ள இராணுவம் கடுமையான எதிர்ப்புக்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நாச்சிக்குடாவுக்கு தென்புறமாக நிலைகொண்டுள்ள 58 ஆவது படையணியும், அதற்கு சமாந்தரமாக நகரும் 57 ஆவது படையணியும் அக்கராயன் மற்றும் வன்னே?க்குளங்களுக்கு இடையில் உள்ள 8 ஆவது, 9 ஆவது மற்றும் 10 ஆவது மைல்கல் பகுதிகளை நோக்கி முன்நகர்வை மேற்கொண்ட போது கடுமையான சமர் வெடித்திருந்தது. திங்கட்கிழமை அதிகாலை நாச்சிக்குடாவுக்கு தென்புறம் மற்றும் துணுக்காய் பகுதிகளில் இருந்து வடகிழக்காக வன்னே?க்குளம் நோக்கி 58 ஆவது படையணியும், அதற்கு உதவியாக அக்கராயனை நோக்கி 57 ஆவது படையணியின் 1 ஆவது பிரிகேட்டும் நகர்வை மேற்கொண்டிருந்தன. நகர்வை மேற்கொண்ட படையினர் விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்…

  23. இலங்கைப் படையினருக்கு எதிரான இறுதிப் போருக்குத் தேவையான ஆயுதங்களை உடனடியாக வழங்குமாறு உக்ரைன் ஆயுத முகவர்களிடம் விடுதலைப்புலிகளின் தலைமை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக சிங்கள வார இதழ் குறிப்பிட்டுள்ளது. மோதல்களில் ஈடுபட்டுள்ள கெரில்லாக்களுக்கு தேவை எனக் கூறி விடுதலைப்புலிகள் நவீன ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும்; முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோத ஆயுத விற்பனையாளர்களின் ஊடாக சீன உற்பத்தி ஆயுதங்களை விடுதலைப்புலிகள் அண்மைக் காலத்தில் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆயுத முகவர்கள் கறுப்பு பணத்தில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதாக கூறப்படுகிறது. ரி 56 ரக துப்ப…

  24. வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொலை [ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2008, 04:27 மு.ப ஈழம்] [க.நித்தியா] வவுனியா மாவட்டத்தில் உள்ள தாலிக்குளம் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

    • 0 replies
    • 971 views
  25. இராணுவத்தால் முழுவதுமாக மீட்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வவுனியா - மன்னார் வீதியில் இன்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பல கள முனைகளில் மோதல் நடந்துள்ளதாக இராணுவத்தை மேற்கோள் காட்டி பிபிசி/தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இம்மோதல்களில் இராணுவத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.