Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இன்றைய நிகழ்வு மெல்பேர்ண் நகரில் இற்றை வரை நடைபெற்ற அனைத்து தமிழ் நிகழ்வுகளுக்கும் மகுடம் சூட்டியது போன்று காணப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் முகங்களே தெரியாத அளவுக்கு பார்த்த இடம் எங்கும் தமிழீழத் தேசியக் கொடிகளும் தமிழீழத் தேசியத் தலைவரின் உருவப்படங்களும் ஆயிரக்கணக்கில் மக்களின் கைகளில் மிதந்து கொண்டிருந்தன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மெல்பேர்ண் கிளையுடன் இணைந்து மெல்பேர்ணை தளமாக கொண்டியங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் மெல்பேர்ண் நகரின் மத்தியில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அகவணக்கத்துடன் தொடங்கியது. "எங்கள் நி…

  2. அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திசர சமரசிங்கவை ஏற்றுக்கொள்வதில் சர்ச்சை : 24 ஜனவரி 2011 அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்கவை ஏற்றுக் கொள்வதில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த உயர் படையதிகாரியை தமது நாட்டு உயர்ஸ்தானிகராக ஏற்றுக் கொள்வதில் அவுஸ்திரேலியா நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்கவிற்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டுக்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தினால் திசர சமரசி;ங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது குற…

  3. காலி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் என கடற்படை தெரிவித்துள்ளது. கரையிலிருந்து 220 மைல் தொலைவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். 26 பெண்கள், 27 ஆண்கள் உட்பட 35 சிறுவர்கள் இவர்களில் அடங்குகின்றனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றபுலனாய்வுபிரிவினரிடம் ஒப்படைக்கப்ப்பட்டனர். இவர்கள் கடலிலிருந்து பாதுகாப்புடன் படையினரால் அழைத்து வரப்பட்டனர். கூடுதலான சிறுவர்கள் இருந்தமையினால் படகினை வேகமாக செலுத்த முடியாத நிலைகாணப்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களை கரைக்கு எடுத்து வர கூடுதலான நேரம் அவசியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவர்கள…

  4. அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறச்சென்ற 15 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது. அவுஸ்திரேலியாவின் விசேட விமானத்தின் மூலம் குறித்த 15 பேரும் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 15 பேரும் விசாரணைகளின் பின்னர், விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு குடியேறச்சென்று திருப்பியனுப்பப்பட்ட 15 பேரும் ஆண்கள் என்பது குறிப்பி…

  5. அவுஸ்திரேலியாவிலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளார்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் அவுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.போலியான முறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை நாடு கடத்த தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. போலி புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கு…

    • 2 replies
    • 567 views
  6. அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்தவர் விமானத்தில் உயிரிழப்பு! அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 10.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூஎல் 605 என்ற விமானத்தில் வருகைத்தந்த 75 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த விமானம் தமது பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தின் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதுடன், அவரது சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டுள்ளதாக…

  7. அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு தொகுதி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து இவ்வாறு ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அரசாங்க விமானமொன்றின் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு சென்ற படகில் பயணித்த இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் இரண்டாவது தடவையாக இவ்வாறான படகு ஒன்று அவுஸ்திரேலிய எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …

  8. அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த 16 இலங்கையர்கள் கைது சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்றமையால் அந்நாட்டு விசேட விமானத்தின் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 16 இலங்கைப் பிரஜைகளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (23) கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கடந்த 2012ஆம் ஆண்டு சட்டவிரோமான முறையில் படகு மூலம்; அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர். வாழைச்சேனை, உடப்பு, மட்டக்களப்பு, சிலாபம், வென்னப்புவ, களுவாஞ்சிக்குடி மற்றும் ஆண்டிமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29, 33 மற்றும் 40 வயதுக்குட்டவர்களே இவ்வாறு அவுஸ…

  9. அவுஸ்திரேலிய அனைத்து மத குழுவின் ஏற்பாட்டில் 'விடியலிற்கான நம்பிக்கை' எனும் அனைத்து மத பிரார்த்தனைக் கூட்டம் நாளை மெல்பேர்ணில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. மெல்பேர்ண் சென். பற்றிக்ஸ் கதற்ரல் தேவாலயத்தில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 1:45 நிமிடமளவில் இந்நகழ்வு நடைபெறும் என்று அவுஸ்திரேலிய அனைத்து மத குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரலாற்றின் இருண்டகாலப் பகுதியின் ஊடாகப் பயணிக்கும் தமிழ் இனத்தின் ஒற்றுமைக்காகவும், சுபீட்சத்துக்காகவும் இடம்பெறும் இந்த நிகழ்வில் இந்து சமய மற்றும் கிறிஸ்தவ சமயப் பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வில் அவுஸ்திரேலிய மதத்தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் மற்றும் …

    • 1 reply
    • 367 views
  10. அண்மையில் சிறீலங்காவின் வடகிழக்கின் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு சென்று திரும்பிய அவுஸ்திரேலிய மனிதநேய புகைப்பட நிருபர் ஷெலி மொறிஸ், அப்பகுதிகளில் நடந்த கோரங்களையும், தற்போதைய அவலங்களையும் படம்பிடித்துள்ளார். அப் புகைப்படங்களை ஒரு தொகுப்பாக கண்காட்சியாக, அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, விக்டோரிய தொழிறசங்கங்களின் கூட்டமைப்பின் ஆதரவுடன் நாளை வெள்ளிக்கிழமை 19ம் திகதி மாலை 6 மணி முதல், ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி மாலை 5 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்விற்கு முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் இன் நெருங்கிய உறவினரும், மனிதநேய செயற்பாட்டாளருமான வன் டான் ரட் சிறப்புப் பேச்சாளராக கலந்து சிறப்பிக்கினறார். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை ஷெலி மொற…

  11. இனவெறி சிங்கள அரசின் அப்பட்டமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விரோத செயற்பாடுகளுக்கு எதிரான அனைத்துலக சமூகத்தின் உடனடி நடவடிக்கையை வேண்டி "மாமனிதர்" கி.சிவநேசனுக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (12.03.08) அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.3k views
  12. அவுஸ்திரேலியாவில் 25 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட 3 தமிழர்கள் இன்று விடுதலை! March 31st, 2010Save & Share விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்களை அவுஸ்திரேலிய நீதிமன்றம் விடுவித்துள்ளது.அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றின் பெயரில் இம்மூவரும் நிதி சேகரித்து விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வேமவுண்ட் தெற்கைச் சேர்ந்த தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சிவராஜா யாதவன்(வயது 39), மவுண்ட் வவெர்லியச் சேர்ந்த அரூரன் விநாயகமூர்த்தி(வயது 35) மற்றும் சிட்னியைச் சேர்ந்த கணக்காளரான ஆறுமுகம் ரஜீவன்(வயது 43) ஆகியோரே விடுவிக்கப்பட…

    • 4 replies
    • 1k views
  13. காலவரையறையின்றி தமது தந்தையை பிரிந்து நிற்கும் 5 வயதான இலங்கை தமிழ் சிறுவன் ஒருவன் குறித்து அவுஸ்திரேலிய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள ஏஎஸ்ஐஓ உளவு நிறுவன பாதுகாப்பு நடைமுறையின்படி, கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் சார்த்தி என்ற இந்த சிறுவன் தமது தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன. இலங்கையில் இருந்து அகதிகளாக சிறுவனும் அவருடைய பெற்றோரும் அவுஸ்திரேலியாவுக்கு சென்றனர். அவர்களுக்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்தநிலையில், சிறுவனும் அவரின் தாயாரும் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர். எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேக…

  14. அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாகச் சென்று அங்கு அகதி அந்தஸ்து பெற்ற இலங்கையர் உட்பட்டவர்களே, படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை வரவழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நீண்ட கால நடவடிக்கை குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிந்து வைத்துள்ளதாக ஏபிசி ஊடகம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்களும் அவர்களின் குடும்பத்தினருமே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏபிசி குறிப்பிட்டுள்ளது. ஈராக்கில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு அகதி அந்தஸ்து பெற்ற ஒருவரை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த நேற்று திங்கட்கிழமை 85 பேரைக்கொண்ட படகு அகதிகள் அவுஸ்திரேலிய செல்வதை கரையோர கண்காணிப்பு …

  15. அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய ஈழத் தமிழ் அகதிகளை அமெரிக்காவில் குடியேற்ற முடிவு அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாகப் பிரவேசித்து அடைக்கலம் கோரிய 83 தமிழர்களையும் அமெரிக்காவில் குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. புதிய உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையிலேயே இதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் 'த அவுஸ்திரேலியன்' என்ற நாளேடு செய்தி வெளியிட்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியிருக்கும் இவர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கும் அதற்கு பதிலாக குவந்தனாமோ குடாவில் உள்ள கியூபா நாட்டு அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வரவும் புகலிடம் கோருவோர் பரிமாற்றம் என்னும் உடன்படிக்கையின் மூல…

  16. சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலைக்கு எதிராக ஓங்கிக்குரல் கொடுக்கவும் மெளனித்திருக்கும் உலகைத் தட்டி எழுப்பவும் நாளை வியாழக்கிழமை (05.02.09) காலை 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 484 views
  17. அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் 8,500-க்கும் அதிகமான தமிழர்கள் கலந்துகொண்ட அமைதிக்கான பேரணி மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. இதில் பல பாகங்களில் இருந்தும் ஒன்றுதிரண்ட மக்கள் உணர்வுபூர்வமாக பேரணியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 337 views
  18. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அமைதிப் பேரணியும் நெதர்லாந்தில் எழுச்சிப் பேரணியும் அங்கு வாழும் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 369 views
  19. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில்! அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து ஒன்றில் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்து குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை இது வரையில் வெளியிடப்படவில்லை எனவும் விபத்தில் காயமடைந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சிறிலங்கா கார்டியன்” செய்தி வெளியிட்டுள்ளது. http://www.thedipaar...ws.php?id=40914

    • 16 replies
    • 1.7k views
  20. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை அமிதாப் பச்சன் நிராகரித்துள்ளார் - சிங்கள ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் எனவும் அமிதாப் பச்சனிடம் புலி ஆதரவாளர்கள் கோரியுள்ளனர். எனினும், குறித்த கோரிக்கையை அமிதாப் பச்சன் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், எதிர்வரும் 20ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என பல தமிழக புலி ஆதரவாளர்கள் அமிதாப் பச்சனிடம் கோரிக்கை…

  21. அவுஸ்திரேலியாவில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல் _ வீரகேசரி இணையம் 3/31/2011 10:40:21 AM Share அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயில் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவுபர்ன் மாகாணத்தில் ஸ்ரீ மந்திர் எனும் கோயில் அமைந்துள்ளது. மேற்படி கோயிலுக்கள் நுழைந்த முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 19ம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாரும் பலத்த காயமடையவில்லை. கோயில் சுவரில் துப்பாக்கி ரவைகள் துளைத்துக் கொண்டு சென்றதற்கான அடையாளங்கள் மட்டும் உள்ளன. இதே கோயிலை கடந்த 200…

  22. அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகளை பெற்ற தாயே கொலை செய்துள்ளார் கடந்த திங்கட்கிழமை, வேலைக்கு போய் விட்டு திரும்பிய செல்வின் அரியரட்ணம் என்ற தகப்பனார் பிறந்து 7 மாதங்களான தமது குழந்தைகள் இரண்டும் இறந்து கிடந்ததையும் தமது மனைவி நினைவிழந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். மூவரையும் மருத்துவமனையில் சேர்த்து, குழந்தைகள் உயிரை மீளக் கொண்டுவர கடும் முயற்சி எடுத்தும் பலனில்லாமல் போய் விட்டது. இந்தச் சம்பவம் அவுஸ்திரேலிய நாட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வேளை அக்குழந்தைகளைக் கொலை செய்தது தாயார் தான் என போலீசார் கூறியுள்ளனர். குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தாமும் தற்கொலை செய்யும் நோக்கில் அளவுக்கு அதிகமான மருந்துகளை அந்தத் தாய் சாப்பிட்டுள்ள…

  23. அவுஸ்திரேலியாவில் இருந்து குடாநாட்டை நோக்கி படையெடுக்கும் பறவைகள் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் யாழ்ப்பாணம் கல்லுண்டாய், வடமராட்சி வல்லைவெளி மற்றும் தீவகத்துக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து பிளமிங்கோ உள்ளிட்ட பல இன வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க வரும் அரிய வகை வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து காணப்பட்டன.எனினும், இம்முறை சீரான மழைவீழ்ச்சி காணப்பட்டதால் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி கல்லுண்டாய் பகுதி மற்றும் தீவகம் அல்லைப்பிட்டி முதல் நாரந்தனை வரையான தரவைப் பகுதி என்பவற்றில் வரத்து நீர் காணப்படுகின்றது. சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், புதிய வகையான ஆசிய ஓபன் பில் நாரைகள் அ…

    • 1 reply
    • 718 views
  24. அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ள சிறிலங்காவைச் சேர்ந்த 9 பேரும் சிங்களவர்கள் என சிறிலங்கா தூதுவர் சேனக்க வலகம்பாய தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 475 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.