Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாந்தொட்ட, மத்தளவில் உள்ள மகிந்த இராஜபக்ஸ விமான நிலையத்துக்கு, வாரம் இரு முறை, ரஸ்யாவில் இருந்து நேரடி பட்டய பயணிகள் விமான சேவையை (charted flights) ரஸ்ய அரச விமான சேவையான ரெட் விங்க்ஸ் நடத்த தீர்மானித்துள்ளது. 28/12/2022 முதல் இச்சேவை ஆரம்பமாகிறது. ரஸ்யாவில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் மூன்றாவது நேரடி விமான சேவை இதுவாகும். https://www.newswire.lk/2022/12/26/russias-red-wings-to-commence-charter-flights-to-mattala-airport/

  2. அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது – ஆனந்தசங்கரி 75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இனப் பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்துவைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை கேலிக்குரியது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி கூறியுள்ளார். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை எனவும் குற்றம் சுமத்தினார். அன்று நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சியையும் ர…

    • 9 replies
    • 526 views
  3. 75ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப…

    • 14 replies
    • 1.3k views
  4. மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதியிடம் டக்ளஸ் வலியுறுத்தல் 28 DEC, 2022 | 06:58 PM ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக…

  5. தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டி – இன்னும் தீர்மானம் இல்லை என்கின்றார் சம்பந்தன் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்றாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவது பற்றி பங்காளி கட்சிகள் தங்களின் கருத்துகளைக் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்…

    • 10 replies
    • 886 views
  6. யாழில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு- 09 பேர் உயிரிழப்பு! மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது தற்போது சடுதியாக அதிகரித்துவரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் (2022) டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளானவர்களாக …

  7. சிறிய குற்றங்களுக்கு சிறை தண்டனைக்குப் பதிலாக வீட்டுக் காவல் திட்டம்! சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் சந்தேக நபர்களை அதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை கொண்டுவர நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான சந்தேகநபர்கள் சிறையில் பல்வேறு நபர்களுடன் பழகுவதுடன் கடுமையான குற்றவாளிகளாக சமூகமயமாகி விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதனை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தொடர்புடைய சட்டங்களைக் கொண்டு வந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அத்தகைய சந்தேக நபர்களை, மூன்று அல்லது நான்கு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்க நீதிபதிகளுக்…

  8. இனப்பிரச்சனைக்கான விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள்-சுரேந்திரன் குருசுவாமி இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியம் அற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய அரசியல் சூழ்நிலையில் எரிக் சொல்ஹெய்மினுடைய தகுதி என்ன?…

  9. பனை அபிவிருத்தி சபையில் மோசடி : இரு சிரேஷ்ட அதிகாரிகள் பணி நீக்கம் அரச சொத்துக்கள் மற்றும் பணத்தை துஷ்பிரயோகம் செய்த பனை அபிவிருத்தி சபையின் பிரதி பொது முகாமையாளர் உட்பட இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பனங்கட்டி தயாரிக்கும் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் 2கோடி ரூபாயிற்கு மேல் மோசடி செய்த கணக்காய்வாளர் மற்றும் உற்பத்தி முகாமையாளர் ஆகியோர் இடைநிறுத்தப்பட்டனர். இவர்கள் இருவரும் பனை அபிவிருத்திச் சபையில் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இரு பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தும் சம்பளம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு இடம்பெற்ற ஊழல் மோசடிகளை மூடி மறைத்த கணக்காய்வாளர்கள் இருவர் இடமாற்றம் செய்யப்ப…

  10. வடக்கு கிழக்கை இணைக்க கிழக்கிலுள்ள கல்விச்சமூகம் இடம்கொடுக்க மாட்டாது - ஹரீஸ் எம்.பி By T. SARANYA 28 DEC, 2022 | 10:20 AM முஸ்லிம்களின் பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாக பேச எமது முஸ்லிம் தலைவர்கள் தயாரில்லை என்பது கவலையான விடயமாக அமைந்துள்ளது. 13ஐ முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று பேசும் விடயம், கிழக்கையும் வடக்கையும் இணைக்க வேண்டும் என்ற விடயம் பேசுபொருளாக மாறியிருக்கும் தருவாயில் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அபிலாசைகள், சமூகத்தின் எதிர்காலம் சம்பந்தமாக முஸ்லிம் தலைமைகள் உரத்துப்பேச தயங்குவதேன் என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்…

  11. அனைத்து மத ஸ்தலங்களுக்கும் சூரிய சக்தி கலன்கள் - காஞ்சன By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 09:20 PM (இராஜதுரை ஹஷான்) இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அனைத்து மத தலங்களுக்கும் மூன்று மாத காலத்திற்குள் 05 கிலோவாட் சூரிய சக்தி கலன்கள் இலவசமாக வழங்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (டிச. 27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மின்கட்டண அதிகரிப்பால் பௌத்த விகாரைகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள…

  12. பேச்சுக்களுக்கு இந்திய அனுசரணை, உலக நாடுகளின் மேற்பார்வை அவசியம்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும், உலக நாடுகளின் மேற்பார்வையிலும் இடம்பெற வேண்டும் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் விடயம் ஜனாதிபதியின் இந்த பேச்சுவார்த்தை முயற்சி சம்பந்தமாகவே. எங்களைப் பொறுத்தமட்டில் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தோம். அதில் ராணுவம் ஏனைய திணைக்களங்கள் பிடித்திருக்கின்ற நிலங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் நாளிலிருந்த…

  13. தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றுபடுவதிலும் வெடித்தது பூகம்பம் – இறுதி முடிவில் குழப்பம்! தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என்று அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூம் செயலி ஊடாக நேற்று மாலை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இதன் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 75 ஆம் ஆண்டு விழா சர்ச்சை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுவில் இ…

    • 9 replies
    • 890 views
  14. 26/12/2022 வரைக்கும் இந்த ஆண்டில் இலங்கை வந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 701, 331 ஆகும். இதில், ரஸ்யர் 15,681, இந்தியர் 13,892, ஐக்கிய இராச்சியத்தினர் 6000, அவுஸ்ரேலியர் 5000, ஜேர்மனி, அமெரிக்காவில் வில் இருந்து தலா 3000 பேரும் அடங்குவர். போன வருடம் வெறும் 194, 495 பயணிகள் மட்டுமே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.newswire.lk/wp-content/uploads/2022/12/Tourist-arrivals-as-at-26-12-22.pdf https://www.newswire.lk/2022/12/27/tourist-numbers-increasing-which-countries-visiting-sl/

  15. போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது - லிட்ரோ நிறுவனம் By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 08:33 PM (எம்.வை.எம்.சியாம்) எதிர்வரும் நாட்களில் நுகர்வுக்கு தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் அதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நுகர்வுக்கு தேவையான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது.கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களின் பின்னர் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் காரணமாக எரிவாயுக்கு அதிகளவிலான கேள்வி நிலவுகிறது. நாட்டிற்கு மாதா…

  16. ஒரு மின் அலகிற்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்க உத்தேசம் By VISHNU 27 DEC, 2022 | 09:18 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை 60 முதல் 65 சதவீதம் வரை திருத்தம் செய்யவும், ஒரு மின் அலகுக்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார். மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை மின்சார சபையின் பரிந்துரைக்கு அமைய கடந்த ஆகஸ்ட் மாதம் மின்கட்டணத்தை அ…

  17. அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 09:21 PM (எம்.மனோசித்ரா) வட்ஸ்அப் செயலியூடாக வீசா மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தாது என தெரிவித்துள்ளது. அத்தோடு, வேலை வாய்ப்புகளை தாம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தூதரகத்திற்கு காப்பீடு தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீசா சேவைகளை வழங்குவதாகக் குறிப்பிட்டு ஒரு …

  18. 2023 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள் இதோ ! By DIGITAL DESK 5 27 DEC, 2022 | 03:29 PM 2023 ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுமுறைகள் தொடர்பான விபரங்கள், https://www.virakesari.lk/article/144250

  19. யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில் ,யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை இடமாற்றம் குறித்து பிரதேச செயலர்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலதிக யாழ். மாவட்ட செயலர்…

  20. சாரதிகள் செய்யும் தவறுகளுக்காக சாரதி புள்ளி முறைமை! வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக சாரதி புள்ளி முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகளை வழங்குதல் மற்றும் அது தொடர்பான அபராதங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அடிப்படை முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளா…

    • 3 replies
    • 753 views
  21. வவுனியாவில் ஓம் சரவணசேவா அறக்கட்டளையின் ஊடாக வீடுகள் கையளிப்பு! வவுனியா ஈச்சங்குளத்தில் ஐக்கிய இராட்சிய ஓம் சரவணசேவா அறக்கட்டளையின் ஊடாக அமைக்கப்பட்ட 4 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) “சற்குரு சரவண பாவா மனசாந்தி குடியிருப்பு” எனும் பெயரில் அமைக்கப்பட்ட வீடுகள் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த வீடுகள் விசேட தேவையுடையோர் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிகழ்வில் சற்குரு சரவண பாபா குரு, பாராளுமன்ற உறுப்பினர் மு. இராதாகிருஷ்ணன் வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசன், ஜனாதிபதியின் இணைப்பாளர் இளங்கோவன், லைக்கா குழுவின் பணிப்பாளர் க. ப…

  22. பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,955 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்! கடந்த நான்கு வருடங்களில் குற்றங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயிரத்து 955 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் அதிகமாக 898 பேர் 2019ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், 2018ஆம் ஆண்டு 678 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டில் 249 வெளிநாட்டவர்களும், 2021ஆம் ஆண்டில் 130 பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களில் அதிக எண்ணிக்க…

  23. யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் உயிரிழப்பு, மகள் வைத்தியசாலையில் அனுமதி By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 10:54 AM நத்தார் வழிபாட்டுக்காக தேவாலயத்திற்கு சென்று திரும்பியவேளை, யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் உயிரிழந்துள்ள நிலையில், மகள் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியை சேர்ந்த சோதிலிங்கம் நாகேஸ்வரி (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (டிச. 25) நத்தார் வழிபாட்டிற்காக இருபாலை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்று, மகளுடன் மோட்டார் சைக்கிள் பின் இருக…

  24. உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்களை தொடங்கியது தேர்தல்கள் ஆணைக்குழு ! உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான தளவாட தேவைகளை வகுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேர்தலுகான தேவைகளை மதிப்பிடுவதற்காக வாகனங்கள் மற்றும் பொது ஊழியர்களைக் கணக்கிடுவதற்காக மாவட்ட வாரியாக உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெ…

  25. கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர் - உதய கம்மன்பில By VISHNU 26 DEC, 2022 | 05:18 PM (இராஜதுரை ஹஷான்) தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பு பேரவை ஊடாக அதிகார பகிர்வை அணுகுவார்கள் என்பதனால் கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்து. கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.