Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டு ஏ-9 வீதியை திறப்பதனைவிட தற்போதே திறக்கலாம்: வஜிர அபயவர்த்தன ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டு ஏ-9 வீதியை திறப்பதனைவிட தற்போதே திறக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தினை நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் அவர் கூறியுள்ளதாவது: இந்த நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சந்தேகமும், அவ நம்பிக்கையுமே இன்று பயங்கரவாதமாக மாறியுள்ளது. வடக்குகிழக்குப் பிரிப்பு தொடர்பாக சிங்கள மற்றும் தமிழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. காரணம் இனப்பிரச்சினைக்கு அரசி…

    • 0 replies
    • 1.1k views
  2. திருக்கோவில் கல்முனைப் பகுதிகளில் 100 க்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒட்டுக்குழுவால் கடத்தல்.அம்பாறையில் திருக்கோவில் மற்றும் கல்முனைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துணை இராணுவக் குழுவினரால் வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் இந்த ஆட்கடத்தல் நடைபெற்று வருவதால் கல்முனை மற்றும் திருக்கோவில் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை வான்களில் ஆயுதங்கள் சகிதம் வருவோர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களையே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். இரவு பகலென நேர காலமின்றி கடந்த மூன்று நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் பகுதிகளில் வெள்ளை வான்களில் வந்த துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டுள்…

  3. இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை மதித்து புலிகள் நிபந்தனையற்ற பேச்சிற்கு சம்மதித்ததை தவறாக அர்த்தப்படுத்தியது சிங்கள அரசு. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சிங்களப்படைகள் இராணுவ பலத்தில் மேலோங்கி உள்ளார்கள் என்றும் எண்ணியது. அதன் வெளிப்பாடுகள் தான் பேச்சு ஆரம்பிக்க முன்கேகலிய ரம்புக்வெல புலிகளுக்கு விதித்த மூன்று நிபந்தனைகள். ஆனால் பின்னர் தான் நிபந்தனைகள் விதிக்கவில்லை என கரணமும் அடித்திருந்தார். சர்வதேச நாடுகளின் உதவித்தொகையில் சீவியம் நடத்தும் சிங்கள அரசுக்கு என்று தனியான கொள்கைகள் ஏதும் இருக்க முடியுமா? அதுதான் ரம்புக்வெலவின் குத்துக்க ரணத்திற்குக் காரணம். ரம்புக்வெல நிபந்தனை விதித்ததன் அர்த்தம் என்ன? தாம் பலமாக இருக்கிறோம் என்பதை தெரி விற்கும் முயற்சி. அதாவ…

  4. யாழ் - தக்கவைக்கப் போராடும் சிங்களப்படை மாவிலாறு நீர் பிரச்சினையைக் கொண்டு தனது இராணுவ, அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முயற்சித்த அரசு இன்று பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராட்சி தலைமையில் 3,000 வீரர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை 26 நாட்களாகியும் இன்றுவரை இலக்கை அடையவில்லை. போர்நிறுத்தத்தை தனக்கு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தனது நீண்ட கால இராணுவ நலன்களை எட்ட முற்பட்டுள்ளது அரசு. அதாவது தெரிவு செய்த நிலைகள் மீது படை நடவடிக்கைகளையும், விமானத்தாக்குதல்களையும் மேற்கொள்வது இவை ஒரு முழு அளவிலான போராக மாறி தனக்கு…

  5. இணைத் தலைமைகளின் கூட்டமும் பிரபாவின் மாவீரர் தின அறிவிப்பும் இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ மாநாட்டின் இணைத் தலைமைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங் டன் நகரில் கூடி இலங்கை நிலைவரம் குறித்து ஆராயவிருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமைகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கடைசியாக செப்ரெம்பர் 12, 13 ஆம் திகதிகளில் முறை யாகக் கூடி இலங்கை நிலைவரம் குறித்து ஆராய்ந்திருந்தன. இலங்கையில் அமைதிப் பேச்சுக்களை உடனடியாக - அடுத்த மாதமான ஒக்ரோபர் முற்பகுதியில் - நடத்தும்படி இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்புகளான இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் அப்போது வற்புறுத்திக் கேட…

  6. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை ஐ.நா.வில் கண்டனத் தீர்மானம் கொண்டுவர பின்லாந்து முஸ்தீபு இலங்கையில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கின்றன. நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட சகல பகுதிகளிலும் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விடயத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு ஐரோப் பிய ஒன்றியத்தின் தலைமை நாடான பின்லாந்து திட்டமிடுகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இலங்கையின் பல பகுதிகளிலும் சமீப நாள்களாக கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல…

    • 6 replies
    • 2.6k views
  7. யாழ். குடாநாட்டுக்கான ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்று போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும், 6 இலட்சம் மக்கள் யாழ். குடாநாட்டுக்குள் முற்றுகையிட்டு வைத்திருக்கிறது. ஏ-9 பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்" என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் ஹெலன் ஒலப்ஸ் டொற்ரியர் தெரிவித்துள்ளார். "ஏ-9 பாதை திறப்பிலான விவாதங்களை ஜெனீவாப் பேச்சுக்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால், ஏ-9 பாதையை மூடியிருப்பதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பது எமக்குத் தெரியவில்லை" என்றும் அவர் கூறினார். ஐரோப்பாவிலிருந…

    • 0 replies
    • 1.5k views
  8. விடுதலைப்புலிகள் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு விரைவில் முன்வருவரென்ற நம்பிக்கை அரசிடம் காணப்படுவதாக அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். அமைச்சர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்; ஜெனீவாப் பேச்சுக்கள் தோல்வியில் முடியவில்லையாயினும் கூட, மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு இப்பேச்சுவார்த்தை அடித்தளமிட்டுள்ளது. புலிகள் கூட அரசியல் தீர்வு குறித்து பேசினர். ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது அரசாங்கத்தின் சமாதானம் மீதான பற்றுதலை சர்வதேச சமூகம் நன்கு அறிந்துகொண்டது. நாங்கள் நவம்பர் மாதமும், ஜனவரியிலும் மற்றுமொரு சுற்றுப்பேச்சுக்கு தயாராகவிருந்தோம். எனினும், பேச்சுக்கான அடுத்த திகதி தீர்மானிக்கப்படாமலே நிறைவடைந்தது. இ…

    • 0 replies
    • 1.1k views
  9. யாழில் நிலைகொண்டுள்ள படையினர் விடுமுறையில் செல்ல முடியாது - அரசு உத்தரவு - பண்டார வன்னியன் Monday, 06 November 2006 15:38 யாழ் குடாநாட்டிலுள்ள சிறிலங்காப் படையினருக்கும் பொலிஸாருக்கும் இம் மாதம் விடுமுறையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாவீரர் நாள் முடியும் வரை படையினர் எவரும் விடுமுறையில் செல்ல முடியாது என யாழ் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. மாவீரர் நாளில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்திலே விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அப்போ எல்லா ஆமிக்கும் நிரந்தர விடுமுறை கொடுக்க அரசு ஆசைப்படுகுது.

  10. தமிழ் மக்கள் புலிகள் இயக்கத்துக்கு மாத்திரம் சொந்தமில்லை என்கிறார் சங்கரி வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்காக உறுதியான தீர்வு காணப்படுவதை விடுதலைப் புலிகள் இயக்கம் விரும்பவில்லை என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்த சங்கரி இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு உறுதியான தீர்வு காணப்பட்டால் அது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தினதும் அது சார்ந்த ஏனைய புலிகள் இயக்க உறுப்பினர்களினதும் எதிர்காலச் செயற்பாடுகளில் பெரும் குழப்பம் ஏற்படும் எனவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஷ்ரீலங்கா அரச தரப்பிற்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே கடந்த 28 ஆம், 29 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த…

  11. புலிகளின் விமானம் மீண்டும் பறந்தது? சிறீ லங்கா பாதுகாப்பு தரப்பின் செய்தி! Home › News & Events › MOD News › Last modified on: 11/6/2006 6:04:26 PM A mysterious aircraft detected in Mannar Sky A mysterious aircraft was detected by the Air Force radars flying in the Mannar sky yesterday. The police source who had observed the presence of the suspicious aircraft informed the matter to Sri Lanka Air Force authorities around 5p.m. Sri Lanka Air Force Radars located at in Vavuniya also reported the detection. The Air Force authorities conducting further investigation to the matter. Earlier, Sri Lanka Navy also reported the presence of suspi…

    • 1 reply
    • 2.9k views
  12. தேடிய உடைமைகளைக் கைவிட்டு வெளியேறுகின்றனர் வாகரை மக்கள் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களி னால் அங்குள்ள மக்கள் தமது சொந்தபந் தங்கள், சொத்துக்களையும் கைவிட்டு விட்டு இடம்பெயர்ந்து வருகின்றார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரி விக்கின்றன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டி லுள்ள வாகரை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக கிபீர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகின்றன. இரா ணுவ முகாம்களில் இருந்து அவ்வப்போது ஏவப்படும் எறிகணைகள் மக்கள் குடியி ருப்புப் பகுதிகள் மீது வீழ்ந்து வெடிக்கின் றன. இதனால் அந்தப் பகுதி மக்கள் கையில் அகப்பட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக இராணுவக் கட் டுப்பாட…

  13. மூடப்பட்டுள்ள பாதை முடக்கப்பட்டுள்ள வாழ்க்கை -(யாழின்மைந்தன்) "யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் பிரிவினர் கடல் தொழில் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி பாய்கள் பயன்படுத்தும் வள்ளங்களில் அதுவும் சூரியன் உதித்த பின் கடல் தொழிலுக்கு அனுமதிப்பதால் பலருக்கும் தொழிலில், சிலவேளைகளில் எந்த மீனும் அகப்படாமல் திரும்புவதுண்டு. இந்நிலையால் 5,000 க்கும் அதிகமான மீனவக் குடும்பங்கள், பசி,பட்டினியுடன் வாழும் நிலை உருவாகியுள்ளது. பலர் என்னிடம் பகல் வேளைகளில் வந்து ஒன்றுக்கும் வழியில்லை, கஞ்சிதான் குடித்தோம் எனச் சொல்லும் போது என்மனம் படும் வேதனை வார்த்தைகளில் சொல்ல முடியாது" -யாழ்.மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் என்.நவரெத்தினம். யாழ்.மாவட்டத்துக்கான ஒரே தரைவழிப்பாதை …

  14. அட ராமா! யார் இந்தத் துரோகி? இலங்கையின் சிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் உலகத் தமிழர்களால் மதிக்கப்படும் ஒருவராவார். 2006 அக்டோபரில் வெளியான குமுதம் தீராநதி இதழில் அவர் அளித்த நேர்காணலில் இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்படவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி இருக்கிறார். அந்த நேர்காணலில் இதுவரை வெளிவராத பல செய்திகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். கேள்வி : இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபோது இலங்கைத் தமிழர்கள் ஆரவாரமாக அவர்களை வரவேற்றார்கள். ஆனால் விரைவிலேயே காட்சிகள் மாறின. இதற்கு என்ன காரணம்? வ.ஐ.ச. ஜெயபாலன் : அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் இருக்க. திரைமறைவு வேலைகளும், உலக அரசியல் சதிகளும் இதில் முக்கியப் பங்காற்றின. நிறையப் …

  15. இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகை: துக்கநாளாக அனுசரிக்க ராமதாஸ் கோரிக்கை ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வருகிற 17ந் தேதி இந்தியாவுக்கு வரும் போது துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.சிங்கள அரசின் உணவுத் தடையினால் யாழ்ப்பாணத்தில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு 6 லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் பசி, பட்டினியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதாக செய்தி வெளிவந்திருக்கிறது. ராஜபக்சே இந்தியா வரும் நாளான 17.11.2006 தமிழகத்தில் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் கறுப்புக் கொடி பறக்க வேண்டும். …

  16. சதாம் ஹுசைனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது ஷியா இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் துஜையில் நகரத்தில் 1982 ஆம் ஆண்டு, 148 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இராக்கிய முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனுக்கு பாக்தாத்தில் இருக்கின்ற நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு உறவு முறையில் சகோதரரான பர்சான் அல் திக்ரிதி மற்றும் இராக்கின் முன்னாள் தலைமை நீதிபதியான அவாத் ஹமீத் அல் பந்தர் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணை அதிபரான தாஹா யாசின் ரமதானுக்கு ஆயுட் தண்டனையும், இதர மூவருக்கு 15 ஆண்டு கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் பாத் கட்சியினை சேர்ந்த அதிகாரியான மொஹமது அசாவி அலி என்பவர் விடுத…

  17. வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த கடத்தப்பட்டோரின் கண்ணீர்க்கதைகள் http://www.yarl.com/forum3/files/kadathal/

  18. தனியார் வர்த்தகர்கள் மூலம் யாழுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப தயார்: இந்தியா [ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2006, 06:48 ஈழம்] [ச.விமலராஜா] யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தனியார் வர்த்தகர்கள் மூலமாக உணவுப் பொருட்களை அனுப்ப தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதரகத்தின் பேச்சாளர் நக்மா மாலிக் இதனை உறுதி செய்துள்ளார். "சிறிலங்காவின் தனியார் வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்றும் நக்மா மாலிக் கூறினர். "சிறிலங்காவுக்கான பருப்பு மற்றும் சர்க்கரை ஏற்றுமதி தடை நீக்கப்பட்டு வர்த்தகர்கள் ஊடாக 2 ஆயிரம் தொன் பருப்பும் 6 ஆயிரம் தொன் சீனியையும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய…

  19. ஏ-9 பாதை மூடப்பட்டமை யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்: கண்காணிப்புக் குழு [ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2006, 07:01 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழர் தாயகப் பிரதேசங்களை யாழ். குடாநாட்டுடன் இணைக்கும் ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "சிறிலங்கா அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும் 5 இலட்சம் மக்களை யாழ். குடா நாட்டுக்குள் முற்றுகையிட்டு வைத்திருக்கிறது. ஏ-9 பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் ஹெலன் ஓலப்ஸ் டொடிட்டர் தெரிவித்துள்ளார். "ஏ-9 பாதை திறப்பிலான விவாதங்களை ஜெனீவாப்ச்சுக்களி…

  20. முகமாலை முன்னரங்க காவலரண் இராணுவ வீரர் பிரபாகரனின் ஆதரவாளர்? அநுராதபுரம் நகரில் வைத்து பிரபாகரனின் புகைப்படத்துடன் இராணுவ வீரர் ஒருவர் அண்மையில் சந்தேகத்தின் பேரில் இராணுவப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவரை அநுராதபுரம் இராணுவ பொலிஸ் தரப்பு அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததாகவும் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது அநுராதபுரம் நீதிபதி வசந்த ஜினதாச மேற்படி குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ வீரரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், குறித்த தினம் இந்த இராணுவ வீரர் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி அவரை ஆஜர் செய்த இராணுவப் பொலிஸ் தரப்புக்கு, நீதிபதி கட்டளைய…

  21. யாழ். குடாவின் கொடூர மனித அவலம் குறித்து சி. இளம்பரிதி விளக்கம் [சனிக்கிழமை, 4 நவம்பர் 2006, 07:04 ஈழம்] [ந.ரகுராம்] யாழ்ப்பாணத்தின் கொடூர மனித அவலங்கள் குறித்து யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி விளக்கம் அளித்துள்ளார். ஐரோப்பாவிலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரிரிஎன்) இடம்பெற்ற "வாராந்த அரசியல் கண்ணோட்டம்" நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு: யாழ். குடாநாட்டில் தற்போது 6 இலட்சத்து 25 ஆயிரம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் 144015 சதுர கிலோ மீற்றரில் எங்கள் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டு முழுமையாக சிறிலங்கா இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டுள்ளனர். உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில்…

  22. 9 பாதையை திறக்க வலியுறுத்துக-மறுத்தால் பொருட்களை அனுப்புக: இந்தியாவுக்கு இராமதாஸ் வேண்டுகோள் யாழ். ஏ-9 பாதையை திறக்க சிறிலங்காவை இந்திய வலியுறுத்த வேண்டும் என்றும் பாதை திறக்க மறுத்தால் 6 இலட்சம் ஈழத் தமிழர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை இந்திய அரசாங்கம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்- அங்கே அமைதி ஏற்படும் என்று உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்இ ஜெனீவாவில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழர்கள் அனைவருக்கும் அது …

  23. "வடக்கு - கிழக்கில், கடல்-வான்-தரை தாக்குதல் நடத்துவோம்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க" இது புதினத்தில் வந்த ஒரு செய்தி. "தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் செய்வது மட்டுமே சரியானது என்று நினைக்கின்றார். ஜனநாயக நாடொன்றை, ஆயுதங்களால் மிரட்டுகின்றது விடுதலைப் புலிகள் அமைப்பு. இந்த நிலைமை நீடிப்பதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்க முடியாது" ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு கூறினாரா? புதினம் தமிழீழ தேசியத்தையும் விடுதலைப் புலிகளையும் விரும்பும் தமிழர்களை தாஜா பண்ணுவதற்காக செய்திகளைத் திரிபுபடுத்தியும் அழகாகச் சோடித்தும் எழுதிவருவதற்கு இது ஒரு உதாரணம். அப்படி அவர் கூறியிருந்தால் தமிழீழத் தேசியத் தலைவராக மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவர் ஏற்றுக்கொண்டாரென்பதா அர்…

    • 10 replies
    • 2.4k views
  24. GoSL will attack Northeast over land, sea, air- Wickremenayake [TamilNet, Friday, 03 November 2006, 10:31 GMT] The Prime Minister of Sri Lanka, Ratnasiri Wickremanayake, said that his government has planned to launch offensives on the Tamil north and east provinces by land, sea and air, while speaking at a function held Friday at 11:00 a.m at the Prime Minister's office to announce financial assistance to the children of soldiers affected by the war, sources in Colombo said. Ratnasiri Wickremanayake, Sri Lankan Prime Minister "Many ask why we have not begun military offensives against the Tigers and we said that we have been patient for long," said …

  25. புதைகுழிக்குள் மேல் நின்று அமைதி மற்றும் அரசியல் பேச்சுக்களை மேற்கொள்ள முடியாது: க.வே.பாலகுமாரன் புதைகுழிக்குள் மேல் நின்று அமைதிப் பேச்சுக்களையும் அரசியல் பேச்சுக்களையும் மேற்கொள்ள முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.11.06) ஒளிபரப்பாகிய "நிலவரம்" நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு: பேச்சுவார்த்தையை 2 வகைகளாக பிரிக்கலாம். ஒரு பிரச்சனையின் தொடக்க கட்டத்திலேயே அது முனைப்படையும் போது அதனை அழிக்க அல்லது தனிமைப்படுத்த திட்டமிட்ட வகையிலே பேச்சுக்கள் நடக்கும். உதாரணமாக திம்பு பேச்சுவார்த்தை. அதற்கு அப்பால் போராடும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.