Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 7,000 பேக்கரிகளில், 3,500 க்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளது. 3 இலட்சம் தொழிலாளர்களில் 50 வீதமானோர் தொழிலை இழந்துள்ளனர். இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேக்கரிகள் உற்பத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதுடன் அதன் காரணமாக பேக்கரிகள் எதிர்வரும் நாட்களுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், பேக்கரிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல போதுமான எரிபொருள், மண்ண…

  2. பாராளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதியை தெரிவு செய்யுங்கள் : சுயாதீன அரசியல் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தல் (இராஜதுரை ஹஷான்) நாடு எதிர்கொண்டுள்ள பாரதூர தன்மையினை உணர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதியை தெரிவு செய்ய உடன் அவதானம் செலுத்த வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய பாராளுமன்றம் செயற்படாவிடின் மக்கள் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடுவார்கள் என பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சி தலைவர்கள் சபாநாயகரிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் அமைதி போராட்டம் நூற்றுக்கு நூறு வீதம் வெற்றிப் பெற்…

  3. ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகுமாறு கோரி யாழில் சைக்கிள் பேரணி போராட்டம் ( எம்.நியூட்டன்) ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் சைக்கிள் பேரணி ஒன்று இடம்பெற்று , யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் நகர் நோக்கி இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் துவிச்சக்கர வண்டிப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. யாழ் மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு குறித்த பேரணி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சென்று , அங்கு கூடி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். …

    • 1 reply
    • 207 views
  4. (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிபந்தனையற்ற வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து உடன் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான 'செங்கடகல பிரகடனத்திற்கு' மகாநாயக்க தேரர்கள் உட்பட சர்வமத தலைவர்கள் கைச்சாத்திட்டனர். செங்கடகல பிரகனடத்திற்கு கைச்சாத்திடல் இன்று கண்டி நகரில் உள்ள கெப்பட்டிபொல நினைவு தூபி அருகில் இடம்பெற்றது. பிரகடனத்தில் சிவில் அமைப்பினர், பொது மக்கள் உட்பட பலர் கைச்சாத்திட்டனர். ஜனாதிபதி பதவி விலகல், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், சர்வக்கட்சி அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியதாக செங்கடகல பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய …

  5. கொழும்பில்... பாரிய ஆர்ப்பாட்டம்: ரயில், லொறிகளில்... வந்து குவியும் மக்கள் !! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி தற்போது கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலர் கொழும்புக்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இன்று காலை இரண்டு புகையிரதங்களின் ஊடாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல இளைஞர்கள் கொழும்புக்கு வருகைதந்த காணொளிகள் வெளியாகின. போக்குவரத்து வசதி இல்லாத சூழ்நிலையிலும் பேருந்துகள், லொறிகள், நடைபயணம் மற்றும் சைக்கிள்கள் ஊடாக தொடர்ந்தும் போராட்ட இடத்திற்கு மக்கள் குவிந்து வருகின்றனர். https://athavannews.com/202…

  6. சமையல் எரிவாயு... அத்தியாவசியப் பொருளாக பிரகடனம் ! சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எரிவாயு என்பது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என தாம் கருதுவதால் நுகர்வோர் அதிகாரசபையின் ஆலோசனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதன்படி நேற்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1290374

  7. ஊரடங்கு சட்டம்... நீக்கப்பட்டது. மேல் மாகாணத்தின் 7 பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்றிரவு 9 மணிக்கு அமுலாக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(9|) காலை 8 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நீர் கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிஸ்ஸ, கொழும்பு – வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பொலிஸ் அதிகார பிரிவுகளில் நேற்றிரவு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், குறித்த பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1290358

  8. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ இவ்வாரத்திற்குள் பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார் என வாசுதேவ நாணயக்கார உறுதிபடத் தெரிவித்துள்ளார். நாளையதினம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ இவ்வாரத்திற்குள் பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார் என வாசுதேவ நாணயக்கார உறுதிபடத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கோட்டாபய பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார் - வாசு உறுதி | Virakesari.lk

  9. யாழ் கோட்டையை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார். நேற்றையதினம் (7) யாழ்ப்பாண கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விருந்தினராக பங்கேற்க வந்தபோதே அதன் கட்டுமாண நுட்பங்கள், சிறப்பம்சம் மற்றும் தொல்லியல் விடயங்கள் பற்றி தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். https://www.virakesari.lk/article/131026

  10. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு... மின்சார வாகன இறக்குமதிக்கான, உரிமம்! புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலர்களின் பெறுமதிக்கு அமைய மின்சார வாகன இறக்குமதிக்கான உரிமங்களை வழங்குவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. குறித்த பணியாளர்கள் அனுப்பும் டொலரின் பெறுமதிக்கு அமைய அவர்களுக்கு எவ்வாறான வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சட்ட ரீதியாக பணம் அனுப்பும் அனைவருக்கும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகி…

  11. எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயங்கள் தொடர்பாக இன்று மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள ஜனாதிபதி, எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்புக்கள் ஜூலை 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்குள் இலங்கையை வந்தடையும் என்று தெரிவித்தார். எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் நிதித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. "நீ…

  12. பொலிஸார் நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்சட்டத்தின் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை என தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்சுமந்திரன் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரளும் மக்களை தடுக்க முயலும் சட்டவிரோத அறிவிப்பு இது என தெரிவித்துள்ளார். பொலிஸ் சட்டம் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமோ அல்லது வேறு எந்த சட்டமோ பொலிஸ் ஊரடங்கு என்ற ஒன்றை அங்கீகரிக்கவில்லை ஏற்றுக்கொள்ளவில்லை,ஆகவே நான் அனைத்து பிரஜைகளிற்கும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை சட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார் பொலி…

  13. தனியார் நிறுவனங்கள்... டொலர் செலுத்தி, எரிபொருளை பெற்றுக் கொள்ள.. முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்! அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதற்காக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்வதற்கான வசதிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி… https://ceypetco.gov.lk/usd-consumer-online-registration/ https://athavannews.com/2022/1290175

    • 1 reply
    • 183 views
  14. யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் டீசல் விநியோகிக்கப்பட்டதால் குழப்பம்! யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு டீசல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 வான்கள் , லொறி என்பவற்றுக்கு டீசல் விநியோகித்துக்கொண்டிருந்தவேளை சிலர் அங்கு கூடி நியாயம் கேட்டுள்ளனர். அதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் முரண்பட்டமையால் , பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். யாழ் நகரில் நள்ளிரவில் டீசல் விநியோகிக்கப்பட்டதால் குழப்பம்! | உதயன் | UTHAYAN (newuthayan.com)

  15. போதை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்னும் தொனிப்பொருளில் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்மணியந்தோட்டம் ஒன்றிணைந்த சமூக மேம்பாட்டு அமைப்பினால் போதைத் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணியும் (08) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது சமூகமட்ட அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு போரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. போதை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் - யாழில் பேரணி | Virakesari.lk

  16. ( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி கோட்டாபய ராஜாபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராக நாளை ( 9) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு, இன்று ( 😎 கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன் வைக்கப்பட்ட பொலிஸாரின் மூன்று கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க, மேலதிக நீதிவான்களான பண்டார இளங்கசிங்க மற்றும் ரி.என்.எல். மஹவத்த ஆகிய நீதிவான்களே பொலிஸாரின் குறித்த கோரிக்கைகளை நிராகரித்தனர். அனைத்து பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியம், இன்று (8), நாளை ( 9) ஆம் திகதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கும் நிலையில், அவர்களுக்கு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல பிரதான வீதிகளில…

  17. 12 இந்திய மீனவர்கள் விடுதலை கடந்த வாரம் பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 12 பேரும் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், மீனவர்கள் சென்ற பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகை அரசுடமையாக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/12-இநதய-மனவரகள-வடதல/175-299965

  18. பொருளாதார நெருக்கடி காரணமாக... வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு? நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் காணப்படும் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வைத்தியர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும…

  19. நாளை முதல் இலங்கைக்கு வரும் கப்பல்கள்! 40,000 மெற்றிக் தொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (09) இரவு இலங்கையை வந்தடைய உள்ளது. இதேவேளை, குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரம் அடுத்த 2 நாட்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதற்கமைய உரக் கப்பல்கள் வந்த பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் உர விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விளைநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவ…

  20. கோட்டா – ரணில் அரசாங்கத்தை... பதவி விலகுமாறு கோரி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம்! அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் சற்று நேரத்திற்கு முன்னர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர். மேலும் மாணவர்கள் அங்கு இன்று இரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1290329

  21. அமைதியான போராட்டக் காரர்களுக்கு.... இராணுவம், பொலிஸார் இடமளிக்க வேண்டும் அமெரிக்கா கோரிக்கை. அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தூதர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். வன்முறை ஒரு தீர்வாகாது எனவும், போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், தயவு செய்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள் எனவும் அமெரிக்க தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும் எனவும், பாதுகாப்பை வழங்கவேண்டும் என நினைவூட்டுகிறேன் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குழப்பமும், பலப்பிரயோகமும்…

  22. எரிபொருள் நிரப்பு நிலையத்தில், மோதல்: இளைஞன் உயிரிழப்பு – மூவர் காயம்! காலியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அத்தோடு, மோதல் காரணமாக காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி -மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்…

  23. அமெரிக்காவின் தடைகளினால்... இலங்கைக்கு, பாதிப்பில்லை – ஜூலி சங் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளுடன் இலங்கை எவ்வாறு இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும் என்பது தொடர்பில் அமெரிக்கா ஆலோசனை வழங்குவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய்…

    • 1 reply
    • 249 views
  24. ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான இறுதிப் போராட்டமாக அமைய வேண்டும் - அனைவருக்கும் ஹிருணிகா அழைப்பு (எம்.மனோசித்ரா) ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி போராட்டமாக 09 ஆம் திகதி போராட்டம் அமைய வேண்டும். புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். புதனன்று ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததைப் போன்று , மீண்டுமொரு முறை நுழைந்து பலவந்தமாகவேனும் உட்பிரவேசித்து ஜனாதிபதியை சந்தித்து பதவி விலகுமாறு கோருவதற்கு அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவ…

  25. இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளிற்கு ஒரு எச்சரிக்கை-ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலகநாடுகளிற்கான ஒரு எச்சரிக்கை என ஐநா தெரிவித்துள்ளது. உக்ரைன் யுத்தம் நீடித்துக்கொள்கின்ற நிலையில் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஏற்கனவே கடும் அழுத்தத்தின் கீழ்; உள்ள நாடுகள் இலங்கை போன்று பொருளாதார நெருக்கயை எதிர்கொள்ளும் ஆபத்துள்ளது என ஐநா குறிப்பிட்டுள்ளது. கடனில் சிக்குண்டுள்ள நாடுகளிற்கு உதவுவதற்கு சர்வதேச சமூகம் தீவிரநிதி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவேண்டும் எனவும் ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் தற்போது துன்பகரமான தொடர்நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம் அது குறித்து சிந்திக்கும் எவருக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.