ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
ஜோசப் முகாம் சித்திரவதைகள் தொடர்பில் மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் கேள்வி எழுப்புங்கள் - ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல் Published By: Vishnu 09 Mar, 2023 | 05:34 PM (நா.தனுஜா) மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் ஜோசப் முகாமில் அவரது வகிபாகம் என்னவென்பது குறித்து கேள்வி எழுப்பப்படவேண்டும் என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்றக்குழுவின் தலைவருமான எலியற் கொல்பேர்ன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 254 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி கைது! தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று (09) மாலை வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி தாய்மாரால் சுழற்சி முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் குறித்த போராட்டம் அப் பகுதியில் கொட்டகை அமைத்து நடைபெற்று வருகின்றது. குறித்த கொட்டகை அமைந்துள்ள வீதி மின் கம்பத்தில் பொருந்தப்பட்டிருந்த மின் விளக்கு இணைப்பு மூலம் மின்சாரம் பெறப்பட்டு போராட்ட கொட்டகைக்கு…
-
- 1 reply
- 471 views
-
-
சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது – அருட்தந்தை மா.சக்திவேல்! சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி.வடக்கில் போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் …
-
- 7 replies
- 859 views
- 1 follower
-
-
அரசாங்கத்தின் இரு முக்கிய இணையத்தளங்களிற்கு ஹக்கர்கள் ஊடுருவல்! அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹக்செய்யப்பட்டுள்ளதாகவும் மிக முக்கியமான தகவல்கள் பறிபோயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள்ஹக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும்இரகசியமான தகவல்கள் ஹக்கர்கள் குழுவொன்றிடம் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் ஆபத்து தொடர்பான புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஹக் செய்யப்பட்டு அதில் காணப்பட்ட விபரங்கள் ஹக்கர் குழுவொன்றிற்கு விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கொன் பீட்ஸ் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1327004
-
- 0 replies
- 277 views
-
-
கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலிலேயே பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்தார்? புத்திக பத்திரன சந்தேகம்! பொலிஸாரின் கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலிலேயே கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த செவ்வாய்கிழமை பல்கலைக்கழக மாணவர்களுடனான மோதலின் போது, பொலிஸாரின் கண்ணீர்புகை பிரயோகம் அந்தப்பகுதியை நிரப்பியதுடன் அருகில் உள்ள பாடசாலைகளும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே, பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார…
-
- 0 replies
- 493 views
-
-
வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி இலங்கை ரூபா தற்போது டொலருக்கு எதிரான வலுவான நாணயமாக மாறியுள்ளது, ஆனால் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் மதிப்பீடுகள் கணித்துள்ளது. இதன்படி, இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. Fitch Ratings இன் இடர் ஆய்வாளர் Se Wang Tin, Bloomberg News இடம், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை இலங்கை பெறும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் தொடர்ந்து இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த…
-
- 0 replies
- 675 views
- 1 follower
-
-
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டும் -வாசுதேவ நாணயக்கார Published By: DIGITAL DESK 5 09 MAR, 2023 | 05:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியம் ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக உள்ளது. நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்தி விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார், அவ்வாறாயின் ஜனாதிபதிக்கு பித்து பிடித்துள்ளது கருதி அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவ…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
3 பெண்களின் ஆதரவு கிடைத்திருக்காவிட்டால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்போம் - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 5 09 MAR, 2023 | 05:14 PM (எம்.மனோசித்ரா) இலங்கை அண்மையில் எதிர்கொண்ட நெருக்கடிகளிலிருந்து மீள பாடுபட்டவர்கள் பிரதானமானவர்கள் 3 பெண்களாவர். இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா ஆகியோரே அம்மூன்று பெண்களுமாவர். இவர்களது ஆதரவு கிடைக்கப் பெறாமலிருந்திருந்தால் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 'அவள் தேசத்தின் பெர…
-
- 2 replies
- 615 views
- 1 follower
-
-
இலங்கையர்களுக்கு இத்தாலியில் வேலைவாய்ப்பு! இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக, இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள கோரப்படவுள்ளன. பாரவூர்தி சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகள் மற்றும் இலங்கை என்பவற்றின் பணியாளர்களுக்காக 87,702 விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. https://athavannews.com/2023/1326971 @தனிக்காட்டு ராஜா
-
- 2 replies
- 819 views
-
-
இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான் 09 MAR, 2023 | 04:30 PM அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகின்றது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு மிக முக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு (WFP)மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்கயே இவ்வாறு ஜப்பான் வழங்குகின்றது. இந்த நிதியுதவியின் மூலம் WFP குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய உணவுப் பொதிகளை வழங்கி, அவர்களின் மாதாந்த உணவுத்…
-
- 1 reply
- 549 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் Published By: DIGITAL DESK 5 09 MAR, 2023 | 05:11 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (09) ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன் அதன் அடையாளமாக நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும், மின்சாரம் எரிபொருள…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்யில் தற்போ…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்! முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். மகளிர் தினமான நேற்று தமக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் வெளிக்கொணரப்படும் இந்த பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் …
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கைகள் - இணை அனுசரணை நாடுகள் கவலை Published By: RAJEEBAN 09 MAR, 2023 | 10:08 AM இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்ளில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து கடும் கரிசனை வெளியிட்டுள்ள இணை அனுசரணை நாடுகள் அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கான அமைதியான விதத்தில் கருத்து வெளியி…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
இன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் தீர்மானம் Published By: T. SARANYA 08 MAR, 2023 | 08:52 PM (எம்.மனோசித்ரா) தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவிற்கு மத்தியில் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியும் , வட்டி வீதம் மற்றும் வரி என்பவற்றைக் குறைக்குமாறும் வலியுறுத்தி இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார துற, கல்வித்துறை , பல்கலைக்கழகங்கள், அரச நிர்வாக சேவை, வங்கி, துறைமுகம், பெ…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
மக்களை தூக்கி நிமிர்த்துவதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுப்பேன் – பிள்ளையான் வரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துவதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்ககூடியவன் நான்.அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்து அதனை அப்பகுதியில் உள்ள பொருளாதார நெருக்கடியில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் தேசிய திட்டத்தின் கீழான முதல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியில் வாழ…
-
- 1 reply
- 701 views
-
-
அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் – கஞ்சன விஜேசேகர! சாதாரண மக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை பெரும்பாலான தரப்பினர் தற்போது மறந்து விட்டார்கள். அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்புக்கு ஒப்பீட்டளவில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை…
-
- 0 replies
- 192 views
-
-
இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை – ஜனாதிபதி! இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக் கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். “உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒன்றை நடத்துவதால் பெரிய மாற்றம் ஒன்று வந்துவிடப்போவதில்லை. நாங்கள் ரூபாவை மேலும் வலுவடையச் செய்ய வேண்டியதே தற்போது முக்கிய விடயமாகும். இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்குக் குறைந்தது 4 வருடங்களாகும் எனப் பலர் கூறினார்கள். ஆனால், 8 மாதங்களில் நெருக்கடியைத் தீர்க்க முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்க…
-
- 0 replies
- 494 views
-
-
சுயாதீன உள்ளகப்பொறிமுறையின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் இலங்க உறுதி Published By: VISHNU 08 MAR, 2023 | 08:40 PM (நா.தனுஜா) சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் இலங்கை உறுதியாக இருக்கின்றது. அதற்கமைய அரசியலமைப்பின் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும், இலங்கைக்குப் பொருந்தக்கூடிய முறை எதுவென்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது என்று ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக சுட்டிக்காட்டியு…
-
- 1 reply
- 465 views
- 1 follower
-
-
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழர் உரிமைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: VISHNU 08 MAR, 2023 | 06:15 PM (எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்) நல்லிணக்கவாதியாகவும் சமாதானத்தை கர்த்தாவாகவும் தன்னை உலகுக்கு வெளியில் காட்டிக்கொள்ள ஜனாதிபதி முயற்சித்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் உண்மை நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பா…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
எரிபொருளுக்கான QR கோட்டா முறைமை தொடர்பில் இன்று வெளியான அறிவித்தல்! Published By: VISHNU 08 MAR, 2023 | 06:22 PM இன்று (08) முதல் அமுலுக்குவரும் வகையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (QR) கோட்டா முறைமை புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவிடட்டுள்ளதாவது, (QR) கோட்டாவின் ஊடாக வாரத்துக்குப் பெறப்படும் எரிபொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. இதற்கு முன்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நள்ளிரவில் எரிபொருள் (QR) கோட்டா புதுப்பிக்கப்பட்டது என்றும் அவர் கூற…
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் திறன் வகுப்றைகள் திறப்பு Editorial / 2023 மார்ச் 08 , பி.ப. 07:40 யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் மார்ச் முதலாம் திகதி இரண்டு திறன் வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன. இவை இப்பாடசாலையில் அமைக்கப்பட்டஐந்தாவது,ஆறாவது திறன் வகுப்பறைகள் ஆகும். பாடசாலை அதிபர் பா. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக Right To Read நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஐந்தாவது திறன் வகுப்பறைளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சங்கானை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சூ. நோபேட் உதயகுமாரும் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
மகளிர் தினத்தில் கதறும் தாய்மார் Freelancer / 2023 மார்ச் 08 , பி.ப. 02:12 சண்முகம் தவசீலன் 2017.03.08 இல் ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் தொடங்கி இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் மகளிர் தினத்தை கறுப்பு தினமாக கடைபிடித்தும் இன்று (08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. ஏழு வருடங்களாக கிடைக்காத நீதி - ஐ.நாவே கண் திறந்து பார் என மகளிர் தினத்தில் வீதியில் நின்று தாய்மார்கள் கதறினர். https://www.tamilmirror.lk/வன்னி/மகளர-தனததல-கதறம-தயமர/…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 17 கப்பல்கள் திரும்பிச் சென்றன: நிமல் சிறிபால துறைமுக தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 17 கப்பல்கள் திரும்பிச் சென்றதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அவர்களை மீண்டும் துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு தாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர்களில் சிலரை மாத்திரமே தன்னால் மீளக் கொண்டுவர முடிந்ததாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “கப்பல்களை மீண்டும் துறைமுகத்திற்கு கொண்டு வர கப்பல் ஏஜென்சிகளுடன் ஆலோசித்தேன். ஆனால், அவற்றில் சிலவற்றை மாத்திரமே கொண்டு வர முடிந்தது,” என்றார். துறைமுக ஊழியர்களின் போராட்டங்களா…
-
- 2 replies
- 989 views
- 1 follower
-
-
இலங்கைக்கு ஐ.எம்.எஃப். கடன் கிடைக்க சீனா இணங்கியது - இது என்ன தாக்கத்தை ஏற்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற கடன் மறுசீரமைப்பிற்கான நிதி உறுதிப்பாட்டு கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை தானும், இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்டு, சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் ஆகியன குறித்து, நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச்.07) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, …
-
- 0 replies
- 355 views
- 1 follower
-