ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
வியட்நாமில் உயிரிழந்த தமிழரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது By RAJEEBAN 17 DEC, 2022 | 04:58 PM அண்மையில் கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் நாட்டில் மரணமடைந்த சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது . சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுளதுடன், அதன் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (18-12-2022) சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவிக…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
சீனா இணக்கம் - IMF அறிவிப்பு உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார். தனியார் துறையின் கடன் வழங்குபவர்களும் விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=168803
-
- 1 reply
- 479 views
- 1 follower
-
-
ஜனவரி முதல் மின்கட்டணத்தை 70 வீதமாக அதிகரிக்க மின்சார சபை அவதானம் - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு By DIGITAL DESK 5 17 DEC, 2022 | 05:03 PM (இராஜதுரை ஹஷான்) ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார். கொழும்பில் உள்ள நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு கு…
-
- 0 replies
- 505 views
- 1 follower
-
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, தந்தை, மகன் மீது வாள்வெட்டு! – யாழில் கொடூரம்! யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் (14) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, தந்தை, மகன் மீது வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அயல் வீட்டாருடன் இடம்பெற்ற முரண்பாடு கைகலப்பாகிய நிலையில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டில் படுகாயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலின் அடிப்படையில் பலாலி பொலிஸார், வாள்வெட்டினை மேற்கொண்ட ஒருவரை நேற்றையதினமும் மற்றைய இருவரை இன்ற…
-
- 0 replies
- 614 views
-
-
காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பதுளை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளின் காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பெறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பதுளை மாவட்ட அபிவிருத்தி சங்க கூட்டம் நடைபெற்ற போது மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெற்று பதுளை பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் திகழ்கின்றார்கள். இருந்தபோதிலும் பதுளை மாவட்ட பாடசாலைகளில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது க…
-
- 0 replies
- 201 views
-
-
மூன்று லட்சம் அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும்-எம்.பி.கே.மாயாதுன்ன -சி.எல்.சிசில்- ஏறக்குறைய பதினைந்து லட்சம் அரசு ஊழியர்களை பன்னிரண்டு லட்சமாகக் குறைத்தால், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்தார். இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு, வெற்றிடங்கள் இருக்கும் போது அல்ல மாறாக அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைத் தீர்மானங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என்றும் செயலாளர் வலியுறுத்தினார். மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் இருபதாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதுடன், இதே எண்ணிக்கையை மீண்டும் அரசுப் …
-
- 0 replies
- 255 views
-
-
தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – சிவாஜி குற்றச்சாட்டு ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், அதனை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே தமிழ் தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு தொடர்ந்தும் பேச்சு வார்த்தையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்போமானால் நமது இனம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார். சமகாலநிலவரம் குறித்து வல்வெட்டித்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுதந்த…
-
- 0 replies
- 330 views
-
-
( எம்.எப்.எம். பஸீர்) கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டி ஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ( 16) கண்டி பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். குடிபோதையில் வாகனம் செலுத்தி வெளிநாட்டு தூதுக் குழுவின் பயணத்துக்கு தடங்கல் ஏற்படுத்தியமை, பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனம் செலுத்திச் சென்றமை தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வெளிநாட்டு தூதுக் குழு கட்டுகஸ்தோட்டை பாலத்தை அண்மித்த பகுதியில் பயணிக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்புக்கு சென்ற அதிகாரிகளின் தகவல்கள் பிரகாரம் சுதே…
-
- 2 replies
- 632 views
-
-
ரணில் சொல்வது போல இலங்கை இன பிரச்னைக்கு 75வது சுதந்திர தினத்துக்கு முன்பு தீர்வு கிடைக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD SRI LANKA இலங்கையின் 75வது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பொது இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் ஜனாதிபதி சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.…
-
- 6 replies
- 511 views
- 1 follower
-
-
வலுசக்தி துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல் By T. SARANYA 16 DEC, 2022 | 01:07 PM (எம்.மனோசித்ரா) வலுசக்தி துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கைக்கான ரஷ்ய மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது 'இலங்கையின் எரிசக்தி துறையின் தேவைகளான எரிபொருள், சுத்திகரிப்பு நடவடிக்கைகள், நிலக்கரி வழங்கல் மற்றும் அணுசக்தியில் ஒத்துழைப்பு போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கட…
-
- 3 replies
- 675 views
- 1 follower
-
-
வவுனியாவில் பாதுகாப்பான பயணத்திற்கு எனும் தொனிப்பொருளில் பாலியல் தொந்தரவிற்கு முற்றுப்புள்ளி வைத்தல் எனும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் தேசிய பெண்கள் குழு என்பன இணைந்து முன்னெடுத்த இச் செயற்றிட்டம் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று (16) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது. குறித்த ஸ்டிக்கரில் பாதுகாப்பான பயணத்திற்கு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் , உங்களுக்கு வன்முறை இடம்பெற்றால் அமைதியாக இருக்க வேண்டாம் எதிர்த்து போராடுங்கள் , வன்முறையை பார்க்கும் போது அதனை தடுக்க முன்வாருங்கள் , இது சட்டரீதியான தண்டனைக்குரிய குற்றமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அ…
-
- 0 replies
- 338 views
-
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படுகின்றது? எல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி அரசியல் கட்சிகளுடன் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார வரம்புகளை வரையறுக்கும் வகையில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த எல்லை நிர்ணய குழுவை நியமித்தார். தற்போதைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆ…
-
- 2 replies
- 440 views
- 1 follower
-
-
வடக்கில் கால்நடைகள் காப்பகம் அமைக்க சமூக தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் - வைத்தியர் சி. வசிகரன் By VISHNU 16 DEC, 2022 | 05:11 PM (எம்.நியூட்டன்) வடக்கில் கால்நடைகள் காப்பகம் ஒன்றினை அமைப்பதற்கு சமூக தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சமூக நலன் சார்ந்து சிந்திப்போர் உதவுமாறு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் பணிப்பாளர் வைத்தியர் சிவகுருநாதன் வசிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார் காலநிலை சீரின் மையினால் கடந்த வாரம் வடக்கில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன வடக்கில் உள்ள கால்நடைகளை பாதுக…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
தென் கடலில் கடற்படையினர் கைப்பற்றிய 200 கிலோ போதைப்பொருள்! By DIGITAL DESK 5 16 DEC, 2022 | 01:29 PM தென் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 2 மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் இன்று (16) தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட ரோந்தின் போதே இந்த போதைப் பொருட்களைக் கைப்பற்றியதாக கடற்படையினர் கூறியுள்ளனர். இந்த இரண்டு படகுகளும் தெய்வேந்திரமுனைக்கு அப்பால், கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது படக…
-
- 0 replies
- 603 views
- 1 follower
-
-
47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை ரோட்டரியும் யுனிசெப்பும் இணைந்து சுகாதார அமைச்சிடம் கையளிப்பு By RAJEEBAN 16 DEC, 2022 | 11:46 AM ரோட்டரி இன்டர்நெசனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்சும் யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் கூக்கும் இணைந்து லைவ்லைன் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலயிடம் 47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்களை கையளித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு மருத்துவ பொருட்களிற்கு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டிற்கு உதவுவதற்காக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ரோட்டரி கழக வலையமைப்பு முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இணையத்தள…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
அரசாங்கத்திடம் நிதி இல்லை : வட, கிழக்கில் வீதி அபிவிருத்திப் பணிகள் இடை நிறுத்தம் ! By DIGITAL DESK 5 16 DEC, 2022 | 12:50 PM வட, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட கொழும்பு, ஊவா ஆகிய நான்கு மாகாணங்களில் தொடர்ந்து வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. இவ்வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சில வீதிகளை போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஏற்றது போல அபிவிருத்திக்கு மேற்கொள்ளவதாகவும் ஐரோட் திட்டப்பணிகள் சிலவற்றை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆசிய அபிவிருத்தியின் கடன் நிதியானது சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்தும் உடன்பாடு உறுதியாக கிடைக்கும் வரை அந்நிதி மூலம் நடைபெற்ற ஐரோட் திட்ட…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
சிறையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டும் – சம்பிக்க! தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி தலைவர்கள் மாநாட்டில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட வேண்டும், சிறைச்சாலைகளில் உள்ள முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டோர் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண…
-
- 2 replies
- 719 views
-
-
மக்கள் இன்னும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கின்றனர் – பேராசிரியர். ரஞ்சித் பண்டார எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எவராலும் சவால் விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுமார் 15 கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், அவர்களுக்கு நாட்டிற்கான வேலைத்திட்டம் இல்லை அல்லது மக்களின் ஆதரவு இல்லை என்பது தெளிவாக…
-
- 0 replies
- 260 views
-
-
(ஊடகப்பிரிவு) வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ…
-
- 9 replies
- 1.6k views
-
-
தலைமன்னார் துறைமுகத்தை தொழில் துறைமுகமாக மாற்ற தேவையான ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு By T. SARANYA 15 DEC, 2022 | 03:06 PM இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பான கூட்டம் இன்று (15) ஜனாதிபதி தலைமையில் பதுளையில் மாவட்டத்தில் இடம்பெற்றது. இதன் போது பதுளை மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தின் பின் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் ஜனாதிபதி தலைமன்னார் துறைமுகத்தை தொழில் துறைமுகமாக மாற்ற இலங்கை மற்றும் இந்த…
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தால் இறந்த கால்நடைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்கான நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்கான நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் இறந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 1,800 இற்கு…
-
- 2 replies
- 248 views
-
-
இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்ட வாய்ப்பு தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாத காரணத்தினால் இலங்கை உலகின் ஏனைய நாடுகளை விட பின்தங்கியுள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய சபையில் தெரியவந்துள்ளது. இத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாடு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்ட முடியும் எனவும் தெரியவந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து அங்கு விவாதிக்கப்பட்டது. இதற்காக அறிஞர்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் என ஏராளமானோர் இணைந்துள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன், தகவல் தொழில்நுட்பத் துறையில் பல வருட அனுபவமும் கொண்ட தொழில் வல்லுநர்கள் ந…
-
- 4 replies
- 846 views
-
-
இலங்கையின் வறுமை நிலை குறித்து வௌியிடப்பட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் ஒக்டோபர் மாதத்திற்கான தேசிய வறுமை மட்டத்தை அறிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, இலங்கையில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்ச மாதாந்தத் 13,810 ரூபா தேவையாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட அடிப்படையின்படி, கொழும்பு மாவட்டத்தில் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 14,894 ரூபாவான அதிகளவான தொகை தேவையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மொனராகலை மாவட்டம் மிகக் குறைந்த செலவைக் கொண்டுள்ளதுடன் அந்த தொகை 13,204 ரூபாயாகும். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 20…
-
- 0 replies
- 331 views
-
-
கெஸ்பேவ நீதிமன்ற பொலிஸ் அறையிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கொள்ளையர்களான 'சுட்டியா' மற்றும் 'சுடியா' ! By VISHNU 15 DEC, 2022 | 03:04 PM அடையாள அணிவகுப்புக்காக கெஸ்பேவ நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த 'சுட்டியா', மற்றும் 'சுடியா' ஆகிய இரு கொள்ளையர்கள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள்போன்று வேடமணிந்து பிலியந்தலை நகரில் உள்ள லொத்தர் விற்பனை நிலையம் ஒன்றில் 7,000 ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உட்பட பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்திலேயே இவர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேக நபர்கள…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் நாளை மீள ஆரம்பம் By T. SARANYA 15 DEC, 2022 | 12:56 PM (எம்.வை.எம்.சியாம்) மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக கடந்த 70 நாட்களாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நாளை (16) முதல் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மூலம் நாளொன்றுக்கு 1,600 மெட்ரிக் தொன் டீசல், 550 மெட்ரிக் தொன் பெற்றோல், 950 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் விமானங்களுக்கு தேவையான 1,450 மெட்ரிக் தொன் எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெர…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-