ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி - வாசுதேவ நாணயக்கார By T. SARANYA 01 SEP, 2022 | 09:10 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்த…
-
- 12 replies
- 1.1k views
-
-
நிவாரணத்தை பெற்றுக் கொள்வதில்... அரசியல் ஸ்திரமின்மை, பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை ! இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மை, சர்வதேச நாணய நிதியத்தால் பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தங்களைச் செயற்படுத்தும்போதும் பாதிப்பை ஏற்படுத்தும் என தரமதிப்பீட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தடுப்பதற்காக அரசாங்கம் சமூகத்துக்கான செலவீனங்களை அதிகரித்த போதிலும், அரசாங்கம் மீதான பொதுமக்களின் ஆதரவு பலவீனமாகவே காணப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வருமான வரி சீர்திருத்தத்தின் தேவை சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் முக்கிய பகுதி என்றும் தரமதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் த…
-
- 0 replies
- 174 views
-
-
22வது திருத்தம், எதிர்காலத்தை தீர்மானிக்கும்... ஒரு முக்கிய காரணி ! -முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய.- அரசியலமைப்பின் 22வது திருத்தம் இலங்கையின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணி என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. எனவே இந்த முயற்சிக்கு அனைத்து உறுப்பினர்களும் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அதன் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டார். அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்து செய்து அதன் மூலம் நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரங்களை நீக்குவதே முதற் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதில் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் தீர்மானத்தின் …
-
- 0 replies
- 183 views
-
-
ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலையை 300 ரூபாவுக்கு குறைக்க முடியும் -அலி சப்ரி சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து நிதி வருவதால், ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300 ரூபாவுக்கு குறைக்க முடியும் என தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். “பணம் அனுப்புதல் மற்றும் நிதி உட்பாய்சல் அதிகரிப்பால் ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையை சுமார் ரூ. 300 ஆக குறைக்க முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது ஒரு அமெரிக்க டொலரின் விலை ரூ. 367. 30 உள்ளது. https://thinakkural.lk/article/204984
-
- 2 replies
- 334 views
-
-
IMF கடன் வசதியை பெற்றுக்கொள்வதில் அரசியல் ஸ்திரமின்மை பாதிப்பை ஏற்படுத்தும்: Fitch Ratings தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவித்தாலும், கடன் மீள்கட்டமைப்பை மேற்கொள்ளும்போது, அரசியல் ஸ்திரமற்றதன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது. IMF இலங்கையின் கடன் சுமையை 'தாங்க முடியாதளவு' உள்ளதென மதிப்பிட்டுள்ளது. எனவே கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவு கடன் நிவாரணத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 30 ஆம் திகதி புதிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் செப்டம்பர் 1 முதல் VAT இன் நிலையான விகிதத்தை 12% இலிர…
-
- 0 replies
- 228 views
-
-
இடைக்கால வரவு - செலவுத்திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 02 SEP, 2022 | 06:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) அரசாங்கத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களின் செலவுகளுக்காக நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (2) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. கடந்த புதன்கிழமை முதல் இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுதிட்ட உரை மீதான விவாதத்தின் இறுதிநாள் இன்று இடம்பெற்றது. காலை 9.30 மணி முதல் இடம்…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
யாழ்,சுழிபுரம் பகுதியில் வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய இருவர் கைது By T YUWARAJ 02 SEP, 2022 | 09:54 PM யாழ்,சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் கடமைக்கு சென்று திரும்பிய போது அவரது வீடு உடைக்கப்பட்டு 8 தங்கப் பவுண் நகை திருட்டுப் போயிருந்தது . இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது . முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமை பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் கேள்வி: "ஓய்வு வயது குறைப்பு அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா?" ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஓய்வூதியம் பெறும் வயது வரம்பை குறைப்பதற்கு அரசாங்கம் சமீபத்தில் எடுத்துள்ள தீர்மானம், தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு இதுவரை காலமும் ஓய்வூதியம் பெறும் வயது 65 என காணப்பட்ட நிலையில், அந்த வயதெல்லையை 60 வரை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இடைகால வரவு செலவுத்திட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதி அம…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
பொலிஸார்... சங்கிலி அபகரிப்பு, மற்றும் கொள்ளைச் சம்பவங்களில்... ஈடுபடுகின்றனர் – சரத் பொன்சேகா. கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான விலைமானுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயின் தரம் குறைவாக இருப்பதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல…
-
- 3 replies
- 315 views
-
-
இலங்கைக்கு... பணம் அனுப்ப வேண்டாம் – வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம், சரத் பொன்சேகா கோரிக்கை! அரச பயங்கரவாதம் செயற்படும் நாடான இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒரு பைசாகூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பசியால் சாகத் …
-
- 6 replies
- 1.1k views
-
-
சிறுபான்மை மக்களை... அடக்கி ஆள நினைப்பது, நாட்டை பலவீனப்படுத்தும் – சந்திரிக்கா! சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். The Hindu -விற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ராஜபக்ஸவினரின் ஆட்சியால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் அணிசேராக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜபக்ஸக்கள்…
-
- 5 replies
- 580 views
-
-
சஜித் மற்றும் டலஸ் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்! இன்று நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் உறுதிப்படுத்தினார். அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவும் இன்று நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தினார். இதேவேளை,…
-
- 0 replies
- 354 views
-
-
பாராளுமன்றில் தேரரின் செயல் - வௌிப்படுத்திய கோவிந்தன் கருணாகரன்! இந்தியா எமக்கு உதவிக் கப்பல்களை அனுப்புவதாகவும், ஆனால் சீனா உளவுக் கப்பலை அனுப்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் இடைக்கால வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். இந்த காலகட்டத்திலே எங்களுக்கு உதவிய நாடு, அயல் நாடு இந்தியா மாத்திரமே. இந்தியா கடந்த பொருளாதார நெருக்கடியிலே 4 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. குறைந்த வட்டியில் 800 மில்லியன் உணவுக்காவும், மருந்துக்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்கும் வழங்கியுள்ளது. கடன் அட…
-
- 0 replies
- 550 views
-
-
இலங்கை குறித்து ஜப்பானிய நிதி அமைச்சரின் கோரிக்கை இலங்கைக்கு கடன் வழங்கிய சீனா, இந்தியா போன்ற நாடுகளை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் இணையுமாறு ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் இன்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ஜப்பானிய நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி இந்த கோரிக்கையை விடுத்தார். இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டிய பின்னர் ஜப்பான் இதனை அறிவித்துள்ளது. இலங்கைக்கு தொடர்பான கடன் வசதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த அடிப்படை நிபந்தனையாக, பிரதான கடன் வழங்கும் நாடுகளுடன…
-
- 0 replies
- 236 views
-
-
பசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி By T. SARANYA 02 SEP, 2022 | 01:50 PM முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/134901
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுமாறு இந்தியாவே ஊக்கப்படுத்தியது - மிலிந்த மொரகொட By RAJEEBAN 02 SEP, 2022 | 11:46 AM சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை நம்பிக்கை தருகின்றது என தெரிவித்துள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட இந்தியாவிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்துடனான ஆரம்ப கட்ட உடன்படிக்கையின் கீழ்; இலங்கை தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக 2.9 பில்லியன் டொலரை பெறவுள்ள பொருளாதார மீட்சி தொடர்பிலான முதல் நடவடிக்கை என தெரிவித்துள்ள மிலிந்தமொராகொட எனினும் இலங்கை முதலீடுகளையும் வெளிநாட்டு வருவாய்களையும் கவர்வதற்கான நம்பிக்கையை நாட்டிற்கும் முதலீட்டாளர்களிற்கும் இது வழங்கும்…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
நிபந்தனையற்ற ஒத்துழைப்பிற்கு இரு கைகூப்பி இந்தியாவை வணங்க வேண்டும் - குமார வெல்கம By T. SARANYA 01 SEP, 2022 | 09:02 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) சீனாவும் அமெரிக்காவும் கூறியதைப் போன்று பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை. ஆனால் நெருக்கடியான சூழ்நிலையில் வழங்கிய நிபந்தனையற்ற ஒத்துழைப்பிற்கு இரு கைகூப்பி இந்தியாவை வணங்க வேண்டும். இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்தி, இணக்கமாக செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தின் போது உரையாற்ற…
-
- 5 replies
- 365 views
- 1 follower
-
-
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை... 60ஆக அறிவிக்கும் அறிவிப்பு, வெளியிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1297151
-
- 1 reply
- 170 views
-
-
ஆதரவாக வாக்களித்த... உறுப்பினர்களுடன் இணைந்து, ஜனாதிபதி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்- நாமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஆதரவாக வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு யோசனைகளை முன்வைத்த கட்சிகள் கூட இன்று அதற்கு இணங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தமக்கு வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலமான அரசாங்கத்தை ஜனாதிபதி நியமித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் …
-
- 0 replies
- 144 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் இலங்கை முன்னெடுத்த திட்டங்களுக்கான வெற்றி - பிரதமர் By T. SARANYA 01 SEP, 2022 | 08:30 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம். வசீம்) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளமை பொருளாதார மீட்சிக்காக நாம் முன்னெடுக்கும் திட்டங்களின் பிரதான வெற்றியாகும். வங்குரோத்து நிலையினை அடைந்துள்ள நாட்டை முன்னேற்றமடைய செய்து எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த நாட்டை உருவாக்கிக் கொடுக்க ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்…
-
- 0 replies
- 460 views
-
-
துப்பாக்கிப்பிரயோகங்களை கட்டுப்படுத்தாது போராட்டங்களை முடக்க படையினர் குவிக்கப்படுகின்றனர் - சுமந்திரன் By T. SARANYA 01 SEP, 2022 | 09:01 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது. நாட்டில் தீவிரமடைந்துள்ள துப்பாக்கி பிரயோகங்களை தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக மக்கள் போராட்டத்தை முடக்க ஆயிரகணக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுப்படுத்தப்படுகிறார்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். பாரா…
-
- 0 replies
- 164 views
-
-
இலங்கை போன்றதொரு நிலைமையை பங்களாதேஸ் ஒருபோதும் எதிர்கொள்ளாது- பிரதமர் ஷேக் ஹசீனா By RAJEEBAN 30 AUG, 2022 | 05:23 PM பங்களாதேஸ் இலங்கை போன்றதொரு நிலையை எதிர்கொள்ளாது என அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பங்களாதேஸ் இலங்கை போன்றதொரு நெருக்கடியை சந்திக்காது மாறாக அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அது முன்னோக்கி நகரும் என அவர் தெரிவித்துள்ளார். எனது கட்சி தலைவர்களும் ஆதரவாளர்களும் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பங்களாதேஸ்ஒருபோதும் இலங்கை போன்றிருக்காது இருக்கவும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார். முன்னைய பிஎன்பி அரசாங்கத்தின் காலத்தில் பங்களாதேஸ் இலங்கைபோன்றதொரு நிலைய…
-
- 7 replies
- 980 views
- 1 follower
-
-
சீனா கொழும்பின் கடன்மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன நடக்கும்? சர்வதேச நாணயநிதியத்தின் பதில் என்ன? By RAJEEBAN 01 SEP, 2022 | 02:59 PM இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் இணங்க மறுத்தால் இலங்கையின் நெருக்கடி தீவிரமடையும் என சர்வதேச நாணயநிதியம் எச்சரித்துள்ளது. கடன்மறுசீரமைப்பு விடயத்தில் சீனா மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்து செயற்படாது என்ற கரிசனைகளிற்கு மத்தியில் சர்வதேச நாணயநிதிய அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார். இன்று ஏற்பட்;டுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில் சர்வதேச நாணயநிதியம் 2.9 பில்லியன் டொலரை வழங்குவது என்றால் சீனா உட்பட இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் அனைத்தும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தி…
-
- 1 reply
- 387 views
- 1 follower
-
-
இலங்கை மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட 'நன்றி இந்தியா ' 01 SEP, 2022 | 04:19 PM இந்திய அரசாங்கத்தினாலும் மக்களாலும் உரிய தருணத்தில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நோக்கில் 'நன்றி இந்தியா' என்ற தலைப்பிலான நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பங்கேற்றுக்கொண்டிருந்ததுடன், இலங்கை மக்களின் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் அவரிடம் விருதொன்றும் கையளிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி கலாநிதி கொஸ்கொட சிறி சுபுதி அனுநாயக்க தேரர், கலாநிதி எம்.விமலசார தேரர், பேராசிரியர் மல்லாவ ஹன்டி ஜ…
-
- 3 replies
- 343 views
- 1 follower
-
-
நாட்டை வங்குராேத்து அடையச்செய்தமை தொடர்பிலான விசாரணையை கோருவது 225 பாராளுமன்ற உறுப்பினரதும் கடமையாகும் - வஜிர அபேவர்த்தன By VISHNU 01 SEP, 2022 | 09:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) நாட்டை வங்குராேத்து அடையச்செய்தமை தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ள கோருவது பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரினதும் கடமையாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 01 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 131 views
- 1 follower
-