ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
மன்னாரில் இருவரைக் காணவில்லை. 18.08.2008 / நிருபர் எல்லாளன் மன்னார் பேசாலை மற்றும் தம்பனைக்குணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவரும் குடும்பஸ்தர் ஒருவரும் காணமல் போயுள்ளதாக மன்னார் சகவாழ்வு மன்றத்தில் உறவினர்களால் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளத
-
- 0 replies
- 675 views
-
-
பின்வாங்கி முன்னேறும் தந்திரோபாயம்-அன்பரசு- 'ஓரடி பின்னே ஈரடி முன்னே" என்று சீனப் புரட்சித் தலைவர் மாவோ சொன்னார். சுனாமி அலை போல் பின்னுக்குச் சென்று முன்னேறி வந்து தாக்குதல் தொடுக்கும் இராணுவத் தந்திரோபாயத்தை அவர் இப்படிப் புலப்படுத்தினார். எதிரியின் எதிர்பார்ப்புக்கு இணங்க நாம் எமது உத்திகளை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எமது வசதிதான் எமக்கு முக்கியம். எதற்காகப் பின்னோக்கி வரவேண்டும் என்பதற்கு முக்கிய காரணங்கள் உண்டு. சண்டைக்குப் பொருத்தமில்லாத களச் சூழலிலிருந்து தந்திரோபாயமாக விலகிவிட வேண்டும். எதிரியை உள்வரவிட்டுத் தாக்குதல் நடத்துவதால் கிடைக்கும் அனுகூலம் பற்றிக் கணிப்பிட வேண்டும். தனது அணிக்கு வரவிருந்த இழப்பைத் தவிர்த்து அணியின் …
-
- 10 replies
- 3.9k views
-
-
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு மக்கள் தனக்கும் தனது அரசாங்கத்திற்கும் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் தான் பின்னிற்கப்போவதில்லை எனக்குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். விரிவு » http://www.tamilseythi.com/srilanka/mahindar-2008-08-18.html
-
- 0 replies
- 964 views
-
-
சாள்ஸ் அன்ரனி படைபிரிவை சேர்ந்த காண்டீபனுடனான நேர்காணல்
-
- 5 replies
- 3.7k views
- 1 follower
-
-
கம்பஹா பிரதேசத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 29 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வடக்குகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இருந்து கம்பஹாப் பிரதேசத்திற்கு வந்து வியாபாரத் தளங்களில் சேவை செய்பவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தத் தேடுதலின் போது சுமார் 250 வீடுகளும் வியாபாரத் தளங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. அத்துடன் 200 வாகனங்களும் சோதனையிடப்பட்டன. செய்தி
-
- 0 replies
- 657 views
-
-
பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் * காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்டதை முன்வைத்து ஒரு ஒப்பீடு உலக வரலாற்றில் தேசிய மக்களி னங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி, இன அழிப்பினை மேற்கொண்ட, மேற் கொள்கின்ற அடக்குமுறை அரசுகள் பல, திட்டமிட்ட குடியேற்றங்களை அதற்கான கருவியாகக் கைக்கொண்டன. திட்டமிட்ட குடியேற்றங்களை மிக நுணுக்கமா கவும், பேரினவாதத்தின் தொலைநோக்கு நலன்களுக்குச் சாதகமாகவும் கையாண்ட அரசுகளில் இஸ்ரேலும் சிறிலங் காவும் முதன்மையானவை. இதன் மூலம் விடுதலைக்காக போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்வது அல்லது இல்லாமற் செய்வது இவர்களின் மூலதந்தி ரமாக இருந்தது. என…
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கை மத்திய வங்கி ஆயிரம் ரூபா நாணயக்குற்றியினை அறிமுகம் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு உதவி வழங்கும் வகையிலேயே இந் நாணயக் குற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது .
-
- 1 reply
- 1.9k views
-
-
மணலாற்றின் ஆண்டான்குளம் பகுதியில் நேற்று மாலை 6.00 மணியளவில் உழுவூர்தியில் பயணித்த படையினர் மின்னலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயங்களிற்கு இலக்காகியுள்ளனர். இதேவேளை ஆண்டான் குளம் பகுதியில் நடைபெற்ற வௌ;வேறு மோதல்களில் மேலும் நான்கு படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
- 4 replies
- 1.8k views
-
-
வடக்கு கிழக்கின் சிங்களமயத் திட்டங்கள் யுத்தகள நிலவரத்திலேயே தங்கியுள்ளன. (ஆய்வு) [ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2008, 03:03.07 AM GMT +05:30 ] நாட்டைக் காப்பது அல்லது நாட்டின் இறைமையைக் காப்பது” என்ற சுலோகங்களின் கீழ் இலங்கை அரசாங்கம் தற்போதைய யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. ஆனால் அதன் உண்மையான நோக்கம் அதுவல்ல மீண்டும் ஒரு 1956 ஆண்டின் சிங்களமயமே அதன் பின்னால் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியாத விடயம். கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீட்டு விட்டோம் என்றும் அந்த மாகாணசபைக்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதாக அரசாங்கம் சர்வதேசத்தின் முன்னால் கூறிவருகிறது. எனினும் கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கப்படாது. அதன்போது பாரிய தடங்கல்களுக்கு வாய்ப்பு…
-
- 0 replies
- 759 views
-
-
இலங்கையில் தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் என அமெரிக்கத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளர் ரஞ்சன் இராமநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வரும் எமது சொந்தங்களுக்கு ஒபாமா ஆதரவு வழங்குவார் எனப் பெரிதும் எதிர்பார்ப்பதாக இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் எனத் திடமாக நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பரக் ஒபாமா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடம் ஒபாமா நிதி பெற்றுக் கொண்டதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிற்காகப் போட்டியிட்ட ஹிலாரி …
-
- 0 replies
- 1.7k views
-
-
-
நாச்சிக்குடாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி்; 20 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2008, 06:30 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருபதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆட்லெறி மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் நாச்சிக்குடாப் பகுதி ஊடாகவும் அதனை அண்டிய பகுதிகள் ஊடாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் நகர்வினை முறியடித்தனர். …
-
- 0 replies
- 983 views
-
-
பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தென் லண்டன் பகுதியைச் சேர்ந்த நிலாந்தன்(17) என்ற இளைஞர் கடந்த சனிக்கிழமையன்று கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று மணித்தியாலங்களில் குறித்த இளைஞர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் தமிழ் இளைஞர்களுக்கு இடையில் அடிக்கடி கோஷ்டி மோதல் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த வருடமும் குறித்த பிரதேசத்தில் 3 – 4 பேர் கோஷ்டி மோதல்களினால் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்ப…
-
- 0 replies
- 912 views
-
-
-
- 0 replies
- 919 views
-
-
சமஷ்டி முறை பிரச்சினைக்கு தீர்வா? ஒற்றையாட்சி தொடர்பான எமது சிந்தனைகளில் ஏற்பட்ட பிளவு நிலை சந்தர்ப்பத்திலேயே நாம் இனப் பிரச்சினையை நாட்டின் முக்கிய விவகாரமாகப் பேச ஆரம்பித்தோம். தேசியப் பிரச்சினை தொடர்பாக பேசும் போது ஒற்றையாட்சி என்ற சிறைக்குள் சிறைப்பட்டிராமல் மாற்றாக சமஷ்டி தீர்வு குறித்து சிந்தித்துப் பார்க்க முடியாதா? இவ்விடயம் குறித்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்விப் பிரிவைச் சேர்ந்த கலாநிதி டெஸ்மன் மல்லிகாராய்ச்சி கருத்துத் தெரிவிக்கையில் ‘மாட்டிற்கு தும்பிக்கையைப் பொருத்தியவுடன் மாடு ஒருபோதும் யானையாக முடியாது. அதனால் தும்பிக்கையுடன் யானைக்குரிய இதர அங்கங்களைப் பொருத்தினால் மட்டுமே அது யானையாக முடியும்;" என்றார். சமஷ்டி ப…
-
- 2 replies
- 2.1k views
-
-
மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 18, 2008 ராமேஸ்வரம்: நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி அட்டூழியம் செய்துள்ளது இலங்கை கடற்படை. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கொழும்பு சென்றபோது அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. நேற்று 651 விசைப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. மொத்தம் 2604 மீனவர்கள் படகுகளில் இருந்தனர். அப்போது சில மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் த…
-
- 2 replies
- 937 views
-
-
தாய் மண்ணை காப்பதற்கும் மீட்பதற்கும் முன்னாள் போர் வீரர்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பை தமிழீழ அரசியற்துறை விடுத்துள்ளது. முன்னாள் விடுதலை வீரர்களான நீங்கள் உங்கள் தாய் தேசம் முகம் கொடுத்திருக்கும் போர் நெருக்கடிக்கிடையில் தாய் நாட்டிற்கு நீங்கள் புரிய வேண்டிய கடமைக்கு முன்னுரிமை அளித்து விரைந்து வருவீர்கள் என்று நம்புகின்றோம். இந்த தேசத்தின் மைந்தர்களான நீங்கள் எமது மக்களும் மண்ணும் எதிரியின் பேரவலத்துக்குள்ளளாவதை ஒரு போதும் விரும்பமாட்டீர்கள் மானமுள்ள வீரமுள்ள எந்த தூய வீரனும் இதை விரும்பமாட்டான் உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உணர்வும் குருதியில் ஓடும் ஓர்மமும் தேச விடுதலையை நோக்கி தள்ளவே செய்யும் இதன் முலம் நீங்கள் உயிரினும் மேலாக அன்பு செய்யும் தாய்…
-
- 18 replies
- 5.8k views
-
-
“நாட்டைக் காப்பது அல்லது நாட்டின் இறைமையைக் காப்பது” என்ற சுலோகங்களின் கீழ் இலங்கை அரசாங்கம் தற்போதைய யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. ஆனால் அதன் உண்மையான நோக்கம் அதுவல்ல மீண்டும் ஒரு 1956 ஆண்டின் சிங்களமயமே அதன் பின்னால் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியாத விடயம். கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீட்டு விட்டோம் என்றும் அந்த மாகாணசபைக்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதாக அரசாங்கம் சர்வதேசத்தின் முன்னால் கூறிவருகிறது. எனினும் கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கப்படாது. அதன்போது பாரிய தடங்கல்களுக்கு வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கோடிட்டு காட்டுவதாகவே கிழக்கு மாகாண சபைக்கு சிங்களவர் ஒருவரைக் காணி அமைச்சராக நியமித்தமையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிழக்கு மா…
-
- 0 replies
- 984 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இரவுவேளைகளில் இராணுவத்தினர் கடுமையான ஷெல் தாக்குதல்களை மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. மாலை 5 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரை கடுமையான ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆளில்லாத வேவு விமானங்கள் இரவுவேளைகளில் பறப்பில் ஈடுபட்டு உளவுபார்ப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் இராணுவத்தினரின் ஷெல் தாக்குதல்களால் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. அதேநேரம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களை வவுனியாவிலிருந்து செயற்படுமாறு இராணுவத்தினர் பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் த…
-
- 0 replies
- 867 views
-
-
விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.அத்துடன் இவ்வாறான தவறான தகவல்கள் யுத்தமுனையில் போராடும் இராணுவத்தினரை படைகளிலிருந்து தப்பியோடுவதற்கே வழிவகுக்குமெனவும் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் வன்னிப் போரில் தோல்வியைத் தழுவி வருவதால் அவர்கள் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த முயல்வார்களென கடந்த வாரம் கருணா கூறியிருந்தார். வெலிக்கந்தை பகுதியில் தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்ததுடன், விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுதங்களிருப்பது தனக்குத் தெரியுமெனவும் கூறியிருந்தார். கருணா கூறிய இந்தச் செய்தியை சிங்களப் பத்திரிகைகளும் ஊடகங்களும் முக்கியத்…
-
- 0 replies
- 1.7k views
-
-
தினக்குரல் வாரவெளியீட்டில் பாதுகாப்பு நிலவரம் பகுதியில் பிரசுரமாகிய விதுரனின் ஆய்வுக் கட்டுரை நன்றி தினக்குரல்
-
- 0 replies
- 2.5k views
-
-
போர் வெறித் தீவிரப் போக்குப் போன்றே தேர்தல்களையும் அணுகுகிறது அரசு 18.08.2008 சிங்களவர்கள் அதிகமாக வாழும் இரண்டு முக்கிய மாகாணங்களில் எதிர்வரும் சனிக்கிழமை இன்னும் ஐந்து நாட்களில் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. வடமத்திய மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் ஆகிய இரண்டிலும் நடைபெறும் மாகாணசபைத் தேர்தல்களை ஒட்டிப் பெரும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிக மோசமான வன்முறைகளுடனும் அராஜகங்களுடனும் நடத்தி முடிக்கப்பட்ட முன்னைய தேர்தல்களாக இரண்டு கருதப்படுகின்றன. முதலாவது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில், அப்போது அவரது அணியில் இருந்த எஸ்.பி.திஸநாயக்கா போன்…
-
- 0 replies
- 527 views
-
-
வன்னியில் எரிபொருள் தட்டுப்பாடு: பெற்றோல் 800 ரூபாவாகவும் டீசல் 300 ரூபாவாகவும் விற்பனை வன்னிப்பிரதேசத்தில் தற்போது இடம்பெற்று வரும் சிறிலங்காப் படையினரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அங்கு எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லாததால் தனியார் வியாபாரிகள் அதிக விலையில் அதனை விற்பனை செய்கின்றனர். போதிய எரிபொருள் ஏ-9 பாதை ஊடாக வன்னிப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படாததே காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ஒரு லீற்றர் பெற்றோல் 800 ரூபாவாகவும் மண்ணெய் 250 ரூபாவாகவும் டீசல் 300 ரூபாவாகவும் விற்கப்படுகிறது. இதேவேளை மரக்கறி வகைகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் என்றுமில்லாத அளவு அதிகரித்…
-
- 0 replies
- 527 views
-
-
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் படைமுகாம் மீது எறிகணைத் தாக்குதல்: ஒரு படையினர் பலி: நால்வர் காயம் ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] நேற்று இரவு 9.45 மணியளவில் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா படைகளின் இராணுவ முகாம்மீது விடுதலைப்புலிகள் எறிகணை வீச்சு நிகழ்த்தியுள்ளனர். அத்துடன் அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ காவலரண் ஒன்றையும் தாக்கியழித்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஒருபடையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நால்வர் காயமடைந்தள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை நேற்று மாலை கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த இருவர் இன்று இறந்துள்ளதாகவும் மேலும் அறியமுடிகிறது. http://www.pathivu.com/?p=2916
-
- 1 reply
- 1.1k views
-
-
“நாட்டைக் காப்பது அல்லது நாட்டின் இறைமையைக் காப்பது” என்ற சுலோகங்களின் கீழ் இலங்கை அரசாங்கம் தற்போதைய யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. ஆனால் அதன் உண்மையான நோக்கம் அதுவல்ல மீண்டும் ஒரு 1956 ஆண்டின் சிங்களமயமே அதன் பின்னால் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியாத விடயம். கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீட்டு விட்டோம் என்றும் அந்த மாகாணசபைக்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதாக அரசாங்கம் சர்வதேசத்தின் முன்னால் கூறிவருகிறது. எனினும் கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கப்படாது. அதன்போது பாரிய தடங்கல்களுக்கு வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கோடிட்டு காட்டுவதாகவே கிழக்கு மாகாண சபைக்கு சிங்களவர் ஒருவரைக் காணி அமைச்சராக நியமித்தமையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிழக்கு மா…
-
- 0 replies
- 642 views
-