ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
2021ஆம் ஆண்டுக்கு பின்னர்... மதுபான விற்பனையில், "22 பில்லியன் ரூபாய்" இழப்பு! நாட்டில் மதுபானத்தின் பாவனை வீதம் குறைவடைந்துள்ளது. மது வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்போது எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் காரணமாகவே 20 முதல் 37 வீதம் வரை மதுபானத்தின் பாவனை குறைவடைந்துள்ளது. அத்துடன், கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின்னர் மதுபான விற்பனையில் 22 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1301685
-
- 10 replies
- 914 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்- மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதம அதிதியாக சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டுள்ளார் . இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அவர் சந்தித்து கலந்துரையாடியதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பிரதமா் தினேஷ் குணவா்த்தனவை அவர் சந்திக்க உள்ளமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1301865
-
- 1 reply
- 541 views
-
-
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன் யூரோ நிதியுதவி By T. SARANYA 29 SEP, 2022 | 04:29 PM (நா.தனுஜா) நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பாரிய சமூக - பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்கென 1.5 மில்லியன் யூரோ நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்நிதியுதவியானது விசேடமாக நாட்டுமக்கள் எதிர்கொண்டிருக்கும் உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்புசார் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனூடாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றும…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான 2 உப குழுக்களை அமைக்க தேசிய பேரவை தீர்மானம்! தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான இரண்டு உப குழுக்களை அமைக்க தேசிய பேரவை தீர்மானித்துள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட தேசிய பேரவையின் அங்குரார்ப்பண கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய தேசிய பேரவை உர…
-
- 1 reply
- 463 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஐநாவின் முயற்சிகளிற்கு பைடன் நிர்வாகம் ஆதரவளிக்கவேண்டும் - காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் By RAJEEBAN 29 SEP, 2022 | 01:06 PM இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனிபிளிங்கென் ஆதரவளிக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜா கி…
-
- 1 reply
- 288 views
-
-
இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது By VISHNU 28 SEP, 2022 | 10:35 PM இலங்கைக்குள் சிறுவராக இருக்க வேண்டிய ஒருவரின் வயதெல்லையை பதினாறிலிருந்து பதினெட்டாக உயர்த்தப்பட வேண்டும் என, சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் – பெண் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் அண்மையில் கூடியபோது இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதற்கம…
-
- 6 replies
- 508 views
-
-
முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை? அரசாங்கத்தினால் முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த வருமானத்தை பெறும் 70 வயதை கடந்தவர்களுக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய இந்த கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிக்குள் வழங்கப்படும். எனினும் இந்த மாதத்துக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1301870
-
- 0 replies
- 232 views
-
-
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை! இலங்கையில் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒவ்வொரு 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் உணவு உட்கொள்வதை தவிர்த்து வருவதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்காலத்தில் நாட்டின் நிலைமை இன்னும் மோசமடையலாம் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. …
-
- 1 reply
- 195 views
-
-
மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள்! பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். எட்டு சதவீதமாக இருந்த வட் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இரண்டரை சதவீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாண் விற்பனை சுமார் ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 166 views
-
-
எதிர்க்கட்சி இன்றி தேசிய சபை முதற்தடவையாக இன்று கூடுகிறது! பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய சபை முதல் தடவையாக இன்று(29) கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(29) காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேசிய சபைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இதனிடையே, பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பிலான தெரிவுக் குழு கூட்டமும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(29) நடைபெறவுள்ளது. இ…
-
- 0 replies
- 107 views
-
-
மைத்திரியை... சுடச் சென்ற, அமி சுரங்க.. கைது!! முல்லேரிய வல்பொல பிரதேசத்தில் நேற்று இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பாதாள உலக உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர். ரஞ்சிலு பேடியின் புத்திக பிரசாத் எனப்படும் அமி சுரங்க மற்றும் சாமர சதுரங்க ஆகிய இரு பாதாள உலக உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அமி சுரங்க என்ற நபர், பாதாள உலகக் குழுத் தலைவரான உரு ஜுவா மற்றும் கோத்தா அசங்க குழுவைச் சேர்ந்த தனுஷ்க ஆரியவன்ச என்றழைக்கப்படும் ரங்கா ஆகியோரின் சகோதரரும் கூட என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இதற்கு முன்னரும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும், 2014ஆம் ஆண்டு வெல்லம்பிட்டி…
-
- 1 reply
- 621 views
-
-
துறைத்தலைவர் பதவி கோரி யாழ்.பல்கலை பேராசிரியர் உயிர் மாய்க்க முயற்சி August 16, 2022 தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது. அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவி…
-
- 28 replies
- 2.2k views
- 2 followers
-
-
கவலைப்படாத தம்பி.... நான் இருக்கிறன்...
-
- 4 replies
- 440 views
-
-
யாழில் தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல் ; நகைகள் கொள்ளை By DIGITAL DESK 5 28 SEP, 2022 | 10:58 AM யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும் , பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸாரின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை இருவர் வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டு இருந்த சிசிரிவி கமராக்களை உடைத்து சேதப்படுத்திய பின்னர், வீட்டின் பிரதான கதவினை சேதப்படுத்தி வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பெண் மீது தாக்குத…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
மஹிந்த, பசில் சார்பில் தர்க்கம் : பொருளாதார நெருக்கடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசாரணை By T YUWARAJ 28 SEP, 2022 | 06:01 AM (எம்.எம்.எம்.பஸீர்) வர்த்தகர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகைகள் பொருளாதார நெருக்கடியை ஏற்படியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போதும், அவ்வாறான வரிச் சலுகைகளை வழங்க தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன செவ்வாய்க்கிழமை ( 27) உயர் நீதிமன்றில் வாதிட்டார். நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட …
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்பிலுள்ளோருக்கு பிணை கோரும் மனுக்கள் விரைவில் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு By T YUWARAJ 27 SEP, 2022 | 10:31 PM ( எம்.எப்.எம்.பஸீர்) பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், நீண்டநாட்களாக விளக்கமறியலிலும், தடுப்புக் காவலின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் சார்பிலும், மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரும் மனுக்களை தாக்கல் செய்ய இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தயாராகி வருகின்றது. இதற்கான நடவடிக்கைகளை அவ்வாணைக் குழுவின் அறிவுறுத்தல் பிரகாரம் சட்டத்தரணிகள் முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த மனுக்கள் எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்ய எதிர்ப்ப…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
மக்கள் பட்டினியில் வாடும்போது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக பெரும் பணத்தை செலவிட அரசாங்கம் தயாராகின்றது - கர்தினால் By RAJEEBAN 28 SEP, 2022 | 11:46 AM நாட்டின் தற்போதைய நிலை காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கு பதில் அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு பணத்தை செலவிட தயாராகின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விசனம் வெளியிட்டுள்ளார். கிறிஸ்மஸ் வருகின்றது சுற்றுலாத்துறைக்குபொறுப்பான அமைச்சர் உட்பட சுற்றுலாத்துறையின் முக்கிய அதிகாரிகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக கொழும்பை மின்விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிடுகின்றனர் என அவர் தெரிவித்துள்…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
இலங்கையில் இழுத்து மூடப்பட்ட பத்தாயிரம் ஹோட்டல்கள்! உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருவதை அடுத்து ஏற்பட்ட நஷ்டத்தால் நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நட்சத்திர நிலை ஹோட்டல்கள், விலாக்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் இதர சுற்றுலா விடுதிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவரும் கேகாலை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம அமைப்பாளருமான பிரியந்த திலகரத்ன இதனைத் தெரிவித்தார். மின்கட்டண அதிகரிப்பால் ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் உட்பட கிட்டத்தட்ட பத்தாயிரம் சுற்றுலா விடுதிகள் மூடப…
-
- 0 replies
- 299 views
-
-
ஏ9 வீதி இயக்கச்சி சந்தியில் 100 நாட்கள் செயல்முனைவின் மக்கள் குரல். September 28, 2022 100 நாட்கள் செயல்முனைவின் 58 வது நாள் மக்கள் குரல் நேற்று செவ்வாய்க்கிழமை (27.09.2022) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந் 100 நாட்கள் செயல்முனைவின் 58ம் நாள் பிரதேசத்தில் உள்ள பிரதேச பெண்கள், இளைஞர்கள்,விவசாயிகள்,பெண்கள் வலையமைப்பு உறுப்பினர்கள், சிறு குழுக்களின் அங்கத்துவர்கள், ஆண்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” “ நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரச…
-
- 0 replies
- 135 views
-
-
"வடமாகாண தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்"... இந்திய துணை தூதுவரை, சந்தித்தனர்! வடக்கு மாகாண கடற்தொழில் இணையமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம் பெற்றது. தற்போதைய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் விதமாக குறித்த கருத்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம் பெற்றது. இந்திய இழுவை மடித் தொழிலினால் வடக்கு பகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி பெற்று தருமா…
-
- 0 replies
- 455 views
-
-
ஜப்பானிய பண விவகாரம்: ஆணையாளரை கண்டித்து... யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், வெளிநடப்பு! யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளில் சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரியாமல் ஆணையாளர் எதேச்சையாக ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ரூபா தொடர்பில் முடிவெடுத்தமையைக் கண்டித்த சபை உறுப்பினர்கள் சிலர் ஆணையாளர் தவறை ஏ…
-
- 0 replies
- 170 views
-
-
அரச ஊழியர்கள், சமூக வலைதளங்களில்... கருத்து, வெளியிடத் தடை ! சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 04/2015 பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரிவு 03ஐ மேற்கோளிட்டு பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. https://athavannews.com/2022/1301632
-
- 0 replies
- 206 views
-
-
இலங்கையில்... 10% தள்ளுபடியுடன், டொலர்களுக்கு... விற்கப்படும் வீடுகள் !! நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு டொலர் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு பெற்றுக்கொண்டால் 10% தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்ட நிலையில் 40,000 டொலர்களை செலுத்தி குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளார் என நகர்ப்புற அபிவிருத்தி …
-
- 0 replies
- 812 views
-
-
இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு இஸ்லாமிய வழிபாடுகள் By DIGITAL DESK 5 27 SEP, 2022 | 10:26 AM இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் திங்கட்கிழமை (26) இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இராணுவத்திற்கு ஆசி வேண்டி சிறப்பு இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன. பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியன பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்-ஹாஜ் மொஹமட் கலீல், செயலாளர் மற்றும் கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபை சபையின் உறுப்பினர்கள் , இராணுவ முஸ்லீம் சங்க தலைவர் பிரிகேடிய…
-
- 8 replies
- 517 views
- 1 follower
-
-
கோழிகளின்.... இறக்குமதி, குறைவடைந்துள்ளதால்... முட்டைகளுக்கு தட்டுப்பாடு. கோழிப் பண்ணைக்கு தேவையான, கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இதேநேரம், கோழிப்பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000 இலிருந்து 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் கோழிப்பண்ணை தொழிலின் எதிர்காலம் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அமைச்சர…
-
- 31 replies
- 1.8k views
-