ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
எனக்கும் ஒருவிடயம் உதைக்குது அந்த நேரத்திலிருந்தே இராணுவம் தேவையில்லாமல் வெளிக்கிட்டு அல்லது வேவையில்லாமல் சண்டையைத்தொடங்கிப்போட்டு அடிவாங்கும்போது எல்லோரும் சொல்லுறவ அரசியல் லாபங்களுக்காக இராணுவத்திட்டங்களைப்போட்டா
-
- 15 replies
- 3.2k views
-
-
மன்னாரில் மையம் கொள்ளும் யுத்தம் [24 - February - 2008] -விதுரன்- வன்னியில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் பகுதிகளினுள் நுழைந்துவிட படையினர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சகல வளங்களுடனும் புலிகளுக்கெதிரான போரைத் தீவிரப்படுத்தினாலும் விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்ப்பால் படையினரின் வெற்றி சாத்தியப்படவில்லை. பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் படையினர் உள்ளனர். வன்னிக் களமுனையில் ஏதாவது பகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் கடந்த சில வாரமாக இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தினமும் பாரிய தாக்குதல்கள் நடைபெறுகின்றன. புலிகள் தங்கள் நிலைகளிலிருந்து பின் வாங்குகிறார்கள், தினமும் ஐம்பதிற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப…
-
- 7 replies
- 2.3k views
-
-
மன்னார் நகரத்தை அண்டி படையினரின் நிலைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி நேற்றுப் பலத்த ஷெல்இ பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிர்வுகளினால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றமடைந்து காணப்பட்டனர். இதேசமயம்இ,நேற்று மன்னார் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் படுகாயமடைந்த நான்கு இராணுவத்தினர் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட விருந்தனர். இதற்கிடையில் வடக்கின் கள முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பல்வேறு மோதல்களில் பத்து இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வவுனியா, முள்ளிக்குளப் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற…
-
- 3 replies
- 2.2k views
-
-
-
- 5 replies
- 2k views
-
-
இலங்கைத் தமிழர்களின் "தமிழர் தாயகம்' குறித்து பகிரங்க விவாதமொன்றிற்கு வருமாறு அமெரிக்காவின் முன்னாள் உதவி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பேர்னாட் குணத்திலகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். பேர்னாட் குணதிலகவிற்கு தாம் எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: தமிழ், தாயகம் தொடர்பாக பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் என்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வது போலஇ இலங்கை அரசு தமிழர்களை முதல்தர பிரஜைகளாக நடத்துகிறதென்றால் அவர்களுக்கு குறைபட்டுக் கொள்வதற்கு எதுவுமில்லை யென்றால் தனி நாடா அல்லது ஐக்கியமா என்பதை தமிழ் மக்கள் வெளிப்படுத்துவதற்…
-
- 7 replies
- 2.6k views
-
-
புலிகளை ஒழித்துக்கட்டுவதாக அரசு சூளுரைத்தபோதும் வட பகுதி இராணுவ நடவடிக்கையில் மந்த நிலை [24 - February - 2008] விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டும் சூளுரையுடன் அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்கின்ற போதிலும் தசாப்தகாலமாக தொடரும் மோதல்களின் இறுதி முடிவு தொடர்பாக முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நிச்சயமற்ற தன்மையே காணப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அரசியல்வாதிகளும் `பயங்கரவாதிகளை' அழித்தொழிக்கப் போவதாக உறுதியளித்திருக்கும் அதேசமயம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் வாபஸ் பெற்ற பின் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆயினும், புலிகளை அழித்தொழிப்பது தொடர்பான இராணுவத்தின் வீரப் பேச்சுகளில் இப்போது தணிவேற்பட்டுள்ளது. `நாம் வெற்றிகண்டு வர…
-
- 1 reply
- 1.5k views
-
-
கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர சோதனை ! கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று அதிகாலை முதல் நண்பகல் வரை விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வெளியிடங்களிலிருந்து கொழும்புக்குள் வந்த பஸ்கள் உட்பட சகல வாகனங்களும் பயணிகளும் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டதுடன
-
- 0 replies
- 833 views
-
-
கொசோவோ பாடங்கள் [24 - February - 2008] முன்னாள் யூகோஸ்லாவிய சம்மேளனத்தில் எஞ்சியிருக்கும் பெரியநாடான சேர்பியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு அல்பேனிய இனத்தவர்களை அதிகப்பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ மாகாணம் கடந்த வாரம் செய்த சுதந்திரப் பிரகடனம் அரசொன்றை அங்கீகரிப்பதில் இருக்கக் கூடிய தகுதிகள் பற்றி உலகில் இன்று பரந்தளவில் விவாதங்களை மூளவைத்திருக்கிறது. கொசோவோவை சுதந்திரநாடாக முதன்முதலில் அமெரிக்கா அங்கீகரித்திருக்கின்றமையும
-
- 1 reply
- 1.3k views
-
-
வடக்கிலும் விரைவில் மாகாணசபை தேர்தல் அமைப்பாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி அறிவிப்பு 2/24/2008 7:20:19 PM வீரகேசரி நாளேடு - நாட்டை பிரிக்காது, காட்டிக் கொடுக்காது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கமைய தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள் ளப்படும். புலிகளின் தலைவர் பிரபாகரனே 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்த தடைபோட்டவரா வார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்திய பின்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். அதேபோல் வடக்கிலும் விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்…
-
- 1 reply
- 738 views
-
-
ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை அம்பலப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒன்பது போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் சிறீலங்காப் படையினருடன் ஏற்பட்ட மோதல்களில் வீரச்சாவடைந்துள்ள ஒன்பது போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 22-02-2008 அன்று… 1) லெஃப்ரினன்ட் கலைச்சுடர் அல்லது தங்கமலர் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், 8ஆம் வாய்க்கால், மாணிக்க பிள்ளையார் கோவிலடி, உருத்திரபுரம், கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கந்தசாமி கேமனா, 2) கப்டன் கடலொளியன் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை நிலையான முகவரியாகக் கொண்ட சாமித்தம்பி கோவிந்தன், 21-02-2008 அன்று… 1) வீரவேங்கை செல்வக்கதிர் என்றழைக்கப்படும் 5ஆம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்த சாமிந…
-
- 2 replies
- 2.1k views
-
-
தெற்கில் பாடசாலைகள், பேருந்து மற்றும் தொடருந்து வண்டிகளின் பாதுகாப்பிற்காக பொதுமக்களில் இருந்து 1,50,000 பேரைத் திரட்டி சிவில் பாதுகாப்புப் பிரிவொன்றை ஆரம்பிக்க மஹிந்த அரசு தீர்மானித்துள்ளது. 'தற்போது உள்ள சிவில் பாதுகாப்பு அமைப்பை மேலும் விருத்தி செய்து ஒரு கிராமத்தில் பத்துப் பேர் வீதம் இவ் வமைப்பில் சேர்த்துக் கொள்ள அரசு தீர்மானித்துள்ளது' என்று மக்கள் பாதுகாப்புப்க் கமிட்டியின் இணைப்பாளர் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். 25 மாவட்டங்களில் 322 பிரதேச சபை காரியாலயங்களுடாக இப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 14,913 கிரமசேவையாளர் பிரிவினூடாக முதற் தடவை 1,49,130 இளைஞாகளை சிவில் பாதுகாப்பு கமிட்டிக்கென சேர்த்துக் கொள்ளப்படுவாhகள்…
-
- 2 replies
- 976 views
-
-
இலங்கையில் இந்தியாவின் புதிய தலையீட்டு நடவக்கைகளால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி. அது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிப்பதற்கும், இவ்விடயத்தில் இலங்கை அரசை உறுதியான நடவடிககை எடுக்த் தூண்டுவதற்குமாக இன்று முதல் பெரும் பிரசாரப் போர் ஒன்றை மேற் கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றது என கூறப்படுகின்றது. இனப்பிரச்சினைத் தீர்விற்காகன அரசியல் யோசனையாக அரசைமைப்பின் 13 வது திருத்தத்தை இலங்கை அரசு இப்போது திடீரென முன் வைத்தமைக்கு இந்தியவின் வேண்டுகோளும் அழுத்தமுமே காரணம் எனக்குற்றம் சாட்டி வந்த ஜே.வி.பி புதுடில்லிக்கு எதிராக பகிரங்கப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. இலங்கையில் இந்தியாவின் புதிய நடவடிகககைளினால் ஏற்படக்கூட…
-
- 14 replies
- 3.5k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக பிள்ளையான் குழு உறுப்பினர்கள் இருவரும் தற்கொலைதாரியும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் களுவாஞ்சிகுடியில் மட்டக்களப்பு – கல்முனை வீதியின் அற்புதப்பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பிள்ளையான் குழு அலுவலகத்தில் கடமையாற்றும் ரொகான்,ஜெகன் என்பவர்களே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் களுவாஞ்சிகுடியில் இருந்து கல்லாறு முகாமுக்கு சென்றுகொண்டிருந்தபோது துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் இவர்கள் மீது தற்கொலை…
-
- 12 replies
- 2.9k views
-
-
மக்கள் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சி புலிகளாலேயே மஹிந்த ஜனாதிபதியானார்முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் 2/24/2008 5:18:51 PM வீரகேசரி நாளேடு - மக்கள் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது. விடுதலைப் புலிகளினாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். ஜனாதிபதி தேர்தலை புலிகள் பகிஷ்கரித்திருக்காவிடின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வந்திருக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பெரும்பான்மையற்ற அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க. உறுப்பினர்களின் தயவிலேயே ஆட்சியை நடத்துகின்றனர் என்றும் அவர் கூறினார். நவீன சந்தை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவமும், பிரதேசசபை, தவிசாளர், உப தவிசாளர், …
-
- 2 replies
- 1.3k views
-
-
------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 898 views
-
-
குறுகிய நேர இடைவெளியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகள் கொழும்பில் பெரும் தாக்குதல்களை மேற்கொள்வதனை தடுப்பதற்காக பெருமளவிலான காவல்துறையினர், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, அங்கு படையினரின் செறிவு அதிகமாகும். ஆண்களும், பெண்களுமாக பெருமளவிலான படையினர் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர். படையினரின் கண்களில் படாமல் சில இடங்களில் சில மீற்றர் தூரம் கூட நகர்வது கடினமாகும். அரசு இதற்…
-
- 13 replies
- 1.8k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று காலை முதல் சிறிலங்காப் படையினர் வீடு, வீடாகச் சென்று பாரிய தேடுதலை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 564 views
-
-
இலங்கையில் இயங்கும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிரபன நடவடிக்கையாக, அந்த அமைப்புக்கள் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட வேண்டும் ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பு கோரியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள், கருணா தரப்பு மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன சிறுவர் உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து கலந்துரையாட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இன்று (பெப்ரவரி21) கூடவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போலவே கருணா தரப்பும் சர்வதேச சிறுவர் சட்டங்கள் மற்றும் பாதுகாப்புச் சபை விதிகளுக்கு முரணான வகையில் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புக்களுக்…
-
- 16 replies
- 3.4k views
-
-
இன்று காலை 6:35 மணியளவில் ஒட்டிசுட்டானில் அமைந்திருக்கும் விடுதலைப்புலிகளின் முகாம் மீது தமது ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளன் ஊடகங்களுக்கு தற்போது தெரிவித்துள்ளார். ஜானா
-
- 5 replies
- 2.8k views
-
-
கொழும்பில் பஸ் ஒன்றில் குண்டு வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன...... Bomb exploded in a bus The bomb had exploded inside a bus when the passengers were getting out the bus having seen a suspicious looking parcel. dailymirror Blast hits passenger bus in Sri Lanka - witness Sat Feb 23, 2008 11:25am COLOMBO (Reuters) - A blast rocked a passenger bus on the southern outskirts of the Sri Lankan capital on Saturday morning, an eyewitness said, adding he could see smoke rising into the air and ambulances rushing to the scene. The military confirmed there had been an explosion but had no further details. "There was an exp…
-
- 17 replies
- 4.6k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்படாட்டுப் பிரதேசமான பூநகரி கிராஞ்சி மீது நேற்றுக் காலை விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் கொல்லப்பட்வர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு இராணுவப் பேச்சாளன் பிரிகேடியர் உதய நாணயகன்கார பி.பி.ஸிக்குத் தெரிவித்திருக்கிறார். விமானக் குண்டுவீச்சில 3 சிறுவர்கள் உட்பட எட்டுப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் பத்துப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பி.பி.ஸி. கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை : எப்போ எல்லாம் விமானப்டை தாக்குதல்களை மேற்கொள்கின்றதோ அப்போது எல்லாம் விடுதலைப் புலிகள் பொதுமக்கள் கொல்லப்படனர் என்ற பிரசாரத்தைத்தான் மேற்கொண்டு வருகின்றனர். இது…
-
- 8 replies
- 2k views
-
-
தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த மசூர் மௌலானா கிழக்கின் பெரும் சொத்து [23 - February - 2008] * ஹென்றி மகேந்திரன் பாராட்டு தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்து இன்று இச்சபையின் பிரதி மேயராக பதவி வகிக்கும் மசூர் மௌலானா அவர்கள் கிழக்கிற்கு கிடைத்த பெரும் சொத்து என கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று 21 ஆம் திகதி இடம்பெற்றது. பிரதிமேயராக மசூர் மௌலான பதவியேற்றதைத் தொடர்ந்து மகேந்திரன் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அமர்வு மாநகர மேயர் எம். அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது. அவசர வேலை நிமித்தம் அவர் சபையை விட்டு வெளியே சென்றதைத் தொடர்ந்து சபைக்கு மசூர் மௌலா…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காவின் உட்பகுதியான யால வனப்பகுதியில் போர் நெருப்பு மீண்டும் மேலெழுந்திருக்கின்றது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-