Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வலியுறுத்துவோம் என்பது உட்பட மொத்தம் 46 வாக்குறுதிகளுடன் மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில் மொத்தம் 46 தலைப்புகளில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் பெயரை இந்திய ஐக்கிய நாடுகள் என மாற்றம் செய்வது முதலாவது உறுதி மொழியாகவும் 7 ஆவது உறுதிமொழியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தடையை நீக்கக் கோருவோம் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து மதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவி…

  2. அஜித் ராஜபக்ச... பிரதி சபாநாயகராக, தெரிவு இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். நாடளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ஷவிற்கு 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் கிடைத்தன. இதேவேளை செல்லுபடியற்ற வாக்குகள் 25 பதிவாகியதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். வாக்கெடுப்பு இடம்பெற்றால் சுதந்திரக் கட்சியினர் வாக்கு சீட்டில் குறுக்கு கோடிட்டு பதிவு செய்வார்கள் என மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282289

  3. ஆஸ்திரேலியா நோக்கி 300 பேருடன் புலிகளின் படகாம்! கனடாவின் கண்டுபிடிப்பு இது!! தாய்லாந்து ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளது என்று நம்பப்படும் படகொன்றை கனடா நாட்டு அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த படகில் 300 அகதிகள் உள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்காகவே சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியாவை நோக்கி 300 அகதிகள் பயணித்துக்கொண்டிருப்பதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், குறித்த படகி…

  4. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் பத்தாவது வீர வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் பத்தாவது வீர வணக்க நிகழ்வு இன்று கைவேலி புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் நிகழ்வுக்கான பொதுச்சுடரை ஏற்றினார். மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன. https://news.ibctamil.com/ta/physical-health/Brigadier-Thamizhalelvan-tenth-event பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் வீரவணக்கம்: த.தே.ம.முன்னணியின் முல்லை அலுவலகத்தில் …

  5. திங்கட்கிழமை, 21, ஜூன் 2010 (15:19 IST) டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு ஒத்திவைப்பு இந்தியா தேடப்படும் ஒரு கொலை குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா தற்போது இலங்கையில் அமைச்சராக உள்ளார். அவர் கடந்த வாரம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த வக்கீல் புகழேந்தி ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு மனுவில், ‘’ தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா இலங்கை மந்திரியாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்து மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. சென்னை போலீஸ் தரப்பில் மத்திய அரசின் பதிலுக்கு காத்திருப்…

  6. எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்கு காரணம் : சதித்திட்டமா? ஆராய்­வ­தற்கு அமைச்­ச­ரவை உப­ குழு நிய­மனம் (நமது நிருபர்) நாட்டில் எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­ப­டுவ­தற்கு ஏது­வாக அமைந்த கார­ணிகள் குறித் தும் இந்த விவ­கா­ரத்தில் சதித்­திட்டம் ஏதே னும் இடம்­பெற்­றுள்­ளதா என்­பது தொடர்­பிலும் ஆராய்­வ­தற்­காக அமைச்­ச­ரவை உப­குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­சர்­க­ளான சம்­பிக்க ரண­வக்க, அநு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா, சுசில் பிரே­ம்­ஜ­யந்த ஆகிய மூவரை உள்­ள­டக்­கியே இந்­தக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று முற்­பகல் ஜனா­தி­…

  7. இலங்கையிடம் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார் பாகிஸ்தான் படைத்தளபதி! [Wednesday, 2014-04-09 09:29:33] தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி என்று பாகிஸ்தான் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் ரசாட் மொஹமட் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானின் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் ரசாட் மொஹமட், நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை ஒட்டுமொத்த தேசமும் அடைந்த வெற்றியாகும். பாகிஸ்தானை விடவும் இலங்கை சிறந்த தியாகத்தை செய்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தொடர்பில் உலக நாடுகள் இலங்க…

  8. புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்கு முயற்சித்தால் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் – எல்லே குணவங்ச:- புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்h. புதிய அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு காணி உரிமை வழங்கப்படும் பட்சத்தில் திருகோணமலை உள்ளிட்ட கடல் மற்றும் நில வளங்களை இழக்கும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்த அவர் புதிய அரசியல் அமைப்பினை எரித்து நாசமாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். …

  9. பிள்ளைகளுக்கு... 3 நாட்களாக, உணவு இல்லை – தாய்... தற்கொலை முயற்சி! உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய், தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். 4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். தந்தைக்கும் நிரந்தர தொழில் இல்லை. சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் உயிர் வாழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பிள்ளைகள் பட்டினியில் தவ…

    • 1 reply
    • 238 views
  10. "வன்முறை களைந்து பிரிவுபடாத இலங்கையினுள் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை முன்வைத்தோம்." மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2014 யாழ்ப்பாண மாவட்டம் 21.04.2014 அன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் இணைத் தலைவரின் தலைமையுரை குருர் ப்ரம்மா.............! இணைத் தலைவரவர்களே, அமைச்சர்களே, அரசாங்க அதிபர் அவர்களே, பிரதேசச் செயலாளர்களே, மற்றைய சக அலுவலர்களே! இணைத்தலைவராக நான் பங்குபற்றும் முதற் கூட்டமிது. இங்கு வந்திருக்கும் அனைவரையும் உளமாற வரவேற்று எனது நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் யாவர் மனதிலும் ஒரு கேள்வி எழக்கூடும். அதாவது சுமார் ஆறு மாதங்கள் பதவியில் இருந்த பின்னர் நான் ஏன் இந்தக் கூட்டத்த…

    • 1 reply
    • 502 views
  11. டெங்கு நோய் ஒழிப்பு கூட்டத்திர்க்கு இந்த அதிகாரி செல்லவில்லையாம் அதனால் அவரை மாமரத்துடன் கட்ட சொல்லுகிறார் அந்த சிங்கள அமைச்சர்

  12. வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்­ஷ தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை விடுதலைப் புலி உறுப்பினர்கள் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ள நாடுகளிடம் விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். முக்கிய புலி உறுப்பினர்கள் மறைந்திருக்கும் பதினெட்டு நாடுகளுக்கு ஏற்கெனவே புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலி உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து இந்த நாடுகளுக்குத் தெளிவ…

  13. சபை உறுப்­பி­னர்­க­ளின் வரவு முழுமை இல்­லாத நிலை­யில் வடக்கு மாகாண அமர்­வு­கள் சபை உறுப்­பி­னர்­க­ளின் வரவு முழுமை இல்­லாத நிலை­யில் வடக்கு மாகாண அமர்­வு­கள் சுட்­டிக்­காட்­டு­கி­றது பேர­வைச் செய­ல­கம் வடக்கு மாகாண சபை அமர்­வு­கள் வரு­டாந்­தம் அதி­க­ரிக்­கின்­ற­போ­தும் உறுப்­பி­னர்­க­ளின் வருகை என்­பது ஆரம்­பத்­தில் இருந்து முழுமை இல்­லாத நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது என்று மாகாண சபை பேர­வைச் செய­ல­கம் தெரி­வித்­துள்­ளது. வடக்கு மாகாண சபை அமர்­வு­க­ளில் உறுப்­பி­னர்­க­ளின் வருகை மற்­றும் விடுப்­பு­கள் தொடர்­பாக தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத…

  14. திருமலையில் செவ்வாயன்று நடைபெறவுள்ள தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி Written by Ellalan Monday, 09 January 2006 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பொது விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி விழாவுக்கான எற்பாடுகள் யாவும் புூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் திருகோணமலையில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில் இந்த தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் வேறு, தம…

  15. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டது July 2, 2022 யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையினை இன்று (01) முதல் மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும் குறித்த விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் 2020 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், COVID தொற்று காரணமாக மீண்டும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. இதனிடையே, யாழ்ப்பாணம் விமான நிலைய…

  16. புல்மோட்டையிலிருந்து திருமலை நோக்கிச் சென்ற மக்கள் பேருந்து ஜானோயா ஆற்றில் பாய்ந்தது - ஐவர் உயிரிழப்பு திருமலை இ.போ.சபைக்குச் சொந்தமான மக்கள் பேருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு புல்மோட்டையிருந்து திருமலைக்குச் சென்ற போது ஜானோயா ஆற்றைக் கடக்க படகுப் பாதையில் ஏற்றிய போது பேருந்தின் உராய்வு விசையின்மையால் நேராக ஆற்றில் பாய்ந்தது நிரில் மூழ்கியது. இதனால் இரண்டு ஆண்களும், 3 சிறுவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர். பேருந்தின் ஓட்:டுனரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு புல்மோட்டை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். படையினரும், காவல்துறையினரும் குறித்த இடத்திற்கு எவரையும் செல்ல விடவில்லை. ஆனால் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செ…

  17. முசலி பிரதேசத்தில் சிங்கள குடியேற்றம் news முசலிப் பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக இராணுவத்தினரின் துணையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ளார் ஆளும் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக். கடந்த வெள்ளிக்கிழமை, நாடாளுமன்றில் மீள்குடியேற்ற அமைச்சின் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு சுட்டிக் காட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:""வன்னி மாவட்டத்தில் வசித்து போர் காரணமாக வேறிடங்களுக்குச் சென்ற மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்வதானது மந்த கதியிலேயே நடைபெறுகின்றது. அத்துடன் மீள்குடியமர்ந்தவர்களுக்கு போதியளவு அடிப்படை வசதி…

  18. தனியார் நிறுவனங்கள்... டொலர் செலுத்தி, எரிபொருளை பெற்றுக் கொள்ள.. முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்! அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதற்காக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்வதற்கான வசதிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி… https://ceypetco.gov.lk/usd-consumer-online-registration/ https://athavannews.com/2022/1290175

    • 1 reply
    • 185 views
  19. யாழ்ப்பாண சாரணிய பெண்கள், மலேசியா பயணம் மலேசியாவில் அடுத்தக் கிழமை நடைபெறவுள்ள உலக சாரணிய நூற்றாண்டு நிகழ்வில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து 36 பெண்கள் செல்கின்றனர் .இந்தப்பெண்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றுள்ளனர். http://meenakam.com/?p=6188

  20. யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன! இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23 ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் வைபவத்தில் பங்கேற்பதற்காகவே அவர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதோடு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்குரே உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம…

  21. கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மாலைதீவிலும் கடும் எதிர்ப்பு! ShanaJuly 13, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது எனவும் அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு தைய்யிப் கோரியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் ம…

  22. வெள்ளிக்கிழமை, 3, செப்டம்பர் 2010 (21:6 IST) 5 மீனவர்கள் மாயம்:இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றார்களா? இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வந்த ராமேசுவரம் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கடந்த வாரம் இலங்கையிலிருந்து மீனவர் சங்க பிரதிநிதிகள் தமிழகம் வந்திருந்தனர். அவர்கள் ராமேசுவரம், நாகப்பட்டிணம், தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு சென்று மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கீடு முறையில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் காலங்களில் இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்களால் தமிழக மீனவர்களுக்கு எந்தவித தொல்லையும் இருக்காது எனவும் உறுதி க…

  23. மஹிந்த தரப்­புடன் இணை­யா­ததால் தமிழ், முஸ்லிம் மக்கள் எம்­முடன் கைகோர்ப்பு மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கூட்டு எதி­ர­ணி­யுடன் நாங்கள் இணை­யா­ததன் கார­ண­மாக சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் தமிழ், சிங்­கள மக்கள் அதி­க­ளவில் இணைந்து வரு­கின்­றனர். இது எமக்கு மிகப்­பெ­ரிய பல­மாக அமைந்­தி­ருக்­கின்­றது என்று சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். ஒரு­வேளை நாங்கள் மஹிந்த தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்­தி­ருந்தால் இவ்­வாறு தமிழ், முஸ்லிம் மக்கள் அதி­க­ளவில் எம்­முடன் இணைந்­தி­ருக்க மாட்­டார்கள் என்றும் இரா­ஜாங்க அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார். சிறி­லங்கா சுதந்­தி­ரக்­க…

  24. கொழும்பு : இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்துச் சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.அதேசமயம், இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் காரணமில்லை, இதில் எந்த சதிச் செயலும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.கரடியனாறு காவல் நிலையத்தில் டைனமைட்டுகள் வெடித்துச் சிதறியதில் 60 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் சீனர்கள், மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களர்கள். உயிரிழந்தவர்களில் பலர் முன்னாள் விடுதலைப் புலிகள் எனத் தற்போது தெரிய வந்துள்ளது. இந்தத் தமிழர்களை சீன நிறுவனம் தனது சாலை மேம்பாட்டுப் பணியில் ஈடுபடுத்தியிருந்ததாம். வெடிவிபத்தில் இந…

  25. பேக்கரி பொருட்களுக்குப்.. பயன் படுத்தப்படும், கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு! பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது ஒரு மூடைக்கு 300 ரூபாய் மேலதிகமாக அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் ரயிலில் கோதுமை மா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது ரயிலில் கோதுமை மா கொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.