ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142598 topics in this forum
-
தமிழர் தாயகத்தின் இதயமாகவும், கேந்திர நிலையமாகவும், பெருமளவு இயற்கைக் கனியவளங்கள் புதைந்து கிடக்கும் இடமாகவும் கருதப்படும் மன்னார் வளைகுடாவில் உள்ள பெற்றோலிய வளங்களை அகழ்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு முனைப்புடன் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றது. இந்தத் திட்டம் நடவடிக்கை தமிழர் தரப்பில் பெரும் சீற்றத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து தமிழர் தாயகத்தின் மூலவளத்தைச் சுரண்டி, சூறையாடி, கொள்ளையிடும் சதித் திட்டத்தை சிங்கள அரசு செயற்படுத்துவதாகத் தமிழர் தரப்புக் கருதுகின்றது. இலங்கை அரசின் இந்தச் செயற்பாடு குறித்து விடுதலைப் புலிகளின் தலைமையும் கோபமுற்றிருப்பதாகத் தெரிகின்றது. மன்னார் வளைகுடாவில் நிலத…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: ""இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என இலங்கை எம்.பி., சந்திரசேகரன் வலியுறுத்தினார். சென்னை வந்த இலங்கை எம்.பி., சந்திரசேகரன் தி.மு.க., தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதன்பின் நிருபர்களிடம் சந்திரசேகரன் கூறியதாவது: இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை தமிழர்களுடன் கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் தொடர்பு கொண்டுள்ள இந்தியாவுக்கே இப்பிரச்னையை தீர்ப்பதில் அதிக பொறுப்பு உள்ளது. எனவே இலங்கை தமிழர்களை இனியும் அந்நியராக இந்தியா கருதக் கூடாது. இலங்கை ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கோ சம்பந்தப்பட்ட ஏனையோருக்கோ தெரியா மல் திருகோணமலை நகரின் பாதுகாப்புக்கு என்ற பெயரில் விசேடமாக அனுப்பப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 24 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை யினரின் கைவரிசையே திருகோணமலையில் ஐந்து அப்பாவித் தமிழ் மாணவர்களினதும் படுகொலைகள் என இப்போது தகவல்கள் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கியிருக் கின்றன. ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவி யேற்றதும் அவரது பாதுகாப்பு ஆலோசகராக, ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த பிரமுகரும், முன்னாள் பிரதிப் பொலீஸ்மா அதிபரு மான எச்.எம். பி. டபிள்யூ. கொட்டகதெனிய நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் அவ ரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செய லாளருமான கோட்டபாய ராஜபக்ஷவும் இந்திய விஜய…
-
- 1 reply
- 1.4k views
-
-
திருமலையில் செவ்வாயன்று நடைபெறவுள்ள தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி Written by Ellalan Monday, 09 January 2006 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பொது விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி விழாவுக்கான எற்பாடுகள் யாவும் புூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் திருகோணமலையில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில் இந்த தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் வேறு, தம…
-
- 4 replies
- 1.6k views
-
-
விடுதலைப்புலிகளிடம் அண்மையில் சரணடைந்த களுவன்கேணியைச்சேர்ந்த ஞானதீபனும், அதே ஊரைச்சேர்ந்த தீபனும் இணைபிரியாத நண்பர்கள். ஞானதீபன் விடுதலைப்புலிகளில் இருந்தபோது இவருக்கு தீபன் பல உதவிகளை விடுதலைப் போராட்டத்திற்காக செய்திருந்தார். இதை பிள்ளையானும் நன்குஅறிந்திருந்தார். இதே காலப்பகுதியில் இவர் பங்குடாவெளியைச்சேர்ந்த ஒருபெண்ணை காதலித்து வந்தார். எனவே இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு தற்போதும் செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் புலனாய்வுத்துறை இவரை விசாரித்தது. பின் இவர் சகல நடவடிக்கைகளிலும் இருந்து ஒதுங்கியிருந்தார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் 3 தங்கைகளும் இருப்பதால் இவரே குடும்பத்தையும் பார்த்து வந்தார். இந்நிலையில் கறுத்தப் பாலத்தை கடந்து செல்பவர்…
-
- 5 replies
- 2.4k views
-
-
ஞாயிறு 08-01-2006 22:06 மணி தமிழீழம் [நிருபர் மாறன்] சிறீலங்கா கடற்படையினருடன் படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளோம் - கண்காணிப்புக் குழு கடற்படையினரின் ரோந்து படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.திருகோணமலை துறைமுகப்பகுதியில் நேற்று கடற்படையினரின் படகின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அதில் பயணித்த 13 கடற்படையினர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையி;ல் கடற்படையினரின் படகுகளில் பயணம் செய்வது ஆபத்தானது என்ற அடிப்படையிலேயே இந்த முடிவை மேற்கொண்டதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் தலைவர் ஹப்ருக் ஹோக்லென்ட் தெரிவித்துள்ளார். கடற்கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் தமது குழுவினர் தனியான படகில் தமது இலச்சினை…
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: ராமேசுவரத்தில் கடற்படை ரோந்து தீவிரம் ராமேசுவரம், ஜன. 8- இலங்கையில் விடுதலைப்புலிகள் தமிழ் ஈழம் கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனால் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே நார்வே நாடு சமரச முயற்சியை மேற்கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றது. ஆனாலும் விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவத்தினர் இடையே அவ்வப்போது சண்டைகள் நடைபெற்று வருகிறது. தற்போது இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு ராணுவத் தினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வருகிறது. க…
-
- 0 replies
- 1.2k views
-
-
போர் நிறுத்தம் முறிந்து விட்டதா? * சொல்ஹெய்மின் வருகைக்கு முன் எறியப்படவுள்ள குண்டுகளும் தொடரப் போகும் அச்சமும்! போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதா? போர் தொடங்கி விட்டதாகக் கருதப்படுவதால் போர்நிறுத்த உடன்பாடு குறித்து எவரும் சிந்திக்கப்போவதில்லை. அண்மைக் காலமாக நடைபெற்று வந்த சம்பவங்களெல்லாம் இந்த உடன்பாட்டை முற்று முழுதாகக் கேள்விக் குறியாக்கி வந்த நிலையில் தற்போது இந்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இதன் உச்சக் கட்டமாக, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதலும் நேற்று அதிகாலை திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு வெளியே அதிவேக டோரா படகொன்று அழிக்கப்பட்ட தாக்குதலும் அமை…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர் தொடர்பான தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகின்றன தமிழகக் கட்சிகள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவிப்பு ஈழத்தமிழர் போராட்டம் புதுவடிவம் எடுத்திருக்கின்ற இந்நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகி வருகின்றோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுடனான சந்திப்பின்போதே டாக்டர் ராமதாஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் போராட்டத்தில் அக்கறை கொண்டுள்ள தமிழக அமைப்புகள் மட்டுமல்லாது, முழு இந்தியாவிலும் உள்ள சகல அமைப்புகளையும் அணிதிரட்ட வேண்டிய கட்டாயத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். இலங்கை இனப்பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு என்ற எல்ல…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்திய அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வருட இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது அவருடன் சென்ற தூதுக்குழுவில் விடுதலைப் புலிகளுக்கு தகவல் கொடுக்கும் ஒருவரும் இடம் பெற்றிருந்ததாகவும் அதன் காரணத்தினால் ஜனாதிபதியின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிரு
-
- 0 replies
- 1.3k views
-
-
கோப்பாயில் கைக்குண்டுத் தாக்குதல்: 2 படையினர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 18:36 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்] யாழ். கோப்பாயில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 2 சிறிலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர். கோப்பாயில் யாழ். - பருத்தித்துறை வீதியில் உள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் சார் அலுவலகம் அருகே சுற்றுக்காவல் பணியில் நின்று கொண்டிருந்த படையினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 2 படையினர் படுகாயமடைந்தனர். இருவரும் பலாலி இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக யாழ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கரை உப்புக்காற்றில் கரைந்து போன எதிர்காலம்... கடற்கரை உப்புக்காற்றில் கரைந்து போன எதிர்காலம்... மாணவர் சமூகம் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி தொடருகின்றது. "சகோதரர்களே! உங்களின் அகால மரணம் எங்களுக்கு மனரணம் அந்த இறுதித் துடிப்பு சிந்திய உதிரத்துளி சல்லடையாகிப் போன கபால ஓடுகள் கடற்கரைக் காற்றில் கரைந்து போன எதிர்காலம் மறக்காது இவற்றை எங்கள் திருமலை சமூகம். 2006 ஆம் ஆண்டு பிறந்து இரண்டாம்நாள் மாலை வேளையில்இ வழமை போன்று கடற்கரையோரக் காந்தி சிலை அருகே கூடுகின்றார்கள். கலந்துரையாடுகின்றார்கள். சிரித்துப் பேசி மகிழ்கின்றார்கள். பேரினவாத வடிவில் யமன் வந்தான். முதலில் மூன்று சக்கரங்களில்இ நான்கு சக்கரங்களில். …
-
- 2 replies
- 1k views
-
-
இராணுவத்தின் கொடூரப்பிடிக்குள் நசியுண்டு தினமும் பிணவாடையிலேயே கண்விழிக்கும் தமிழர் தாயகம், தனக்காக குரல்கொடுக்க எவருமில்லையா என்ற ஏக்கத்துடனுள்ளபோது, தாய்த் தமிழகத்தின் அண்மைய அரவணைப்பு சற்று ஆறுதலடைவேயே செய்துள்ளது. இங்கு எம்மீது பேரிடியாய் பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற அராஜங்களுக்கான எதிர்ப்புகள் அல்லது இரத்தக்கொதிப்பு தற்போது தாய் நாட்டிலிருந்து உடனுக்குடனேயே வரத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, கடந்த திங்கள் இரவு திருகோணமலையில் 5 அப்பாவி மாணவர்களை படைகளால் நடுத்தெருவில் படுக்கவைத்து ஈவிரக்கமின்றி காதுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற கண்டன பேரணியிலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது. …
-
- 3 replies
- 1.7k views
-
-
இனவெறிப்படையின் கொட்டத்தை அடக்கப் புயலாகப் புறப்படுங்கள் -மட்டு.மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை- Sunday, January 08 - 06:29:45 (நமது நிருபர்) உங்களது கைகளுக்குள் கை;குண்டையோ அல்லது துப்பாக்கி யையோ திணித்து விட்டு புலியெனக் கூற முற்படும் சிங்கள நயவஞ்சக இனவெறிப்படைகளின் கொட்டத்தை அடக்க புயலாகப் புறப்படுங்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டப் பொங்கி எழும் மக்கள் படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் இளைஞர்களே! யுவதிகளே!! சற்றுச் சிந்தியுங்கள்!!! என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டு ள்ள அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது:- அண்மைக் காலமாக தமிழர்கள் மீதான தாக்குதலையும், படுகொலையையும் சிங்கள இனவெறிப் படைகள் தமிழர் தாயக மெங்கும் தி…
-
- 4 replies
- 1.7k views
-
-
தலாய்லாமாவை அழைப்பதைத் தவிருங்கள்: மகிந்த வேண்டுகோள்- புத்த ஜயந்தி குழு நிராகரிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 05:38 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கைக்கு திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை அழைப்பதைத் தவிர்க்குமாறு சிறிலங்காவின் புத்த ஜயந்தி குழுவினருக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மகிந்தவின் தூதுவர், புத்த ஜயந்தி 2550- விழாக் குழுவினருடன் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளார். தலாய்லாமாவை அழைப்பதன் மூலம் சீனாவுக்கும் சிறிலங்காவுக்குமான உறவு பாதிக்கும் என்று மகிந்தவின் தூதுவர் விளக்கியுள்ளார். ஆனால் மகிந்த ராஜபக்சவினது வேண்டுகோளை புத்த ஜயந்தி குழுவினர் நிராகரித்துள்ளனர். தலாய்லாமாவை அழைப்பதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
சோல்ஹம்முடனான சந்திப்பை அடுத்து புலிகளின் முக்கிய அறிவிப்பு வெளிவரும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்மின் இலங்கை விஜயத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள்கூறுகின்றன. இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டத்தை ஜனாதிபதி விரைவில் வெளியிட வேண்டுமென கடந்த மாவீரர் தின உரையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வலியுறுத்தியிருந்தபோதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இது வரை தீர்வுத்திட்டம் குறித்து புலிகளின் தலைமை விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கு உட்பட தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கண்ம…
-
- 0 replies
- 1.3k views
-
-
போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும்: கா.வே.பாலகுமாரன் [ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 00:51 ஈழம்] [புதினம் நிருபர்] போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று இப்போது முடிந்த முடிவாகிவிட்டது என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். வீரகேசரியின் வார வெளியீட்டுக்கு கா.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணல்: கேள்வி: அரச படைகள் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஆயுத வன்முறையால் அடக்குகின்றனர். மக்களைத் தாக்குகின்றனர். இவ்வாறான சூழலில் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பொறுமை காத்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எல்லோரின் மனங்களிலும் போர் எப்போது தொடங்குமோ என்ற அச்சத்தில் உள…
-
- 0 replies
- 1.3k views
-
-
கண் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கோரும் ஐந்து வயது கிளிநொச்சி சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தடி கண்ணில் தாக்கியதால் இடது கண்பார்வை இழந்த சிறுவனுக்கு அவசர சத்திரசிகிச்சைக்கான நிதியுதவி கோரப்பட்டுள்ளது. நாலாம் வாய்க்கால் மருதநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து வயதுடைய அருளம்பலம் நிரோஜன் என்ற சிறுவனே இடதுகண் பார்வையை இழந்துள்ளார். இடது கண் பார்வையின்மையால் வலது கண்ணும் இரவில் சிறுவனுக்குத் தெரியாமலுள்ளது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு இரண்டு இலட்சம் ரூபா உடனடியாக தேவைப்படுகிறது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கான நிதியைத் திரட்டும் பணியில் கிளிநொச்சி மாவட்ட மாற்றீடான வலுவுள்ளோர் சங்கம் ஈடுபட்டுள்ளது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு உதவி…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஒரு யுத்தம் தான் தீர்வா..? -நிலாந்தன்- ஒலி வடிவில்: http://www.tamilnaatham.com/audio/2006/jan...n/20060108.smil எல்லாச் சமாதான முயற்சிகளும் ஏதோ ஒரு வலுச்சமநிலையின் மீதே கட்டியெழுப் பப்படுகின்றன. பரஸ்பரம் இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வலுச்சம நிலையானது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெறும்போது குறிப்பிட்ட சமாதான முயற்சிகள் வெற்றிபெறுகின்றன. மாறாக சமாதானத்தில் ஈடுபடும் தரப்புக்கள் நிலவும் வலுச்சமநிலையை தமக்குச் சாதகமாக மாற்றமுடியும் என்று நம்புமாக இருந்தால் அல்லது வலுச்சமநிலை தனக்குப் பாதகமாய் மாறிவருகிறது என்று ஏதாவது ஒரு தரப்பு அஞ்சுமாக இருந்தாலும் அந்த வலுச்சமநிலை தளம்பத்தொடங்கிவிடும். அதாவது சமாதான முயற்சிகள் ஈடாடத் தொடங்கிவிடும். பொதுவாக வலுச்சமநி…
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கியது இந்தியா!! சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்திய சிறப்பு விமானத்தின் மூலம் இந்த 4 விமானப் பாதுகாப்பு கருவிகள் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தங்களிடம் இருக்கும் ஸ்லிஸ் ரக விமானங்கள் இரண்டைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று சிறிலங்கா அஞ்சியிருந்தது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள இந்த விமானப் பாதுகாப்புக் கருவிகள் மூலம் முழு இலங்கையையும் கண்காணிக்க முடியும் என்றும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் குறித்து உடனடியாக அறிந்து கொள்வதற்கும் அவற்றை உடனடியாக அழிப்பதற்கும் உதவும் என்…
-
- 34 replies
- 5.4k views
-
-
கள உறவுகளே அவதானமாக இருங்கள் ஈழத்திலிருக்கும் உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள் தேவையில்லாத தொலைபேசி உரையடல்களை தவிர்ப்பது தற்போதய நிலமையில் அங்கு இருப்பவர்களுக்கு நல்லது............ தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்டது றோ. - உறுதிப்படுத்தியது இலங்கை அரச பாதுகாப்பு அமைச்சு. இந்தியாவிற்கு உத்தியோக புூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த மகிந்த தலைமையிலான குழுவினரின் அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் இந்தியா ஒட்டுக்கேட்டுள்ளதாக இந்திய புலனாய்வு நிறுவனங்களின் தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றது. மகிந்த குழுவினரின் தொலைபேசி அழைப்புகளை இந்திய புலனாய்வு நிறுவனம் ஒட்டுக் கேட்டதாகவும், இந்த குழுவில் பங்கு பற்றியிருந்த ஒரு தனியார் ஊடக நிறுவனத்தின் பிரதிநிதியாக சென்றவரின் தொலைபேசி…
-
- 11 replies
- 2.4k views
-
-
திருமலையில் சிறீலங்கா இராணுவத்தினர் கிளைமோர் தாக்குதல்: இரு போராளிகள் வீரச்சாவு Written by Paandiyan Saturday, 07 January 2006 இன்று அதிகாலை 2.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் ஆளுகையில் உள்ள தம்பலகாமம் பகுதிக்குள் ஊடுருவிய சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவு மேற்கொண்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்டன் சுமன் (வென்சுமின் அன்புராசா - திருமலை), லெப்டினன்ட் உமைநேசன் (பேரின்பராசா சசிதரன் - மூது}ர்) ஆகிய போராளிகளே சிறீலங்கா இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர்.
-
- 5 replies
- 1.9k views
-
-
The Eelam tamilians & Indian tamilians whoever wants India to support eelam cause can mail to Honourable Indian president Bharath Ratna Dr. A.P.J Abdul Kalam, in the site given below http://presidentofindia.nic.in/scripts/wri...topresident.jsp Since he is a Tamilian, he can understand eelam tamilians' sorrows.. he can project that to Central govt.. note: President checks most of the mails, he even used to reply to few thanks to the_Mirror from thatstamil.com தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்
-
- 0 replies
- 1.3k views
-
-
15 கடற்படையினருடன் திருகோணமலைக் கடலில் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாம். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16775
-
- 35 replies
- 6.3k views
-
-
யாழ் பகுதி வன்முறையினைத் தொடர்ந்து மக்கள் இடம் பெயர்வு இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள இராணுவ பாதுகாப்பு மற்றும் பதட்ட நிலைமை காரணமாகக் கடந்த ஒரு வார காலத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளன. இடம் பெயர்ந்த குடும்பங்கள் இக்குடும்பங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூனகரி, புதுக்குடியிடிருப்பு ஆகிய இடங்களில் பொது இடங்களிலும், உறவினர் நண்பர்களது வீடுகளிலும் தங்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உருத்திரபுரம், விநாயகபுரம், பாரதிபுரம், தொண்டமான்நகர் போன்ற இடங்கள…
-
- 0 replies
- 1.3k views
-