ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 30 வருட கால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்க முடியும். புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/investing-in-diaspora-organizations-1675…
-
- 6 replies
- 1k views
-
-
வரி அதிகரிப்பு பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் - நாலக கொடஹேவா By NANTHINI 07 FEB, 2023 | 05:09 PM (இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காது. அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் பொருளாதார வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வரி அதிகரிப்பு பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
இலங்கையை மீளக்கட்டியெழுப்ப பங்களிக்கும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற டாட்டா ஸ்டீல் - டாட்டா டிஸ்கனின் வருடாந்தக்கூட்டம் By T. SARANYA 07 FEB, 2023 | 05:13 PM (நா.தனுஜா) இந்தியாவின் முதற்தர வணிக வலையமைப்பான டாட்டா குழுமத்தில் உற்பத்திகளில் ஒன்றான டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா டிஸ்கனின் வருடாந்தக்கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நோக்கிலும், இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையிலும் இலங்கையில் முதன்முறையா…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சட்டத்தில் திருத்தம் By T. SARANYA 07 FEB, 2023 | 03:17 PM (எம்.மனோசித்ரா) 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அக்ரஹார தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்திற்கு சமமான சுகாதாரக் காப்பீட்டு முறையொன்றை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்கான முன்மொழிவொன்று 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறு…
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
வடக்கு – கிழக்கு தமிழரின் தாயகம் அல்ல! – தென்னிலங்கை இனவாதிகள் கூக்குரல் ! வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கின்றது? தமிழர்களுக்கென ஒரு தாயகம் இந்த நாட்டில் இல்லை. தமிழர்களுக்கு தாயகம் வேண்டும் என்று போராடிய விடுதலைப் புலிகள் போரில் ஒழிக்கப்பட்ட பின்னர் என்ன நோக்கத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் போராட்டம் நடத்தப்படுகின்றது? இந்தப் போராட்டத்தின் பின்னால் உள்ள சர்வதேச நாடுகள் எவை?” – இவ்வாறு ஆக்ரோஷமாக சிங்களக் கடும்போக்குவாதி நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவும் சரத் வீரசேகரவும் கேள்வி எழுப்பியுள்ளனர். ‘ஆக்கிரமிப்புக்களை நிறுத்து!’ என்ற கோஷத்துடன் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கிய பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 436 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டின் இறையான்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நான்கு பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளன. கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) வியாழக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். இதன் போதே மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்க …
-
- 30 replies
- 2.3k views
- 1 follower
-
-
13வது திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராய மகாநாயக்க தேரர்கள் யாழ். விஜயம்! 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும், சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உள்ளடக்கிய 20 பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் , 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் மக்களின் நிலைப்பாடு மற்றும் வடக்கு கிழக்கில் எவ்வகையான தாக்கத்தை செலுத்தும், அதனை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் சாதக, பாதக விடயங்கள் தொடர்பில் மதத் தலைவர்கள் சமூகமட்ட பிரதிநிதிகளின் கருத்துக்களை அ…
-
- 1 reply
- 647 views
- 1 follower
-
-
இலங்கையின் கடற்பரப்பில் 2021 ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதியன்று,எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானது. இவ்வாறு தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கை இதற்கமைய சட்ட ரீதியான நடவடிக்கையை இம்மாதம் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக 6 பில்லியன் டொலருக்கும் அதிகமான நட்டஈட்டைப் பெறுவதற்கு சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை எதிர்பார்த்துள்ளது. இதேவேளை இலங்கையின் கொழும்பு துறைமு…
-
- 9 replies
- 984 views
-
-
துருக்கிக்கு உதவி வழங்க இலங்கை தயாராகவுள்ளது – அலி சப்ரி துருக்கி அரசாங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால் உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட 300 பேர் கொண்ட இராணுவக் குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, துருக்கியில் உள்ள 13 இலங்கையர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். இதுவரையில் 14 இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு நபரான பெண்ணுடன் தொடர்புடைய…
-
- 1 reply
- 716 views
-
-
யாழ். கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரிப்பு! யாழ்குடா கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்தவர், நெடுந்தீவு தொடக்கம் நைனா தீவு, எழுவைதீவு, அனலதீவு, மாதகல், பருத்தித்துறை, வடமராட்சி வரை இந்திய மீனவருடைய ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இழுவை மடி ஊடாக எமது தொழிலாளர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் 100 தொடக்கம் 1…
-
- 0 replies
- 527 views
-
-
எங்களது உயிர்களை மீறி எங்களின் பிணங்களில் ஏறித்தான் வடகிழக்கினை பிரிக்கமுடியும் – வேலன் சுவாமிகள் http://www.samakalam.com/wp-content/uploads/2023/02/66.jpg வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம். எங்களது உயிர்களை மீறி எங்களின் பிணங்களில் ஏறித்தான் வடகிழக்கினை பிரிக்கமுடியும் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணரவேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வடக்கிலேதான் தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளது,வடக்கிலேதான் தமிழர்கள் உள்ளார்கள் என்ற ஒரு போலியான முகத்தினை இலங்கை அரசு காலம்காலமாக ஏற்படுத்தி பிரித்தாளும் தந்திரங்களை முன்னெ…
-
- 0 replies
- 388 views
-
-
கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமங்களில் தெலுங்கு பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றமை தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இலங்கையில் அமைந்துள்ள பல கிராமங்கள் வெளி உலகத்திற்கு தெரியாமலும், கவனிக்கப்படாத ஓர் சமூகமாகவும் காணப்படுகின்றன. அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் ஆழையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அளிக்கம்பை, கஞ்சிகுடியாறு கிராமத்தை குறிப்பிடலாம்.கஞ்சிகுடியாறு கிராமம், உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட கிராமமாகும். ஆழையடிவேம்பு பகுதியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் குறித்த கிராம மக்கள் கவனிப்பாரற்று வாழ்ந்து வருகிறார்கள். வறுமை கோட்டில் வாழும் மக்கள் …
-
- 2 replies
- 831 views
-
-
இலங்கை பெற்ற கடனை திரும்பப் பெறுவதற்கு கால அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்! By T. Saranya 06 Feb, 2023 | 11:51 AM இலங்கைக்கு வழங்கிய கடன் தொகையை செலுத்துவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல் மொமன் தெரிவித்துள்ளார். கடன் தொகையை செலுத்துவதற்கு இதுவே கடைசி கால அவகாசம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நியச் செலாவணி வசதியின் கீழ், பங்களாதேஷ் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் தொகையை வழங்கியதுடன் அதனை திருப்பிச் செலுத்துவதற்கு மேலதிகமாக 6 மாத கால அவகாச…
-
- 2 replies
- 303 views
-
-
அரசியல் தீர்வு கிடைக்காவிடின் தமிழர் தாயகம் பறிபோய்விடும் – பிறந்தநாளில் சம்பந்தன் எச்சரிக்கை “அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் – சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். எனவே, உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். திடீர் சுகவீனமுற்று அண்மையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், நேற்றுமுன்தினம் (03) வீடு திரும்பிய நிலையில் இன்று 90 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். இந்நிலையில், அவரை இன்றிர…
-
- 3 replies
- 578 views
-
-
சமஷ்டியை உச்சரிக்கத் தமிழரசுக் கட்சிக்கே உரித்துண்டு ! – சுமந்திரன் விளாசல் சமஷ்டி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்குத் தமிழரசுக் கட்சியைத் தவிர வேறு எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ‘இருள் சூழ்ந்த சுதந்திரம்’ எனப் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று (04) நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் சமஷ்டியைப் பழித்துப் பேசியவர்கள் இன்று அதைக் கட்டிப்பிடி…
-
- 6 replies
- 880 views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியின் தலைவர் சேயோன் பதவி விலகல்! Vhg பிப்ரவரி 06, 2023 இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியின் தலைவர் சேயோன் கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலும் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் மற்றும் கட்சியின் தற்காலிக பொது செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. கல்குடா தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு மிகவும் சவால் மிக்க ஒருவராக இவர் காணப்படடார் எனக் குறிப்பிடப்படுகின்றது. பதவி விலகலுக்கான காரணம்...! இதேவேளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின், சபையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைக்கும் வரை கட்சிக்காக அதிகளவில் செயற்பட்டு வந்ததாகவும் கட்சியோ கட்சியின் ஏனையவர்களோ …
-
- 0 replies
- 667 views
-
-
லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்! By DIGITAL DESK 5 02 FEB, 2023 | 11:13 AM 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது அன்றைய தினம் நள்ளிரவு முதல் இந்த விலை திருத்தம் இடம்பெறும் என நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்க…
-
- 3 replies
- 626 views
- 1 follower
-
-
எசல பெரஹர காலத்தில் பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் - ஜனாதிபதி By T. SARANYA 06 FEB, 2023 | 04:11 PM இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் எசல பெரஹர நடைபெறும் காலம் நெருங்கும் போது நாட்டுக்கு பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு கங்காராமை விகாரையின் நவம் பெரஹரா நேற்று (பெப் 05) இரவு ஆரம்பமானது. இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நவம் பெரஹரா விழாவை வருடந்தோறும் நடத்துவது நாட்டுக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்த ஜனாதிபதி, இக்கட்டான காலத்தை கடந்து செல்…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
இந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்து செயற்படவில்லை – மாவை இந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்து செயற்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதையே இந்தியா விரும்புகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் இலங்கை அரசியலில் நீண்டகால அனுபவம் பெற்றவர் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அவர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை ஒருமித்தே சந்தித்திருந்தார் எனவும் மாவை குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கட்சிகள் இலங்கையிலும் சர்வதேசத்திலும் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில…
-
- 2 replies
- 620 views
-
-
13 ஐ அமுல்படுத்தினால் இந்தோனேசியாவிற்கு ஏற்பட்ட நிலை உருவாகலாம் – கம்மன்பில எச்சரிக்கை பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி 90களில் இந்தோனேசியாவை பிளவுபடுத்திய மேற்கத்திய நாடுகளின் திட்டத்தில் இலங்கையும் பலியாக கூடாது என ஆளும்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தொடரும் கொடுப்பனவு நிலுவை மற்றும் கடன் நெருக்கடிகள் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால், கிழக்கு திமோர் சுதந்திரத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைப் போலவே அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்தோனேசிய ஜனாதிபதி சுஹார்டோவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கும் சூழலை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பதையும் கவனத்தில் க…
-
- 0 replies
- 462 views
-
-
சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்! சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த வாரம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்காலப்பகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் முகங்கொடுக்கின்ற பொதுப்பிரச்சினைகள் தொட…
-
- 0 replies
- 467 views
-
-
பேரணியில் கலந்து கொள்வோருக்கு வடக்கில் இருந்து பஸ் வசதி By T. Saranya 06 Feb, 2023 | 10:30 AM வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள நிலையில் பேரணியில் வடக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொள்பவர்களுக்குரிய பஸ் ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் சுதந்திர நாள் - தமிழர்களுக்குக் கரிநாள்…
-
- 0 replies
- 286 views
-
-
13ஐ நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு இந்தியா பாராட்டு By NANTHINI 05 FEB, 2023 | 11:02 AM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை, இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் நேற்று (4) சனிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஜனாதி…
-
- 3 replies
- 700 views
- 2 followers
-
-
தடயவியல் அறிவியல் மாநாட்டில் வட மாகாண ஆளுநர் பங்கேற்பு By NANTHINI 05 FEB, 2023 | 05:42 PM இந்தியா, குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திஜி தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் (NFSU) 25ஆவது அகில இந்திய தடயவியல் அறிவியல் மாநாட்டின் சிறப்பு அதிதியாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துகொண்டார். குஜராத்தில் உள்ள உலகில் பிரசித்தி பெற்ற தடயவியல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்தின் 25ஆவது மாநாடு இடம்பெற்றது. குறித்த மாநாட்டினை தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவர் நீதிபதி அருண்குமார் மிஸ்டர் தொடங்கி வைத்தார். …
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
பொலிஸ் பிரிவிற்கு ஜப்பான் அரசாங்கம் நன்கொடை By VISHNU 05 FEB, 2023 | 05:29 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக ஜப்பான் அரசாங்கம் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வேன்கள், மினி பஸ் ஒன்று மற்றும் 115 கண்காணிப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது. இந்த உபகரணங்களை வழங்குவது தொடர்பான ஆவணங்களை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டேக்கி ஷுன்சுகே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார். வாகனங்களை பரிசோதித்ததைத் தொடர்ந்து ஜப்பானிய ராஜாங்க வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபத…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-