ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
புலிகள் இலங்கை அரசு மீண்டும் பேச்சு விடுதலைப் புலிகளுக்க்கும் இலங்கை இரசுக்கும் இடையே தடைய்ப்பட்டுள்ள அமைத்திப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிஇத்துள்ளன. நார்வே குழுவினரின் முயற்சியால் இலங்ககை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப்போயுள்ளன. .................................. http://thatstamil.oneindia.in/news/2007/02/02/lanka.html
-
- 21 replies
- 3.8k views
-
-
சிறீலங்கா அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றுமொரு பாரிய இராணு நடவடிக்கைக்கு தயராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏனைய பிரதேசங்களையும் கைப்பற்றுவதே அந்த படை நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிகள படையினரும் யுத்த தளபாடங்களும் மட்டக்களப்பு நோக்கி நகர்த்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது வவுணதீவு கிரான் புலிபாய்ந்த கல் மற்றும் செங்கலடி போன்ற பிரதேசங்களில் படையினர் முன்னெற்ற முயற்ச்சிகளில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன thanks: www.pathivu.com
-
- 0 replies
- 862 views
-
-
Friday February 02 2007 07:31:50 AM GMT] [thinakkural.com] இனநெருக்கடிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய அதிகாரப்பகிர்வு யோசனையை முன்வைக்குமாறு இந்தியா மீண்டும் இலங்கைக்கு தெரிவித்துள்ள அதேவேளை, பயங்கரவாதிகள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்றும், அவர்கள் நல்ல பயங்கரவாதிகளாக இருக்க முடியாதெனவும் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போகொல்லாகம புதன்கிழமை இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்தார். அதன்பின்னர் புதுடில்லியில் வெளிநாட்டு நிருபர்கள் கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில்; விடுதலைப் புலிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பேச்சுவார்த்தைக்க…
-
- 0 replies
- 797 views
-
-
தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களைப் புறக்கணித்து விட்டு அமைதித் தீர்வு காண முடியாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டெல்லி வந்துள்ளார். அவருடன் ஐந்து பேர் கொண்ட குழுவும் உடன் வந்துள்ளது. ரணில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசினார். ரணிலிடம் பேசிய வாஜ்பாய், தமிழர்களின் வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கையின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாது. தமிழ் மக்களின் கவலைகள் முழுமையாக பரிசீலிக்கப்பட வேண்டும். தமிழர்களைப் புறக்கணித்து விட்டு இலங்கையில் அமைதியை நிலை நாட்ட நினைக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது என்றார்…
-
- 0 replies
- 872 views
-
-
மக்கள் விரோதிகளும் தேசவிரோதிகளுமே இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர் - சோமவன்ச அமரசிங்க [Friday February 02 2007 12:03:16 AM GMT] [யாழ் வாணன்] நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் ஆணை வழங்கினர். அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும் மஹிந்த சிந்தனைக்கு விரோதமாகவும் செயற்பட்டால் அதற்கெதிராக ஜே.வி.பி. போராடும் என்று அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். மக்கள் விரோதிகளும் தேசவிரோதிகளுமே இன்றுஅரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இணைந்தால் ஜே.வி.பி. நியாயமான எதிர்க்கட்சியாக…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறீலங்காவில் வாழ்க்ககைச்செலவு 20.5 விகிதமாக உயர்ந்துள்ளது. [வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2007, 04:01 ஈழம்] [க.திருக்குமார்] சிறீலங்காவில் வாழ்க்கைச் செலவு இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 20.5 விகிதமாக உயர்வடைந்துள்ளது. கடந்த 10 வருடங்கங்களின் பின்னர் சிறீலங்காவில் ஏற்பட்ட அதிக உயர்வு இதுவாகும் என கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வர்த்தக மற்றும் நுகர்வோர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தனா தகவல் தருகையில்: இந்த நிலைமைகளை நாம் சீர்செய்ய வேண்டும், அரசின் நிதிக் கொள்கைகள் இதற்கு காரணமாகலாம். யாரும் இந்த நிலைமைகளை ஒரு கிழமையிலோ அல்லது ஒரு மாதத்திலோ சீர்செய்ய முடியாது. எனவே எமக்கு இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சிறித…
-
- 1 reply
- 916 views
-
-
வெள்ளைவான் ஆயுதக்கும்பலால் கொழும்பில் இருவர் கடத்தல். வெள்ளை வானில் ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களினால் கொழும்பு நகரின் இரு வேறு இடங்களில் கடந்த புதன்கிழமை இரவு இருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர் என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வெளிநாட்டு பணமாற்றீடு மற்றும் கொடுக்கல் வாங்கல் வர்த்தகம் செய்யும் வெள்ளவத்தை பெரேரா வீதியை சேர்ந்த விஜயகுமார் (55) என்பவர் புதன்கிழமை இரவு தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளை பெரேரா வீதிக்கு அருகாமையில் வைத்து வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் பேராசிரியர் கே. சிவத்தம்பியின் மைத்துனராவார். அதேசமயம் யாழ்பாணத்தில் இருந்து கொழும்புக்கு …
-
- 1 reply
- 1.1k views
-
-
பாக்கு நீரிணையில் கூட்டுரோந்து நடவடிக்கை நேற்று முன்தினம் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோகித பொகொல்லாகம அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்திய பி்.ரி.ஐ செய்தி சேவைக்கு கருத்துரைத்த சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடல்நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு ஏதுவாக கூட்டு கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். கடற்பரப்பை பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடு என்ற வகையில் சிறீலங்கா கடற்படையினருடன் சேர்ந்து கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது இன்றியமையாதது என அவர் மேலும் தெரிவித்தார்
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரபாகரனின் தொடர் தோல்விகளின் பின்னணியில் அமெரிக்க எவ்.பி.ஐ.! விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் சர்வதேச ஆயுதக் கொள்வனவுகள், கடத்தல்கள் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவின் எவ்.பி.ஐ. எனப்படும் சமஷ்டிப் புலனாய்வுக் குழுவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எடுத்த நடவடிக்கைகளும் பிரபாகரனின் தாக்குதல் திட்டங்களுக்குப் பாரதூரமான பின்னடைவையும் தோல்வியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் புலிகள் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் திட்டங்கள், செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து பார்த்தால் அவ்வாண்டில் பிரபாகரனின் அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்விகளை அடைந்திருப்பதாகக் கருத முடியும். இந்த வகையில் கடந்த …
-
- 36 replies
- 6.8k views
-
-
அமைச்சர் ஒருவரின் வாகனத்திற்கு 3 இலட்சம் வாடகை பாரிய அமைச்சரவையை உருவாக்கியதால், மேலதிகமாகப் பதவியேற்ற அத்தனை அமைச்சர்களுக்கும் நவீன வாடகை வாகனத்தை வழங்க அரசு அனுமதித்துள்ளது. இந்த நவீன வசதிகள் கொண்ட வாகனத்தை வாடகைக்குப் பெற, தலா 3 இலட்சம் வழங்கப்படுகிறது. அத்தனை அமைச்சர்களுக்கும், அலுவலகங்கள், வாகனங்கள், பாதுகாப்பு வசதிகள், ஊழியர்கள், ஏனைய செலவுகள் என, நாளாந்தம் பல கோடி மேலதிக அரச செலவில் சேர்க்கப்படுகிறது என்று தெரிவித்த சர்வதேச தொடர்புகளுக்கான விசேட அமைப்பின் தலைவர் ஜே.சி.வெலியமுன, இது ஒரு விதத்தில் பணமோசடி என்றே கருதப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அத்தனை ஊழல்களுக்கும் பணமோசடிக்கும் லஞ்சத்திற்கும், அரசாங்கமும் அரசின் தலைமையுமே காரணமாக இருக்கிறது என்று…
-
- 1 reply
- 999 views
-
-
சிறிலங்கா வெளிவிவாகார அமைச்சரின் ஜேர்மன் வருகையை எதிர்த்து தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம். இன்று ஜேர்மனிக்கு வருகைதரும் சிறிலங்கா வெளிவிவாகார அமைச்சரின் வருகையை எதிர்த்து பேர்லின் நகரில் உள்ள ஜேர்மனிய வெளிநாட்டு அமைச்சிற்கு முன்பாக தமிழ் மக்களினால் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது இன்று மதியம் 12.00 மணிமுதல் 2.00 மணிவரை நடைபெற்ற இவ் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றிய தமிழ்மக்கள் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழின படுகொலைகளின் படங்களை கைகளில் தாங்கியவாறு சிறிலங்கா அரசிற்கு எதிராகவும் சிறிலங்கா அரசிற்கு ஜேர்மனிய அரசு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் கோசங்களை எழுப்பினர். இவ் எதிர்ப்பு போராட்டத்தின் முடிவில் ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சிடம் ஜேர்மன் வாழ் தமிழ் …
-
- 4 replies
- 1.4k views
-
-
சிங்களநாட்டு தயாரிப்பு... மகிந்த வெள்ளோட்டம்... http://www.colombopage.com/archive_07/January31151410CH.html http://www.microcars.lk/
-
- 24 replies
- 5k views
-
-
இலங்கையை பிரித்தானிய சாம்ராஜ்யம் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கையில் ஒப்படைத்து அறுபது வருடங்களாக தமிழ் மக்கள் பாரிய இனவழிப்பிற்கு உட்பட்டு வருவதை நினைவு கூர்ந்தும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியாவை அங்கீகரிக்கக் கோரியும் வரும் திங்கள் கிழமை(05/02/07) லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பாரிய அடையாள ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. இனவழிப்பு, பட்டினிச்சாவு, காணாமல் போதல் என்று சொல்லொனாத் துயரங்களை ஈழத்து தமிழ் மக்கள் அனுபவித்து வரும் நிலையில், எமது துயரங்களை உலகிற்கு எடுத்துரைப்போம். அனைவரும் திரளாக ஒன்று கூடுவோம்!! இவ்வொன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் ஒன்றியம்" ஒழுங்கு செய்துள்ளதாக அறிய முடிகிறது. தொடர்புகளுக்கு: 077…
-
- 25 replies
- 4.6k views
-
-
வவுனியா மாரம்பைகுளம் பூந்தோட்டம் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து இன்று காலை கிளேமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இராணுவ வீரர் ஒருவர் பலியானதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. thanks: www.tamilwin.com
-
- 0 replies
- 899 views
-
-
யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சுட்டுக்கொலை. யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கணநாதன் இன்று அதிகாலை 6.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அரியாலை புன்னம்குளம் சந்திப் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றிருந்த போதே இனந்தெரியாத நபர்கள் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்கான கணநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்டகாலமாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிவந்த இவர் கடந்த வருடம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்கத்துக்குச் சார்பாகச் செயற…
-
- 6 replies
- 2k views
-
-
சுதந்திரக் கட்சியிலிருந்து 25 பேர் வெளியேறுகிறார்கள்: ஐ.தே.க. சிறிலங்காவில் ஆளும் சுதந்திரக் கட்சியிலிருந்து குறைந்தது 25 பேர் விரைவில் வெளியேறி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பதவிக்காகவும் பணத்துக்காகவும் சுதந்திரக் கட்சிக்குச் சென்றவர்கள், மிகக் குறுகிய காலமே பதவியை அனுபவிப்பார்கள் என்று கூறிய அவர், ஆளும் கட்சியிலிருந்து பெருந் தொகையானவர்கள் வெளியேறும்போது, எப்படியும் அவர்கள் மக்களை மீண்டும் சந்திக்கும் தேவை உருவாகும் என்று குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்துகொண்டு, அதன் தலைவர் ரணில் விக…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறீலங்கா படையினரால் கைதுசெய்யப்பட்ட 7 இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சிறீலங்கா படையினராலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் கைதுசெய்யப்பட்ட ஏழு தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக மனிதஉரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று இளைஞர்கள் வடமராச்சி பகுதியிலும் மூன்று இளைஞர்கள் கடந்த செவ்வாய் கிழமையுமும் ஒருவர் கடந்த திங்கட்கிழமையும் யாழ்பாணத்தின் பிறபகுதியிலும் கைதுசெய்யப்பட்டு காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 1. 17 அகவையுடைய பாடசாலை மாணவன் பாலசுப்பிரமணியம் மதனசீலன் - வல்வெட்டித்துறை சமரபாகு பகுதியல் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்ட பின்கா…
-
- 0 replies
- 765 views
-
-
அதிகாரப் பதவிகளுக்காகத் தாங்கள் அடிக்கும் "அரசியல் அந்தர் பல்டி'களுக்கு அரசியல்வாதிகள் கூறும் காரணங்கள் வேடிக்கையானவை. அமைச்சர் பதவிகளுக்காக எம். பிக்கள் அணி மாறுவது சுதந்திர இலங்கையின் சரித்திரத்தில் ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால், எப்போதாவது ஓரிருவர், அங்கொருவர் இங்கொருவராக அணி மாறுவதே கடந்த காலங்களில் இடம்பெற்றுவந்தது. ஆனால் இப்போது அது கொத்துக் கொத்தாக கூட்டம் கூட்டமாக குத்துக்கரணம் அடிக்கும் அரசியல் (அ)நாகரிகமாகி விட்டமைதான் கேவல நிலைமை. ""இனப்பிரச்சினையால் சீரழிந்திருக்கும் நாட்டுக்கு அமைதி வழியில் சமாதானமுறையில் ஒரு தீர்வைக்காணும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வலுவூட்டவே அவரின் கையைப் பலப்படுத்தவே அரசுடன் இணைந்தோம்.'' என்றோ, அல்லது ""அரசுக்குள் இருந்துகொண்டு அரசையு…
-
- 0 replies
- 952 views
-
-
"பட்டினி போட்டு சரணடைய வைக்க முடியாது!" - சுப.தமிழ்ச்செல்வன் சூடு பறக்கும் பேட்டி... "ஈழ விடுதலைப் போராட்டம் என்பது எமது தேசியத் தலைவர் பிரபாகரனால் ஒரு கைத்துப்பாக்கியோடு துவங்கி வைக்கப்பட்டது. நீதியான, நியாயமான விடுதலைப் போரை சர்வதேச சமூகத்துக்குத் தெரிவித்து, பலம் கொண்ட ஒரு போராளி அமைப்பாக இதை வளர்த்தெடுத்திருக்கிறார். ஈழவிடுதலையின் தீரத்தில் இதுவரை 18,842 மாவீரர்கள் விதைக்கப்பட்டிருக் கிறார்கள். இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் போராளிகள் ஈழ விடுதலை நெருப்பை நெஞ்சில் சுமந்தபடி ஆயுதங்க ளோடு நிற்கிறார்கள், களத்தில்! விடுதலைப் புலிகள் அமைப்பு துவங்கப்பட்ட இந்த முப்பதாண்டுகளில் கடந்துவந்த பாதைகளையும் சோதனையான காலங்களையும் தியாகங்களால் நீந்திக் கடந்திருக்கிறோம். எமது த…
-
- 1 reply
- 1.7k views
-
-
வடமராட்சியில் உடல் ஊனமுற்றவர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2007, 02:53 ஈழம்] [அ.அருணாசலம்] யாழ். வடமராட்சி கரவெட்டியில் உள்ள இராஜகிராமம் பகுதியில் அடையாளம் தெரியாதோரால் உடல் ஊனமுற்ற பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 2.30 மணியளவில் இவரது வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் கொல்லப்பட்டவரை வீட்டுக்கு வெளியில் அழைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர் பிரமையா தர்மசீலன் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்பஸ்த்தரான இவர் முன்னர் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல் ஒன்றில் ஒரு கையையும், காலையும் இழந்தவராவார். பிரேத பரிசோதனைக்காக இவரது சடலம் அந்தப…
-
- 1 reply
- 1.3k views
-
-
நோர்வே தூதுவர் கிளிநொச்சி பயணம் [வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2007, 02:57 ஈழம்] [து.சங்கீத்] தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களுடன் அவசர பேச்சுக்களை மேற்கொள்ளும் முகமாக, இன்று வியாழக்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சி பயணமாகியுள்ளார். சிறீலங்கா அரசைப் பொறுத்தவரை தற்போது எழுத்தில் மட்டும் நடைமுறையிலுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை, ஒருதலைப்பட்சமாக விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வரும் நிலையில், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலம், சமாதானப் பேச்சுக்கள் போன்றவை தொடர்பாக பிரதானமாக ஆராயப்படுமென நம்பப்படுகிறது. நேற்றைய தினம், சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர், சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனை, கண்காணிப்ப…
-
- 14 replies
- 2.9k views
-
-
சென்னையில் பால்பேரிங்குகள் மீண்டும் பறிமுதல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பால்பேரிங்குகள் எனப்படும் இரும்பு உருளைகள் இரண்டாவது முறையாக சென்னையில் பிடிப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு சென்னை பெரியமேட்டில் இருக்கின்ற பார்சல் நிறுவனம் ஒன்றில் இருந்து சுமார் இரண்டரை டன் எடையுள்ள பால்பேரிங்குகளை பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே பகுதியில் கடந்த வாரம் இலங்கை கடத்தப்படவிருந்ததாக கூறப்படும் இரண்டு டன் உருளைகள் கைப்பற்றப்பட்டன. அப்போது கைது செய்யப்பட்ட எட்டுப் பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தூத்துகுடியில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து மூன்றரை டன் எடையுள்ள உருளைகள் கைப்பற்றப்பட்டன. க…
-
- 1 reply
- 1.6k views
-
-
முன்னணி தொழிலதிபருடன் தொடர்பு கொண்டு தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்த மகிந்த. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து சுதந்திரக் கட்சிக்குள் கடுமையான விரிசல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நாட்டின் முன்னணி தொழிலதிபர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது: கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் தொழிலதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகிந்த, அவருக்கும் தேசிய பாரம்பரிய அமை…
-
- 2 replies
- 1.4k views
-
-
அரசுடன் இணைந்தது பௌத்த பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய. சிங்கள பௌத்த பேரினவாத இனவெறிக் கொள்கைகளைக் கொண்ட கட்சியாகக் கருதப்படும் ஜாதிக ஹெல உறுமயவினர் இன்று புதன்கிழமை சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். ஏற்கனவே இந்தக் கட்சியிலிருந்து கருத்து பேதங்களால் வெளியேறிய வண. ஒமல்பே சோபித தேரவின் இடத்திற்கு, அக்கட்சியின் ஆலோசகராகவும் வன்முறை அரசியலை அக்கட்சிக்குள் புகுத்துபவராக அங்கம் வகித்து வரும் சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டார். இதன்மூலம், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்சியினர், தங்களை ஆளும் சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் ந…
-
- 6 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு, வாகரையில், சிறீலங்கா இராணுவத்தினர் கைப்பற்றிய கதிரவெளி பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் குண்டொன்று வெடித்தபோது, அதில் சிக்கிய இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட்டார். இவரது உடல் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது thanks:www.puthinam.com
-
- 2 replies
- 1.4k views
-