Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொன்னாலை - பருத்தித்துறை வீதி முற்றாக திறப்பு By Vishnu 01 Sep, 2022 | 09:46 AM யாழ்ப்பாணம், கீரிமலை ஊடான பொன்னாலை - பருத்தித்துறை வீதியினை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கடந்த 30 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் குறித்த வீதி காணப்பட்ட நிலையில் கடந்த நல்லாட்சி கால பகுதியில் அப்பகுதி மக்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு வீதியும் திறந்து விடப்பட்டது. ஆனாலும் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலையே மக்கள் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்து …

  2. வடகடல் நிறுவனத்தினை முன்கொண்டு செல்ல அமைச்சர் டக்ளஸ் புதிய திட்டம் By T. Saranya 01 Sep, 2022 | 10:47 AM வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களாக உள்ளடக்கி, தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். லுணுவல தொழிற்சாலையை சேர்ந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை நேற்று புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்காலிகமாக 5 பணியாளர்களைக் கொண்ட குழுவொன்றிற்கான விபரங்களை தருமாறும், அதனூடாக தொ…

  3. பெறுமதி சேர் வரி இன்று முதல் அதிகரிப்பு இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரியினை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படுமென இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தினை நிதி அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி வீதம் அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/பெறுமதி-சேர்-வரி-இன்று-முதல்-அதிகரிப்பு/175-303368

  4. புதுக்குடியிருப்பில் புதைக்கப்பட்டிருந்த பாரிய எரிபொருள் தாங்கி மீட்பு! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பாரிய எரிபொருள் தாங்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலேய குறித்த எரிபொருள் தாங்கி நீதிமன்ற உத்தரவிற்கமைய மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவின் அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் நேற்று(31) முன்னெடுக்கப்பட்டன. 16.3 அடி நீளமும் 7.9 அடி விட்டமும் கொண்ட வெறுமையான எரிபொருள் தாங்கியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. …

  5. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்த அறிவித்தல்! அமைதி வழி போராட்டக்காரர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவுடன் ஜூலை 21 ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், இலங்கை மக்கள் ஒன்றுகூடுவதற்கும் கருத்துகளை வெளியிடுவதற்கும் உள்ள உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஒரு மாத காலமாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, போராட்டக்காரர்களை வன்முறையால் ஒடுக்கி, கைது செய்து வருவதாக மனித உ…

  6. வடக்கில்... சீனாவின் ஆதிக்கத்தை, ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- செல்வம் அடைக்கலநாதன். வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார் இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அண்மைக்காலமாக சீனாவினுடைய கப்பல் ஒரு சர்ச்சையாக இலங்கையிலே பேசப்பட்டது. இந்தியாவிற்கு பாதுகாப்பு விளைவிக்கின்ற எச்சரிக்கையை மீறி அரசாங்கம் சீனா கப்பலை உள்ளே அனுமதித்தது. தற்போது மீண்டும் சீனாவினுடைய ஆதிக்கம் தொடர்வதாகவே நாங்கள் பார்க்கின்றோம். அந்தவகையிலே வடக்கில் ச…

  7. ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.... படுகொலை வழக்கில் இருந்து, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விடுதலை! மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை வழக்கில் இருந்து அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் செல்வராஜா பிரிபாஹகரன் (மோரிஸ்) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு கம்பஹா இலக்கம் 01 உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) எடுத்துக்கொள்…

  8. அவசர உதவியாக... 200 மில்லியன் டொலர்களை, கடனாக வழங்க அனுமதி! இலங்கைக்கான அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், வறுமையில் வாடும் மக்களுக்கு – குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கடன் உதவி வழங்கப்படுகின்றது. நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த கடன் உதவிக்காக திருப்பி அனுப்பியுள்ளது. https://athavannews.com/2022/1296988

  9. இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில்... உடன்பாடு கைச்சாத்து! இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவும் ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான நிதியுதவி வசதியை சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதி 48 மாதங்களுக்கு செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1296993

  10. இலங்கையில்... பத்தில் மூன்று பேர், உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் செயலாளர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் அதில் தெரிவித்துள்ளார். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நடுத்தர வருமான நாடுகளை விட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம்…

  11. ஐ.நா. மனித உரிமை பேரவையின்... அங்கத்துவ நாடுகளுக்கு, தமிழ் தேசியக் கட்சிகள்... வரைபு சமர்ப்பிப்பு! தமிழ் தேசிய ஆறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுக்கு வரைபு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் முன்னெடுப்பில் இவ்விடயம் சாத்தியமாகியது. இந்தக் கோரிக்கையில் பிரதானமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்த ஐ.நா. பாதுகாப்புச் சபையை தூண்டுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்த தவறி உள்…

  12. ஜனாதிபதியின் தலைமையில் நாடு ஸ்திர நிலையை அடைந்துள்ளது - நிமல் சிறிபால டி சில்வா By DIGITAL DESK 5 31 AUG, 2022 | 05:13 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களால் நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளதுடன் அவரது வேலைத் திட்டங்கள் சிறந்த பிரதிபலனை வழங்கி வருகின்றது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (31 ) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி…

  13. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் - இராதாகிருஷ்ணன் சபையில் கோரிக்கை By T YUWARAJ 31 AUG, 2022 | 10:11 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவு கோதுமை மா என்பதால் அதன் விலை 300 ரூபாவை விட அதிகரித்துள்ளதால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும். அத்துடன் பெருந்தோட்டங்களை மறுசீரமைப்பை செய்து அந்த மக்களின் வாழ்க்கையை உயர்த்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு…

  14. (எம்.நியூட்டன்) இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றோம் என அறிக்கை வெளியிட்டுள்ளது அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர், இலங்கையில் தமிழ் சமூகம் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றோம். சிறில…

    • 15 replies
    • 826 views
  15. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என சட்டமா அதிபர் ஊடாக இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி பல அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை - ஜனாதிபதி | Virakesari.lk

    • 2 replies
    • 411 views
  16. கே .குமணன் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் வடமாகாணமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இடையூறாக இருப்பதாகவும், பலதடவைகள் தாம் குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சிக்கு ரவிகரன் இடையூறாக இருந்ததாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பௌத்த பிக்குகள் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர். இந் நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட முல்லைத்தீவு போலீசார் எதிர்வரும் செப்ரெம்பர் 02ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குருந்தூர்மலை பௌத்த வழிபாடுகளுக்கு ரவிகரன் இடையூறாக இருப்…

  17. ஸஹ்ரான் - புலஸ்தினி உறவை மறைத்தமை தொடர்பில் சஹ்ரானின் மனைவி மீது குற்றச்சாட்டு 31 Aug, 2022 | 11:08 AM உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை பொலிஸாரினால் எழுப்பப்பட்ட நிலையில் எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு நேற்று (30) வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி வழக்கானது விசாரணைக்காக எடு…

  18. அரகலய மெய் சிலிர்க்க வைத்தது – ராஜபக்சாக்கள் நாட்டிற்கு செய்தவற்றால் நான் அவர்களை வெறுக்கின்றேன்.- அரகலய அவர்களை அகற்றியது குறித்து மகிழ்ச்சி- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா By Rajeeban 31 Aug, 2022 | 08:56 AM இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிபேரிடர் நிலைமை இரண்டு ராஜபக்சாக்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களின் விளைவு என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ராஜபக்சாக்களை ஆட்சியிலிருந்து அகற்றி அரகலய் மெய்சிலிர்க்க வைத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் அமைப்புமுறை வீழ்ச்சியடைந்துள்ள போது வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ள போது நீங்கள் எப்படி நிலைமையை மாற்றுவீர்கள் என கேள்வி எழுப்பிய…

  19. புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய இணையனுசரணை நாடுகளுடன் பேச்சு நடாத்த நாம் தயார் - விஜயதாஸ By T Yuwaraj 31 Aug, 2022 | 06:38 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகள் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருமேயானால், அதுகுறித்து எமக்கு எவ்வித கோபமும் இல்லை. மாறாக அவர்கள் முன்வைக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இந்த இணையனுசரணை நாடுகள் என்பதை பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய நாடுகளாகவே இருக்கின்றன. …

    • 5 replies
    • 1k views
  20. வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் திருப்தியடைய முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் By T Yuwaraj 31 Aug, 2022 | 07:00 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளதாகவும், இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் திருப்தியடைய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (30) நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்க…

  21. பொதுஜன பெரமுனவின் 13 பேர் எதிர்க்கட்சி பக்கம் சென்றனர்! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி பக்கத்தில் இருந்து எதிர்க்கட்சி பக்கத்திற்கு சென்றுள்ளனர். ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, சரித ஹேரத், சன்ன ஜயசுமன, கே.பி.எஸ். குமார சிறி, குணபால ரட்ணசேகர, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, உபுல் ஹலப்பதி, திலக் ராஜபக்‌ஷ, லலித் எல்லாவல ஆகியோர் எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளனர். இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவித்தலை வெளியிட்டு அவர்கள் எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளனர். http://www.samakalam.com/பொதுஜன-பெரமுனவின்-13-பே…

  22. யாழ்.மாநகர சபைக்கு... ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நிதி, பயன்படுத்தப் படாமைக்குரிய காரணம்... இதுதான். - வரதராஜன் பார்த்தீபன். வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள் மற்றும் முதலீடுகள் என்பனவற்றை தமிழ் பிரதேசங்களுக்கு கிடைக்கவிடாமல் தடுக்கும் மத்திய அரசாங்கம், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடைகளை நீக்கி, இலங்கையில் முதலீடு செய்யுமாறுக் கோரியுள்ளமை வேடிக்கைக்குரியது என்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார். ஜப்பான் அரசாங்கம் யாழ்.மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகன இறக்குமதி செலவுக்கு என வழங்கிய பணத்தினை மீள கையளிக்குமாறு கோரியுள்ளமை தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …

  23. இலங்கை போன்றதொரு நிலைமையை பங்களாதேஸ் ஒருபோதும் எதிர்கொள்ளாது- பிரதமர் ஷேக் ஹசீனா By RAJEEBAN 30 AUG, 2022 | 05:23 PM பங்களாதேஸ் இலங்கை போன்றதொரு நிலையை எதிர்கொள்ளாது என அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பங்களாதேஸ் இலங்கை போன்றதொரு நெருக்கடியை சந்திக்காது மாறாக அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அது முன்னோக்கி நகரும் என அவர் தெரிவித்துள்ளார். எனது கட்சி தலைவர்களும் ஆதரவாளர்களும் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பங்களாதேஸ்ஒருபோதும் இலங்கை போன்றிருக்காது இருக்கவும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார். முன்னைய பிஎன்பி அரசாங்கத்தின் காலத்தில் பங்களாதேஸ் இலங்கைபோன்றதொரு நிலைய…

  24. மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழப்பு : நவகத்தேகம பகுதியில் சம்பவம் By VISHNU 30 AUG, 2022 | 03:42 PM நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குற்பட்ட தம்மன்னாவெட்டிய கிராமத்தில் காட்டு யானையொன்று இன்று 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த காட்டு யானை கிராமத்திலேயே பல நாட்களாக அங்குமிங்கும் சுற்றித்திரிந்ததாக கிராம மக்கள் கூறியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த காட்டு யானை 25 வயதுடையது என மதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது த…

  25. ஜனாதிபதியின்... இன்றைய நாடாளுமன்ற உரை, முழுமையாக::: 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும்... 2022 டிசம்பருக்குள், ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2022 ஆம் ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கான அரசின் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான இரண்டாவது மதிப்பீடு ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளையும், எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம் பெறவுள்ளதாகவும் அறிவக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த மதிப்பீட்டை சபையில் சமர்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரையின் சில முக்கிய தரவுகள் வருமாறு- ” புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.