ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142829 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கல்வி வலயத்திற்கு உள்ளிட்ட அனைத்து அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
'சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினம் நாகரிக உலகிற்கே ஒரு கரிநாள்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- 2008 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதியானது, சிங்களப் பௌத்தப் பேரினவாத நாடாகிய சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினமாகும். தமது முழுமையான சுதந்திரத்திற்காக, மகத்தான விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற தமிழீழ மக்களுக்கோ அன்றைய தினம் ஒரு கரி நாளாகும்! காலப் பெரு வெள்ளத்தினூடே, நீச்சலிட்டு வாழுகின்ற மனித குலம், படிப்படியாகத் தனது காட்டுமிராண்டித்தனமான வாழ்;க்கையிலிருந்து பரிணாமம் அடைந்து நாகரிகத்திலும், பண்பாட்டிலும் முன்னேறி, மனிதத்தின் உயர் விழுமியங்களைப் போற்றிக் கடைப்பிடிப்பதில் படிப்படியாக வெற்றி பெற்று வருகின்றது. ஆனால் இந்த மனிதப் பரிணாமத்திலிருந்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் 60 ஆண்டுகால இன ஒடுக்குமுறைக் கொடுமைகளையும், தாயக மக்களின் இன்றைய நிலைமைகளையும் வெளிப்படுத்தும் வகையிலான பொருட்காட்சி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக ஒரு தலைப்பட் சமாக அறிவித்த பின்பு கடந்த 16.01.2008 அன்றுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் உத் தியோக பூர்வமாக செயலிழக்கச் செய்யப்பட்டது. இதையடுத்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு நாட்டை விட்டு வெளியேறி விட்டது. சர்வதேச நாடுகளின் பின்னணியில் நோர்வேயின் அனுசரனையுடன் விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திக்குமிடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் எந்த ஒரு தரப்பினரினதும் ஆலோசனையோ, சம்மதமோ இன்றி சிறீலங்கா அரசால் தான்தோன்றித் தனமாக இது கிழித்தெறியப்பட்டது. இவ்வொப்பந்தம் காகித அளவில் மட்டுமே நீண்ட நாட்களாக உயிர் வாழ்ந்த போதிலும் போர் நிறுத் தக் குழுவின் பிரசன்னம் சிறீலங்கா அரசின் போர் நிறுத்த மீறல்களைப் பத…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா: 60வருடங்களின் பின்னர் - இறைமையை மீளநிலைநிறுத்துவதே தமிழ்மக்களிற்கான மாற்றுவழி பிரிட்டிஸ் காலனித்துவத்திற்குப் பிற்பட்ட 60 வருடகால ஆட்சியானது இலங்கைத் தீவில் இரு தேசிய இனங்கள் - ஒன்று அடக்கும் அரச தரப்பாகவும் மற்றையது அடக்கப்பட்ட மக்களாகவும் வாழாமல் - சுதந்திரமுள்ளவர்களாக செயற்படுவதே அமைதியை உறுதிப்படுத்தும் என்பதை நிரூபிக்கின்றது. பெப்.04 - அறுபது வருடங்களுக்கு முன் இதே நாளில்தான் இறுதியான ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கைத்தீவினை விட்டு வெளியேறி அரச அதிகாரங்களை அன்னிய சிங்கள தேசியவாத தலைமைகளிடம் கொடுத்துச் சென்றனர். இந்த நாள் தமிழர்கள் தங்களது இறைமையை புதிய அன்னிய சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தமையை குறிக்கும் நாளாகிவிட்டது. சிங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வன்னியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு செல்வதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் தடை வித்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ். குடாநாட்டு ஊடக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சிறிலங்காவின் தேசியக்கொடியை சிறிலங்கா இராணுவத்தினர் பலவந்தமாக ஏற்றினர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> Obama: Sri Lanka afflicted with "problem of the other" [TamilNet, Tuesday, 08 January 2008, 01:02 GMT] Characterizing the conflict in Sri Lanka as a "vicious civil war," Senator Barack Obama, a leading Democratic contender in America's forth coming 2008 Presidential Elections, said during an interview that, "the problem of the 21st century is the problem of the other." He described this phenomenon as the inability of people to accommodate others "who are not like us," and mentioned Sri Lanka as an example, pointing out that war rages even when "everybody there looks exactly …
-
- 2 replies
- 1.4k views
-
-
மிருசுவில் படைமுகாமில் நச்சு உணவை உட்கொண்டதால் 2 படையினர் பலி! மேலும் 10 படையினர் மயக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிருசுவில் பகுதியில் அமைந்துள்ள படை முகாமில் தகரப் பேணிக்குள் அடைக்கப்பட்ட மீன்களை சமைத்து உணவாக சாப்பிட்டபோது 10 பேர் மயக்கமடைந்தனர். தகரப் பேணிக்குள் அடைக்கப்பட்ட மீன்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கறியை காலை உணவாக உட்கொண்ட போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயக்கமடைந்த 10 பேரில் இருவர் மிருசுவில் படைமுகாம் மருத்துமனையில் உயிரிழந்ததோடு, மயக்கமடைந்த ஏனைய 8 பேரும் பலாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து படைமுகாம் சமையாளர்களை அழைந்த சிறிலங்காப் படையினர் கடும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.pathivu.co…
-
- 2 replies
- 1.4k views
-
-
மொரட்டுவயில் குண்டு வெடிப்பு 2/4/2008 2:08:04 PM வீரகேசரி இணையம் - மொரட்டுவ தந்தனியவில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கபடுகிறது.
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ். வடபோர்முனையான முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 932 views
-
-
சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு இராணுவ உதவிகளை வழங்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு சென்னை மத்திய தொடருந்து நிலையத்தில் தமிழின உணர்வாளர்கள் உணர்வுபூர்வமாக வழியனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 997 views
-
-
திங்கள் 04-02-2008 14:08 மணி தமிழீழம் [சிறீதரன்] வவுனியாவில் விடுதலைப்புலிகள், சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் மோதல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணியளவில் ஆழஊடுருவும் அணியினர் வவுனியா பாலமோட்டை முன்னரங்க நிலைகள் ஊடாக ஊடுருவ முற்பட்டபோது மோதல்கள் வெடித்ததாக தெரியவருகிறது. இதன்போது இரு சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் படுகாயமடைந்துள்ளதாகவும் இவர்களிடம் இருந்த நான்கு கிளைமோர் குண்டுகளும் அதனை வெடிக்க வைப்பதற்கு உபயோகிக்கும் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. மீண்டும் சிறீலங்கா படையினர் இருதடைவை தமது படையினரை ஒழுங்கு படுத்தி 2.50 ற்கும் 3.35ற்கும் இடையிலும் மற்றொருதடவை 3.45ற்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று அதிகாலை 5:50 மணியளவில் கல்கிசை விஜேயசிரிவர்தன வீதியில் இருந்த மின்மாற்றி ஒன்றில் பொருத்தி வைக்கபட்டு இருந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. அருகிலிருந்த வீடுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றப்படி சேதவிபரங்கள் அறியக் கிடைக்கவில்ல. விசாரனைக்கென பொலிஸ்குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கபட்டுளளனர். ஜானா
-
- 2 replies
- 1.4k views
-
-
ஞாயிறு 03-02-2008 19:15 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பு தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் சிறீலங்கா சுதந்திர தினத்தை கொண்டாட முற்பட்டிருக்கும் இவ்வேளையில் மக்களை அச்சப்படுத்தும்வகையில் பொதுமக்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்படும் இத் தாக்குதல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக அமெரிக்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அமெரிக்கா கொழும்பு புகையிரத நிலையம், தெகிவளை மிருகக்காட்சி சாலை, தம்புள்ள ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 9 replies
- 2.4k views
-
-
''தேசத்தின் மகுடம்'' எனும் சுதந்திரதின நாளையொட்டிய கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது கொழும்பில் நடைபெறவுள்ள ''தேசத்தின் மகுடம்'' எனும் கண்காட்சி தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களை அடுத்து இக் கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது. இன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ''தேசத்தின் மகுடம்'' என்ற தலைப்பின் கீழ் சிறீலங்காப் படையினர் யுத்த களமுனைகளில் ஈட்டிய வெற்றிகளையும் சாதனைகளையும் விளக்கும் கண்காட்சி ஒன்று சுதந்திர நாளாகிய இன்று நடைபெறவிருந்தது. கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து நிலவும் பாதுகாப்பு நிலமையை தொடர்ந்து இக் கண்காட்சி எதிர்வரும் 7ம் நாள் வரை பிற்போடப்பட்டுள்ளது. http:/…
-
- 0 replies
- 794 views
-
-
இராணுவ நடவடிக்கை மூலம் வடக்கையும் மீட்டு இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காணப்போவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
பெரியமடு மற்றும் தம்புள்ள பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் போர் உக்கிரமான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதையே காட்டுகின்றன. ஆனால் இருபக்கமும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்களும் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 3.6k views
-
-
சுதந்திர தினத்தில் கல்முனையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உதயம் இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினமான இன்று அம்பாறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு "தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியொன்று கல்முனையில் அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறது. புதிய கட்சியின் தேசியத் தலைவராக கலாநிதி எஸ்.எல். றியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இக்கட்சியின் எதிர்காலம் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் கூறியிருப்பவை வருமாறு: தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான முன்னெடுப்புகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வாதார உரிமைப் பிரச்சினைகளில் சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நாம் முதலில் நடவடிக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர்களுக்கு இலங்கை அரசு அளிக்க உள்ள புதிய அதிகாராப் பதிர்வு திட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. தமிழர்களுக்கு புதிய அரசு உருவாக்கும் முயற்சியிலும் இறங்க உள்ளது. இலங்கையில் இராணுவத்துக்கும்.விடுதலைப் புலிகளுக்கும் முப்பதாண்டுக்கும் மேலாக கடும் போர் நடந்து வருகின்றது. தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க, ஒவ்வொரு முறை இலங்கை அரசு முயற்சி செய்யும் போது தடைகள் ஏற்பட்டு வந்தன. இலங்கை அரசு தரப்பில் சிலர் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். விடுதலைப் புலிகளும் ஒத்துழைக்க மறுத்தனர். ஏற்கனவே, 20 ஆண்டுகளுக்கு முன், வரதாரஜ பெருமாள் தலைமையில், தமிழர் பகுதியில் தன்னாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், சில மாதங்கள் கூட அது நீடிக்கவில்லை. இப்போது மீ…
-
- 3 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் விழாவை யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் புறக்கணித்திருப்பதனை கண்டித்து சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினர் தற்போது கடுமையான மிரட்டல்களை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
திருமலையில் பாதுகாப்பு கெடுபிடி பீதி காரணம்.... திமலைக்குள் உள் நழையும் வாகணங்கள் அணைத்தும் தீவி ர சோதனைக்குட்படுத்தப்படுகிறத
-
- 0 replies
- 965 views
-
-
தொடர் இரட்டை குண்டு வெடிப்புக்கள் கொலும்பை உலக்கியதை அடுத்து ஞாயிறு பிற்பகல் தொடர் திங்கள் வரையான காலப்பகதியில் 1000க்கும் மேற்ப்பட்ட தமிழர் வீடுகளை முற்றுகையிட்டு சோதனையிட்ட படைகள் சந்தேகத்தின் அடிப்படையில் 18க்கு மேற்பட்ட தமிர்களை கைது செய்துள்ளனர். விரிவான செய்தி தொடர்ந்து சில நிமிடங்களில் http://www.kalakam.com/forum/viewtopic.php?t=238
-
- 0 replies
- 1.4k views
-
-
நாள் நோக்கு Feb 3rd 08 , உயிரம்புகள் திரைப்படம் கருத்து, ஒளி வடிவில்.
-
- 0 replies
- 1.3k views
-
-
நிலைமை மோசமடைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் லெபனான், சோமாலியா, சிம்பாப்வே ஆகிய நாடு களுடன் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. [sunday February 03 2008 06:57:26 PM GMT] [யாழ் வாணன்] பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் லெபனான், சோமாலியா, சிம்பாப்வே ஆகிய நாடு களுடன் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. பிரச்சினைகள் தொடர்பான சர்வதேசக் குழு வெளியிட்டுள்ள கண்காணிப்பு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலகில் தற்போது ஏழு நாடுகளில் உள்நாட்டு மோதல்கள் தீவிரமடைந்து, பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளன. ஜெனியாவில் இன மோதல்கள் காரணமாக டிசம்பர் 27 முதல் ஜனவரி இறுதிப்பகுதிவரை 900 பேர்…
-
- 5 replies
- 1.7k views
-