ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
யாழ் குடாநாட்டில் சிறீலங்கா படைகளுடன் இயங்கி வந்த தமிழ் ஒட்டுக்குழுக்கள், கொழும்பிற்கு ஓட்டமெடுப்பதற்கான பகீரத பிரயத்தனங்களில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நாட்களில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலொன்று, தென்னிலங்கையில் இருந்து வடமராட்சி பருத்தித்துறை துறைமுகத்தை சென்றடைய இருக்கின்றது. குறிப்பிட்ட கப்பல் மீளவும் தென்னிலங்கைக்கு புறப்படும் போது, அதில் பல்கலைக் கழக மாணவர்கள், அரசாங்கம் பணியாளர்கள், மற்றும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற மக்கள் செல்ல இருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தென்னிலங்கைக்கு தப்பிச் செல்வதற்கான ஆயத்தங்களில், சிறீலங்கா துணைப்படை ஈ.பி.டி.பி குழு உட்பட, யாழ் குடாநாட்டில் இயங்கும் தமிழ் ஒட்டு…
-
- 0 replies
- 1.6k views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் மத்திய குழு உறுப்பினரும் தந்தை செல்வா அறங்காவலர் குழு உறுப்பினரும் ஆகிய சின்னத்தம்பி சிவமகாராஜா (வயது 66) நேற்றிரவு அவரது தற்காலிக வதிவிடமான தெல்லிப்பளையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்றிரவு அந்தப்பகுதியில் வேட்டுச்சத்தங்கள் கேட்டதாகவும், வழமையாக காலையில் துர்க்கையம்மன் ஆலய பூசையில் கலந்துகொள்வார் என்றும் இன்று காலை அவர் பூசைக்கு வராததையடுத்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் சூட்டுக்காயங்களுடன் இறந்து காணப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப்பளை கொல்லங்கலட்டியை சேர்ந்த இவர் தெல்லிப்பளை பிரதேச சபையின் நூலகத்தில் பணியாற்றினார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
வடபோர்முனையில் படுகாயமடைந்த 1200க்கும் அதிகமான படையினர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதி. வடபோர்முனையில் படுகாயமடைந்த ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான சிறீலங்கா படையினர், ராகம, சிறீஜெயவர்த்தனபுர மற்றும் கொழும்பு படைத்துறை தலைமையகம் ஆகியவற்றில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அனுராதபுரம் மருத்துவமனையில் மேலும் முந்நூறு சிறீலங்கா படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இடநெ
-
- 0 replies
- 1k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 20 ஓகஸ்ட் 2006, 20:36 தமிழீழம்] [ஜோன்] முகமாலைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இன்று அதிகாலையில் இருந்து காலை வரை நடைபெற்ற யுத்தத்தில் சுமார் 32 படையினர் பலியானதாக அறியமுடிகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று அதிகாலையில் இருந்து இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி முன்னேற முற்பட்டனர் இதனை முறியடித்து விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் உக்கிர தாக்குதலை தொடுத்தனர். இந்தத் தாக்குதலில் சுமார் 10 படையினர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். மேலும் 216 படையினர் படுகாயமடைந்தனர். மேலும் காயமடைந்த படையினரில் 22 படையினர் பலாலிக்கு கொண்டு செல்லமுதல் பலியாகியுள்ளனர். இன்று நடந்த 6 மணித்தியால யுத்தத்தில் மட்டும் சுமார் 32 படையினர் கொ…
-
- 0 replies
- 1.1k views
-
-
முகமாலையில் இண்று நடந்த சண்டையில் 32 இராணுவத்தினர் பலி. - 216 படையினர் படுகாயம். முகமாலைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இன்று அதிகாலையில் இருந்து காலை வரை நடைபெற்ற யுத்தத்தில் சுமார் 32 படையினர் பலியானதாக அறியமுடிகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று அதிகாலையில் இருந்து இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி முன்னேற முற்பட்டனர் இதனை முறியடித்து விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் உக்கிர தாக்குதலை தொடுத்தனர். இந்தத் தாக்குதலில் சுமார் 10 படையினர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். மேலும் 216 படையினர் படுகாயமடைந்தனர். மேலும் காயமடைந்த படையினரில் 22 படையினர் பலாலிக்கு கொண்டு செல்லமுதல் பலியாகியுள்ளனர். இன்று நடந்த 6 மணித்தியால யுத்தத்தில் மட…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஓய்ந்திருந்த எறிகணைத்தாக்குதல்கள் இன்று மாலை மீண்டும் ஆரம்பமாகிவிட்டதாக ரி.ரி.என் செய்திகள் தெரிவிக்கின்றன. கொடிகாமம் வரணிப்பகுதியை நோக்கி தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் புலிகளும் பதில் தாக்குதல் நடாத்தியதாகவும் இதில் பலாலி முகாமில் கடுஞ்சேதங்கள் இடம்பெற்றதாகவும் தெரிகிறது.
-
- 3 replies
- 2.2k views
-
-
ஞாயிறு 20-08-2006 21:46 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வடபோர்முனையிருந்து இராணுவத்தின் 53வது படைப்பிரிவு அகற்றப்பட்டுள்ளது - இளந்திரையன் வடபோர்முனையில் இருந்து, பலத்த சேதங்களுடன் ஐம்பத்து மூன்றாவது படைப் பிரிவு அகற்றப்பட்டுள்ள நிலையில், சிறீலங்கா படைகளின் பாரிய அளவிலான வலிந்த படைநகர்வுகள் தணிந்திருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். யாழ் களநிலவரங்கள் குறித்து இன்று எம்மிடம் கருத்துரைத்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், வடபோர்முனையில் இருந்து ஐம்பது மூன்றாவது படைப் பிரிவு முற்றாக அகற்றப்பட்டுள்ள நிலையில், ஒன்பது நாள் சமர்களில் ஏற்பட்ட சேதாரங்களை சீர் செய்யும் முயற்சியில், தற்போது சிறீலங்கா படைகள் ஈடுபட்டிருப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
துரோகியும் திருகோணமலை மாவட்ட முன்னாள் எம்.பி திரு. தங்கத்துரையில் தம்பியே திரு.குமாரதுரை அவர்கள். டென்மார்க் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தமிழ்த் தேசியத்தின் புலம்பெயர் கட்டுமானங்களை உடைத்து பல காட்டிக்கொடுப்புக் நடத்தி ஐரோப்பிய தேசத்தில் இருகும் துரோகிகள் வரிசையில் இவரது 5 பிள்ளைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நோய்கள் கூட பரம்பரையாக கூர்ப்பின் அடிப்படையில் தொடர்ந்து வருவது வழங்கம். இதில் என்ன வேடிக்கை என்றால் துரோகிகள் கூட பரம்பரையில் தாக்கத்தைச் செலுத்துவதை நாம் இன்று நேரில் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக திருவாளர் மதிகுமாரதுரையின் குடும்பத்தையே எடுத்து நோக்கலாம். இவரது சகோதரன் திருவாளர் தக்கத்த…
-
- 14 replies
- 3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால்தான் அமைதிப் பேச்சுக்கள் மீளத் தொடங்கவில்லை என்று நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் குற்றம்சாட்டியுள்ளார். பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு இது குறித்து அவர் அளித்த நேர்காணல்: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையானது பேச்சுக்கள் மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்களை சிதைத்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு கடுமையடைந்துதான் உள்ளது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. இது போதுமானது அல்ல என்றார் ஹன்சன் பௌயர். http://www.eelampage.com/?cn=28331
-
- 22 replies
- 3.4k views
-
-
களமுனையில் போராடும் போராளிகளிற்கு மக்கள் உலர்உணவுகளையும்,குளிர் பானங்களையும் வழங்கி வருகின்றனர். வன்னியில் பல பகுதிகளில் இருந்தும் ஆர்வத்துடன் மக்கள் இப்பொருட்களை களமுனைக்கு அனுப்பி வருகின்றனர். கள முனையில் ஏற்கனவே பல உதவிகளை மக்கள் ஆற்றிவருவது குறிப்பிடத்தக்காது. மக்களின் உதவி மனதை குளிரவைக்கும்.
-
- 9 replies
- 1.8k views
-
-
போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகித்த ஐரோப்பிய கண்காணிப்பாளர்கள் இரண்டு பிரிவாக இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளனர் என்று தெரியவருகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி ஒரு பகுதியினரும் எதிர்வரும் 31 ஆம் திகதி இரண்டாவது பகுதியினரும் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கான பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம் நோர்வேயும் ஐஸ்லாந்தும் மேலதிகமாக தலா நான்கு கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. தற்போது நோர்வேயின் 16 கண்காணிப்பாளர்கள் இலங்கையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். செப்டம்பர் முதலாம் திகதி முதல் மேலும் நான்கு நோர்வே நாட்டு பிரஜைகள் கண்காணிப்…
-
- 1 reply
- 943 views
-
-
இலங்கை ராணுவம் குண்டு வீசி 61 குழந்தைகளை கொன்றது. இறந்த குழ்ந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய வீரப்பன் மனைவி முத்து லட்சுமி. இலங்கை ராணுவம் குண்டு வீசி 61 குழந்தைகளை கொன்றது. இறந்த குழ்ந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய வீரப்பன் மனைவி முத்து லட்சுமி. http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இராணுவ முகாங்களில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு சரமாரியான எறிகணை தாக்குதலைமேற்கொண்டுள்ளனர். பதிலுக்கு விடுதலை புலிகளும் மோட்டார் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மட்டக்களப்பு வலயிறவு விமான படை முகாம் கடும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தாக்குதலால் படையினரிற்கு பலத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பதிவு.com
-
- 3 replies
- 1.3k views
-
-
மாவிலாறில் தண்ணி கேட்ட படையினருக்கு குடாநாட்டில் ~தண்ணி காட்டும்| புலிகள் -தெய்வீகன்- கடந்த 2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி இரவு உதயன் பத்திரிகை தடைசெய்யப்பட்டு அங்கிருந்த நாம் அனைவரும் அலுவலகத்தின் வாயிலுக்கு அழைத்துவரப்பட்டோம். பத்திரிகை நிறுவனத்தின் ஒருவாசல் விடாமல் சீல்வைத்த பொலிஸார், விடியும் வரை எம்மை வாசலிலுள்ள பத்திரிகையின் நூலகத்தில் தங்கியிருந்துவிட்டு விடிந்ததும் வீடு செல்லும்படி கூறிச்சென்றனர். தடை செய்யப்பட்ட நிறுவனத்துக்கு தமது பொலிஸ் அணியொன்றை பாதுகாப்புக்கு விட்டுச்சென்றனர். அவ்வாறு பாதுகாப்புக்கு நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் விடியும் வரை நேரம் போவதற்கு கதைத்துக்கொண்டிருக்கையில் பதவி வழியாகவும் பணி ரீதியாகவும் அவர் தான் சார்ந்த…
-
- 1 reply
- 1.6k views
-
-
செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை - (தேசியன்) [20 - August - 2006] [Font Size - A - A - A] * படுகாயமடைந்த பல மாணவிகள் தமது அவயங்களை இழந்துள்ளனர் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்துள்ளனர் குருதியில் தோய்ந்து கண்ணீரால் கழுவப்படும் தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14' ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது... அழுது... ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண…
-
- 0 replies
- 613 views
-
-
பாதுகாப்புக்காக மேலும் 500 கோடி ரூபா :shock: ஒதுக்கினார் மகிந்த [ஞாயிற்றுக்கிழமை, 20 ஓகஸ்ட் 2006, 06:11 ஈழம்] [கொழும்பு நிருபர்] பாதுகாப்புச் செலவுகளுக்காக 500 கோடி ரூபாவை மேலதிகமாக சிறிலங்கா அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. பாதுகாப்புச் செலவுகளுக்காக இந்த ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக இந்த 500 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பாக மகிந்த தெரிவித்துள்ளார். மேலும் ஊர்காவல் படையில் 16,000 பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்த ஆண்டு 125 கோடி ரூபா செலவு ஏற்பட உள்ளது.
-
- 3 replies
- 1k views
-
-
திருமலையில் பிரபல தமிழ் வர்த்தகர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொலை. (ஞாயிற்றுக்கிழமை, 20 ஓகஸ்ட் 2006, 15:45 தமிழீழம்) (உதயகுமார்) இன்று திருமலையில் அருள் என்றழைக்கப்படும் ஜோசப் செபராஜா என்ற பிரபல வர்த்தகர் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் மதியம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். லண்டனில் நீண்ட காலமாக வாழ்ந்து, சமாதான காலத்தில் திருமலை திரும்பி பிரபல வர்த்தக நிறுவனத்தை இவர் நடாத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதி "கேணல்" சொர்ணத்தின் சகோதரரான இவர், சில மாதங்களாக இலங்கை புலனாய்வுத் துறையினரின் கொலை அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்தவரென்று குடும்பத்தினர் தெரிவித்தார்கள். இன்றைய சூழலில் சிறீலங்கா அரசு தம…
-
- 4 replies
- 2.2k views
-
-
தமிழர் பிரச்சினைக்கு சர்க்காரியா கமிஷன் அடிப்படையில் தீர்வு: கமிஷன் அறிக்கையின் நகலை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இலங்கை அரசும் இந்தியாவை இது தொடர்பாக வற்புறுத்தி வந்தது. இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா இப்போது புதிய யோசனையை தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இடையே நல்லறவு, அதிகாரம் பற்றி ஆராய சர்க்காரியா தலைமையில் முன்பு கமி ஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழர் பிரச்சி னைகளுக்கும் தீர்வு காணலாம் என்று இந்தியா யோசனை தெரிவித்து இருக்கிறத…
-
- 2 replies
- 1.5k views
-
-
மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் மரணித்த எமது இளம் சிட்டுக்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் தகவல் என்னவென்றால் பொருளாதாரத்தால் பின்தள்ளப்பட்ட அடிமட்டத்தில் உள்ள தமிழக மக்களுக்கும் எமது துயரங்கள் சென்றிருப்பது நல்ல விடயம். http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பு திரும்ப முடியாமல் யாழில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்கள் தூதுவராலயங்களுடன் தொடர்பு கொள்ளவும் -வீரகேசரி நாளேடு வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக இலங்கை வந்து யாழ். சென்றவர்களும், தற்பொழுது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மோதல்கள் காரணமாக அங்கிருந்து கொழும்பு வரமுடியாமல் சிக்குண்டிருக்கும் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்களும் தத்தமது தூதுவராலயங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். தற்பொழுது ஏ9 பாதை மூடப்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு யாழ். விமான சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு வர முடியாமல் தவிக்கும் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு அந்நாட்டு தூதுவராலயங்கள் சர்வதேச செஞ்சிலுவைச்…
-
- 20 replies
- 4.6k views
-
-
-
கட்டுமானத் தள நிலையம் மீது சிறிலங்கா வான்படையின் தாக்குதல். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சுனாமிக்குப் பின்னரான துரித புனர்வாழ்வு அபிவிருத்திச் சேவை நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவான வேலைத்திட்டங்களில் ஒன்றான வடமராட்சி கிழக்கு நெல்லியானில் அமையப்பெற்றுள்ள படகுக் கட்டுமானத் தள நிலையம் மீது நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் சிறிலங்கா வான் படையின் கிபீர் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தியுள்ளன. இதன்போது படகு உற்பத்தித்தளம் சேதமடைந்துள்ளதோடு;; அங்கு உற்பத்திசெய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த படகுகள், உற்பத்தித் தளபாடங்கள் யாவும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன்; அங்குள்ள பொருட்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்கள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளின் உக்கிர எறிகணைத்தாக்குதல் காரணமாக பலாலி கூட்டுப்படைத்தளத்தில் தொடர்ந்து யாழ்.குடாநாட்டிற்கான கட்டளைபீடத்தை இயக்கமுடியத நிலைக்கு சிறீலங்காபடையினர் தள்ளப்பட்டுள்ளனர். இதனை அடுத்து படையினரின் கட்டளைபீடம் கரைநகர் கடற்படைத்தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக யாழ்.செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 11ம் திகதி பலாலி படைத்தளம் மீது புலிகளின் வான்படையினர் மேற்கொண்ட உந்துகணைத் தாக்குதலை அடுத்து எறிகணைத் தாக்குதல்கள் புலிகளின் பீரங்கி படை போராளிகளால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான ஒடுபாதைகள்,வானுர்தி இறங்கு தளங்கள் பிரதான கட்டளைப் பீடம் என்பன புலிகளின் துல்லியமான எறிகணைத் தாக்குதலிற்கு இலக்காகி வரும் நிலையிலேயே கட்டளை பீடத்தை கரைநகரிற்கு படையி…
-
- 1 reply
- 1.1k views
-
-
பேச்சுக்குத் தயார்: கொபி அனானிடம் மகிந்த ராஜபக்ச [சனிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2006, 17:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] பேச்சுக்களுக்குத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானிடம் சிறிலங்கா அரச தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை வன்முறைகள் குறித்து அண்மையில் கொபி அனான் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கொபி அனானுடன் தொலைபேசியில் உரையாடிய மகிந்த ராஜபக்ச, பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐக்கிய நாடுகள் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் சர்வதேச செஞ்சிலுவைப் பணியாளர்களும் நிவாரண உதவியை மேற்கொள்வதற்கான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கும் என்றும் மகிந்த கூறியதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்…
-
- 0 replies
- 962 views
-