Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு : October 21, 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு இன்று (21)யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பெரும் திரளான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மின் இ.ஜெயசேகரம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மனுவல் ஆனோல்ட் ஆகியோர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். பாறுக் ஷிஹான்- …

  2. முடிந்தால் வடக்கு கிழக்கு நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைத்துப் பாருங்கள் என சவால் விடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், நாங்கள் அபிவிருத்தியுடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் ஒரு வருடத்தில் நிறைவேற்றிக் காட்டுவோம் எனவும் தெரிவித்தார். தென் பகுதியில் இருந்து வடக்கு கிழக்குக்கு வருகின்ற அமைச்சர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பலத்தை அறியாது கட்டச் சம்பலுக்கு ஒப்பிட்டு ஏளனமாகப் பேசுவதை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் சக்தி என்பதனை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் தாண்டியடியில் இடம் பெற்…

  3. ராஜபக்ஷ அரசின் மீது நம்பிக்கை இல்லை புதிய ஆட்சியை அமைக்க அணிதிரள்வோம் [01 - May - 2007] [Font Size - A - A - A] * மே தினக்கூட்டத்தில் ஜே.வி.பி.அழைப்பு ப.பன்னீர்செல்வம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லையென்பது நிரூபணமாகியுள்ளதென ஜே.வி.பி.யின் தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ரி.லால்காந்த தெரிவித்துள்ளதுடன் தொழிலாளர் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு ஆட்சியைக் கைப்பற்றி, எமது உரிமையை பெற்றுக் கொள்ளும் அரசாங்கத்தை உருவாக்கும் போராட்டத்துக்காக நாம் அணி திரளவேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டம் நேற்று திங்கட்கிழம…

  4. ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது – சுமந்திரன்! நீதியை காக்கும் பொறுப்பு கருவுக்கு – ஹக்கீம்… November 2, 2018 சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட பிரதமர் நியமனத்தை சட்டபூர்வமாக்குவதற்காக பாராளுமன்றினை கூட்டாமல் காலம் கடத்துவதனூடாகத்தான் இன்றும் சட்டபூர்வமற்ற ஒரு பிரதமர் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றார் என்பது தான் யதார்த்தம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற அனைத்தக் கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்குமிடையிலான கலந்துரையாடலின் பின்னர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள அராஜக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் …

  5. 27 AUG, 2023 | 10:02 AM குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று (27) அதிகாலை 1 மணியளவில் முதியவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த நபர் நேற்றைய தினம் (26) காலை 7.45 மணிக்கு தேவாலயத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது பனை மரத்தில் இருந்து கீழே விழுந்த குளவிக்கூட்டில் இருந்த குளவிகள் அவரை கொட்டியுள்ளது. அதனையடுத்து, அவர் மிருசுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் அவர் ச…

  6. வடக்கில் மாவட்ட மற்றும் ஆதார மருத்துவ மனைகளுக்கு வழங்கப்பட்ட சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்று மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு சுகாதார அமைச்சு இவற்றை வழங்கியுள்ளது. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைகளுக்கும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி, செட்டிகுளம் ஆதார மருத்துவ மனைகளுக்கும் தலா இரண்டு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. https://newuthayan.com/story/19/சிறுநீரகங்களைச்-சுத்திகரிக்கும்-இயந்திரங்கள்-இய…

  7. கிளிநொச்சியில் 60 வீத வாக்காளரிடம் அடையாளஅட்டை இல்லை - மாவட்ட அரசஅதிபர் அதிர்ச்சித் தகவல் [ செவ்வாய்க்கிழமை, 19 யூலை 2011, 00:19 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தமது அடையாளத்தை நிரூபிப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்கள் பெரும்பாலானோரிடம் தேசிய அடையாளஅட்டை இல்லை என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 61,217 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள போதும், அவர்களில் 60 வீதமானவர்களிடம் தேசிய அடையாளஅட்டை இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இவர்களில் பலர் தமது சொந்த இடங்களை விட்டு வந்து குடியேறியவர்கள் என்றும், ஏனையோர் பலமுறை இடம்பெயர்ந்ததால் தமது அடையாள ஆவணங்களை த…

  8. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீளவும் செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28ம் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் போது மக்களின் கருத்து குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களும் உள்ளீடுகளும் மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தவறுகள் மீளவும் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை இந்த அமர்வு…

  9. மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி முன்அறிவித்தல்களின்றி இடைநிறுத்தம் மன்னார் மனித புதைகுழியில் இதுவரை இடம்பெற்ற மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகளின் போது 232 க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 224 அதிகமான மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அடையாளப்படுத்தப்பட்டு இன்னமும் அப்புறப்படுத்தப்படாத மேலதிக மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. இந்தநிலையில் முன் அறிவிதல் இன்றி நேற்று முதல் எதிர்வரும் இரு வாரங்களுக்கு திடீர் என அகழ்வு பணியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அகழ்வ…

  10. இலங்கைப் போரின் இறுதிக் கட்டம் குறித்து சர்வதேச கண்காணிப்பில் விசாரணை நடைபெறவேண்டுமென கனேடிய லிபரல் கட்சி கேட்டுள்ளது. இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தின்போது புரியப்பட்ட சம்பவங்கள் குறித்துச் சர்வதேச கண்காணிப்பில் விசாரணை நடைபெறவேண்டுமென கனேடிய லிபரல் கட்சியின் தலைவர் பொப் றே தெரிவித்தார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு அறிக்கை ஒன்றை அவர் விடுத்தார். தமிழ் மக்களினதும், போரின்போது உயிரிழந்த ஏனையோரினதும் துன்பத்தை லிபரல் கட்சி உணர்வதாக பொப் றே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உண்மை என்னவென்று தெரியவராமல், மீள் இணக்கம் ஏற்பட முடியாதெனக் கனடா தெளிவாகக் குரல் எழுப்பவேண்டுமெனத் தெரிவித்துள்ள பொப் றே, குற்றங்கள் புரியப்பட்டிருந்தால், அதற்குப் பதில் விளைவுகள் இ…

    • 0 replies
    • 406 views
  11. விடுதலைப்புலிகளது முன்னாள் பெண்போராளியொருவர் இன்று காலை புதுக்குடியிருப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே குறித்த யுவதியான முன்னாள் பெண்போராளியினை கடத்தி சென்றுள்ளனர்.அவ்வாறு கடத்தப்பட்டவர் கைவேலி பகுதியினை சேர்ந்தவரான விசுவலிங்கம் வினோதினி(வயது 26) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அவர் படையினரின் கண்காணிப்பில் இயக்கப்படும் சிறார்களிற்கான முன்பள்ளியொன்றில் கல்வி கற்பித்து வந்துள்ளார். இன்று காலை வழமை போலவே முன்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர்கள் தாக்கிய பின் தமது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றுள்ளனர்.மயக்கமுற்ற நிலையில் காலை வேளை குறித…

    • 9 replies
    • 993 views
  12. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றியீட்ட வேண்டுமாயின் மஹிந்த ராஜபக்ஸவின் சேவை அவசியமானது என முன்னாள் அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கிராமங்களில் தொடர்ந்தும் பிரபல்யமாக திகழ்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டுமா இல்லையா என்பது பற்றி கருத்து வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்காக போட்டியிடப் போவதாக ராஜபக்ஸ எந்த இடத்திலும் இதுவரையில் கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தோல்விக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸவும…

  13. Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 12:55 PM யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களுக்கு மேலாக மாங்கொல்லை பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அந்நிலையில் கடந்த ஜூன் மாத கால பகுதியில் அப்பகுதியில் இருந்த நிலைகொண்டு இருந்த இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறினார். இராணுவத்தினர் வெளியேறிய போதிலும் அப்பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாததால், மக்கள் மீள் குடியேற முடியாத நிலைமை காணப்பட்டது. …

  14. இது சம்பந்தமான உத்தியோகபூர்வ பிரசுரம்: http://photos.state.gov/libraries/sri-lanka/5/pdfs/DV_outreach_North_Sinhala_Tamil.pdf •Killinochchi - August 06th 2011 at 9:30 am National Youth Service Council Hall, Killinochchi •Jaffna - August 06th 2011 at 4:30 pm Veerasingam Hall, Jaffna http://srilanka.usembassy.gov/pr-3august11.html யாழ், கிளிநொச்சியில் அமெரிக்க கிறீன்கார்ட் விஸா கருத்தரங்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் விஸா பிரிவு, யாழ்பாணம், கிளிநொச்சி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் முதற் தடவையாக கிறீன்கார்ட் விசா லொத்தர் தொடர்பிலான கருத்தரங்கை நடத்தவுள்ளது. இக்கருத்தரங்கு எதிர்வரும் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை அநுராதபுரம் கூட…

    • 1 reply
    • 790 views
  15. இர­ணை­ம­டுக் குளத்­தின் கீழ் 2019ஆம் ஆண்டு சிறு­போ­கத்­தில் 12 ஆயி­ரத்து 500 ஏக்­கர் நெற்­செய்கை மேற்­கொள்ள அனு­ம­திக்க முடி­யும் என்று பிராந்­திய நீர்ப்­பா­ச­ னப் பொறி­யி­ய­லா­ளர் சுதா­க­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இர­ணை­ம­டுக் குளத்­தின் கொள்­ள­ளவு 34 அடி­யில் இருந்து 36 அடி­யாக உயர்த்­தப்­பட்­டது. தற்­போது 34 அடிக்­குத் தண்­ணீர் சேமிக்­கப்­பட்­டுள்­ளது. சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர்­வரை அணைக்­கட்­டின் பாது­காப்­புக் கருதி 32 ௮டி உய­ரத்­துக்கு மட்­டுமே தண்­ணீர் தேக்­கப்­பட்­டது. தற்­போது 34 அடி­யா­கக் காணப்­ப­டும் தண்­ணீர் மழை வீழ்ச்சி கிடைத்­தால் 36 அ…

  16. கோத்தேபய ராஜபக்சேவை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் Tuesday, August 9, 2011, 23:14இந்தியா தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசு மீது ஐ.நா. சபை பொருளதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.இதை விமர்சித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தேபய ராஜபக்சே விமர்சனம் செய்து பேட்டியளித்துள்ளார். இதை கண்டித்து புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் அண்ணாசிலை அருகில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கோத்தேபயே ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். போலீசார் ஓடிவந்து அந்த கொடும் பாவியை பிடுங்கி தீயை அணைத்தனர். ஆர்பாட்டம் குறித்து மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது: …

    • 2 replies
    • 536 views
  17. December 6, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நாளை மறுதினம் (08.12.18) வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வர்த்தமானிக…

  18. பொலிஸ் வேலை என்பது சில்லறை கடை போன்றது. நிறைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். ஆகவே, மணல் கடத்தல் விடயத்தை மாத்திரம் நாங்கள் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. சாதாரண மக்கள் என்ன பிரச்சினை என்றாலும், முதல் முதலாக நாடுவது பொலிஸ் நிலையத்தைத்தான். மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. நாங்கள் உயிரை பணயம் வைத்துத்தான் கடமை செய்கிறோம் என யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் தெரிவித்தார். இன்றைய தினம் (26) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும்போது, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், இராணுவத்தை யாழில் நிலைநாட்டுவதற்காகவே பொலிஸார் இவ்வாறு மந்தகதியில் செயற்படுகிறார்கள் என கூறிய…

    • 3 replies
    • 646 views
  19. இந்தியா இலங்கைக்கு இரண்டு எம்.ஜ 17 ரக உலங்கு வானூர்திகளை வழங்கியுள்ளது. சிறீலங்காவுக்கு இரு எம்.ஜ 17 ரக உலங்கு வானூர்திகளை இந்தியா வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்விரு உலங்கு வானூர்த்திகளும் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொலன்னாவை எண்ணெய் மற்றும் எரிவாயுக் குதங்கள் மீதான வான்புலிகளின் தாக்குதலை அடுத்து இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்ட இவ்விரு உலங்கு வானூர்திகளையும் சிறீலங்காப் விமானப் படையினர் பயன்படுத்தி வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதேநேரம் மிக இரகசியமான முறையில் இந்தியா இலங்கைக்கான ஆயுத தளபாடங்களையும் விமானமூலம் இறக்கி வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் ஏ.எம் 32 ரக விமானங்கள் ஆயுத தளபாடங்களுடன் பல தடவகைள்…

  20. இயக்குனர்கள் சேரன்,அமீர்,டி.எஸ்.எஸ்.மணி,திருமுருகன் ஆகியோரின் பேட்டி(Video in) Tuesday, August 16, 2011, 0:41 ராஜீவ் கொலை வழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டு இருபத்தொரு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணைமனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, ‘மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்’ சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு 13-8-2011 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் சேரன், அமீர், கௌதமன், புகழேந்தி தங்கராஜ், சிபிச்சந்திரன், ஓவியர் வீர சந்தானம், ஓவியர் மருது, விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, மருத்துவர் எழிலன், திருமுருகன், வழக்கறிஞர் ரஜினிகாந்த், டிவி.எஸ்.எஸ்.மணி, கவிஞர் இன்குலா…

  21. வடக்கு மாகாணத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டிருந்த தென் யாழ்ப்பாணத்தின் சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை இரத்துச் செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய குறித்த மின் உற்பத்தி நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மத்திய நிலையத்தின் அதிகாரி ரவீந்திர காரியவசத்திடம் ஶ்ரீலங்கா மிரர் இணையத்தளம் கேட்டபோது, யாழ்ப்பாணம், சுண்ணாகம் பிரதேசத்தில் குடிநீரில் எவ்வித விஷயத் திரவமோ அல்லது வேறு எவ…

    • 0 replies
    • 408 views
  22. நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – சித்தார்த்தன் வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்வது, அரசியல் கைதிகள், காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்துள்ளார். “ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு, பெரும்பான்மை ஆதரவை பெறுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை அடிப்படையிலேயே ஆதரவு அளித்துள்ளது. இதன்போது, முன்வைக்கப்பட்டவை அனைத்தும் கூட்டமைப்பின் வழக்கமான கோரிக்கைகள் தான். நாங்கள் அதிகாரப் பகி…

  23. வன்னியிலும் காலூன்றினர் மர்ம மனிதர்கள்!! மர்ம மனிதர்களுக்கு தீங்கிழைக்க வேண்டாம் இராணுவம் அறிவிப்பு!! Published on August 20, 2011-8:40 pm மலையகம், கிழக்குப் பகுதிகளில் மக்கள் மத்தியில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்ற மர்ம மனிதர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்ற நபர்கள் தற்போது வன்னியிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அதற்கு இராணுவத்தினர் ஆதரவு தெரிவித்து பகிரங்க அறிவித்தல்களை மேற்கொண்டுவருவதாகவும் எமது வன்னிச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாது, வவுனியா வடக்கு நெடுங்கேணி மருதோடைக் கிராமத்தில் இன்று பிற்பகல் இராணுவ பிக்கப் வாகனத்தில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தி ”மர்ம மனிதர்களை யாராவது கண்டால், அவர்களுக்கு தீங்கி…

  24. தாவடி, கொக்குவில் கிழக்கு மற்றும் குளப்பிட்டிப் பகுதிகள் சுற்றி வளைப்பு. இன்று அதிகாலை முதல் தாவடி மற்றும் கொக்குவில் கிழக்கில் ஒரு பகுதி இராணுவ சுற்றி வளைப்புத் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அதிகாலை 4.00 மணியளவில் குளப்பிட்டி வீதி, ஆனைக்கோட்டை வீதி, காங்கேசன்துறை வீதி, காளிகோவிலடி, பிடாரி அம்மன் கோவில் உட்பட பல பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுல் நடத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலைமை காணப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் பல நூற்றக்கணகான இராணுவத்தினர் இந்தப் பகுதியில் நிலைப்படுத்தப்பட்டு இந்த தேடுதல் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்மைமயால் பதட்டமான நிலமை காணப்பட்டது. இதேவேளை குறிப்பிட்ட பகுதியில் இர…

  25. அன்பு தமிழ் உறவுகளே, தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது. அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள தொலைநகல்(FAX) எண்ணுக்கு அல்லது மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்பிவிட்டு பின் naamtamizhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உடனடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.