ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
மேலும்... பல அமைச்சரவை, அமைச்சர்கள்... நியமிக்கப் படுவார்கள் – பிரசன்ன. மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கும் சாத்தியம் உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரிடம், மேலும் பல அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதன் உண்மை தன்மை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அமைச்சர், “மேலும் பல அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படலாம். அப்போது 30ஆக அதிகரிக்கப்படும். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இதை விட கூடு…
-
- 0 replies
- 157 views
-
-
வடமாகாண கல்வியமைச்சின் செயற்பாடுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 12 SEP, 2022 | 12:24 PM வடமாகாணத்தில் போதிய ஆசிரிய ஆளணியிருந்தும், வடமாகாண கல்வித் திணைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கோ, நிதிப்பிரமாண நடவடிக்கைகளுக்கோ உட்படுத்த முடியாத, எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்த முடியாத, தனியார் நிறுவனமாக பதிவுசெய்யப்பட்ட தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தின் வினாத்தாள்களை தவணைப் பொதுப் பரீட்சைகளாக நடத்துவதற்கு, வடமாகாண கல்வித் திணைக்களம் அனுசரணை வழங்குவது சட்டவிரோதமான செயற்பாடாகும். குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை முறையற்ற விதத்தில் ஊக்குவித்து, ஆசிரியர்களையும், பாடசாலைகளையும் தவறான விதத்தில் …
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டா இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து By T. SARANYA 12 SEP, 2022 | 04:31 PM அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக கடந்த ஜூலை மாதம் இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மீண்டும் சமூக ஊடகங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசியக்கிண்ண 2022 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற…
-
- 3 replies
- 332 views
- 1 follower
-
-
13வது திருத்தச் சட்டத்தை... முழுமையாக, அமுல் படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதி, பொருளாதார மீட்சிக்கு இந்த அதிகாரப் பகிர்வும் இலங்கை இனப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வும் தேவை என வலியுறுத்தினார். இதேவேளை பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த போதிலும், மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது. https://…
-
- 13 replies
- 896 views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக... ஜெனீவாவில், ஆர்ப்பாட்டம்! இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://athavannews.com/2022/1298743
-
- 0 replies
- 190 views
-
-
இலங்கைக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி தயார் இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு துறைகளின் ஊடாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா (Kenichi Yokoyama) தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா (Kenichi Yokoyama) உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தபோதே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு துறைகள் குறித்து இதன்போ…
-
- 1 reply
- 177 views
- 1 follower
-
-
மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அதன்படி, பதவியேற்றுள்ள மொத்த இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 38 ஆகும். http://tamil.adaderana.lk/news.php?nid=165552
-
- 5 replies
- 730 views
-
-
அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முக்கிய ஆவணம் அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய பத்திரத்தை கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) அல்லது எதிர்வரும் அமைச்சரவையில் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 65 வயதாக இருந்த அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 256 views
-
-
இடைக்கால அதிகாரத்தை நிறுவி அரசியல் தீர்வை அடைய வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. திறமையான அதிகார வரம்பைக் கொண்ட ஐ.நா. உறுப்பு நாடுகளை, தங்கள் நீதிமன்றங்களில் பயனுள்ள மற்றும் சுதந்திரமான குற்றவியல் மற்றும் பிற நடவடிக்கைகளை எடுக்க தாம் கோரவுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி.ரவி குமார் தெரிவித்தார். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஏற்கனவே நிறுவப்பட்ட சாட்சியங்கள் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் பரிந்துரை பொறிமுறைகளை …
-
- 0 replies
- 130 views
-
-
வீட்டுக்கே நேரடியாக சென்று கோத்தபய ராஜபக்சேவை அதிபர் ரணில் சந்தித்ததால் சர்ச்சை இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடினார். மேலும் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பதவியை விட்டு விலகினர். இலங்கை நெருக்கடியை தீர்க்க புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார். அவர் தற்போது கொழும்பில் உள்ள அரசு பங்களாவில் தங்கி உள்ளார். பொதுமக்கள் மீண்டும் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் பங்களாவை சுற்றி பாதுகாப்புக்கா…
-
- 5 replies
- 652 views
-
-
அண்ணன் செய்த மோசமான செயலால் தங்கை தற்கொலை சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 20 வயதுடைய இளம் யுவதி ஒருவர் மனவிரக்திக்கு உள்ளாகிய தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். மூத்த சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ…
-
- 14 replies
- 1.4k views
-
-
”இது சிங்கள-பெளத்த நாடு என்ற நிலை மாற வேண்டும்”: சமந்தா பவரிடம் மனோ! அமெரிக்க யூஎஸ்எய்ட் நிர்வாகி சமந்தா பவருக்கும், இலங்கையின் ஏழு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், “இன்று இந்நாட்டில் ஏற்பட்டிருப்பது பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல. அதையும் மீறிய அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடி ஆகும். இதற்கு மூல காரணம், இந்நாட்டில், இன்னமும் தீராமல் இருக்கும், தேசிய இனப்பிரச்சினை ஆகும். இதற்கு பிரதான காரணம், இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்ற நிலைப்பாடு மாறாமல் இருப்பதே ஆகும். பல மொழி, பல இனம், பல கலாச்சாரம் என்ற கொள்கை முற்று முழுதாக ஏற்கப்படும் வரை உள்நாட்டில் நிலைமாற்றம் ஏற்பட…
-
- 2 replies
- 202 views
-
-
நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ஐவர் இவர்கள் தான் ! By Shayithan.S September 12, 2022 நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக திட்டமிட்டு பொருளாதார குற்றங்களை இழைத்த குழுவை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பொதுஜன முன்னணியில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டலஸ் அணியை சேர்ந்த சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் சரிது ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த நாட்டு மக்களுக்கு வேண்டுமென்றே குற்றம் செய்ததால்தான் இவ்வளவு கடினமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூட கூறுகிறது. இந்த நெருக்கடியை உருவாக்கியது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். குறித்த அறிக்கையில், ஐவரின் பெயர்கள் தெளிவாக எழுப்பப்பட்டுள்ளன. டா…
-
- 0 replies
- 311 views
-
-
திருக்கோணேஸ்வர ஆக்கிரமிப்பை... தடுத்து நிறுத்துவது தொடர்பாக, யாழில் விசேட சந்திப்பு! வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ். – நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலககத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர். இச்சந்திப்பில் திருக்கோணேஸ்வரம் ஆலய பரிபாலன சபையின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தா…
-
- 4 replies
- 289 views
- 1 follower
-
-
முன்பள்ளிக் குழந்தைகளுக்கான... "மதிய உணவு" வழங்கும் நடவடிக்கை, இம்மாதம் முதல் ஆரம்பம்! உலக வங்கியின் ஆதரவின் கீழ் முன்பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு வழங்கும் நடவடிக்கை இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 35,000 தோட்டப் பிள்ளைகள் உட்பட போசாக்கு குறைபாடுள்ள பிரதேசங்களில் உள்ள 155,000 முன்பள்ளிச் சிறார்களுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நயன எஸ்.பி.கே.டி.சில்வா தெரிவித்தார். தற்போது, 90,000 போசாக்கு குறைபாடுள்ள முன்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதோடு, வழங்குநர்களுக்கு ஒவ்வொரு உணவுக்கும் 30 ரூபாய் வழங்கப்படுகிறது. எனினும் அந்…
-
- 0 replies
- 148 views
-
-
இதுவரை... 500 இலங்கை வைத்தியர்கள், வெளிநாடு சென்றுள்ளனர் – சுகாதாரத் துறையில் கடுமையான பாதிப்பு. கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க இவ்வாறு தெரிவித்தார். இந்நிலைமை பாரதூரமான விடயம் எனவும் கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற வைத்தியர்கள் பலர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். அதன் காரணமாக இராஜினாமா அறிவித்தல் விடுத்துள்ள வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் அதிகமாக உள்ளதாக வைத்தியர் சமில் விஜேச…
-
- 8 replies
- 449 views
- 1 follower
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்.. 51ஆவது அமர்வு, இன்று ஆரம்பம் – இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணித்தல், அறிக்க…
-
- 5 replies
- 434 views
-
-
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து 12 SEP, 2022 | 12:19 AM மகத்தான வெற்றியுடன் ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்த கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்! 2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைத்து எமது கிரிக்கெட் அணி, இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மீண்டும் உயர்த்தி வைத்துள்ளது. அணித் தலைவர் உள்ளிட்ட அணியின் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – வர்த்தமானி 30ஆம் திகதிக்கு பின்னர், வெளியிடப்படும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், தற்போது அதன் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தி அதன் உறுப்பினர்களுக்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான சூழலை தயார்படுத்த வேண்டும். இதன்படி, நீடிக்கப்பட்டுள்ள கால அவகாசம் நிறைவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்க…
-
- 0 replies
- 122 views
-
-
மே 9 வன்முறை : நடவடிக்கைகளை எடுக்கவில்லை - கோட்டா நியமித்த விசாரணை குழு ரணிலுக்கு அறிக்கை By T Yuwaraj 11 Sep, 2022 | 09:57 PM (எம்.எப்.எம்.பஸீர்) நாடெங்கும் கடந்த மே 9 ஆம் திகதி பதிவான வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கு முப்படையினரும் பொலிஸாரும் போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குறித்த தினம் தாக்கி தீ வைக்கப்பட்ட 74 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மீது, அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறப்போவதாக உளவுத் துறையினர் தகவல் அளித்தும் அதனை தடுக்க பொலிசாரும், முப்படையினரும் தவறியுள்ளதாக தெரியவந்துள்ளது. கீழ் …
-
- 0 replies
- 251 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைதுகள் இடம்பெறுவதால் நாம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் - சுமந்திரன் By Vishnu 11 Sep, 2022 | 08:18 PM அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால், நாம் எமது போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 10 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போதே எம்.ஏ.சுமந்திரன் இ…
-
- 0 replies
- 168 views
-
-
ரணில் 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாகி ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து மக்களை நசுக்குகின்றார் - ஜோசப் ஸ்டாலின் By Vishnu 11 Sep, 2022 | 08:23 PM ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகின்றார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை 10 ஆம் திகதி சனிக்க…
-
- 0 replies
- 165 views
-
-
4 எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த டொலர்கள் இல்லை! 150 மில்லியன் டொலர்கள் திரட்ட திண்டாடும் அரசு Digital News Team 2022-09-11T10:08:25 இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாளை வரவுள்ளது. இந்த நான்கு எரிபொருள் கப்பல்களில் ஒரு டீசல் கப்பலுக்கான கொடுப்பனவின் ஒரு பகுதி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்களை அரசாங்கம் திரட்ட வேண்டிள்ளது. செலுத்த வேண்டிய மீதிப் பணத்தை திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்…
-
- 5 replies
- 356 views
- 1 follower
-
-
இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 32 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்த 30 வருட உள்நாட்டு யுத்த காலப் பகுதி மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க 4 வருடங்களின் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு இன்று (செப்டெம்பர் - 11) வாய்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு - மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 29 கைதிகளை சந்திப்பதற்கு இன்று வாய்ப்பு வழங்கப்பட்டதாக 'குரலற்ற…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
தமிழர்களின் கோரிக்கையை முன்னிறுத்தாது ஜெனிவா செல்வது நோய்வாய்ப்பட்ட ஒருவரைப் புறக்கணித்து அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்வதைப் போன்றது - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் By VISHNU 11 SEP, 2022 | 10:51 AM K.B.சதீஸ் தமிழர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி முன் பிரச்சாரம் செய்யாமல் ஜெனிவா செல்வது, நோய்வாய்ப்பட்ட ஒருவரைப் புறக்கணித்து, அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்வதைப் போன்றது என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையில் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரி…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-