ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
ஒற்றுமையை வலியுறுத்தி பௌத்த மத குரு யாழில் இருந்து பாதயாத்திரை! நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டி வெலிமட சதானந்த தேரர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையிலிருந்து தெய்வேந்திர முனைவரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு நடை பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். நாட்டில் சமாதானம் ஒற்றுமையினை வலியுறுத்தி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தனது தூரநோக்கமானசெயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும் நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் குல மத பேதம் இன்றி ஒற்றுமையாகவும் நிரந்தர சமாதானத்துடன் வாழ வேண்டி பிரார்த்தித்து நயினா தீவு ஸ்ரீ நாக விஹாரையில் வழிபாடுகளை மேற்கொண்டு ஆரியகுளம் நா…
-
- 3 replies
- 585 views
-
-
மத்திய வங்கி சர்வதேசத்தின் ஆதிக்கத்திற்குட்படும் - உதய கம்மன்பில Published By: VISHNU 24 MAR, 2023 | 04:02 PM (எம்.மனோசித்ரா) மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதன் ஊடாக அது மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி சர்வதேசத்தின் நிர்வாகத்திற்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் மிக்கதாக மத்திய வங்கி மாற்றமடையும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தினை சர்வசன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுமீதா…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்! Published By: T. SARANYA 24 MAR, 2023 | 11:48 AM யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தினை சீரமைக்கும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை காலாவதியான பொருளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுசுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்கள் இனம் காணப்பட்டதை அடுத்து அதன் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட…
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ; மக்களின் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டும் நீதவான் உத்தரவு! Published By: T. Saranya 24 Mar, 2023 | 10:08 AM கிளிநொச்சி கிராஞ்சி கடலட்டை பண்ணை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மக்களின் முறைப்பாடுகளை விசாரிக்க வேண்டும் என்று வவுனியா மேல் நீதிமன்றால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தவணையிடப்பட்டது. கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கடலட்டை பண்ணைக்கு அப்பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்றினையும் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்க…
-
- 0 replies
- 670 views
-
-
இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டும்-ஜெனீவாவில் கஜேந்திரகுமார் Published By: Rajeeban 24 Mar, 2023 | 10:02 AM தமிழர் தேசமான ஈழத்தினை சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறுதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழர் தேசமான ஈழத்தினை சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும் இந்த அவையின் அங்கத்துவ நாடுக…
-
- 0 replies
- 195 views
-
-
பழைய விளையாட்டுகளை மீண்டும் விளையாட முடியாது – ஊடகப் பிரதானிகள் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு! தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பி…
-
- 0 replies
- 589 views
-
-
உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை - கலாநிதி ஆறுதிருமுருகன் Published By: Digital Desk 5 21 Mar, 2023 | 11:03 AM ( எம்.நியூட்டன்) உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை திறந்துவைக்கப்படவுள்ளது என செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், கிழக்கிலங்கை வரலாற்றில் சிவபூமி திருமந்திர அரண்மனை மார்ச் மாதம் 24ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இலங்கை சிவபூமி அறக்கட்டளையினால் நிறுவப்பட்டுள்ள திருமந்திர அரண்மனை சம்பிரதாயபூர்வமாக திறந்த வ…
-
- 2 replies
- 735 views
-
-
வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முதற்கட்ட கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் சில தினங்களில் கடன் தொகை கிடைக்கவுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளை சர்வதேச நிதியம் விதித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் முதல் தவணையாக 333 மில்லியன் டொலர்கள் சில தினங்களில் கிடைக்கவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் இந்த மூன்று பில்லியன் டாலர்கள் நான்கு ஆண்டுகளில் தவணைகளில் வழங்கப்படும். இலங்கை அமுல்படுத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகள் வெளியாகி உள்…
-
- 32 replies
- 2.6k views
- 1 follower
-
-
பொருளாதார மீட்சிக்கு தடையான போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது - காஞ்சன விஜேசேகர Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:28 PM ஊழல்மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படும் தொழிற்சங்க தலைவர்களின் நோக்கங்களுக்கு அரச சேவையாளர்கள் பலியாகக் கூடாது,பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது. நாட்டின் எதிர்காலத்துக்காக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
கோட்ட கோ கமவில் ஐக்கிய தேசியக் கட்சியே முதல் குடிலை அமைத்தது: விமல் காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ முதலாவது குடிலைஐக்கிய தேசியக் கட்சியின் ஆஷு மாரசிங்கவினால் அமைக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து அரகலயவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். காலி முகத்திடலில் உள்ள அரகலய இடத்தை அகற்ற வேண்டாம் என அப்போதைய பிரதமர் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரகலயவை தாக்க ஆரம்பித்தார் என்றார். http…
-
- 0 replies
- 541 views
- 1 follower
-
-
உபகரணங்களின் பற்றாக்குறையால் 35,000 மின் இணைப்புகள் நிலுவையில் உள்ளன: இந்திக அனுருத்த இலங்கை மின்சார சபைக்கு தேவையான உபகரணங்களின் பற்றாக்குறையால் காத்திருப்போர் பட்டியலில் 35,000 க்கும் மேற்பட்ட புதிய மின் விநியோகங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். 15,000க்கும் மேற்பட்ட புதிய மும்முனை இணைப்புகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன என்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மின் தட்டுப்பாடு காரணமாக புதிய மின்சார இணைப்புகளை மின்சார சபை வழங்காததால் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். IMF ந…
-
- 0 replies
- 525 views
- 1 follower
-
-
மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளரான தந்தை பலி ; மகன் கைது Published By: T. SARANYA 23 MAR, 2023 | 01:32 PM மகனின் கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை பலியான சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 16ஆம் திகதி தன்னை கிரிக்கெட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டைப் பதிவு செய்த அவர் தனது மனைவி சகிதம் வீட்டைவிட்டு வெளியே…
-
- 1 reply
- 626 views
- 1 follower
-
-
யாழில். மனித பாவனைக்கு உதவாத புளியை வைத்திருந்தவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்! Published By: T. SARANYA 23 MAR, 2023 | 09:32 AM மனித பாவனைக்கு உதவாத பழப்புளியை மீள் பொதி செய்த குற்றச்சாட்டில் கைதான நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்று 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள களஞ்சிய சாலை ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் பழப்புளி பொதி செய்யப்படுவதாக பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைத்த பொது சுகாதார பரிசோதகர் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்ட 6 ஆயிரம் கிலோ பழப்புளியை கைப்பற்றி இருந்தார். மறுநாள் 26 …
-
- 2 replies
- 568 views
- 1 follower
-
-
பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளாவிட்டால் பாடசாலையும் அத்தியாவசிய சேவையாக்கப்படும் – ஜனாதிபதி பாடசாலை சேவையை அத்தியாவசிய சேவையாக்க பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை முன்வைக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பாடசாலையொன்றில் சீருடை மற்றும் பாடசாலை புத்தக விநியோக நிகழ்வை ஆரம்பித்து உரையாற்றுகையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்திற்கான பிரஜைகளை உருவாக்குவது கல்வி அமைச்சின் பொறுப்பாகும். கல்வி என்பது கற்பித்தல் மற்றும் பரீட்சைகளுடன் தொடர்புடையது மட்டுமல்ல. கல்வி என்பது முன்னுதாரணமாகும். அது பாடசாலையில் இருந்து வரவேண்டும். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அந்த முன்னுதாரணத்தை வழங்க வேண்டும். அதிலிருந்து விலக முடியாது.…
-
- 0 replies
- 581 views
- 1 follower
-
-
தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி! பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட…
-
- 2 replies
- 500 views
- 1 follower
-
-
எலி மொய்த்த உணவுகள் விற்பனை செய்ய இருந்த உணவகத்திற்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு Published By: T. SARANYA 23 MAR, 2023 | 09:21 AM மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை வைத்திருந்த நிலையில், குறித்த உணவகத்துக்கு எதிராக நேற்று (22) மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகள் களஞ்சியப் படுத்தியும் , விற்பனைக்காக வைத்திருப்பது தொடர்பாகவும் உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வீடியோ காணொளியை மன்…
-
- 1 reply
- 623 views
- 1 follower
-
-
யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
-
- 0 replies
- 431 views
-
-
மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் தி…
-
- 0 replies
- 163 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை இலங்கைக்கு நிவாரணமளிக்காது – மூடிஸ் பொருளாதார நிபுணர் உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும், இலங்கையின் நிலைமை மேலும் கடினமானதாகவே இருக்கும் என மூடீஸ் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு கிட்டத்தட்ட 2.9 பில்லியன் டொலர் நிதியுதவிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் கண்டிப்பாக இந்த கடன் தொகை இலங்கை நினைப்பது போல் நெருக்கடிக்கு தீர்வாக அமையாது என மூடிஸ் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் கத்ரீனா எல் கூறியுள்ளார். இலங்கைக்கு எவ்வளவு நிதியுதவி அல்லது ஆதரவு வழங்கினாலும், இலங்கையின் நிலைமை இன்னும் கட…
-
- 2 replies
- 283 views
- 1 follower
-
-
முன்னாள் பிரதமர்,முன்னாள் நிதியமைச்சரின் பயணத்தடை நீக்கம் இலங்கையின் பொருளாதார முறைகேடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை இனி நடைமுறைக்கு வராது என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/245841
-
- 2 replies
- 575 views
- 1 follower
-
-
மே மாதத்தில் 33,000 ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை Published By: T. SARANYA 22 MAR, 2023 | 02:17 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 26,000 பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நாடளாவிய 141 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 53,000 பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது வசந்த யாப்பா பண்டார எம். பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த…
-
- 1 reply
- 320 views
- 1 follower
-
-
இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை - இந்தியா அவதானம் Published By: NANTHINI 22 MAR, 2023 | 05:14 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு இந்திய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் இந்தியா - இலங்கைக்கு இடையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையில் டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை பெற்றுக்க…
-
- 0 replies
- 592 views
- 1 follower
-
-
யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்! Published By: VISHNU 22 MAR, 2023 | 07:09 PM யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின் தாக்கம் இடம்பெற்றதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இளைஞன் மரணம் அடைந்துள்ளான். மரணமடைந்தவர் 27 வயதுடைய நிலக்காடு காரைநகரை சேர்ந்த குமாரசாமி சுதன் எனும் ஒரு குழந்தையின் தந்தையாவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை …
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
வாகனங்களின் தொழில்நுட்ட பிழைகளைக் கண்டறிய விஷேட நடவடிக்கை அநுராதபுரம் மோட்டார் வாகனத் திணைக்களம் மற்றும் பிரதேச பொலிஸ் வாகனப் பிரிவு இணைந்து வாகன அனுமதிப்பத்திரம், போலி ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிழைகள் தொடர்பில் கண்டறியும் விஷேட நடவடிக்கையொன்றை நேற்று (21) மாலை அனுராதபுரம் நகரை மையமாக வைத்து அமுல்படுத்தினர். அநுராதபுரம் நகருக்குச் செல்லும் பல வீதிகளை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டது. அறுபத்தொன்பது வாகனங்களுக்கு பழுதுபார்த்தல் உத்தரவு, தடை உத்தரவு மற்றும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. பழுதடைந்த வாகனங்களை சரி செய்ய 10 நாள் கால அவகாசம் அளிக்க அறிவுறுத்தப்பட்டதாக நடவடிக்கையை மேற்கொண்ட மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியுடன் இலங்கைக்கு கடன் வசதியை வழங்குவதற்கு பல வகையான வரிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைச் செலவு குறையாது இலங்கைக்கு கடன் வழங்கும் யோசனைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று(20.03.2023) அனுமதி வழங்கியிருந்ததை அடுத்தே பொருளாதார ஆய்வாளர் இதனை கூறியுள்ளார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விரிவான கடன் வசதியை இலங்கை பெற்றதால் மக்களின் வாழ்க்கைச் செலவு குறையாது என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்…
-
- 3 replies
- 342 views
-