ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யத் தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருப்பதைப் பயன்படுத்தி, அங்கு போரை நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-
-
16000 மெற்றிக்தொன் தரக்குறைவான பெற்றோல் இறக்குமதி? 16000 மெற்றிக்தொன் தரக்குறைவான பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சேவைகள் சங்கம் மற்றும் சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியன குற்றஞ்சாட்டியுள்ளன. லங்கா ஐ.ஓ.சி நிறுவனமே தரக்குறைவான பெற்றோலை இறக்குமதி செய்துள்ளதாகவும் அந்த பெற்றோல் திருகோணமலை துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. அந்த பெற்றோலின் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அவை தரக்குறைந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய சேவைகள் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித்த தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60414-16000-.html
-
- 3 replies
- 514 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புக்களில் இலங்கையர்களின் இணைவு சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களுடன் இணைந்து இலங்கையர்கள் செயற்படுவது குறித்து தற்போது தீவிரமாக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். செயற்பாட்டு ரீதியாகவோ வேறு வகைகளிலோ பயங்கரவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்படும் இலங்கையர்கள் தொடர்பில் உளவுத்துறை ஊடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 85 ஆவது சர்வதேச பொலிஸ் மாநாட்டில் இலங்கை சார்பாக உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2015…
-
- 0 replies
- 154 views
-
-
சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்கி வரும் ஆயுத மற்றும் மனித வள உதவிகளை கண்டித்து பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக நாளை தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 352 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் போது, இந்தியா தமக்குப் பக்கபலமாக இருக்கும் என்று இன்னமும் நம்புவதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, தீர்மானத்தின் இறுதி ஆவணம் சமர்ப்பிக்கப்படும் போது, கடைசி நிமிடத்தில் இந்தியா முடிவு எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். “இந்தியா எமக்குப் பக்கபலமாக இருக்கும் என்று இன்னமும் நிச்சயம், நம்புகிறோம். அவர்களின் பதிலுக்காக நாம் காத்திருக்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?20130314107937
-
- 0 replies
- 263 views
-
-
கிழக்கில் இனப்பிரச்சினையை ஏற்படுத்த சதி-கிழக்கு முதல்வர் குற்றச்சாட்டு கிழக்கு மாகாணத்தில் பாரிய இனப்பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு சதித்திட்டம் தீட்டப்படு வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் குற்றம்சுமத்தியுள்ளார். இவ்வாறு திட்டமிடும் சதிகாரர்களுக்கு கிழக்கில் உள்ள சில அரசியல்வாதிகளும் ஒத்து ழைப்பு வழங்குவது தற்போது வெளிப்பட்டு வருவதுடன், அவர்களின் உண்மையான முகங்க ளை மக்கள் அடையாளங்காண்பதற்கு இதுவே சரியான தருணம் என முதலமைச்சர் குறி ப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இனமுரண்பாடுகள் குறித்து ஊடகவிய லாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் இந்த விடயத்த…
-
- 0 replies
- 256 views
-
-
மாவை, சிவாஜிலிங்கம் இன்று சாட்சியம் (ரி.விரூஷன்) ஊர்காவற்றுறையில் 2002 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியமை, இருவர்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரனையில் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர். 2002 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவற்றுறைக்கு சென்ற போது இவர்கள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 20பேர…
-
- 1 reply
- 256 views
-
-
பல பகுதிகளிலும் உள்ள ஈழத்தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரிய அளவிலான ஒரு அடையாள உண்ணாவிரதத்தை ஏற்ப்பாடு செய்துள்ளார்கள் அதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஒருக்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். ஈழத்தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம் 2009ம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இராணுவத்தால் நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடுவது ,பொதுவாக்கெடுப்புமூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்துவது போன்ற கோரிக்கைகளை முன் நிறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர் அனைவரும் குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்இடம் வள்ளுவர் கோட்டம் எதிரில் நாள் 22/03/2013 நே…
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்வதை நவநீதம் பிள்ளை நிராகரித்துள்ளார். 25 மார்ச் 2013 மனித உரிமை ஆணைக்குழுவின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை இலங்கைக்கு விஜயம் செய்வதை மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை நிராகரித்துள்ளார். உடனடியாக இலங்கைக்கு சென்று நிலைமைகளை கண்காணிக்குமாறு இந்தியா, நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதேவேளை அமெரிக்காவின் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜெனிவாவுக்கான அமெரிக்கா தூதுவர் ஐலின் டொனஹோர் ஊடகங்களிடம் உரையாற்றினார். போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை தனது பொறுப்பில் இருந்து மீள இடமளிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த விடயம் தொடர்பில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். htt…
-
- 0 replies
- 696 views
-
-
கண்டிக்கு 'கு' போட்டு எழுதுகின்றனர் தமிழிலும் எழுதவேண்டும் என்பதற்காக சில இடங்களில் எழுதுகின்றனர். சிங்களத்தில் பெரிதாக எழுதுகின்றனர். எழுதவேண்டும் என்பதற்காக தமிழ் மொழியில் சின்னதாக எழுதுகின்றனர். தற்போது அக்கிராசனத்தில் அமர்ந்திருக்கும் எனது கட்சியைச் சேர்ந்தவர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனினும், 'க' என்ற எழுத்துக்கு பதிலாக 'கு' போட்டு எழுதுகின்றனர். அதன் அர்த்தத்தை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/187251/கண-ட-க-…
-
- 1 reply
- 649 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதற்குக் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலை கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திலும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மாத்தறையிலுள்ள அதன் பிராந்திய அலுவலகங்களிலும் பார்வையிட முடியும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு நேரடியாகக் கிடைத்த முறைப்பாடுகள், மாவட்ட செயலகங்கள் மூலமாகப் பெறப்பட்டு, பின்னர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் காணாம…
-
- 0 replies
- 396 views
-
-
மட்டக்களப்பில் விபத்து; மூவர் பலி வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013 09:07 -ரவீந்திரன், எம்.எஸ்.நூர்தீன், ஜவ்பர்கான் மட்டகளப்பு, புத்தடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். இவ் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதுடன் ஏனைய இருவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். வீதியால் பயணித்த டொல்பின் ரக வான் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி, மற்றும் துவிச்சக்கர வண்டி, வீதியில் நின்றுகொண்டிருந்தவர்களுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், வே.பரமானந்தம் (50 வயது), ஈ.திலீபன் (32 வயது), ரவீந்திரன் (31 வயது) ஆகியோரே பலியாகியுள்ளனர். டொல்ப…
-
- 0 replies
- 377 views
-
-
நீதித்துறையினை அவமதித்திருக்கும் தேரர்கள் மீது உரிய நடவடிக்கை அவசியம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கல ரத்ன தேரர் மற்றும் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயற்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. நீதிமன்ற உத்தரவை மீறி அம்பிட்டிய சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் மட்டக்களப்புக்கு செல்ல முயன்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா குழுவினரை வெலிக்கந்தையில் பொலிஸார் மறித்ததையடுத்து தேரர் நீதிமன்ற தடை உத…
-
- 2 replies
- 464 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் கனரக பீரங்கிகளை மருத்துவமனைகளுக்கு அண்மையாக பயன்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் பிரதித் தூதுவர் றோஸ்மேரி டிகார்லோ, ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தொடரினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: ஐ.நா. பாதுகாப்புச் சபை இந்த மாதத்தில் கூடிய இரண்டாவது கூட்டத்தொடரிலும் சிறிலங்கா தொடர்பான விவாதம் கொண்டு வரப்பட்டிருந்தது. அதிக அழுத்தமற்ற இந்த கூட்டத்தொடர் மூடிய அறைக்குள் நடைபெற்றது. வன்னிப் பகுதியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலங்களை தவிர்க்கும் நோக்கத்துடன் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்று அங்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா, ஐ.நா. போன்றவ…
-
- 0 replies
- 595 views
-
-
சென்னையில் சினிமா நட்சத்திரங்களினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. தென் இந்தியாவின் புகழ் பூத்த சினிமா நட்சத்திரங்களாக போற்றப்படும் ரஜனிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித், போன்ற முன்னணி நட்சத்திரங்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த ஏழு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்த போராட்டம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு இந்தியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயத்திற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அர…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஹலால் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்ற இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இந்த உப குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் அடிப்படை திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அரசாங்கத் தரப்புடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் எனினும் எவ்விதமான உரிய முடிவுகளுக்கு வரமுடியாமல் போனமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் எனவும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு…
-
- 3 replies
- 588 views
-
-
கொரோனா தொற்றாளர் அடையாளம் – கீரிமலை அந்தியேட்டி மண்டபம் தனிமைப்படுத்தப்பட்டது கீரிமலை அந்தியேட்டி மண்டபத்தில் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குருக்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் உட்பட சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கீரிமலை அந்தியேட்டி மண்டபத்திற்கு சென்றிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 12ஆம் திகதி அந்தியேட்டி கடமை ஒன்றை நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு சென்றிருந்தமை தெரிய வந்துள்ளதையடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த நபர் கீரிமலைக்கு சென்றிருந்த நேரத்தில் கீரிமலைப் பகுதியில் வாகன பாதுகாப்பு வீதியில் கடமையில் இருந்த ஒருவர் மற்றும் உட்செல…
-
- 0 replies
- 539 views
-
-
சிறிலங்காவின் கண்டி நகரில் பேருந்து நிலையத்தில் தமது சொந்தக் கிராமத்துக்குச் செல்வதற்காகக் காத்திருந்த தமிழ்ப் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 317 views
-
-
இராணுவம் மீதான குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்கமுடியாது! - சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜயரத்ன நாடாளுமன்றில் உரை!! 'தவறு செய்யாத இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீது தொடர்ந்தும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை உண்மையாகவே தவறு செய்ய வைத்துவிடாதீர்கள். அரசியல் இலாபங்களுக்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது' என சிறிலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரத்ன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தனதுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'தமிழ்…
-
- 1 reply
- 588 views
-
-
ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் விக்ரோரிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழீழ மக்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் கவனயீர்ப்பு கண்டன பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். சுமார் 12 மணி நேர மிகக் குறுகிய அழைப்பையேற்று பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியமையானது, மக்களின் பேரெழுச்சியை காட்டியது. இந்த கவனயீர்ப்பு கண்டண பேரணிக்கான அழைப்பை தமிழ் இளையோர் அமைப்பும் தமிழ் அமைப்புக்களும் விடுத்திருந்தனர். இன்று காலை 11 மணியளவில் விக்ரோரிய நாடாளுமன்றத்தின் முன் ஒன்றுகூடிய மக்கள்,வானதிர கோசங்களை எழுப்பி மெல்பேரன் வாழ் பல்லின மக்கள் பலரினதும் கவனத்தையீர்ந்ததை காணக்கூடியதாகவிருந்தது. "சிறிலங்காவே இரசாயன அயுதங்களை பாவிப்பதை நிறுத்து..!!!…
-
- 0 replies
- 565 views
-
-
போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என கோருவோரை மதிக்கிறேன்: சுமந்திரன் போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுப்பவர்களது கருத்தை நான் வெகுவாக மதிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏற்கனவே மூன்று தடவைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அவை தொடர்பாக தமிழர் தரப்புக்கு எவ்வித பயனும் ஏற்படவிலை. கூட்டமைப்புடன் ஒத்துப்போவதாக அறிவிக்கப்பட்ட அரசங்காத்தினால் கூட எவ்வித முன்னேற்றமு…
-
- 7 replies
- 870 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போரில் அரசபடைகள் வடக்குகிழக்கின் ஒவ்வொரு இடத்தைப் பிடித்த போதும், தென்னிலங்கையில் அது பௌத்த சிங்களத்தின் வரலாற்று வெற்றி என்றே புகட்டப்படுகிறது. அண்மையில் புதுக்குடியிருப்பைப் படையி னர் கைப்பற்றியிருக்கின்ற நிலையில் ரஜரட்ட இராச்சியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னரே காணப்பட்ட பண்டைய நகரமே புதுக்குடியிருப்பு என்றும், இதை மீட்டதற்காக படையினருக்கு நன்றி கூறவேண்டும் என்றும் கூறியிருக்கிறார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவல மேதானந்த தேரர். புதுக்குடியிருப்பை சிங்கள மன்னர்களின் வரலாற்றுடன் பிணைக்கச் செய்து தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களுக்கு உரிமை கொண்டõடுகின்ற முயற்சியே இது. ஒட்டுமொத்த வடக்குகிழக்கும் சிங்கள மக்களின்…
-
- 1 reply
- 750 views
-
-
இலங்கையின் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரைப் புதுவருட விளையாட்டு போட்டியின் போதே இலங்கை தேசியக்கொடி இவ்வாறு தலைகீழாக ஏற்றப்பட்டது. தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருப்பதை அறிந்த பொலிஸார் உடனடியாக அதனை இறக்கி திரும்பவும் முறையாக ஏற்றி மரியாதை செலுத்தினர். யாழ் நவாலிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகள் தேசியக்கொடியும் பொலிஸ் கொடியும் ஏற்றபட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன் போதே இலங்கைத் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. http://www…
-
- 4 replies
- 881 views
-
-
ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) முள்ளியவளை நினைவாலயத்தில் முல்லைத்தீவு மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த நினைவாலையத்தில் காலை தொடக்கம் பொது மக்கள் தமது உயிர் நீத்த உறவினர்களுக்கு மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு இதே நாள் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவு கொள்ளப்பட்டனர். அன்றைய நாள் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கம் 9.3 ரிக்டர் அளவில் அறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தில் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய 14 நாடுகளில் 230,000 க்கும…
-
- 13 replies
- 917 views
-
-
சுவிஸ்முரசம் வன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தை ஆரம்பித்த கிருஸ்ணா அம்பலவாணரின் போராட்டம் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர் உடனடி மருத்துவ உதவி தேவையென அறிவித்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் உண்ணாநிலைப் போராட்ட இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் அவரைப் பலாத்காரமாக அகற்றினர்.. (படங்கள் இணைப்பு) 15.04.2009 இன்று மாலை 4 மணிக்கு இவரது உடல்நிலையை குடும்ப மருத்துவர் பரிசோதித்தார். இவரது உடல் நிலையைப் பரிசோதித்த பின்னர் இது தனது மருத்துவ அனுபவ காலத்தில் புதுமையானதென்றும் ஆகவே உளவியல் மருத்துவரையும் அழைத்தார். மருத்துவர்கள் இருவரும் இவரது உடல்நிலை மோசமடைந்து செல்…
-
- 0 replies
- 808 views
-