ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
பிபிசி உலக சேவையின் இரவு செய்தியில் முக்கிய விடையமாக இலங்கை விவகாரம் ஆராயப்பட்டது. Today's BBC World News night headline is Srilanka's conflict. EU's failure in banning 1 party to the ceasfire.
-
- 3 replies
- 2.4k views
-
-
"சம்பூர்" புலிகளின் பாரிய பலத்துக்கு அஞ்சியே நடவடிக்கை: சிறிலங்கா இராணுவம் சிறிலங்காவின் இராணுவ-பொருளாதாரத்தை நிலை குலையவைக்கும் பலம் "சம்பூர்" விடுதலைப் புலிகளுக்கு இருந்தமையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா சமாதான செயலக இணையத்தளத்தில் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி விவரம்: வடபகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத ஆதரவை திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை மற்றும் அதற்கு அருகிலுள்ள விமானப் படைத்தளம் ஆகியவை வழங்குகின்றன. 2006 ஆகஸ்ட் 01 ஆம் நாள் சம்பூரிலிருந்து பலமுறை பீரங்கி வேட்டுக்களைத் தீர்ப்பதன் மூலம் கடற்படைத் தளத்திலுள்ள கட்டடங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சேதம் …
-
- 3 replies
- 1.6k views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19477 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19472 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19471 http://www.eelampage.com/?cn=28649 http://www.eelampage.com/?cn=28642 http://www.tamilcanadian.com/page.php?cat=546&id=4351
-
- 5 replies
- 3.2k views
-
-
அனுராதபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையின் பேரூந்து சேதமடைந்துள்ளது. மதவாச்சியிலிருந்து அனுராதபுரத்துக்கு 20 சிறிலங்கா காவல்துறையினருடன் சென்ற பேரூந்து இக்கிரிகொல்லாவ என்ற இடத்தில் நேற்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் கிளைமோரில் சிக்கியது. வீதியோர மரம் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த கிளைமோர் பேரூந்தை இலக்கு வைத்து இயக்கப்பட்டது. இருப்பினும் பேரூந்துக்கு சிறிதளவே சேதமேற்பட்டது. இதில் எவருக்கும் காயமேற்படவில்லை. இதனையடுத்து சம்பவ இடத்தில் பெருந்தொகையான இராணுவத்தினரும் சிறிலங்கா காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். அனுராதபுரம் மற்றும் மதவாச்சிப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் நடத்தியோர் என…
-
- 1 reply
- 1.1k views
-
-
இனப்பிரச்சனைக்கான இறுதித் தொடர்பிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு அறிவிக்கப்படவில்லை. சுதந்திரக் கட்சியின் 55 ஆம் ஆண்டு மாநாட்டில் இறுத் தீர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும் கடைசி நிமிடத்தில் அம்முடிவு ஒத்திவைக்கப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். இது தொடர்பில் விவாதிக்க சுதந்திரக் கட்சியில் துணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுவின் முடிவுக்கமைய இறுதித் தீர்வு தொடர்பான நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றுத் திரும்பிய முன்னர் இறுதித் தீர்வு தொடர்பான நிலைப்பாடு அறிவிக்கப்படலாம் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர். http://www.eelampage.com/?c…
-
- 0 replies
- 842 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்குத் தலைவணங்க முடியாது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆவது வருட மாநாட்டில் அவர் பேசியதாவது: ஒருபுறம் எமது தாயகத்தை பிளவுபடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர். மறுபுறத்தில் நாம் புதிய சிறிலங்காவை கட்டியெழுப்ப முயற்சிக்கிறோம். அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் நாம் தலைவணங்க மாட்டோம். தற்போது கூட விடுதலைப் புலிகளுடன் நாம் யுத்தம் நடத்தவில்லை. எமது பாதுகாப்புக்கான பதில் தாக்குதல் நடவடிக்கை. எமது இலக்கானது புதிய சிறிலங்காவைக் கட்டியெழுப்புதல்தான். எதிரிகளிடமிருந்து மக்களுக்காக சம்பூரைக் காப்பாறியிருக்கிறோம். சம்பூர் இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்ட…
-
- 0 replies
- 955 views
-
-
தப்பி பிழைத்த கலங்களை தகர்க்க காத்திருக்கும் கடற்ப்புலிகள்..... அன்மையில் தாளையடியில் நடந்த கடற் சமரின் போது புலிகள் நினைத்த இலக்கு சரியான முறையில் நிறைவேறவில்லை என்றே தெரிகிறது. . 5 கடற் கரும்புலிகள் அந்த சமரின் போது வீர காவியமானர்கள் இத்தனை தொகையில் அவர்கள் இறந்தார்கள என்றால் அது பாரிய கல அழிப்பு நடவடிக்கையாத் தான் இருந்திருக்கும் ஆனால் இங்கோ நிலமை சற்று திசை மாறி இருக்கிறதை ஊகிக்க முடிகிறது . எந்த கலத்தின் மீது குறி வைத்தார்களோ அந்த கலம் அங்கு தப்பியாயிற்று இல்லை எனின் அந்த கலங்கள் அந்த நேரத்தில் அங்கு இல்லை என்பதாகிறது . சிறிலங்கா கடற்ப்படையின் வளங்களை தொடராய் தாக்கி அழித்து அதன் பலத்தை குறைப்பது . யாழ் குடாவிற்க்கான விந…
-
- 10 replies
- 3.7k views
-
-
சகோதரபடுகொலைகளை கண்டிக்கும் தமிழ் நண்பர்க்கு சமர்ப்பணம். தமிழ்ஈழ விடுதலைக்காய் புறப்பட்ட எத்தனையோ இளைஞர்கள் போராட்ட பாதையில் இருந்து புறம் தள்ளபட்ட 1984 தொடக்கம் 1986 வரையிலான காலகட்டங்கள் மிகவும் வேதனைக்குரியவை. மேல்மட்ட தலைவர்களின் தவறான முடிவுகளினாலோ அல்லது அவர்களினால் சொல்லபடும் சகோதர படுகொலையை தவிர்ப்போம் என்ற கருத்துக்கு அமையவோ பெரும் எண்ணிக்கையான வீரமறவர்கள் தமிழ்ஈழ மண்ணை விட்டு விலகி சென்றார்கள். தலைவர்களின் எதிர்பார்ப்புகள் எங்களை போன்ற சாதரண போராளிகளுக்கு விளங்காது. விளங்கபோவதும் இல்லை. எனக்கு இப்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போது எங்கள் இணையதளங்களை வாசிக்கும் போது பெரும் சந்தேகம் வருகிறது. எமது எஞ்சிய தலைவர்கள் விலை போய்விட்டார்களா??? அல்…
-
- 2 replies
- 1.6k views
-
-
Monday, 04 September 2006 தலைப்புச் செய்தி. வடமராட்சியின் துன்னாலை கலிகை சந்தி யாக்கரு மற்றும் கரவட்டி பகுதிகளை உள்ளடக்கியதாக நேற்று பிற்பகல் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றிணை படைத்தரப்பு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான இந்த தேடுதல் நடவடிக்கை மாலை 6 வரை நீடித்துள்ளது. சுமார் 600 க்கும் அதிகமான இளைஞர்கள் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த தேடுதல் நடவடிக்கையின் போது துன்னாலை சோந்த 26 வயதான ஆனந்த மூர்த்தி சத்திய சீலன் என்ற இளைஞர் விசாரணைகளுக்கென தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை கோப்பாய் பகுதியில் நேற்று மாலை வர்த்தகர் ஒ…
-
- 0 replies
- 1.1k views
-
-
''புலிகளின் பொறிக்குள் மாட்டிய சிங்கள அரசு''....!!! இலங்கை அரசதிபர் இன்று நடந்த கூட்டத்தில் சம்புரை தமது வீர படைகள் தம்மகப் படுத்தியுள்ளனர் என பெருமிதத்தோடு பாராட்டி தனது மகிழ்ச்சி களிப்பை களித்துள்ளார் . ஆனால் விடுதலைப் புலிகள் தமது படைகளிற்க்கு ஏற்ப்படும் இழப்பை குறைத்து அவர்கள் விலகி உள்ளார்கள் என ஊடகங்கள் சில ஊளையிட்டுள்ளன . ஆனால் நிலமை அதுவல்ல என தெரிகிறது . பாரிய படை எடுத்து வரும் படைகளை உள் நுழைய விட்டு தமக்கு சாதகமான பகுதியில் வைத்து தாக்கு என தேசிய தலைவரின் வரிகள் நினைவுக்கு வருகிறது . இதற்க்கு பல உதரணங்களை காணலம் யாழ் நகரை விட்டு புலிகள் விலகி முல்லை மீது நடாத்தி பாய்ச்சல் அதையடுத்து சத்ஜெய இரணுவ நடவடிக்கை தடுப்பு தகர்ப்பி…
-
- 4 replies
- 2.2k views
-
-
அல்லைப்பிட்டி பகுதி வீடு ஒன்றினுள் உருக்குலைந்த நிலையில் சடலங்கள். அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் மனித சடலங்கள் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சடலங்களில் பெண்களின் சடலங்களும் இருப்பதாகவும் சடலங்களில் துப்பாக்கிச் சுூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் தெரியவருகிறது. உருக்குலைந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு சிறிலங்காப் படையினர் அனுமதி மறுத்து வருவதாகவும் அல்லைப்பிட்டி பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ் செயலகத்தில் முறைப்பாடுகளைப் பொதுமக்கள் பதிவு செய்த போதும் மனித உரிமை பணியாளர்களை சம்பவ இடத்திற்குச் சென்று பார…
-
- 1 reply
- 911 views
-
-
நாகர்கோவில் பகுதியில் படையினரின் ஆக்கிரமிப்பு நகர்வு முறியடிப்பு. [திங்கட்கிழமை, 4 செப்ரெம்பர் 2006, 21:35 தமிழீழம்] [கௌஷிகன்] நாகர்கோவில் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக நேற்று மாலையும் இன்று காலை விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி எறிகணை வீச்சுக்களை நடத்தியவாறு முன்னேற முயற்ற சிறீலங்காப் படையினரை வழிமறித்து விடுதலைப் புலிகளின் பேராளிகள் களமாடி வருதோடு முறியடிப்புப் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற உக்கிர மோதல்களில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பலாலி மருத்துமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தியோக…
-
- 0 replies
- 1.1k views
-
-
திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும் சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்டைதீவில் அழிப்புச் சமரினைத் தொடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பது…
-
- 1 reply
- 1.2k views
-
-
நிலை குலையும் பலாலி யின். உரு மாறும் கோலம்.....??? வடபிராந்திய போர் முனையின் கட்டளை தாய் தலைமையகமாய் விளங்கும் பலாலி படைத்தளத்தில் விடுதலைப் புலிகள் அன்மை காலமாக பாரிய கனரக ஆட்லெறி பீரங்கிகள் சகிதம் தொடர் இடைவிடாத தாக்குதலை தொடுத்த வண்ணம் முள்ளனர். இதையடுத்து அந்த படை முகாமின் தொடர்புகள் இராணுவ கட்டமைப்பு அதன் பாதுகாப்பு விநியோகம் என்ற பல கட்டு மானங்கள் சிதைந்தன. அந்த படைகளின் போரிடும் மனோ நிலையும் உளவியல் hPதியில் படு மோசமாக பாதிப்புக்குள்ளாகி இருந்தது.. குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஏக கால விமான தாக்குதலால் நிலைகுலைந்த படைகள் தமது தாக்குதல் திறன் முறிவிடந்தது கண்டு அச்சத்தில் பீதியில் பதற்றத்தில் கதி கலங்கி போயிருந்தனர். தமது இராணுவத…
-
- 15 replies
- 4.5k views
-
-
வவுணதீவுப் படைமுகாமிலிருந்து முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப்புலிகள் முறியடிப்பு தாக்குதல்! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு படைமுகாமிலிருந்து விடு தலைப்புலிகளின் நிர்வாக பகுதிக்குள் முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்தியதையடுத்து படையினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு 12.30 மணியளவில் வவுணதீவு படை முகா மிலிருந்து படையினர் இந்த நகர்வை மேற்கொள்ள முயன்றனர். செறிவான ஆட்லறி தாக்குதலின் உதவியுடன் கவச வாகனங்கள் சகிதம் நகர்வை மேற்கொள்ள முனைந்த படையினர் மீதே விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்குமிடையில் மோதல் இடம் பெற்றதுடன் ஆட்லறி தாக்குதல்கள் நேற்று அதிகாலை வரை இடம் பெற்றது. படையினர் மேற்கொண்ட ஆட்லற…
-
- 3 replies
- 1.2k views
-
-
திருகோணமலை மூதூர் கிழக்கு சம்பூரை ஆக்கிரமிக்கும் சிறிலங்கா இராணுவத்தின் போர்ப்பிரகடன நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக்குழு ஏன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவருக்கு சி.எழிலன் இன்று திங்கட்கிழமை அனுப்பிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போர்நிறுத்தம் பற்றிய எந்த அக்கறையும் இன்றி அதனைப் புறக்கணித்த சிறிலங்கா அரசு, போர்ப்பிரகடனமாக சம்பூரை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை கடந்த 28 ஆம் நாள் தொடங்கியது. சம்பூரை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த நிலையில் அரசுத்தரப்பு மகிழ்ச்சியாக இதனைக் கொண்டாட உள்ளதாக அறிவ…
-
- 6 replies
- 1.6k views
-
-
திங்கள் 04-09-2006 20:06 மணி தமிழீழம் [சிறீதரன்] . அல்லைப்பிட்டியில் மீண்டுமொரு தடைவை சிறீலங்கா கடற்படையினரால் மனிதப் படுகொலை இடம்பெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினுள் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் மனித சடலங்கள் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச் சடலங்களில் பெண்களின் சடலங்களும் இருப்பதாகவும் சடலங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் தென்படுவதாகவும் தெரியவருகிறது. உருக்குலைந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு சிறீலங்காப் படைகள் அனுமதி மறுத்து வருவதாகவும் அல்லைப்பிட்டி பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சிறீலங்கா மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ் செயலகத்தில் முறைப்ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
திங்கள் 04-09-2006 20:13 மணி தமிழீழம் [சிறீதரன்] நாகர்கோவில் பகுதியில் படையினரின் ஆக்கிரமிப்பு நகர்வு முறியடிப்பு. நாகர்கோவில் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக நேற்று மாலையும் இன்று காலை விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி எறிகணை வீச்சுக்களை நடத்தியவாறு முன்னேற முயற்ற சிறீலங்காப் படையினரை வழிமறித்து விடுதலைப் புலிகளின் பேராளிகள் களமாடி வருதோடு முறியடிப்புப் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற உக்கிர மோதல்களில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பலாலி மருத்துமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தியோக…
-
- 0 replies
- 716 views
-
-
ஸ்ரீலங்காவில் ஆட்சி செய்யும் அரசாங்கம் சிங்கள அரசாங்கம் அல்ல. அனைத்து ஸ்ரீலங்கா நாட்டினர்களினதும் அரசாங்கம் என்பதையும் தற்போது அரசாங்கம் தொடுத்திருக்கும் யுத்தம் புலிகள் அமைப்புக்கு எதிரானதே அன்றி தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்பதையும் இந்திய அரசாங்கத்துக்கும் தமிழ்நாடு மாநில அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஷ்ரீலங்கா அரசு தரப்பு நிரூபிக்க வேண்டியதே தற்போதுள்ள அவசரமான தேவையாகும். இதற்காக அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள நிலைப்பாட்டில் உடனடியானதும் முக்கியமானதுமான பல மாற்றங்களைச் செய்யவேண்டும். ஆளும் அரசுக்கு வெளியேயுள்ள சிறுபான்மை மக்களின் ஜனநாயக கட்சிகள், அமைப்புகளை கூடுதலாக அரசாங்கத்துடன் சேர்த்துக் கொள்வது மேற்குறிப்பிடப்பட்டதும் அ…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் ஊடகங்களின் முரண்பட்ட செய்திகள்! ஏன்? கடந்த சில நாட்களாக, குறிப்பாக இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பின் புலத்திலிருந்து மட்டுமல்ல களத்திலிருந்தும் வெளிவரும் இணைய ஊடகங்களில் சில முரண்பாடான செய்திகள் வெளிவருவதையும், சில திரிக்கப்பட்ட செய்திகளாக இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இவைகள் ஏன் ஏற்படுகின்றன? தவிர்க்கப்பட முடியாதவைகளா? உதாரணத்துக்கு நாம் வாழும் புலத்திலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பல பத்திரிகைகள், செய்தி இணைய ஊடகங்கள் வெளிவருகின்றன. அவைகள் குறிப்பிட்ட ஒரு ஈராக்கில் நடைபெற்ற சம்பவத்தை வெளியிடுகின்றதென்றால், இங்குள்ள அத்தனை ஊடகங்களும் ஒரே மாதிரியாக அந்தச் செய்தியை…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஸ்ரீலங்கா அரசுக்கும் புலிகள் அமைப்புக்குமிடையே தீவிர யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வழமையாக யுத்த ஆயுதங்கள், உபகரணங்களை ஸ்ரீலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கிவந்தபோதும், ஸ்ரீலங்கா அரசாங்கம் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளைக் கைவிட்டு, யுத்தம் மூலமான தீர்வை மட்டுமே நாடி நிற்பது தவறான அணுகுமுறை என்ற நிலைப்பாட்டை அண்மையில் வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க அரசு மேற்படி யுத்த ஆயுத உதவிகளை ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்காதிருக்கும்படி பாகிஸ்தான் மீது இராஜதந்திர அழுத்தத்தை பிரயோகித்துள்ளது. இவ்வாறு அமெரிக்க தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையிலும் அத்துடன் பாகிஸ்தான் அரசுக்கு யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை அமெரிக்க அரசாங்கமே …
-
- 1 reply
- 968 views
-
-
தன்னை யார் கடத்தினார்கள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு யார் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்ற உண்மையை குருபரன் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் இராணுவ புலனாய்வு பிரிவினர் குருபரனை செவ்வாய்கிழமை கடத்தி சென்று தடுத்து வைத்திருந்த போது என்ன நடந்தது யார் யார் குருபரனை சந்தித்தார்கள் என்ற விபரங்களை நிதர்சனம் விரைவில் வெளியிடும். http://www.nitharsanam.com/2006/08/31/50617.php
-
- 84 replies
- 13k views
-
-
சிறீலங்காவின் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த தமிழ் மனித நேய அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி சிறீலங்கா அரசின் உடனடி முடக்க அறிவிப்பின் கீழ் ரகசியமாக முடக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அரச வங்கியில் இருந்து பணத்தை மீளப்பெற முயன்ற போது இது தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகளின் மீதான அனைத்துலகத் தடைகளின் பின்னர் சிறீலங்கா அரசு தமிழர் தரப்பின் மீது சகட்டுமேனிக்கு இராணுவ மற்றும் இதர இன அழிப்பு நடவடிக்கைகளை முடிக்கி விட்டிருக்கும் நிலையில்..வெறும் வெற்றுக் கோசங்களும் அறிக்கைகளும் சிறீலங்கா அரசை அதன் செயற்பாடுகளின் இருந்து கட்டுப்படுத்தப் போவதில்லை. சிறீலங்கா அரசின் பொருளாத்தாரத்தை சிதைத்து அதன் இராணுவ வலிமையைத் தகர்த்து அதனை உறைய வைக்க வேண்டிய நடவடிக…
-
- 5 replies
- 2.1k views
-
-
தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளில் மோதல் யாழ். தென்மராட்சி போர் முன்னரங்கப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளிற்குமிடையே ஒரு மணிநேரத்திற்கு மேலாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மோதல்களைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி வரணியில் அமைந்துள்ள சிங்களப் படைகளின் படைத்தளத்திலிருந்து உக்கிரமான ஆட்டிலறித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், சிறீலங்கா வான்படைக்குச் சொந்தமான உலங்கு வானு}ர்திகளும் அப்பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 1.3k views
-
-
ஞாயிறு 03-09-2006 15:49 மணி தமிழீழம் [மயூரன்] பாகிஸ்தான் விமானிகள் எங்களிடம் இல்லை சிறீலங்கா அரசு இந்தியாவுக்கு தெரிவிப்பு விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தானிய விமானிகளை ஈபடுத்தவில்லையென இந்திய அரசாங்கத்திடம் இலங்கை மிக உறுதிபடத் தெரிவித்துள்ளது. அதேசமயம், துறைமுக நகரமான திருமலையை அண்மித்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தை கைப்பற்றுவதில் கொழும்பு உறுதியான தீர்மானத்துடன் இருப்பதாகவும் டில்லிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உயர்மட்ட ஆலோசகரும் அவரின் சகோதரருமாகிய பசில் ராஜபக்ஸ, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் உயர் …
-
- 0 replies
- 767 views
-