ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143492 topics in this forum
-
வியாழன் 17-08-2006 18:22 மணி தமிழீழம் [சிறீதரன்] பலாலியில் உலங்கு வானூர்த்தி ஒன்று காணாமல் போயுள்ளது. யாழ் கூட்டுப்படைத் தளமான பலாலி தளத்தினுள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ படையணி ஒன்று நேற்றிரவு தாக்குதலைத் தொடுத்ததாக யாழ் செய்திகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணிகளால் பலாலி இராணுவ தளத்தின் முக்கிய நிலைகள் தாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அங்கிருந்த இரு உலங்கு வானூர்த்திகள் மேலெழுந்த போது ஒரு உலங்கு வானூர்த்தி காணாமல் போயுள்ளது. இரு உலங்கு வானூர்த்திகளும் இரு தடவைகள் வட்டமிட்டு பறந்ததாகவும் அதன் பின்னரே ஒரு உலங்கு வானூர்த்தி காணாமல் போயுள்ளது. காணாமல் போன உலங்கு வானூர்த்தி எங்காவது வெடித்துச் சிதறியிருக்கலாம் என நம்பப்…
-
- 5 replies
- 3.2k views
-
-
கொல்லப்பட்ட புலிகளின் உடல்களும்..கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும். படம் லங்காறுத் எனும் இராணுவ இணையத்தளம். யாழில் நடந்த சண்டைகளில் இதுவரை தாங்கள் 700 புலிகளைக் கொன்று..சகல தாக்குதல்களையும் முறியடித்துள்ளதாகக் கூறும் படைத்தரப்பு..புலிகளின் 80 உடல்களையும் பெருந்தொகுதி ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக தங்கள் இணையத்தளங்களூடும் ஊடகங்களூடும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்..! இவை குறித்த உண்மை நிலைப்பாடுகளை மக்கள் அறியக்கூடியதாக இல்லை..! :roll: :?: :idea:
-
- 20 replies
- 7.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதிகளுக்கு செல்லும் நீர்வழி போக்குவரத்து வழிகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வகையில் மண்முனைத்துறை, அம்பிலாந்துறை நீர்வழிப் பாதைகள் என்பனவும் இன்று மூடப்பட்டுள்ளன. இதனால் மட்டககளப்பு அரச கட்டுபாட்டு பகுதிகளில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கான வழிகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே பட்டடிருப்பு பாலம் நேற்று பகலும் அதற்கு முன்னதாக ஏனைய தரைவழிப் பாதைகளும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் பட்டிருப்பு பாலத்தின் ஊடாக களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு செல்ல மக்கள் இன்று அனுமதிக்கப்படாததால் …
-
- 2 replies
- 1.6k views
-
-
கொழும்பில் இன்று யுத்தத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அமைதிப்பேரணியை குழப்ப முயன்ற பௌத்த பிக்குகள் பேரணில் கலந்து கொண்டவர்களிடம் கை கலப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமாதான ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியை இனவாத பௌத்த பிக்குகள் சிலரே குழப்ப முயற்சித்ததாகவும், இவர்கள் ஜாதிக கெல உறுமயவை சார்ந்தவர்கள் எனவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கினறன. அமைதிப் பேரணிக்கு எதிராக கோஷமிட்ட பிக்குகள் உங்கள் ஆர்ப்பாட்டத்தை கிளிநொச்சியில் நடத்துங்கள் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர். இதன்போது கோபம் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிக்குகளின் கைகளில் இருந்த பதாதைகளை பறித்து தீயிட்டு கொழுத்தியுள்ளதுடன் அவர்களை அங்கிருந்து விரட்டியுமுள்ளனர். athirvu.com
-
- 17 replies
- 2.9k views
-
-
திருகோணமலைலிருந்து இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் வெளியேறியுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை திருகோணமலை மாவட்ட கண்காணிப்புக் குழுவின் அதிகாரி தலையிலான 6 கொண்ட குழுவினர் கொழும்பு சென்றுள்ளனர். சிறீலங்கா படையினரின் வலிந்த தாக்குதல்களை அடுத்து அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலையில் இக்குழுவினர் இன்று தரைவழியாக கொழும்பு சென்றடைந்துள்ளனர். pathivu.com
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் நேற்றிரவு புதன்கிழமை 9.30 மணியளவில் கருணா குழுவினர் இளம் குடும்பத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டத்தில் ஒண்டரை வயது சிறுவன் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு கரவெட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் இராணுவ கட்டுப்பாட்டியில் உள்ள மாவடிவேம்பு 1ல் அமைந்துள்ள வீட்டியில் இருந்த போது வீட்டினுள் புகுந்து இந்த மிருகத்தனமான படுகொலைகளை மேற்கொண்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.ஒண்டரை வயதுடைய குழந்தை நிமலன் நிலுக்ஜன் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளார். மற்றும் அவரின் தாய் நிமலன் ஜெயமலர் வயது 19 தந்தை கந்தையா நிமலன் வயது 22 ஆகிய இருவரும் படுகாயங்களுக்குள்ளாகி ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட பின்னர் …
-
- 8 replies
- 6.2k views
-
-
கொல்பிட்டியில் கருணா குழு அலுவலகம் விடுதலைப் புலிகளின் பின்ணணி உதவியுடனே திறக்கபட்டதாக அரச புலனாய்வுத்துறை எச்சரிக்கை கொல்பிட்டியில் கருணா குழுவினரின் அலுவலகம் திறக்கப்பட்டமைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரகசியத் தொடர்பு வைத்திருக்கும் ஒரு கருணா குழு முக்கியஸ்தருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இலங்கையரச புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் இலங்கை அரசு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்குத் தெரிவித்துள்ளதாவதுஇ கருணா குழுவிற்குள் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் பலமாக ஊடுருவியுள்ளனர். கருணா குழவிற்குள் தீவிரமாக செயற்படும் ஒருவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வு முக்கியஸ்தர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. அவருக்கும் …
-
- 7 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வணிகர்களிடம் ஒருவாரத்துக்குப் போதுமான உணவுப் பொருள்களே கைவசம் உள்ளதாக யாழ்ப்பாண வணிகர் கழகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சிவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று நடந்த சந்திப்பிலேயே வணிகர் கழகப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். யாழ்ப்பாண அரச அதிபர் கே.கணேஷின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய அசாதாரண சூழலில் பொருள்கள் கூடிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதுடன், அவை பதுக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அரச அதிபர் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சந்திப்பில் கலந்துகொண்ட வணிகர் கழகப் பிரதிநிதிகள், அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொருள்களைப் பதுக்கவோ, கூடுதல் விலைக்கு விற்கவோ வேண்டாம் என வர்த்தகர்களிடம் கோருவதாகத…
-
- 7 replies
- 2.8k views
-
-
மூதூர் தெற்கில் நிவாரணம் இன்றி பரிதவிக்கும் 15 ஆயிரம் தமிழ் மக்கள் மாவிலாறு நீரையும் பெறமுடியாத நிலை மூதூர் தெற்கில் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள தமிழ்க் கிராமங்களுக்கு இதுவரையும் நிவாரணங்கள் உதவிகள் கிடைக்கவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாவிலாறு அணை திறக்கப்பட்டபோது தெஹிவத்த சிங்கள கிராமத்திலுள்ள இடது கரை வாய்க்கால் அணைக்கட்டு மூடப்பட்டுள்ளமையினா“ல் மூதூர் தெற்கிலுள்ள தமிழ் கிராமங்களுக்கு நீர் கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் தெற்கிலுள்ள 13 தமிழ் கிராமங்களான மல்லிகைத்தீவு, பெரிய வெளி மணற்சேனை, இருதயபுரம், பட்டித்திடல், பாலத்தடிச்சேனை, முன்னம் போடிவெட்டை, நாராயணபுரம், பாரதிபுரம், மீன்காமம், கங்குவேலி, லிங்கபுரம், ஆதியம்…
-
- 0 replies
- 777 views
-
-
திருமலையின் வடகளமுனையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படைகளுக்கும் மத்தியில் மோதல்கள் வெடித்துள்ளன. நேற்று மாலை சாம்பல்தீவு சல்லி, நிலாவெளி ஆறாம், எட்டாம் மைல் கல் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் சிறீலங்கா படைகளின் நிலைகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து நேற்று இரவு தொடக்கம், திருமலை நகரின் வடமுனையில் உள்ள நிலாவெளி - கும்புறுப்பிட்டி வட்டகையில், சிறீலங்கா படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் எறிகணை மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கும்புறுப்பிட்டிப் பகுதியை நோக்கி, சிறீலங்கா படைகளால் கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. …
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்காவின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து ஐ.நா.வின் இனச் சிக்கலில் சிறார்கள் என்ற அமைப்பின் சிறப்பு பிரதிநிதியான ராதிகா குமாரசுவாமி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். "இனப்பிரச்ச்னையில் சிறார்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் விதமான அண்மைய அதிர்ச்சியான சம்பவங்கள் அமைந்துள்ளன" என்று அவர் கூறியுள்ளார். இலங்கையில் இருதரப்பினரும் போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். http://www.eelampage.com/?cn=28249
-
- 6 replies
- 1.5k views
-
-
செஞ்சோலை படுகொலைகள் தொடர்பான புகைப்படங்கள் தேவையாக உள்ளது (We need high quality photos for making posters to display on the meeting which is held at london from today till sunday please if anyone could get the images send me through the email krsiva@btinternet.com ) இருந்தால் தயவு செய்து உடனடியாக mail பண்ணவும்
-
- 0 replies
- 1.6k views
-
-
முகமாலை கள யதார்த்தம் என்ன? புதன்கிழமை 16 ஓகஸ்ட் 2006 20:21 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் யாழ். முகமாலை களம் குறித்து ஊடகங்கள் பலவும் பரபரப்பான விடயங்களை வெளியிட்டு வரும் நிலையில் கள யதார்த்தம் என்ன என்பது குறித்தை விவரிக்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. சிறிலங்கா இராணுவத்தினரின் அதிஉயர் தாக்குதல் பலத்துக்கு எதிராக முகமாலை களத்தில் விடுதலைப் புலிகள் மோதிக்கொண்டிருக்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் முழுமையான வலிந்த தாக்குதல் பலம் குவிக்கப்பட்டு முகமாலை களத்தில் இராணுவம் நிற்கின்றது. அதிலும் ஒரு வலிந்த தாக்குதல் தொடங்கிய சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலைத்தான் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். ஊடகங்கள் பல காட்டும் பெரும் பரபரப்புக…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 61 தமிழ் மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து திருமாவளவன் சென்னையில் நாளை உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பகுதியில் இலங்கை விமானப்படையினர் திங்கள்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் அனாதை இல்லத்தைச் சேர்ந்த 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர். மேலும், 150 சிறுமிகள் காயமடைந்தனர். அந்த இல்லத்திற்கு யுனிசெப் மற்றும் நார்வே அமைதிக் குழுவினர் செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்டனர். அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு விடுதலைப்புலிகள் பயிற்சி அளிப்பதாக இலங்கை அரசு கூறியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து சென்னையில் நாளை உண்ணாவிரதம் இருப்பதா…
-
- 0 replies
- 979 views
-
-
உங்கள் உள்ளூர் தொலைக் காட்சி நிலயத்திற்கு இதனை அனுப்புங்கள். உங்கள் உள்ளூர் தொலைக் காட்சி நிலயத்திற்கு உங்கள் பெயர் முகவரியுடன் கீழ்க் காணும் மின்னன்சலைப் பிரதி பண்ணி , இணைப்புடன் அனுப்புங்கள். தொலை பேசியில் முதலில் கதையுங்கள், பின்னர் அவர்களின் மின்னச்சலுக்கு இதனை அனுப்புங்கள். Dear Sir/Madam, Subj: A Humanitarian appeal for the broad cast of a rare video footage. Ref /A/ http://207.210.104.162/~yarl/chencholai.asf or http://www.yarl.com/media/2006/08/chencholai.html /B/ http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224 /C/ http://www.unicef.org/media/media_35336.html Please find attached to this email a link Ref /…
-
- 4 replies
- 2.5k views
-
-
யாழ். எழுதுமட்டுவாளில் புலிகள் தொடர் தாக்குதல்- இராணுவத்துக்கு பாரிய இழப்பு- 5 போராளிகள் வீரச்சாவு [புதன்கிழமை, 16 ஓகஸ்ட் 2006, 18:08 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர் தாக்குதலை நடத்திவருகின்றனர். கடந்த 24 மணிநேர சமரில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரின் கொமாண்டோ படையினர்-மற்றும் தாக்குதல் படை இராணுவத்தினர் இந்த வலிந்த தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிரான தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இதில் சிறிலங்கா இராணுவத் தரப்பில் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. களமு…
-
- 27 replies
- 7.9k views
-
-
சிறீலங்கா விமானப் படையினரின் கிபிர் விமாங்கள் இன்றும் வன்னி வான்பரப்பினுள் நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளன. இன்று மதியம் 12.40 மணியளவில் கிபிர் விமாங்கள் ஆனையிறவுப் பகுதியில் குண்டுகளை வீசியுள்ளன. தாக்குதலில் பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயடைந்தவர் கிளிநொச்சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இன்று காலை 7 மணியளவில் வன்னி வான்பரப்பில் உள்நுழைந்த கிபிர் விமானங்கள் வட்டமிட்டு நோட்டமிட்டுச் சென்றுள்ளன. pathivu.com
-
- 0 replies
- 880 views
-
-
வன்னியில் இன்றும் விமானக் குண்டு வீச்சு [புதன்கிழமை, 16 ஓகஸ்ட் 2006, 15:26 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான வன்னியில் இன்றும் சிறிலங்கா விமானப் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவிலும் பிற்பகல் 1 மணியளவிலும் வன்னி வான்பரப்பினுள் புகுந்கு இருமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளன. கடந்த திங்கட்கிழமை நடந்த விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் முல்லைத்தீவு பாடசாலை சிறுமிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்ட துயரம் ஆறுவதற்குள் மீண்டும் சிறிலங்கா விமானப் படை தொடர்ச்சியாக மீண்டும் தாக்குதலை நடத்தியி…
-
- 0 replies
- 892 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகிப்புத் தன்மையை சீண்டிப் பார்க்கும் வகையில் முல்லைத்தீவில் சிங்கள விமானப்படையினர் குண்டு வீசியுள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் கண்காணிப்பில் நிறுவப்பட்டு இயங்கி வரும் செஞ்சோலை என்ற ஆதரவற்ற பள்ளி வளாகத்தில் சிங்கள இராணுவம் குண்டு வீசியதில் 60-க்கும் மேற்பட்ட சிறுமிகள் இறந்துள்ளனர். இது பிரபாகரனின் சகிப்புத் தன்மையை சீண்டிப் பார்க்கும் செயலாகும். சிறுமிகளை படுகொலை செய்ததை விடுதலை சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த செயலை மத்திய மற்றும் தமிழக அரசு வேடிக்கை பார்க்…
-
- 7 replies
- 2k views
-
-
சிறீலங்காக படையினரின் கொலை வெறியாட்டத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் பதிலளிப்பார் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். வள்ளிபுனத்தில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.... முன்பொரு காலம் இருந்தது சிங்கள காடையர்கள் எங்களைப் பொல்லுகளாலும் தடியாலும் கத்தியாலும் தாக்கிய போது எம்மால் திருப்பித் தாக்க முடியாத காலம் ஒன்று இருந்தது. தலைவர் தலைநிமிர்ந்த பொழுது அந்த நிலமை எந்தளவு தூரம் மாறியிருக்கிறது என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு எங்கள் தலைவரிடம் எல்லாவற்றுக்கும் பதில் உண…
-
- 2 replies
- 1.5k views
-
-
அரசாங்கப் படையினர் மீது இனிமேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுமாயின் நாம் முகமாலை பகுதியில் ஊடறுத்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் முன்னோக்கி நகர்ந்து தாக்குதல்களை நடத்துவோம் என்று இராணுவப் பதில் பேச்சாளர் அத்துல ஜயவர்தன தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: அரசாங்க படையினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுமாயின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடறுத்து தாக்குதல்களை நடத்துவோம். சிறுவர்கள் பயங்கரவாதிகளாயின் நாம் என்ன செய்வது? தாக்குவதை தவிர வேறுவழியில்லை. பு…
-
- 10 replies
- 3.3k views
-
-
மனித உரிமைகளை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுத்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்த போது இதனைத் தெரிவித்தனர். இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்தும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஈடுபாட்டுடன் செயற்படுத்தவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பேச்சுக்களுக்கு திரும்பவும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் வலியுறுத்தினர். மனித உரிமைகளை மீறுவோரை சிறிலங்கா அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்றும் வன்முறைகள் கைவிடப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. "சூடான் மற்றும் ஈராக்கில்தான் சர்வதேச அரச சா…
-
- 1 reply
- 950 views
-
-
இலங்கை நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அமைச்சின் பிரதித் துணைச் செயலாளர் ஸ்டீவ் மான் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தர உள்ளார். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அரசாங்க தரப்பினருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் அமைதி முயற்சிகள் குறித்தும் அவர் விவாதிக்க உள்ளார். ஸ்டீவ் மானின் பயணத்தை அமெரிக்க தூதுவரகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்
-
- 1 reply
- 1k views
-
-
யுத்த நிறுத்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகாது என்று ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகவியலாளர்களிடம் அனுரா பிரியதர்சன யாப்பா கூறியதாவது: விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியமையால் அரச படைகள் தாக்குதல் நடத்தின. மாவிலாறு மோதலுக்கு புலிகளே பொறுப்பு. அதுவே வடமுனைக்கும் விரிவடைந்துள்ளது. அமைதிப் பேச்சுக்களிலிருந்தும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்தும் சிறிலங்கா அரசாங்கம் விலகாது என்றார் அவர்.
-
- 0 replies
- 794 views
-
-
சிறிலங்காவின் தனியார் மற்றும் அரச ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களின் நேர்காணல்கள் இடம்பெறுவதைத் தடுப்பது குறித்து மகிந்த ராஜபக்ச இன்று ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். மகிந்தவின் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரச மற்றும் அரச ஊடகங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களின் நேர்காணல் ஒலி, ஒளிபரப்பாவது நாட்டின் பாதுகாப்பு ஆபத்தானது என்று அண்மையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபையில் மகிந்தவிடம் சிறிலங்காவின் முப்படை தளபதிகள் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து இக்கூட்டத்தை மகிந்த கூட்டியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவ…
-
- 1 reply
- 1.6k views
-