ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143626 topics in this forum
-
இடம்பெயர்ந்தோருக்கு 2,800 மெற்றிக்தொன் உணவு தேவை: உதவி அமைப்பு தெரிவிப்பு [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 07:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு 2,800 மெற்றிக்தொன் உணவு தேவைப்படுவதாக உதவி அமைப்பொன்றின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நிலையில் இம்மக்களுக்கான உணவு வழங்கல் நெருக்கடி காணப்படுகின்றது. ஓமந்தை ஊடாக சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் உணவுப் பொருட்களை உதவி அமைப்புக்கள் எடுத்து வருவதில் இடர்கள் கா…
-
- 0 replies
- 427 views
-
-
ஐ.நா.செயலாளரை சந்தித்துப்பேச மகிந்த முயற்சி புதன், 27 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] எதிர்வரும் செப்ரெம்பவர் மாதம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அந்த வேளைகளில் பிரத்தியேகமாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங்கி மூனை சந்தித்துப்பேச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்தச்சந்திப்புக்களில் தற்போதைய சிறி லங்கா நிலவரங்களை ஐ.நா. செயலாளருக்கு தெளிவுபடுத்துவதுடன், சிறி லங்கா தொடர்பாக மேற்குலக நாடுகளில் தோன்றியுள்ள காழ்ப்புணர்ச்சியை போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மகிந்த திட்டமிட்டுள்ளதுடன், முக்கியமாக பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட ப…
-
- 1 reply
- 884 views
-
-
தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டு ஈழத் தமிழர்களை இந்தியா காப்பாற்றவேண்டும் - வீரமணி புதன், 27 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] அமெரிக்கர்களை சீனா கைது செய்தால் அமெரிக்கா தலையிடும் நிலையில், ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசு கண்டுகொள்ளாதது ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் விடுதலைப்புலிகளை வேட்டையாடும் சாக்கில் அப்பாவித் தமிழ் குடும்பங்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை அங்குள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஈழத்தமிழர் கொ…
-
- 0 replies
- 807 views
-
-
பட்டினியடும் ஈழத் தமிழ் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கி அவர்களை காப்பாற்ற புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க அவசர வேண்டுகோள். http://www.orunews.com/?p=1804#more-1804 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26759
-
- 1 reply
- 884 views
-
-
கிளிநொச்சி, முல்லைத்தீவைக் கைப்பற்ற இடமளிக்கப்படமாட்டாது – புலிகள் [ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 06:59.06 AM GMT +05:30 ] கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நகரங்களைக் கைப்பற்ற ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் சிலவற்றை இழந்த போதிலும் ஆயுத பலம் மற்றும் படைபலம் நலிவடைந்து விடவில்லை என பொட்டம் லைன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிரி இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான தக்க தருணம் இன்னமும் கைகூடவில்லை என புலிகள் அறிவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்படும் புள்ளி விபரங்…
-
- 2 replies
- 2.8k views
-
-
வீரகேசரி இணையம் 8/27/2008 10:54:21 AM - ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்றுள்ள தெற்கு ஒசெத்தியா மற்றும் அப்காசியா பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ஆணையை ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மேட்வேடேவ் கைசாத்திட்டுள்ளார். ஜோர்ஜிய ஜனாதிபதி மிகெல் சாகாஷ்விலி, கிளர்சியாளர்களுக்கு எதிராக இனப்படுகொலையை ஆரம்பித்ததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுப்பதில் இருந்து தனக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது என்று ரஷ்ய ஜனாதிபதி பி பி சிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டார். தெற்கு ஒசெத்தியா மற்றும் அப்காசியாவை ரஷ்யா அங்கீகரித்ததை மேற்குலம் கோசோவோவை தனி நாடாக அங்கீகரித்ததுடன் ரஷ்ய ஜனாதிபதி ஒப்பிட்டார். ரஷ்யாவுக்கும் மேற்குலகுக்கும் இடையேயான உறவு வேகமாக சீர்கெடுகிறது என்றும் புதியதொரு பன…
-
- 0 replies
- 1.3k views
-
-
திருமலை வான் தாக்குதல்- ஆறு கடற்படையினர் பலி 24 பேர் காயாம், ஆனால் சேதம் இல்லையாம்? 6 killed, 24 injured in Air Tiger attack Wednesday, 27 August 2008 13:36 Six naval personnel were killed and 24 others injured in an air raid by the LTTE on the Trincomalee Naval Base last night (August 26th), defence sources said. Meanwhile, the Defence Ministry website, citing Navy sources, said the navy base was warned by the Air Force of an approaching Air Tiger aircraft around 9.00 pm. "After few minutes, naval troops detected the aircraft and engaged it with anti aircraft guns. The machinegun fire caused the aircraft to make away without entering the nava…
-
- 9 replies
- 3.8k views
-
-
தேர்தல் வெற்றி மேலும் யுத்தத்தை நோக்கி...! 27 - August - 2008 வ.திருநாவுக்கரசு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளை முன்கூட்டியே கலைத்து தேர்தல்களை நடத்துவதற்குத் தலைப்பட்டது. வெற்றியீட்டுவதற்கே ஒழிய தோல்வியடைவதற்காக அல்ல. எத்தகைய வழிமுறைகளையாயினும் கையாண்டு வெற்றிவாகை சூடுவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் (ஐ.ம.சு.மு.) கங்கணம் கட்டி நின்றனர். ""காவல்துறையினர், அரசாங்க அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் எம்பக்கம் இருக்கின்றனர். எனவே, எவ்வாறான தில்லுமுல்லுகளையாவது செய்து நாம் தேர்தல்களில் வெற்றியீட்டி விடுவோம்' என்று அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே பகிரங்கமாகக் கூறிவைத்த விடயமானது தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவின்…
-
- 0 replies
- 729 views
-
-
கார்கால மேகம் கண்டு பார் இன்று மழையேஎன்று யாரும் கூறிடலாம்- ஆனாலும் குறிப்பாக அந்த மேகம் தான் - வரபோகின்ற இந்த மழைக்கு காரணம் என்றே வெறும் யூகத்தால் கூறுவது -என்பது வரும் வேகத்தால் உறைப்பதன்றி வேறல்ல பார் போற்றும் இந்த வெற்றியின் துவக்கம் தார் போன்ற மேகத்தால் மறைத்தல் கண்டே தேறுதல் கூறிடும் தேர்ந்த நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளை கொண்டு பாதியும் உண்மையில்லை - பாவி இவன் சேதியில் என்றே பரிகசிப்பது முறையாமோ? அவை விடுத்து - நம் மக்கள் அவலம் போக்க இவையே தேவைஎன கூறிடுவேன் - குற்றமில்லையென்றே வருங்காலம் நமக்கு வளமானதாக இருக்க தருங்காலம் இதுவென்றே - நமது பங்களிப்பை தருங்காலம் இதுவன்றோ! பார் முழுதும் பரவிய தமிழினத்தின் திரவியம் மட்டுமல்ல பரப்பு…
-
- 0 replies
- 1.7k views
-
-
தற்ஸ் தமிழ் இணையம் திரிகோணமலை: விடுதலைப் புலிகள் நேற்று இரவு அதிரடி விமானத் தாக்குதலை நடத்தினர். அடுத்தடுத்து நடந்த இந்தத் தாக்குதலில் திரிகோணமலை துறைமுகம் பலத்த சேதமடைந்தது. வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்றும் சேதமடைந்தது. புலிகளின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். இலங்கையில் நடந்து வரும் போரின் தீவிரம் உக்கிரமடைந்து வருகிறது. தற்போது கிழக்கை விட்டு விட்டு வடக்கில் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அப்பகுதியில் சில முக்கிய இடங்களையும் ராணுவம் பிடித்ததாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் திரிகோணமலை துறைமுகத்தையும், அருகில் உள்ள கடற்படைத் தளத்தையும் குறி வ…
-
- 1 reply
- 3.3k views
-
-
திருமலை வான்தாக்குதல் புலப்படுத்துவதென்ன. கடந்த இரவு இடம்பெற்ற திருமலை வான் தாக்குதல்கள் பற்றிய சேதியை முதன் முதலில் சிங்கப்பூரில் வாழும் ஒரு இலங்கை ஊடகத்துறை நண்பர் மூலமே அறிந்தேன். அதைத்தொடர்ந்து தமிழக ஊடகத்துறையில் உள்ள நண்பர்கள் மகிழ்ச்சியுடன் கிடைத்த தகவல்களை என்னோடு பகிர்ந்து கொண் டனர். உண்மையில் உலகத் தமிழர் பலரும் இச்செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். திருமலைக் குண்டுத்தாக்குதல் பற்றிய சேதியின் முக்கியமான தகவல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் அல்ல. சிறுரக விமானங்களை தாக்குதல்களுக்கு பயன்படுத்தவும் பின்னர் அவற்றைப் பத்திரமாக களத்துக்கு எடுத்துச் செல்லவுமான இராணுவப் புவியியல் போராளிகளின் கட்டுப் பாட்டில் இருக்கிறது என்பதுதான் உலகிற்க்கு யதார்த்த நநிலம…
-
- 37 replies
- 6.8k views
-
-
திருமலை துறைமுகத்தில் வான்புலிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல் நடைபெற்று மிகக்குறுகிய நேரத்தில் தமிழ்வின் இணையத்தளம் ஒரு ஆய்வினை வெளியிட்டிருக்கிறது. மிகக்குறுகிய நேரத்தில் இந்த கள ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் புதிய "சிந்தனை" ஒன்றுக்கு வழிவகுத்துள்ளது. ( வாராந்த கள ஆய்வு) [ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 01:24.32 AM GMT +05:30 ] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியிருப்பது, இலங்கைப் படைத் தரப்பினர் மத்தியில் மனோநிலையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பிராந்தியத்தை இந்த வருட இறுதிக்குள் தமது கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என அரசாங்கம் பிரசாரம் செய…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஆலங்குளம் நோக்கிய படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 01:10 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காய் ஆலங்குளம் நோக்கிய சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. உயிலங்குளம் பகுதியிலிருந்து ஆலங்குளம் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பிலான முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக பிற்பகல் 4:00 மணிவரை நீடித்த விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலில் படையினரின் முன்னகர்வு முறியடிக்கப்பட்டது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் படைப்பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாராயணன் குழுவினரின் இலங்கை வருகையும் அவர்களின்; உள்நோக்கங்களும் -தாயகத்திலிருந்து மு.திரு- இக்கட்டுரையானது முற்றிலும் ஒரு அறிவியற் கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றது. விருப்பு வெறுப்புக்கு அப்பால் அரசியல் விஞ்ஞானத்தை அப்படியே யதார்த்தத்தில் கணித ரீதியாக கணக்குப் போட்டுப்பார்க்கும் ஓர் ஆய்வாகவே இது அமைகின்றது. தேசிய இனப்பிரச்சினை என்பது எப்போதும் முதலாவது அர்த்தத்தில் ஒரு சர்வதேசப் பிரச்சனை ஆகும். சர்வதேசம் என்பதற்குரிய ஆங்கிலப்பதம் International என்பதாகும். இதன்படி International என்றால் தேசங்களுக்கிடையானதெனப் பொருள்படும். எனவே International Relations என்றால் தேசங்களுக்கிடையான உறவுகள் என்பதாகும். ஆகவே இரண்டிற்கு மேற்பட்ட நாடுகளுக்கள…
-
- 1 reply
- 1.5k views
-
-
திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளன. துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் - குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப்பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சேத விவரம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை puthinam
-
- 66 replies
- 19.8k views
- 1 follower
-
-
ஈழத்தமிழர் தொடர்பாக தமிழக அரசு குறிப்பிட்ட விடயங்கள் மன்மோகன் - மகிந்த சந்திப்பில் ஆராயப்பட்டன: நாராயணன் [செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2008, 08:30 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழத்தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியை நேற்று முன்நாள் திங்கட்கிழமை (25.08.08) அவரது இல்லத்தில் சந்தித்து பேசியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பாக இந்திய அரசு சிறிலங்கா அரச…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்க தூதரக அதிகாரியை கைது செய்யுமாறு சிறிலங்கா நீதிமன்றம் உத்தரவு [செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2008, 07:55 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] போலி அமெரிக்க விசா வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய அமெரிக்க தூதரக விசாரணை அதிகாரிக்கு எதிராக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. கடவுச்சீட்டுடன் போலி அமெரிக்க விசா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சிங்களவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் விசா விசாரணை அதிகாரியை நீதிமன்றில் முன்…
-
- 4 replies
- 2k views
-
-
வன்னி மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள மனிதப் பேரவலத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவரும் பேரணி இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 585 views
-
-
சீபா உடன்படிக்கை மூலம் பரந்தளவிலான பொருளாதார நன்மைகளை அடைந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய வர்த்தக மற்றும் பொருளாதார ஆலோசகர் சந்தோஷ் ஜா, இலங்கை முதலீட்டாளர்களுக்கு இந்தியா வரையறைகள் எதுவுமின்றி வீசாக்களை வழங்கத்தயாராகவிருப்பதாவும் குறிப்பிட்டுள்ளார். சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமானால், இருநாடுகளும் சமனான நன்மைகளை அடைந்துகொள்ள முடியும் எனக்குறிப்பிட்ட அவர், உடன்படிக்கை தொடர்பான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்;ளார். "இந்தியா இலங்கையுடன் வர்த்தக உறவினைக் கொண்டுள்ள பெரிய நாடு மட்டுமல்ல, இலங்கையுடன் சமனான வர்த்தக உறவினைப் பேணும் நாடும் கூட. அமெரிக்கா, பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் வ…
-
- 0 replies
- 839 views
-
-
கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு" எனும் நூலானது ஜேர்மன், பிரான்ஸ் நாடுகளைத் தொடர்ந்து நெதர்லாந்தில் உள்ள றூர்மொன்ட், சாகன் ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 618 views
-
-
சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் வெற்றிபெற்றிருப்பதானது அரசாங்கம் தற்பொழுது முன்னெடுத்திருக்கும் இராணுவ ரீதியான நடவடிக்கை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டிநிற்பதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா, ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கும் திட்டங்களை உள்ளடக்கிய, தற்போதைய களநிலைக்கு ஏற்றவாறு அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட கொள்கைகளையும், திட்டங்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். தாய்நாடு இணைந்திருப்பதை என்னவிலை விலைகொடுத்தாவது உறுதிப்படுத்தவேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையானது உணர்ச்சிகள் மூ…
-
- 0 replies
- 1.6k views
-
-
http://www.russiatoday.com/en Russian President Dmitry Medvedev has declared that Russia will recognise the independence of Georgia’s breakaway republics of Abkhazia and South Ossetia. He made the announcement in Sochi following a unanimous vote for the republics’ independence by both houses of the Russian Parliament in Moscow on Monday. Russia recognizes Georgian rebel regions Russian President Dmitry Medvedev said Tuesday he has signed an order recognizing the independence of South Ossetia and Abkhazia, two breakaway regions in the Republic of Georgia. full story Bush warns Moscow over rebels Special: Georgia Crisis http://edition.cnn.com/
-
- 8 replies
- 2.4k views
-
-
புலிகளின யுத்த வியூக இரகசியங்கள் இராணுவப் படையினர் வசம் - அரச ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் யுத்த வியூகம் தொடர்பான பல முக்கிய இரகசியங்கள் இராணுவத்தினருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கத்திற்குச் சார்பான சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இந்த யுத்த வியூகங்களை மாற்றியமைப்பதற்காகவே புலிகள் யுத்த நிறுத்தமொன்றைக் கோரியதாகவும், அது பலனற்றுப் போனதாகவும் லண்டனில் உள்ள புலிகள் வலையமைப்பை மேற்கோள் காட்டிக் குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் நோக்கில் லண்டனில் விசேட இரகசிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது அடைந்துள்ள பின்னடைவிற்குக் கருணா அம்மானே முழுப்பொறுப்பு …
-
- 13 replies
- 4.1k views
-
-
கலாசார மாற்றத்தில் இலங்கை அகதிகள் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளின் வாழ்க்கை முறை மாற்றம் கண்டுள்ளது. அவர்களிடம் கலாசார மாற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் "தினமணி' பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தொடங்கி உள்நாட்டுப் போரையடுத்து அந்த நாட்டு தமிழ் மக்கள் புலம் பெயரத் தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த இலங்கை தமிழ் அகதிகளை தங்க வைக்க தமிழகத்தில் சுமார் 117 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தற்போது ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீது படை நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் இராணுவத்தினர் இப்போது அங்கு விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு ஒப்புக்கொண்டிருக்கின்றது. நாச்சிக்குடாப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னேற முயன்ற படையினர்மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 10 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்றும் கலியமோட்ட பகுதியில் மூன்று படையினர் காயமடைந்தனர் என்றும் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நாச்சிக்குடாப் பகுதியில் புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர். முன்பை விட இப்போது புலிகளின் எதிர்…
-
- 1 reply
- 2.4k views
-