ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
ஆளுநர்கள்.. நியமனம் தொடர்பாக, குழப்ப நிலை! ஒன்பது மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய பலரை ஆளுனர்களாக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆளுனர் பதவிகளுக்கு தனித்தனி பெயர்களை முன்மொழிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 என்பதனால் தமக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரியுள்ளனர். தயா கமகே, ஜோன் அமரதுங்க நவீன் திசாநாயக்க மற்றும் வடமேல் மாகாண …
-
- 2 replies
- 254 views
-
-
தடை செய்யப்பட்ட.. தமிழ் அமைப்புகள் குறித்து, பாதுகாப்பு அமைச்சு விளக்கம்! பல தரப்பினருடன் நடத்திய நீண்ட ஆய்வுக்குப் பின்னர் தடைப்பட்டியலில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு அமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியன ஆய்வை மேற்கொண்டுள்ளன. 2021ஆம் ஆண்டு 577 பேரும், 18 அமைப்புகளும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில் த…
-
- 6 replies
- 424 views
-
-
நாடு கடத்தப்படவுள்ள... ஸ்கொட்லாந்து யுவதி, மாயம். – விசாரணைகள் ஆரம்பம்! நாடு கடத்தப்படவுள்ள ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த கெய்லி பிரேசர் என்ற யுதவியினை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி கெய்லி பிரேசர் செய்த விண்ணப்பத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது. குடியகல்வு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு காரணம் கூறாமல் வீசாவை நிறுத்தவோ அல்ல…
-
- 0 replies
- 152 views
-
-
இலங்கையில்... புலம்பெயர்தோரின், உதவிகளைப் பெற்றுக் கொள்ள... காரியாலயம்- ஜனாதிபதி புலம்பெயர் மக்களிடமிருந்து இலங்கைக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ள விசேட புலம்பெயர்ந்தோர் காரியாலயமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார சிக்கலில் சிக்குண்டுள்ள நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இந்த நடவடிக்கை அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பணிக்குழாம்மட்ட ஒப்பந்தம் இறுதிகட்டத்தை நெருங்க…
-
- 0 replies
- 147 views
-
-
அதானி கிரீன் எனர்ஜிக்கு மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் திட்டங்களுக்கு அனுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.(15) …
-
- 2 replies
- 416 views
-
-
கோட்டாவின்... பிரத்தியேக ஜெட் விமானத்திற்கான, பணத்தினை... செலுத்திய இலங்கை அரசாங்கம்? முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, தாய்லாந்தில் தங்கியுள்ளார். அவர் சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலமே தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றுள்ளார். இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, ஆம் என பதில் வழங…
-
- 2 replies
- 292 views
-
-
சீன கப்பல் இலங்கை வருகை – இந்திய கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம் சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் – 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது.இந்நிலையில்தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.இதேவேளை இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். …
-
- 0 replies
- 302 views
-
-
வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணப் பொதி! எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது மக்களுக்கு நிவாரண பொதியொன்று வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு, ரூபாவிற்கு ஈடாக டொலரின் மதிப்பு அதிகரிப்புடன் வாழ்க்கைச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 203 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 365 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 192 views
-
-
'களைக்கொல்லிக்கு' இலங்கையில் மீண்டும் அனுமதி - முன்பு தடை, இப்போது ஒப்புதல் ஏன்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்குக்குக் காரணமானது எனக்கூறி - தடை செய்யப்பட்டிருந்த 'கிளைபொசேட்' (Glyphosate) எனும் களை நாசியை இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் இலங்கை அரசு மீளவும் அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் வெளியான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, இம்மாதம் 05ஆம் தேதியிலிருந்து மேற்படி களை நாசினிக்கு விதிக்கப்பட்டிருந…
-
- 0 replies
- 649 views
- 1 follower
-
-
UNP VS SLPP – பனிப்போர் தொடர்கிறது! August 17, 2022 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், பனிப்போர் இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் விடயத்திலேயே இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஆளுநர்களாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலரை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் சிலரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ஜோன் அமரதுங…
-
- 0 replies
- 601 views
-
-
இவ்வார இறுதிக்குள்... அவசரகால சட்டத்தை, நீக்க முடியும்- ஜனாதிபதி நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற தொழில்சார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022 விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கைக்கு... பெரும் வர்த்தகச் சலுகையை, வழங்கியது பிரித்தானியா !! 2023 ஆம் ஆண்டிலிருந்து வளரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டத்தில் (DCTS) இலங்கையையும் இணைத்துக்கொள்ள பிரித்தானியா தீர்மானித்துள்ளது. இதன்மூலம் பிரித்தானிய சந்தைகளுக்கு அதிக அணுகலை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு நன்மை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 80%க்கும் அதிகமான ஏற்றுமதிப் பொருட்களை இங்கிலாந்து சந்தையில் வரியின்றி பெற்றுக்கொள்ள முடியும் இது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் அதேவேளை வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கூறியுள்ளார். இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிசலுகையை போன்ற திட்டம் என்பதும் க…
-
- 0 replies
- 224 views
-
-
மூன்றாம் தரப்பிற்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையென்ற உறுதிப்பாட்டின் பின்னரே சீன கப்பல் அனுமதிக்கப்பட்டது - பந்துல By T. SARANYA 16 AUG, 2022 | 08:32 PM (எம்.மனோசித்ரா) சீன கண்காணிப்பு கப்பலால் மூன்றாம் தரப்பிற்கு எவ்வித பாதிப்புக்களோ அல்லது பிரச்சினைகளோ ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே, அதன் வருகைக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையான்மைக்கு மதிப்பளித்து சீனா மற்றும் இந்தியாவுடனான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கமும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் செய்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பிராந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்…
-
- 0 replies
- 159 views
-
-
விமானங்களுக்கான எரிபொருளை... தனியாரிடமிருந்து, கொள்வனவு செய்ய நடவடிக்கை? பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாவிட்டால், தனியார் துறையினருக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அண்மையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், அமைச்சும் தேவையான அனுமதி மற்றும் வசதிகளை வழங்கினால் விமான எரிபொருளை தமது சொந்த செலவில் இலங்கைக்கு கொண்டு வந்து விநியோகிக்க தயார் என விமானத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை இரண்…
-
- 0 replies
- 189 views
-
-
இலங்கை மக்களின் மக்களாணைக்கு மதிப்பளித்து சீனா இலங்கையுடன் இணக்கமாக செயற்படுகிறது - விமல் By T. SARANYA 16 AUG, 2022 | 04:07 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடவில்லை. அத்துடன் இலங்கைக்குள் தொண்டு நிறுவனங்களை நிறுவி, நிதியுதவி வழங்கி ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் முயற்சிகளை சீனா ஒருபோதும் முன்னெடுக்கவில்லை. இலங்கை மக்களின் மக்களாணைக்கு மதிப்பளித்து சீனா இலங்கையுடன் இணக்கமாக செயற்படுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்த சீனாவின் யுவான் வான் -05 கப்பலை வரவேற்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரைய…
-
- 0 replies
- 148 views
-
-
22 ஆவது திருத்தம் பிரிவினைவாத அரசியலமைப்பு சதித்திட்டம் - குணதாச அமரசேகர சபாநாயகருக்கு கடிதம் By DIGITAL DESK 5 16 AUG, 2022 | 03:26 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல நடவடிக்கை ஊடாக பாராளுமன்றத்துக்குள் பிரிவினைவாத அரசியலமைப்பு சதித்திட்டம் இடம்பெறும் அபாயம் இருக்கின்றது. அதனால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சட்டமூலம் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்த இடமளிக்கப்படவேண்டும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 22 ஆவது அரசியலமைப்ப…
-
- 0 replies
- 182 views
-
-
கோட்டாபய ராஜபக்ஷவிற்கான சிறப்புரிமைகளை வழங்கும் பொறுப்பு எமக்குள்ளது - பந்துல By T. SARANYA 16 AUG, 2022 | 09:25 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் சிறப்புரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி தேர்தல் சட்டங்களுக்கமைய முன்னாள் ஜனாதிபதிக்கும், நிகழ்கால ஜனாதிபதிக்கும் காணப்படும் சிறப்புரிமைகள் தொடர்பில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி பயன்படுத்திய பிரத்தியேக விமானத்திற்கு இலங்கை அரசாங்கமே பணம் செல…
-
- 0 replies
- 163 views
-
-
பொது மக்கள்... தமக்குத் தேவையான, கடலுணவுகளை... "ஒன் – லைன்" மூலம், பெற்றுக் கொள்ளவதற்கான வசதி. -டக்ளஸ் தேவானந்தா.- பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சேவை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன்விற்பனை நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். அதனடிப்படையில் PICME ஊடாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் இருந்து தேவையான கடலுணவுகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. htt…
-
- 5 replies
- 452 views
-
-
By T. SARANYA 16 AUG, 2022 | 12:12 PM யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த 14 வயது மாணவனே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். தான் சொன்ன பணியைச் செய்யவில்லை என்று தெரிவித்து அதிபர், மாணவனை கடுமையாகத் தாக்கினார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனுக்கு நெற்றியில் காய…
-
- 2 replies
- 622 views
-
-
தாமரை கோபுரத்தை... அடுத்த மாதம், 15 ஆம் திகதி முதல்... திறந்து வைக்க தீர்மானம்! கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களை பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே அதில், சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வ…
-
- 7 replies
- 932 views
-
-
ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார். இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட…
-
- 15 replies
- 1.3k views
-
-
By DIGITAL DESK 5 16 AUG, 2022 | 03:16 PM (எம்.மனோசித்ரா) தமிழ் மற்றும் சிங்களம் என்பன அரச மொழிகளாகும். எனவே அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் இவ்விரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும். அதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பில் எந்த பிரச்சினைகளும் தோற்றம் பெறவில்லை. இதற்கு முன்னரும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள…
-
- 4 replies
- 342 views
-
-
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு 14 August 2022, 9:58 am தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் அழை…
-
- 17 replies
- 1.3k views
-
-
By RAJEEBAN 16 AUG, 2022 | 04:06 PM புலம்பெயர் அமைப்புகள் சில தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கிறது. ஆயினும் உறுதியான தொடர் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இலங்கையில் இன உறவுகள் மற்றும் பொருளாதார விளைவுகள் மேம்படும் வகையில் புதிய இலங்கை அரசாங்கத்தால் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது. எவ்வாறாயினும், ஓகஸ்ற் 1, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பல தமிழ், முஸ்லிம் அமைப்புக்கள், தனிநபர்கள்…
-
- 4 replies
- 595 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் பொறியியல்பீட வளாகத்தின் முதலாவது பொறியியல் மாநாடு நடைபெறவுள்ளது என பொறியியல்பீட பேராசிரியர் அ.அற்புதராஜா தெரிவித்துள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா,கனடா, சீனா, கொங்கொங் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இதன்போது தங்களது ஆய்வுகளையும் அவர்கள் சமர்ப்பிக்கவுள்ளனர். இந்த மாநாடு மாணவர்களது கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆய்வுகளை பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு களமாக அமையும் என பொறியியல்பீட பேராசிரியர் மேலும் தெரிவித்தார். அறிவியல்நகர் வளாகத்தில் முதலாவது பொறியியல் மாநாடு | உதயன் …
-
- 0 replies
- 188 views
-