ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கையின் யோசனையை ஏற்றுக்கொண்டு அதற்கு ஆதரவாக வாக்களித்த 29 நாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நாடுகளுக்கும் இலங்கை நன்றித் தெரிவித்து கொள்வதாகவும் இலங்கையின் யோசனையை ஏற்றுக்கொள்ளாத 12 நாடுகளுக்கு எதிர்வரும் காலங்களில் குறித்த நாடுகளில் அமையப் பெற்றுள்ள இலங்கைத் தூதரகங்களின் ஊடாக உரிய விபரங்களை விளக்கி கூற நடவடிக்கை எடுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட யோசனை வெற்றிப்பெற்றமை தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசு அடிப்படை மனித உரிமைகளுக்காக செயற்படும்…
-
- 0 replies
- 641 views
-
-
2014 முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல்; தீவிர ஆலோசனையில் மஹிந்த அரசு ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருட முற்பகுதியில் நடத்துவது தொடர்பில் அரசு தீவிர ஆலோசனை நடத்திவருகின்றது என நம்பகரமாகத் தெரிய வருகின்றது. இவ்விவகாரம் சம்பந்தமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆலோசகர்களுடன் அண்மையில் மந்திராலோசனையில் ஈடுபட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் வடக்கு, வடமத்திய, மத்திய மாகா ணங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அடுத்ததாக அரசு ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, 2014இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என முன்னதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தாலும், தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையிலான முக்கிய சில தகவல்கள் அரச உ…
-
- 0 replies
- 305 views
-
-
ஈழ மக்களுக்கு வலுச்சேர்க்க பிரித்தானியாவில் அறவளிப்போர்: 6 அம்சக் கோரிக்கைகளுடன் காலவரையறையற்ற உண்ணாவிரதம் தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் தமது சொந்த காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களினால் காலவரையறையற்ற தொடர் அறவளி உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34 ஆவது அமர்வு இன்று nஐனிவாவில் ஆரம்பமாகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவின் வெஸ்மினிஸ்டர் நகரில் இவ்வறவழிப்போராட்டம் நடைபெற்று வருகி…
-
- 0 replies
- 162 views
-
-
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை எஸ்.நிதர்ஸன் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகை தரும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இதன்போது பட்டதாரிகளுக்குத் தீர்வை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்திருக்கும் மாவை சேனாதிராசா இப் பேச்சுவார்த்தையினூடாக எடுக்கப்படுகின்ற முடிவு பட்டதாரிகளுக்கு நல்லதோர் தீர்வான அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் பட்டதாரிகள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார். வடக்க…
-
- 0 replies
- 160 views
-
-
ஐ.நா.வில் எதிராக வாக்களித்த நாடுகளை தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்கத் தடை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகளை, வடக்கு மாகாணசபைத் தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்கக் கூடாது என தனக்கு பணிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் செயலர்களுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர்,ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்கப்படமாட்டார்கள். என்று தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகளை தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அவர் கூறியுள்ளார…
-
- 0 replies
- 384 views
-
-
கல்கிஸை - ஹூலுது கொட பகுதியில் நேற்றிரவு (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குழுவினரை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது மறைந்திருந்த குழுவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்கிஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://tamilworldtoday.com/?p=23269
-
- 0 replies
- 375 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் ‐ மனித உரிமை கண்காணிப்பகம் : அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமை ஓர் பாரதூரமான நிலைமையாகும் என மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நட…
-
- 0 replies
- 505 views
-
-
கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்து கொண்டால் எவ்வாறிருக்கும்? அவ்வாறான ஒரு நிலையையே இரண்டு விடயங்களால் கொழும்பு அதிகாரம் எதிர்நோக்குகின்றது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=23910
-
- 0 replies
- 599 views
-
-
மீனவர் பலி; கடற்படை வீரர்கள் இருவர் கைது -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில், குள்ளா படகு மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கடற்படை வீரர்கள் இருவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர், விடத்தல் தீவு 7 ஆம் வாட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாசன் கில்மன் (வயது39) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, “மீனவர் குள்ளா படகு மூலம் விடத்தல் தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, கடற்பாதுகாப்பில் ஈடுபட்ட கடற்படையினர் கடலில் படக…
-
- 0 replies
- 229 views
-
-
ஜாவா படகு விபத்து: 4 பெண்களின் சடலங்கள் கரையொதுங்கின – பலியானோர் தொகை 15 ஆகியது [ சனிக்கிழமை, 27 யூலை 2013, 02:04 GMT ] [ தா.அருணாசலம் ] இந்தானேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய அகதிகள் படகில் பயணம் செய்த நான்கு பெண்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கின. இதையடுத்து இந்த விபத்தில் மரணமானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று படகு மூழ்கிய இடத்தில் இருந்து மேற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள உயுங் ஜென்ரெங் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கரையொதுங்கின. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறிலங்காவைச் சேர்ந்த தமிழர்களும் அடங்கியுள்ளனர். சடலங்கள் மீட்கப்பட்டு உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 15 பேரில், 18 மாத…
-
- 0 replies
- 305 views
-
-
வாகன இறக்குமதிக்கு தடை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இலங்கைக்கு வரும் ஆடம்பர வாகனங்கள்…! வாகன இறக்குமதிக்கு நாட்டில் இடைக்கால தடை விதித்த போதிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இவை டொயோட்டா லங்கா நிறுவனம் வழியாக ஜப்பானில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்ளூர் மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை ஒப்படைத்துள்ள புதிய உறுப்பினர்களுக்கு வாகனத்தை கொள்வனவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கருவூலத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை இவற்றைத்தவிர 50 அம்பியூலன்ஸ்கள், 50 தண்ணீர் லொரிகள் மற்றும் 50 டபு…
-
- 2 replies
- 274 views
- 1 follower
-
-
இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காகவென அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் குழு தனது செயற்பாடுகளை ஒரு மாத காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 316 views
-
-
கொழும்பு வோக்ஷல் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் ஊடகப் பிரிவிலும் மற்றும் ச.தொச. பணிப்பாளரின் அலுவலகத்திலும் இன்று (31) அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=25395
-
- 0 replies
- 277 views
-
-
படங்களுடன் வந்த இவ்வாக்கத்தினைப் பார்வையிட http://my.telegraph.co.uk/richarddixons/bl..._land_of_terror
-
- 20 replies
- 2.5k views
-
-
ஈழத்தமிழர்களின் அரசியலில் புதிய வாசல்களை திறப்பாரா நீதியரசர் விக்னேஸ்வரன்? [ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 08:13 GMT ] [ நித்தியபாரதி ] வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், முதலமைச்சராக பதவியேற்கும் விக்னேஸ்வரன் சாதி, மதம், பிராந்தியம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து வடக்கு மாகாண சபையை தன்னால் நிர்வகிக்க முடியும் என நம்புகிறார். இவ்வாறு கொழும்பை தனமாகக்கொண்ட The Island ஆங்கில ஊடகத்தில் Gnana Moonesinghe எழுதியுள்ள விவரண கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர், மக்களின் நீண்ட காலக் காத்திருப்பி…
-
- 0 replies
- 738 views
-
-
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து, எடுக்கப்பட வேண்டியநடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும் நோக்கில் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையில் சிறப்புக் குழுவொன்றை நியமித்துள்ளதாகசிறிலங்காவின் அரசுத் தலைவர் பணியகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
19 வயது பெண் ஒருவரை பயன்படுத்தி நிர்வாண வீடியோ காட்சிகளை படமெடுத்து இருவட்டில் உள்ளடக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் பௌத்த விகாரையின் விகாராதிபதி பிக்கு ஒருவரை விசாரணை செய்வதற்காக கைது செய்துள்ளளாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவியின் காட்சிகளே இந்த இருவட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பிக்கு தன்னியக்க வீடியோக் கெமரா ஒன்றின் மூலமே இந்தக் காட்சிகளை எடுத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://goldtamil.com/?p=6278
-
- 4 replies
- 1k views
-
-
தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக கைரேகைகளுடன் கூடிய தேசிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் சிறிலங்கா அரசால் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் இவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே உள்ள அடையாள அட்டைகள் அனைத்தும் இலத்திரனியல் அடையாள அட்டைகளாக மாற்றப்படும். பாவனையில் உள்ள அடையாள அட்டைகள் மனித வலுவைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. இதனால் அவற்றில் இலகுவாக மேசாடி செய்ய முடிகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அடையாள அட்டைகள் 1972 ஆம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளன. புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் முழுவதுமாக கணினி மயப்படுத்தப்படுவது…
-
- 0 replies
- 383 views
-
-
கிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்) கிழக்கு மாகாணத்தில் இன்று (27) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது.இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன. தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில…
-
- 8 replies
- 2.1k views
-
-
தமிழ் மக்களின் அரசியல் கவலைகளைப் போக்கும் வகையிலான அரசியல் மறுசீரமைப்பை நோக்கி முன் நகருமாறு சிறிலங்கா அரசை அமெரிக்காவும் அனைத்துலக சமூகமும் வலியுறுத்த வேண்டும் எனக் கோரும் பிரேரணை ஒன்று அமெரிக்க காங்கிரஸ் மக்கள் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அவை உறுப்பினர்களான டானி டேவிஸ் மற்றும் ஷீலா ஜாக்சன் லீ அம்மையார் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்தப் பிரேரணையில் - சிறிலங்கா அரசு இயல்பு நிலையை ஏற்படுத்தும் வரையும் தமிழர்களைப் பொறுமை காக்குமாறு அமெரிக்கா வேண்டிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள் விபரங்கள் வருமாறு: சிறிலங்கா அரசினால் நடத்தப்படும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் ம…
-
- 0 replies
- 392 views
-
-
FacebookTwitterWhatsApp பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.யுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இராப்போசனத்துடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரதமரின் பாரியாரும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பல முக்கியமான விடயங்கள் குறித்து, இருவரும் கலந்துரையாடினர் என அறியமுடிகின்றது. Tamilmirror Online || மஹிந்த –ரணில் முக்கிய சந்திப்பு
-
- 7 replies
- 524 views
-
-
வெலிவேரிய தாக்குதல் தொடர்பிலான இராணுவ அறிக்கை வெளியிடப்படுமாம்! வெலிவேரிய, ரதுபஸ்வலவில் பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு தாக்குதல் தொடர்பாக விசாரித்த, இராணுவ நீதிமன்றத்தின் முடிவுகள், வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான இராணுவ நீதிமன்றம், வெலிவேரிய சம்பவம் தொடர்பான அறிக்கையை, கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கையளித்திருந்தது. இராணுவ நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்ட முடிவுகள், இராணுவப் பேச்சாளர் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையை, இராணுவ சட்டப்பிரிவிடம், சிறிலங…
-
- 0 replies
- 228 views
-
-
மேதின நிகழ்வுகளும் கட்சிகளின் நிலைப்பாடுகளும் இலங்கையிலுள்ள கட்சிகள் மேதினக் கூட்டங்களை, தமது கட்சி நலனுக்காகவும் ஆட்சி நலனுக்காகவும் இருப்புக்களைக் காத்துக் கொள்வதற்கும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை தனித் தனியாக மதிப்பீடு செய்து பார்ப்பதன் மூலம் அவற்றின் தாற்பரியங்களைப் புரிந்து கொள்ள முடியும். தமது மேதா விலாசத்தை வெளிப்படுத்தவா, மேதினத்தை இலங்கையின் தேசியக்கட்சிகளும் பிராந்தியக் கட்சிகளும் விழாவாக கொண்டாடின என்று ஏழைப் பாட்டாளிகளும் விவசாயிகளும் கேட்குமளவுக்கு இவ்வருட மேதின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஏழைப்பாட்டாளிகளின் மற்றும் விவசாயிகளின், அடிப்படைப்…
-
- 0 replies
- 309 views
-
-
நியூசிலாந்தின் துடுப்பாட்டக் குழு சிறிலங்காவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை தற்போது மேற்கொண்டுளமைக்குத் தமது அதிருப்தியை தெரிவிக்கும் முகமாக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நியூயோர்க்கில் உள்ள நியூசிலாந்தின் ஐக்கிய நாடுகள் சபைக்கான உயர் ஆணையக அலுவலகம் முன்பாக கவனஈர்ப்புப் போராட்டத்தினை நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள அமெரிக்க தமிழர்களின் அரசியல் நடவடிக்கைக் குழு, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதையும், முகாம்களில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையிலும் நியூசிலாந்து இந்த சுற்றுப்பயணத்தை இரத்துச் செய்து, நியூசிலாந்திலும் அனைத்துலக ரீதியாகவும் சிறிலங்கா குழுவினரையும் விளையாட்டு வீரர்களையும் ப…
-
- 0 replies
- 474 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பி;ள்ளையின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அதிருப்தி வெளியிட்டுள்ளார். நவனீதம்பிள்ளை சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமது பக்க நியாயங்களைக் கேட்டறிந்து கொள்ள நவனீதம்பிள்ளை விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வார காலம் நவனீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருப்பதாகவும், தம்மை சந்திக்க போதியளவு கால அவகாசம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே சந்திப்பு ஒன்றுக்கு வாய்ப்பு அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தாம் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளை மெய்யாகவே க…
-
- 1 reply
- 552 views
-