ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
Published By: VISHNU 10 MAR, 2025 | 06:36 PM (செ.சுபதர்ஷனி) அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார அமைச்சில் மருந்து விநியோகம் தொடர்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார மற்றும் மருந்து விநியோகம் என்பன இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய துறைகளாக உள்ளன. ஆகையால் அவற்றுக்கு மாற்று வழிகள் எதுவும் இல்லை. இத்துறைகளில் கடமையாற்றுபவர்களின் பொறுப்புணர்வு, ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவை அத்துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படு…
-
- 1 reply
- 160 views
- 1 follower
-
-
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பயங்கரவாதிகளாக செயற்படுகின்றனர் பிறந்த குழந்தையை குளிப்பாட்டிவிட்டு வீசுமாறு கோரியே போராட்டம் என்கிறார் அமைச்சர் ராஜித (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) எக்காரணம் கொண்டும் இலவசக் கல்வி யைச் சீரழிக்கமாட்டோம் என சபையில் உறுதி படத்தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சைட்டம் குறித்த விசேட அமைச் சரவைப் பத்திரத்தை அடுத்தவாரம் சமர்ப்பிக் கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது முழுநாட்டிற்கும் அரச வைத்தியர் கள் சங்கத்தினர் பயங்கரவாதிகளாக மாறியுள்ள தாக சாடிய அமைச்சர் ராஜித, பிறந்த குழந்தையை குளிப்பாட்டி விட்டு வீசுமாறு கோரியே போராட்டங்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள…
-
- 0 replies
- 161 views
-
-
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை : டெங்கினால் இவ்வருடம் பேரழிவு..! இவ் வருடம் டெங்கு நோயாளரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் கடந்து இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகம் கொடுக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருடத்தின் முதல் நான்கு மாதக் காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 43915 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 41.4 சதவீதமான நோயாளிகள் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் அரச வைத்தியர் சங்கம் மேல்மாகாணத்தில் இது வரை 35 டெங்கு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றது. குருநாகல் வைத்தியசாலை வார்டுகள் டெங்கு நோயாளிகள…
-
- 0 replies
- 193 views
-
-
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது எல்லையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் ; தயாசிறி - அமைச்சரவைத் தீர்மானங்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது செயற்பாட்டு எல்லை என்ன என்பதை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். எவ்வாறெனினும் விரைவில் சைட்டம் பிரச்சினைக்கு தீர்வைக்காணுவோம் என்று அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அர…
-
- 0 replies
- 301 views
-
-
அரச வைத்திய சங்க தலைவராக மீண்டும் அனுருத்த பாதனிய இலங்கை அரச வைத்திய சங்கத்தின் தலைவராக மீண்டும் அனுருத்த பாதனிய தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்படி தொடர்ந்தும் 10வது ஆண்டாக அரச வைத்திய சங்கத் தலைவராக இவர் தேர்ந்தொடுக்கப்பட்டுள்ளார். இதற்கான தேர்தல் இன்று (27) இடம்பெற்றது. https://newuthayan.com/அரச-வைத்திய-சங்க-தலைவராக/
-
- 0 replies
- 525 views
-
-
அரச வைத்தியசாலைகளில் கட்டணம் அறிவிடும் தனியார் சேவையை ஆரம்பிக்கவுள்ள அரசு! சனி, 02 ஏப்ரல் 2011 08:54 அரச வைத்தியசாலைகளில் கட்டணம் அறிவிட்டு சேவை வழங்கும் வாட் கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் வைத்தியசாலைகள் பொதுமக்களிடம் அசாதாரணமான முறையில் கட்டணங்களை அறவிடுவதுடன், அவற்றுக்கென நிலையான கட்டண முறையொன்று இல்லை. இதனால் அரச வைத்தியசாலைகளில் தனியார் வாட்டுக்களை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள இந்த முறை இவ்வாண்டு இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் செய…
-
- 0 replies
- 681 views
-
-
அரச வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் 10இற்கும் மேற்பட்டவை முழுமையாக செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 3 வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் முழுமையான பயனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ஜானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் தற்போது 43 CT ஸ்கேன் இயந்திரங்கள் மாத்திரமே செயற்பாட்டில் இருக்கின்றன. திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், கராப்பிட்டிய, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இருக்கும் CT ஸ்கேன் இயந்திரங்களே இவ்வாறு செயலிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேசிய வைத்தியசாலையின் அவசர பிரிவிலுள்ள CT…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 27 Jun, 2025 | 05:18 PM செயற்கை முழங்கால் மாற்று உபகரணங்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை கருவிகள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி வருமாறு சொல்வது, தற்போது பல அரச வைத்தியசாலைகளில் வழக்கமான விடயமொன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அவைகள் அதிகளவில் கையிருப்பில் இல்லை என சுகாதார தொழில் வல்லுநர்களின் தேசிய அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இந்தப் பொருட்கள் பின்னர் அறுவை சிகிச்சைக்காக நேரடியாக அறுவை சிகிச்சை அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் உபகரணங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட விசேட வைத்திய …
-
- 0 replies
- 77 views
-
-
Published By: DIGITAL DESK 5 09 MAY, 2023 | 02:03 PM (எம்.மனோசித்ரா) அரச வைத்தியசாலைகளில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட தரப்பினருக்கான மருத்துவ செலவுக்காக அறவிடப்படும் தொகை பல வருடங்களுக்கு புதுப்பிக்கப்படாமலுள்ளது. இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தற்போது வெளிநாட்டவர்கள் நாட்டில் சிகிச்சை பெறும் போது அல்லது சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது அவற்றுக்கு தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை விட பன்மடங்கு குறைவான கட்டண அறவீட்டு முறைமையே அரச வைத்தியசாலைகளில் காணப்படுகிறது. எனவே சுகாதார அ…
-
- 3 replies
- 301 views
- 1 follower
-
-
அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு சேவைகள் இரண்டாவது நாளாகவும் ஸ்தம்பிதம் நோயாளர்கள் அவதி; வேலைநிறுத்தமும் தொடருமாம் (க.கமலநாதன்) மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை தடைசெய்யக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் நடத் திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் இரண்டாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள் ளானார்கள். நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி வேலை நிறுத்தப் போராட்டமானது நேற்று இரண்டாவது நாளாகவும் அவ்வண்ணமே …
-
- 0 replies
- 307 views
-
-
அரச வைத்தியசாலைகள்.. ஸ்தம்பிக்கும் நிலை ! நாட்டில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு போதுமான மருந்துகளே வைத்தியசாலைகளில் இருப்பதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார் . மேலும் டொலர் நெருக்கடிக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தீர்வு காணப்படாவிடின், அரச வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை உருவாகுவதோடு மருந்து விநியோகம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார் . இதே வேளை ‘புற்றுநோய், சிறுநீரக நோய், தலசீமியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே மருந்து தட்டுப்பாடு நி…
-
- 0 replies
- 130 views
-
-
அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குடிமகன்களிடம் கட்டணம் அறவீடு! அரசு அதிரடி முடிவு செவ்வாய், 04 ஜனவரி 2011 12:30 மதுபாவனையினால் நோயுறும் அல்லது விபத்துக்குள்ளாகி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரிடம் கட்டணங்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த விபரங்கள் அடங்கிய சுற்று நிரூபம் இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு மதுபாவனையினால் நோயுறும் அல்லது விபத்துக்குள்ளாகுவோருக்காக சிகிச்சை அளிப்பதில் அரசாங்கம் பாரிய நிதியினை செலவிட்டு வருவதாகவும் அரச…
-
- 1 reply
- 942 views
-
-
அரச வைத்தியசாலையில் முதல் முறையாக உணவுப் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை! 05 Jan, 2026 | 05:04 PM அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கத்துடன் இணைந்து ஒரு விசேட திட்டத்தை ஆரம்பித்து உள்ளது. மேலும் அதன் முன்னோடி திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (06) மஹரகம வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் ஆரம்பிக்கபட உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், நோயாளிக்கு அரிசி, காய்கறிகள், ஊறுகாய், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தனித்தனியாக வழங்குவது ஆகும். உணவை ஒர…
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 24/07/2009, 11:55 அரச வைப்பகங்களிடம் இருந்து அரசு 18.5 பில்லியன் கடன் பெற்றுள்ளது சிறீலங்கா அரசு இரண்டு முக்கிய அரச வைப்பகங்களிடம் இருந்து 18.5 பில்லியன் கடன் பெற்றிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மிக மோசமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஜனவரி மாதம், இந்தக் கடன் பெறப்பட்டிருப்பதாக, துணை நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். இனவாதக் கட்சியான ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிறேமசிறி மானகே, நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை வைப்பகத்திடம் இருந்து 11.79 பில்லியனும், மக்கள் வைப்பகத்திடம் இருந்து 6.7 பில்லியனும் கடனாகப் பெறப…
-
- 0 replies
- 421 views
-
-
வன்னிப் பகுதி மீது போர்நடவடிக்கை இருப்பதால் அங்கு மக்களுக்கான மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் அரச அதிபர் உள்ளிட்ட அரசஅதிகாரிகளின் மக்களுக்கான பணிகளின்போது அவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் தரமுடியாது என வன்னிப் பகுதி இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று வவுனியாவில் இடம்பெற்ற நான்கு அரச அதிபர் மற்றும் வன்னிப் பகுதி இராணுவக் கட்டளைத்தளபதிகள், அதிகாரிகள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது தற்போது வன்னிப் பகுதியில் நிலவுகின்ற மோசமான போர்ச் சூழலில் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்…
-
- 0 replies
- 729 views
-
-
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பயணிகளை மன்னார் அரச பேருந்து சேவையின் நடத்துனரும், சாரதியும் இன்று அதிகாலை முதல் நடு வீதியில் நிற்க வைத்து விட்டுச் சென்றுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்க கொண்டு வந்துள்ளனர். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பயணிகள் கொழும்பு, அனுராதபுரம், கெக்கராவ ஆகிய இடங்களுக்குச் சென்று விட்டு தனியார் பேருந்து மூலம் நேற்று இரவு பத்து மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்தனர். பின் இவர்கள் பேசாலை மற்றும் தலைமன்னார் ஆகிய கிராமங்களுக்குச் செல்வதற்கு பஸ்சிற்காக காத்திருந்தனர். இதன் போத…
-
- 0 replies
- 855 views
-
-
அரச, தோட்ட மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள்... பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்! நாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச, அரை அரச, தோட்ட மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன. நாளை தினத்தை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி போராட்டம் நடத்தப்படும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரான சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டால்இ அதற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும்…
-
- 0 replies
- 121 views
-
-
Apr 23, 2011 / பகுதி: செய்தி / அரச, வங்கி வேலை தருவதாக கூறி ஏமாற்றப்படும் தமிழ் இளைஞர்கள் தற்போதுள்ள நாட்டு நிலைமைகளின் அடிப்படையில் வெளிநாடு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து இளைஞர்கள் உள்ளுர் வேலைவாய்ப்பு தொடர்பாக சிரத்தைகொள்ளும் நிலைமையை சாதகமாக்கி தென்பகுதி அரசுசார் குழுக்களால் அரச மற்றும் வங்கிகளில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணம் பெறப்பட்டு ஏமாற்றப்பட்டுவருகின்றனர். அண்மைக்காலங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தினமும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இருந்து நேர்முகத்தேர்வுக்கு என செல்வதும் திரும்பி வருவதும் வாடிக்கையாகி விட்டது. அமைச்சர்களின் கையாட்கள் …
-
- 1 reply
- 829 views
-
-
அரசகரும மொழியாக தமிழையும் இணைக்க மஹிந்த கடும் எதிர்ப்பு அரச கரும மொழியில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ மொழி யாக மாற்றுவது தொடர்பில் அரசியல் நிர்ணய சபை யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. குறித்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறி க்கை ஒன்றை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், வட கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தமையினால் கட ந்த 1957 ஆம் ஆண்டும் தந்தை செல்வாவினால் தமிழ் மொழியை அரச கரும மொழியாக்கு வது தொட…
-
- 1 reply
- 367 views
-
-
உள்நாட்டு,வெளிநாட்டு உதவி வழங்கும் முகவரமைப்புகள் வட பகுதியில் இயங்க முடியாத முட்டுக்கட்டை நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் வேலைகளை பரிசீலனைக்குட்படுத்தும் பாதுகாப்பு அமைச்சின் பணிகள் நிலுவையாகவிருப்பதால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கில் இந்த முகவரமைப்புகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமையேற்பட்டுள்ளது. இந்த விடயம் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மட்டத்தில் பொறுப்பாக கவலையைத் தோற்றுவித்துள்ளது. ஆனால், சிறந்த நிர்வாகத்தை விரும்பும் உதவிப் பணியாளர்கள் தமது பணிகளைப் பரிசீலனை செய்வதைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று கருதுவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. உதவி வழங்கும் அரசசார்பற்ற தன்னார்வ அமைப்புகளி…
-
- 0 replies
- 646 views
-
-
அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் வன்னிக்குள் செல்வது வெள்ளி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மற்றும் ஏ9 வீதிகளை நோக்கி படையினர்ஷெல் தாக்குதலை மேற்கொண்டு வருவதானாலேயே இந்தத் தடையை ஏற்படுத்தியதாகப் படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு செல்லும் அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் ஓமந்தையூடாக பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை நள்ளிரவு கிளிநொச்சி நகரில் படையினர் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் போரூட் அமைப்பினரின் கட்டிடத்திற்கு அருகிலிருந்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. இந்நிலையில் கிளிநொச்சியில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பணிகள் படை நடவடிக்கையால் பெரிதும் முடங்கிய…
-
- 0 replies
- 590 views
-
-
வன்னியிலிருந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெயர்ந்த மக்கள் நடத்திய தொடர் வீதிமறியல் போராட்டங்களைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வெளியேறும் முயற்சிகளை அரசசார்பற்ற நிறுவனங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. மோதல்கள் உக்கிரமடைந்திருப்பதால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கமுடியாதெனக் கூறி வன்னியில் செயற்பட்டுவரும் அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை ஏற்று ஐ.நா. மனித உரிமை ஸ்தாபனங்கள் உட்பட பல அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேற ஆரம்பித்தன. எனினும், ஐ.நா. ஸ்தாபனங்கள் உள்ளிட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறவிடாது வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பொதுமக்கள் வீதி மறியல் போரா…
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு மத்திய வங்கியில் புதிய புலனாய்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இந்த புலனாய்வு பிரிவு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் அவர்களுக்கான நிதி பெறப்படும் முறை மற்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றமை குறித்து ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பிரிவு முதல் கட்டமாக 50 அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 682 views
-
-
அரசசேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்ய இராணுவம் யார்? - அமைச்சர் ஐங்கரநேசன் ஆவேசம். [sunday, 2014-04-27 19:16:35] முறையான வர்த்தமானி அறிவித்தலோ, அரச இலச்சினையுடன் கூடிய விளம்பரமோ, எவர் கோருகிறார் என்ற அடிக்குறிப்போ இல்லாமல் அநாமதேயப் பிரசுரங்களின் மூலம் இராணுவம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அரச சேவைக்கு ஆட்சேர்ப்பதற்குச் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இருக்கும்போது எமது இளைஞர்களை இப்படித் தந்திரமாக ஆட்சேர்ப்பதற்கு இராணுவத்துக்கு அருகதை இல்லை என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்தின் 94ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கர…
-
- 0 replies
- 449 views
-
-
அரசதரப்பு உறுப்பினர்கள்... கோட்டாவை, பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் – பொன்சேகா அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஜனாதிபதி மீது பழியை சுமத்திவிட்டு நாடாளுமன்றில் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்த அவர்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது என சரத் பொன்சேகா தெரிவித்தார். https://athavannews.com/2022/1275201
-
- 2 replies
- 217 views
-