Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 64 சந்தேக நபர்கள் திருகோணமலை கடற்பகுதியில் கைது இலங்கை கடற்படையினர் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேரை கைது செய்துள்ளனர். கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட விரைவு படகு இன்று காலை திருகோணமலைக்கு அருகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டுள்ளனர். சோதனையின் போது, கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கும் 64 பேரை கைது ச…

    • 0 replies
    • 136 views
  2. பொறுப்புக் கூறலை, உறுதிப்படுத்துவதே... பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும்- மீனாக்ஷி. பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே அடிப்படையாக இருக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கமளித்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசா…

  3. இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டம் குறித்து உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடைந்துள்ளதாக இந்தியாவின் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. பெறுமதி மிக்க அயல்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் முதலீட்டின் நோக்கம் பொறுப்புணர்வுள்ள பெருநிறுவனம் என்ற அடிப்படையில் எங்கள் தேசங்கள் எப்போதும்பகிர்ந்துகொண்டுள்ள இணைந்த செயற்பாட்டின் முக்கியமான அம்சமாக நாங்கள் இதனை கருதுகின்றோம் எனஅதானி குழுமம் தெரிவித்துள்ளது. உருவாகியுள்ள இந்த சர்ச்சை காரணமாக நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் உண்மைஎன்னவென்றால் இந்த விடயத்திற்கு அரசாங்கத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடை…

  4. (எம்.மனோசித்ரா) இந்திய சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் இன்று (14) செவ்வாய்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அடுத்த வருடத்தில் 8 இலட்சம் சுற்றுலாத்துறையினரை நாட்டுக்கு வரவழைப்பதற்கு எதிர்பார்ப்பதோடு , அதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெறக் கூடும் மதிப்பிடப்பட்டுள்ளதாக இதன் போது தெரிவித்தது. எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்தியாவிலிருந்து சுற்றுலாப்பயணிகளை…

  5. நாட்டிலுள்ள... 17 சதவீதமான சிறுவர்கள், போசாக்கின்மையால் பாதிப்பு! நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டிலுள்ள 17 சதவீதமான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் பிரதான ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் மக்கள் உணவை பெற்றுக்கொள்ள ஏற்பட்டுள்ள தடையே இந்த நிலைக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டு இலட்சம் சிறுவர்களும், ஏழு இலட்சம் பாடசாலை மாணவர்களும் போ…

  6. விவசாயத்தை பாதுகாக்க... எரிபொருள் விநியோகத்தை, சீர் செய்யுமாறு வேண்டுகோள்! அரசாங்கம் உடனடியாக விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வதுடன் விவசாயத்தினைப் பாதுகாப்பதற்கு சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி இன்றைய தினம் (புதன்கிழமை) காலை அச்சுவேலி சந்தையில் கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். அப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டக்கணிப்பி…

  7. இன்று முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவை ஆரம்பம்! எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று(புதன்கிழமை) முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கொழும்பில் இருந்து கண்டி வரையான சொகுசுரக கடுகதி புதிய ரயில் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தினமும் அதிகாலை 5.20 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து குறித்த ரயில் புறப்படவுள்ளது. இந்த ரயில் காலை 8.14 அளவில் கண்டியை சென்றடையவுள்ளது. குறித்த ரயில் மாலை 4.50 அளவில் கண்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது. அதேபோன்று களனி வெளி …

  8. காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை... இறக்குமதி செய்வதற்கு, "65 மில்லியன் டொலர்" தேவை. அடுத்த ஆண்டுக்கான காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 65 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையில் காகித உற்பத்தி இடம்பெறுவதில்லை என்பதனால் இறக்குமதி செய்வதாக கூறியுள்ளார். முன்னதாக எம்பிலிப்பிட்டி மற்றும் வாழைச்சேனை தொழிற்சாலைகளில் காகிதஉற்பத்தி இடம்பெற்றதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அச்சகங்கள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்துடன் பேசி அடுத்த வருடத்திற்கான தேவைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அமைச்சர் சுசில் பிர…

  9. 11 நாட்களுக்குப் பின்னர்.. எரிவாயு, விநியோகம் ஆரம்பம். நாட்டில் 11 நாட்களுக்குப் பின்னர் இன்று (புதன்கிழமை) முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதன்மையாக வணிகங்கள், தகனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளுக்கு எரிவாயுவை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலின் எரிவாயு தரையிறக்கம் 6 நாட்களுக்கு பின்னர் நேற்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1286988

  10. நாடளாவிய ரீதியில்... நாளை முதல், தனியார் பேருந்துகள்... முற்றாக நிறுத்தப்படும் – கெமுனு விஜேரத்ன போதியளவு டீசல் இல்லாத பட்சத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் 20 வீதமே இன்று சேவையில் ஈடுபடுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். தற்போதைய நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்து சபை டிப்போவினால் தனியார் பேருந்துகளுக்கான டீசல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கான விசேட பேருந…

  11. அரச ஊழியர்கள்... தடையின்றி, வெளிநாடு செல்ல... அமைச்சரவை அனுமதி! அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்வதற்கு ஏதுவாக தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்காக அரசு ஊழியர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தங்கள் பதவிக்காலத்தில் வெளிநாடு செல்ல முடியும். இத்திருத்தத்தின் கீழ், தற்போதுள்ள விதிகள் திருத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியரின் ஓய்வூதியக் கணக்கீடு உள்ளிட்டவற்றை பாதிக்கும் விதிகள் தளர்த்தப்படும். அத்தகைய திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய சுற்றறிக்கையை விரைவாக வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/12…

  12. பால் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் 27 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் இலங்கை கைச்சாத்து! அமெரிக்க விவசாய திணைக்களத்தின் ‘முன்னேற்றத்திற்கான உணவு’ முயற்சியில் பங்குபெறும் இலங்கைப் பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டத்தில் இலங்கையின் விவசாயத் திணைக்களம் கைச்சாத்திட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்துகொண்டார். இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒ…

    • 2 replies
    • 336 views
  13. இலங்கையில்... கண்ணீர்ப் புகை குண்டுகளுக்கான, தேவை... அதிகரித்துள்ளது – ரணில் இலங்கையில் கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் பொலிஸாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் அதிகமாக கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸார் மட்டுமின்றி போராட்டக்காரர்களும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதால், இரு தரப்பிலும் கண்ணீர் புகைக்குண்டுக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். https://athavannews.com/20…

  14. 2.5% புதிய வரி இலங்கையில் அமுல் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனைப் புரள்வு 120 மில்லியன்களை அதிகரிக்கும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு 2.5% சதவீதத்தின் கீழ் புதிய வரியாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமா…

    • 0 replies
    • 433 views
  15. அரச உத்தியோகத்தர்களுக்கு... வாரத்தில், ஒருநாள் விடுமுறை – விவசாயத்தில் ஈடுபடுமாறு... அறிவுறுத்து. நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சுகாதார, மின்சக்தி, எரிபொருள், பாதுகாப்பு, கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகள் அன்றையதினம் இயங்கும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 மாதங்களுக்கு இவ்வாறு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள…

  16. சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் உணவு அவர்களை வாழவைக்குமா ? - அருட்தந்தை சத்திவேல் கேள்வி தற்போதைய சூழ் நிலையில் சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் உணவு அவர்களை வாழவைக்குமா? என சிந்திக்க வைத்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குள் அரசியல் கைதிகளுக்கான அடிப்படை தேவைகள் சரியான முறையில் கிடைக்கின்றனவா? என தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாத திட்டமிட்ட தாக்குதலின் சூத்திரதாரிகளில் ஒருவராக மக்களால் அடையா…

  17. தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது! June 13, 2022 தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றது.தற்போதைய சூழ்நிலையிலும் கூட ஜனாதிபதி கோட்டபாய இராணுவத்தினருக்கான எந்தவொரு வளமும் குறைக்கப்பட மாட்டாது என கூறி இருக்கின்றார்.இது இனவாதத்தின் ஒரு விளைவாகும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு காந்திஜீ விளையாட்டு கழகத்தின் 25 ஆவது ஆண்டினை முன்னிட…

  18. அரசியலமைப்பின்... 21வது திருத்தச் சட்டத்தை, நிறைவேற்றுவதில் இழுபறி! அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதை அமைச்சரவை மேலும் ஒத்திவைத்துள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மேலும் தெளிவுபடுத்துவது அவசியமானதனால் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, குறித்த சட்டமூலத்திற்கு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக நீதி…

  19. 21வது திருத்தம்... ஜனாதிபதிக்கு, சாதகமாகவே அமையும் – ரணில் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையும் எனவும், பாதகமாக அமையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை ஆய்வு செய்வதற்கு கால அவகாசம் தேவை என அமைச்சர்கள் முன்னர் தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மே 21ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் இது குறித்…

  20. மதுபானசாலைகள் – இறைச்சிக் கடைகள், மற்றும் சூதாட்ட விடுதிகளுக்கு... பூட்டு! நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன. பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்பொருள் அங்காடிகளுக்குள் உள்ள மதுபானக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் போன்றவற்றையும் இன்று மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1286845

  21. "பௌர்ணமி" தினத்தை முன்னிட்டு... 173 கைதிகளுக்கு, பொது மன்னிப்பு! பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவின் பரிந்துரையின் பேரில் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. அதற்கமைய அதிகபட்சமாக வெலிக்கடை, குருவிட்ட, மஹர, நீர்கொழும்பு, வீரவில, வாரியபொல, போகம்பர, அனுராதபுரம், களுத்தறை, கைதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளனர். கொழும்பு மகசின், கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, யாழ்ப்பாணம், திருகோணமலை சிறைச்சாலை சிறைக் கைதிகளுக்கும் இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1286…

  22. சர்வதேச நாணய நிதியத்தின்... பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு அமெரிக்கா உதவி – ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்க உதவி செய்யும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளின்கனுடன் (Anthony Blinken) தொலைபேசியில் உரையாடினார். இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து தான் இதன்போது விளக்கமளித்ததாக பதிவிட்டுள்ளார். மேலும் இரு நாடுகளும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவு…

  23. Published by Digital Desk 5 on 2022-06-13 13:07:48 இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று (13) இடம்பெற்றது. சீனத் தூதரகத்தில் நட்பு ரீதியாக இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் பரஸ்பரம் ஆர்முள்ள விடயங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு சீனாவும் அமெரிக்காவும் இணைந்து உதவலாம் என இந்தச் சந்திப்பு குறித்து சீன தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தூதுவருக்கும் அ…

    • 3 replies
    • 433 views
  24. யாழில் முகமூடிக் கொள்ளை கும்பலின் தாக்குதலில் மூவர் படுகாயம் – 10 பவுண் நகை கொள்ளை! Posted on June 12, 2022 by தென்னவள் 18 0 யாழ்ப்பாணம், பருத்தித்துறைப் பகுதியில் வாள்களுடன் வீடொன்றினுள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது. கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையி…

    • 7 replies
    • 607 views
  25. இலங்கை, மின்சார சபையின் தலைவர்... இராஜினாமா. இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். இந்நிலையில் அவர் சமர்ப்பித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நலிந்த இளங்கோகோன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக இவர் முன்னதாக கூறியிருந்தார். இருப்பினும் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் தலைவர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.