Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘அனுமதி கிடைத்தால் வீடும் கிடைக்கும்’ “கீரிமலையில் அமைக்கப்பட்ட நல்லிணக்கபுர வீடமைப்புகளைப் போன்று, அதன் தெற்குப் பக்கத்தில் 225 வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். ‘நல்லிணக்கபுரத்தில் 33 மேலதிக வீடுகளைக் கட்டிக்கொடு த்திருக்கிறோம். 'அதனை, கடந்த 9ஆம் திகதி பயனாளர்களிடம் கையளித்தோம். அதேபோன்று, மாவன்கல்லடியில் 225 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு, இராணுவம் தயாராக இருக்கிறது. ஆனால், இதற்கான அனுமதியை, மீள்குடியேற்ற அமைச்சு இன்னமும் வழங்கவில்லை. ஆகையினால், அந்த அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார். - See more a…

  2. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் முன்மொழிவிற்கு இணங்க இலங்கையில் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களும், மனிதநேயச் சட்டங்களும் மீறப்பட்டமை தொடர்பான அனைத்துலக விசாரணையைக் கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளையும் தமது அரசாங்கம் எடுத்து வருவதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் உறுதியளித்துள்ளார். ஈழப்பிரச்சினை தொடர்பாக இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு வில்லியம் ஹேக் அவர்கள் தெரிவித்துள்ளார்: 'We are pursuing the issue actively at the Human Rights Council to secure an international inquiry of the type recommended by the United Nations High Commissioner for Human Rights…

    • 6 replies
    • 687 views
  3. ‘அன்னை பூபதி’க்கு அஞ்சலி செலுத்தினால் கைது செய்வோம்; மகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை! ‘அன்னை பூபதி’யின் நினைவு தினத்தினை, அவரது சமாதிக்கு சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி லோகேஸ்வர் சாந்தி தெரிவித்தார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், ‘நாவலடியில் உள்ள எங்களது அன்னையின் சமாதியில் நாங்கள் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக நினைவேந்தல் அனுஷ்டித்து வருகின்றோம். ஆனால் இன்று எங்களது குடும்பத்தினை அங்கு சென்று நினைவேந்தல் அனுஷ்டிக்க வேண்டாம் எனவும்…

    • 3 replies
    • 758 views
  4.  ‘அன்றும் கள்வர் இருந்தனர்; இன்றும் கள்வர் உள்ளனர்’ களவெடுக்கும், தவறிழைக்கும் நபர்கள் கடந்த ஆட்சிக்காலத்திலும் இருந்தனர். இந்த ஆட்சிக்காலத்திலும் இருக்கின்றனர் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துத்தான், நான் செயற்படுகின்றேன். அந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கின்றவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து …

  5. Comments - 0 Views - 16 உள்நாட்டலுவல்கள் அமைச்சு, கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை, மீண்டும் திருத்தி வெளியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால், முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனரெனத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார். இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க, முஸ்லிம்களின் கலாசார உடையில் அபாயா அணிவதை அனுமதித்து, புதிய சுற்று நிருபத்தை விரைவில் வெளியிடுமாறு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார். …

    • 2 replies
    • 1.3k views
  6. ‘அபிவிருத்தி தொடர்பில் பேசும் போது, அரசியல் பற்றியும் பேசவேண்டியுள்ளது’ “நிலையான அபிவிருத்தி என்பது தமிழ் மக்களுக்கான நிலையான, முழுமையான அரசியல் தீர்விலேயே தங்கியிருக்கிறது. இதனால், அந்தத் தீர்வை எட்டும் வரை அபிவிருத்திப்பற்றிப் பேசும்போது, அதன் பின்னால் உள்ள அரசியல் பற்றியும் நாம் உரத்துப்பேசவேண்டிய கட்டாயத்திலேயே உள்ளோம்” என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே இலங்கை அரசியலில் இன்று அதிகம் பேசப்படு…

  7. ‘அப்பே ஸ்ரீ’ கட்சியின் கூட்டம் இன்று – உறுப்பினர்களுக்கு சந்திரிகா அழைப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘அப்பே ஸ்ரீ’ அமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. அத்தனகலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உட்பட தம்முடன் இணைந்து பயணிக்க விரும்பும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறுகின்ற மாநாடு குறித்தும் ஆராயப்படவுள்ளது. அத்துடன் சந்திரிகா தலைமையேற்றுள்ள அப்பே ஸ்ரீ …

    • 2 replies
    • 243 views
  8. ‘அமெரிக்காவுக்கு அனுப்பிய விக்கிலீஸ் கேபிள்களை நீதி அமைச்சர் பார்க்க வேண்டும்’-காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் September 15, 2021 பிளேக் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய, விக்கிலீஸ் கேபிள்களை நீதி அமைச்சர் பார்க்க வேண்டும். என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கருத்து தெரிவித்த போது, ‘பிளேக் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய, விக்கிலீஸ் கேபிள்களை நீதி அமைச்சர் பார்க்க வேண்டும்.ஆகவே நீதி அமைச்சர் எந்த பொறுப்பற்ற அறிக்கையையும் கூற முடியாது. முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக்கின் கூற்றுப்படி, துணை ஆயுதக்குழுகள் (ஒட்டுக்குழு) தமிழ் பெண்கள் மற்றும் சிறுவர்களை வெளிநாடுகளுக்கு அடிம…

  9. முல்லைத்தீவிலும் திறந்து வைக்கப்படவுள்ள ‘அம்மாச்சி’ உணவகம் வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் எங்கும் ‘அம்மாச்சி’ என்றபேரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரில் அம்மாச்சி உணவகம் ஒன்று எதிர்வரும் வியாழக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு அபிவிரத்தி ஒருங்கிணைப்பக்குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கனகரத்தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்துவைக்கவுள்ளார். இதன் மூலம் மல்லாவி மக்களுக்கு பாரம்பரிய உணவு வகைகளை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்ட…

    • 8 replies
    • 1.8k views
  10. ‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவின் பிரதி விவசாய அமைச்சரான, அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இதுபற்றித் தகவல் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘அம்மாச்சி’ உணவகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். “மத்திய அரசின் நிதியில்- மத்திய அரசின் திட்டத்துக்கு அமையவே அந்த உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பெயரையே, ‘அம்மாச்சி உண…

  11. ‘அரசமைப்பின் வரைவு ஆவணியில் வரும்’ -கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், வா. கிருஸ்ணா புதிய அரசமைப்பின் வரைவு, எதிர்வரும் ஆவணி (ஓகஸ்ட்) மாதத்தில் வெளிவருமென எதிர்பார்ப்பதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரின் நல்லையா வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் நிலைமை சம்பந்தமான விழிப்புணர்வுக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசமைப்பு வரைவு வெளிவந்த பின்னர், மாவட்ட …

  12. ‘அரசமைப்பு உருவாக்கம் இப்போது வேண்டாம்’ அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக, வழிகாட்டல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைவு அறிக்கை, தற்காலிகமாக வாபஸ் பெறப்பட வேண்டும் என, கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபையின் கல்யாணி கரக சபா (நிர்வாகக் குழு), ஏகோபித்தமாக முடிவெடுத்துள்ளது. புதிய அரசமைப்பை வரைவதற்கான பொருத்தமான நேரம் இதுவன்று என்பதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டது என, கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபாவின் அநுநாயக்க (இரண்டாம் நிலைத் தலைவர்) பேராசிரியர் வண. பெலன்வில விமலரத்ன தேரர், நேற்று (22) தெரிவித்தார். நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை, நாட்டின் பாதுகாப்பு, பௌத்தம் ஆகியன தொடர்பில், இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட…

  13. ‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிபொருளில் பாரிய ஆர்ப்பாட்டம்! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது. திருடப்பட்ட பணத்தை மீட்பது, நிறுவனங்களால் செலுத்தப்படாத வரிகளை மீளப் பெறுதல், கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும் கொலைகள் தொடர்பில் மீள் விசாரணை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், இலவசக் கல்வி, இலவச சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்…

  14. ‘அரசியலுக்கு வரமாட்டேன்’ தான், எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தல்களில் குதிக்க மாட்டேன் என்றும், அரசியலுக்கு வரும் நோக்கம் தனக்கு இல்லையென்றும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கடை நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக வைத்து, ஊடகவியலாளர்கள் நேற்றுமுன்தினம் (29) கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னதாகக் கேள்வி கேட்ட ஊடகவியலாளர், “இரட்டை பிரஜாவுரிமையை இல்லாமற் செய்து கொள்வீர்களா?” என வினவினார். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தலில் போட்டியிடும் எண்ணம் என்னிடம் இல்லை என்பதனால், இரட்டை பிரஜாவுரிமை, எனக்குப் பிரச்சினை இல்லை” என்றார். …

    • 1 reply
    • 436 views
  15. இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கத்தில் மற்ற தேசியக் கட்சிகளையும் அமைப்புகளையும்ஒன்றிணைத்து போராட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சமவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் முன்னிலை சோசலிஸக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சிவில் அமைப்புகளும் இணைந்துகொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தேசி…

    • 0 replies
    • 370 views
  16. ‘அரசியல் கைதிகளே இல்லையென்பது தமிழ் அரசியலை இல்லாது செய்வதாகும்’ -எஸ்.நிதர்ஷன் நாட்டில் அரசியல் கைதிகள் தற்போது இல்லை என்று அரசாங்கம் கூறுவது, தமிழ் மக்களின் அரசியலை இல்லாமற்செய்வதற்குச் சமனாகும் என, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பு, நல்லை ஆதீன குரு முதல்வரை, நல்லை ஆதீனத்தில் இன்று (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளது. சந்திப்பு தொடர்பாக அருட்தந்தை மா.சக்திவேல் கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம், அரசியல் ரீதியாகத் தீர்மானங்களை மேற்கொண்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.…

    • 1 reply
    • 287 views
  17. ‘அரசியல் கைதிகளை, ஏனைய கைதிகளிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும்’ - டி.விஜிதா சிறைச்சாலையில் தடுத்து வைக்கபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, ஏனைய கைதிகளிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும் எனவும் இப்பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் எனவும் கோரி அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இன்று (29) மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் குறித்த மகஜரை கையளித்துள்ளனர். இதன்போது, அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி உரிய …

  18. ‘அரசியல் கைதிகள் இல்லை’ “அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் நாட்டில் இல்லை” நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். நீதியமைச்சில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை என்னவென, ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார். அக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், கைதிகளை பறிமாற்றிக்கொள்வது தொடர்பில், உலகில் பல்வேறான நாடுகளுடன் நீதியமைச்சு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. இன்னும் சில நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தங்களை செய்யும். எனினும், நாட்டில் மட்டுமல்ல, உலகில் உள்…

  19. ‘அரசியல் கைதிகள் நலமாக உள்ளனர்’ சாகும் வரையான உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை, சிறப்பான நிலையில் காணப்படுகிறது என, அநுராதபுர போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளனர். அவர்களின் உடல்நிலையைச் சோதித்த பின்னரே, இது அறிவிக்கப்பட்டுள்ளது.தம்மீதான வழக்குகள், வவுனியா நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டெம்பர் 25ஆம் திகதியிலிருந்து, இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தம்மீதான வழக்குகள், வவுனியா நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டெம்பர் 25ஆம் திகதியிலிருந…

  20. ‘அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்’ -எம்.றொசாந் “அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். அகில இலங்கை தமிழ் மொழி தின விழா, யாழ். இந்துக் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார். இதன்போது, அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுவிக்க கோரியும் ஜனாதிபதி நிகழ்வில் கலந்துகொள்ள இருந்…

  21. ‘அரசியல் சதி மூலமான ஆட்சி கனவு பலிக்காது’ கீழ்த்தரமான அரசியல் சதி ஊடாக, ஆட்சியை கைப்பற்ற முயலும் கனவு பலிக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆட்சியிலுள்ளபோது கோடிக்கணக்கில் மக்கள் பணத்தையும், அரச சொத்துக்களையும் கொள்ளையடித்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பாரிய ஊழல், மோசடி மற்றும் குற்றம் புரிந்தோர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அலரிமாளிகையில், நேற்று(05) நடைபெற்ற அனைவருக்கும் நிழல் ”விருசுமித்துறு” படைவீரர் வீட்டு உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு, ஜனாதிபதி தொடர…

  22. இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க அரசியல்வாதிகள் போல் பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட-கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என தொடர்ச்சியாக தாங்கள் கூறிவரும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயந்து ஒளிந்திருந்தவர்கள் இப்போது இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென கூறுவதாக, இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க கூறுகிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என வினவியபோதே. அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க, தொடக்கத்தில் வந்த போது, இராணுவம் பற்றிய உள்நாட்டு வெளிநாட்டு மக்கள…

  23. ‘அரசியல்வாதி’ என்ற சொல்லை மக்கள் வெறுக்கும் நிலை : ஜனாதிபதி விருப்பு வாக்கு முறைமை நாட்டில் அரசியல் முறைமையை சீர்குலைத்தது மட்டுமன்றி அரசியல்வாதி என்ற சொல்லை மக்கள் வெறுத்து நிராகரிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதிகாரத்தைப் பலப்படுத்தி பணத்தை சம்பாதிப்பதற்கு முதலிடம் கொடுக்கும் கொள்கை இன்று அரசியல்வாதிகளிடம் தலைதூக்கியுள்ளதாவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பிலியந்தலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற சோமவீர சந்திர சிறியின் 45 ஆவது வருடாந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். http://www.virakesari.lk/article/8861

  24. தமிழ் தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்யும் தமது வழக்கத்தை கைவிட வேண்டும். கல்முனை விடயத்தில் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து காலஅவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கிறார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன். கனடா “வாணிபம்” வியாபார தகவல் கையேட்டு நிறுவனத்தினரின் நிதி அனுசரணையில் மக்கள் நலன் காப்பகத்தின் அன்பகம் என்ற மூதாளர் மாதாந்த உதவித்திட்டம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 35 பேருக்கு இன்று உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இப்படி காட்டமாக தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களை உள்நாட்டு யுத்தம் என…

    • 14 replies
    • 2.3k views
  25. ‘அரசே நாட்டை விட்டு ஓடு” ; இன்றிலிருந்தே ஆரம்பிப்போம் – எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு! — 19/04/2013 at 10:01 pm மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் அராஜக அரசாங்கத்தை நாட்டை விட்டு விரட்டியடிக்கும் காலம் வந்துவிட்டதால் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வீதியில் இறங்கி ‘அரசே நாட்டை விட்டு ஓடு” என விரட்டியடிக்க இன்றிலிருந்தே போராட ஆயத்தமாவோமென எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எதிக் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சார்பாக பாராளுமன…

    • 4 replies
    • 601 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.