ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 24 September 2025 யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆவணம், வட்சப் செயலி ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிகளைத் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ ஆவணம் கிடைத்த பின்னர் அதன் விபரங்கள…
-
- 1 reply
- 307 views
-
-
அமைச்சரவையில் விரைவில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியில் முரண்பாடுகளை கொண்டுள்ள 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் இவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த அமைச்சரவை மாற்றங்களை ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பில் சில அமைச்சர்களின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள போதிலும் ஜனாதிபதி இந்த எதிர்ப்புகளை கவனத்தில் கொள்ளாது தனது தீர்மானத்தை மேற்கொள்வார் என நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 756 views
-
-
கடந்த மாதத்தில் மட்டும் அவுஸ்ரேலியா நோக்கி சென்ற 695 பேர் கடற்படையினரிடம் சிக்கினர் கடந்த மாதத்தில் மட்டும் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த 695 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள் வடக்குக் கிழக்கு பகுதிகளான வவுனியா மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி பகுதியினர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://onlineuthayan.com/News_More.php?id=495051481202295431
-
- 0 replies
- 374 views
-
-
Published By: Vishnu 03 Oct, 2025 | 08:08 PM பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்துவருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டும் வகையில் இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் ஓரங்கமாக நடைபெற்ற பக்க நிகழ்வில் உரையாற…
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
பாரிசில் உள்ள யூனஸ்கோ தலைமைக் காரியலயத்தில் நேற்று புதன்கிழமை தொடங்கி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான 61 ஆவது மாநாட்டில் பிரான்சை தளமாகக்கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையமும் அதிகாரபூர்வமாக பங்கேற்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 695 views
-
-
சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்: சி.வி -சுப்பிரமணியம் பாஸ்கரன் 'சர்வதேச குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் இடத்தில் இன்று புதன்கிழமை (18) காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதலமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், 'போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். சாட்சியங்கள் அற்ற படுகொலைகளாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள…
-
- 0 replies
- 431 views
-
-
புகலிடம் கோருவோர் தொடர்பான ஐரோப்பிய கொள்கை குறித்து செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில், உலகெங்கும் அச்சுறுத்தல்களுக்குள்ளாகிய
-
- 0 replies
- 519 views
-
-
இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் இந்தியாவுடன் இணைந்து கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்று கோரியதை அடுத்து இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமாலை 5 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தினர். சுமார் 45 நிமிட நேரம் இ…
-
- 7 replies
- 680 views
-
-
பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..! இலங்கையில் தற்போதைய நிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகை மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை நோயாளர்களாகவும் 60ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. இலங்கையிலும் கிட்டத்தட்ட 176 ற்கும் மேற்பட்ட மக்கள் இந்நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் அதேவேளை 5 உயிர்களையும் காவுவாங்கியுள்ளது. நோயாளர்கள் நாளுக்குநாள…
-
- 14 replies
- 1.1k views
-
-
யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை… October 27, 2025 யாழில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டு, சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் இதுவரை 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான கருத்துகளை ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, “போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள், வட்டிக்கு விடுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவ் வகையில் யாழ் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர…
-
-
- 4 replies
- 414 views
-
-
இராணுவப் பிடியில் சிக்கியுள்ள கட்டடங்களுடன் 875 ஏக்கர் நிலம்; புதுக்குடியிருப்பில் ஆக்கிரமிப்பு நீடிப்பு முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலே சுமார் 875 ஏக்கர் நிலப்பரப்பு இன்று வரை இராணுவத்தினரின் பிடியில் உள்ளதுடன், பல வர்த்தக நிலையக் கட்டடங்களும் படையினரின் பயன்பாட்டிலேயே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் கமநலச் சேவை நிலையத்தின் முன்பாகவுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை இயங்கிய காணியும், அதனைச் சூழவுள்ள பத்துக் குடும்பங்களின் காணிகளும், புதுக்குடியிருப்புச் சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக சுமார் பதினைந்து ஏக்கர் காணிகள் மற்றும் வர்த்…
-
- 0 replies
- 563 views
-
-
ஆயுத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பயிற்றுவிக்கப்பட்ட பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தற்போதும் அரசியலில் உள்ளதாக ஈரோஸ் அமைப்பின் செயலாளர் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ள ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்குக் கிழக்கு ஆயுதப்போராட்டத்தில் முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டதில் ஈரோஸ் அமைப்புக்கு பாரிய பங்குண்டு. மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பஷிர் சேகுதாவூத், மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தும் அயுப் கான், திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் பஷிர் அமீர் ஆகிய மூன்று மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆயுத மற்றும் அரசியல் ரீதியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 334 views
-
-
Published By: Priyatharshan 07 Nov, 2025 | 07:03 AM (இராஜதுரை ஹஷான்) சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 7, 2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, விசேட உரையாற்றவுள்ளார். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு - செலவுத்திட்டமாகவும் அமைகின்றது. வரவு - செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும். 2026 நிதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக கடந்த மாதம் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைய இரண்டாவது மதிப்பீடான வரவு - செலவுத்திட்ட உரையை நிதி அமைச…
-
- 12 replies
- 939 views
- 1 follower
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்)[/size][/size] யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புத் தேவைக்காக காணிகளை வழங்குமாறு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது என்று அவ்வாணைக்குழுவின் யாழ் பிராந்திய பணிப்பாளர் விமலராஜ் தெரிவித்தார். [size=2][size=4]கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பலவற்றைப் பெறுவதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 26 ஏக்கர் காணி இராணுவத்தால் கோரப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் த…
-
- 0 replies
- 388 views
-
-
Views - 1 -சண்முகம் தவசீலன் மகாவலி அதிகார சபையினால் பறிக்கப்பட்ட முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மக்களின் வயல் காணிகள் தொடர்பான பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய காணி அமைச்சு எழுத்து மூலமாக கொடுத்த உத்தரவை மாவட்டச் செயலகம், மற்றும் பிரதேச செயலகம் ஆகியன மூடி மறைத்துள்ளதாக கொக்குத்தொடுவாய் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 1984ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை பகுதியில் உள்ள கிராமங்களிலில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 2009ஆம் ஆண்டில் போர் நிறைவடைந்த பின்னர், மீள்க்குடியேறினர். இந்நிலையில், அவர்களுக்கு சொந்தமான சுமார் 2157 ஏக்கர் வயல் காணிகள்; மகாவலி அதிகார சபையின் (எல்) வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு, அதில் பெரும் பகுதி …
-
- 0 replies
- 497 views
-
-
‘ரியாஜ் பதியுதீனின் கைது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்’ AddThis Sharing Buttons அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைது மற்றும் அவர் மீது குற்றஞ்சுமத்தி, பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன அரசியல் பழிவாங்கலுக்கான திட்டமிட்ட சதியென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கவலை தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இன்றைய சூழல…
-
- 3 replies
- 1.1k views
-
-
17 Nov, 2025 | 04:18 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை (17) காலை முன்னெடுத்துள்ளனர். கொட்டடி மீனவர்களின் படகு தரிப்பிடத்திற்காக தூர்வார்ப்பட்ட மண்ணை இதுவரை அகற்றவில்லை என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் குறித்த மண்ணை அகற்றுமாறு கோரி தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தவிசாளர் உடனடியாக மணல் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்! | Virakesari.lk
-
- 0 replies
- 200 views
-
-
பெரும்பான்மை சிறுபான்மைப் பிரச்சினை இலங்கையில் மேலோங்கியுள்ளது - கனடிய தமிழ் எழுத்தாளர் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இடையிலான சர்ச்சைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக கனடிய தமிழ் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் நோக்கங்களுக்காக இனவாத உணர்வுகள் மக்கள் மனதில் மோசமாக விதைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடும்போக்குடைய இனவாதம் காரணமாக இலங்கையின் பெரும்பான்மையான தமிழர்கள் இன்று உலக நாடுகளில் அகதிகளாக சரணாகதியடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் பாதுகாப்புப் படையின் முக்கிய பதவியான இராணுவப் படைத் தளபதியின் அண்மைய கூற்றின் மூலம் சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறை தெளிவாக வெளிப…
-
- 1 reply
- 564 views
-
-
தமிழகம் எதிர்த்தாலும் சிறிலங்கா படையினருக்கான பயிற்சி தொடரும்! – கோத்தாவுக்கு சிவ்சங்கர் மேனன் உறுதி! சிறீலங்கா | ஆDMஈண் | ஓCTஓBஏற் 28, 2012 ஆT 19:03 சிறிலங்கா படைத்தரப்பினருக்கு இந்திய மத்திய அரசு பயிற்சி வழங்குவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் ஒரணியில் திரண்டு போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், தமிழக அழுத்தங்கள் சிறிலங்கா படையினருக்கான பயிற்சி நடவடிக்கைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என புதுடில்லி உறுதியாகத் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்ற சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்…
-
- 0 replies
- 533 views
-
-
எமது அலுவலர்களில் சிலர் இராணுவத்திற்குப் பயந்து தமது முறையான சட்ட ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடாது எமக்குப் பாதகமான முறையில் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கதல்ல. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட துறை சார் கூட்டம் வவுனியாவில் உள்ள உதவி உள்ளூராட்சி ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எமது வேகமும் உத்வேகமும் இனி கண்கூடாகப் பார்க்கும் அளவிற்கு கடுகதியில் செல்ல வேண்டியிருக்கின்றது. இன்னும் இரு வருடங்களில் பலதையும் நாங்கள் சாதித்துக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கிடையில் அரசியல் ரீதியாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத…
-
- 1 reply
- 590 views
-
-
27 Nov, 2025 | 04:06 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நிலை பரிசோதனைக்காகவே மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231666
-
-
- 13 replies
- 1.2k views
- 2 followers
-
-
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் வசித்து வரும் என்.என்.ஜக்சன் (வயது 30) என்ற இளைஞனால் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி இயங்கக் கூடிய தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது 10 வயதில் இருந்து சூழலுக்கு பாதிப்பில்லாத இயந்திரங்களை கண்டு பிடிப்பது தொடர்பில் ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளைஞன், இது வரை 21 கண்டுபிடிப்பிடிப்புக்களை செய்துள்ளதாகவும், அவற்றின் தொழில்நுட்ப உரிமத்தை விற்பனை செய்ய தான் ஆர்வமாக உள்ள போதும் நிறுவனங்கள் பல அதனை வாங்க முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை விசேட தேவைக்குட்பட்டோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட மலசலகூட தொகுதியின் தொழில்நுட்ப உரிமத்தை இந்திய நிறவனம் ஒன்று…
-
- 3 replies
- 706 views
-
-
- பாறுக் ஷிஹான் - ரஞ்சன் ராமநாயக்க போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்தப் பிரச்சினைகளை பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை என என உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை(25) இரவு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது பற்றி மேலும் குறிப்பிட்டதாவது அண்மனை காலங்களாக இந்த அரசாங்கத்தை ஒரு பாரிய பாதிப்புக்கு உள்ளாக்கும…
-
- 54 replies
- 4.9k views
-
-
ஈழத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவிகள் செய்து வரும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. தமிழ்த் தெசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இவ்வார்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர். மாலை நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் சிங்கள அரசுக்கான இந்திய அரசின் உதவிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என ஆதாரங்களுடன் விளக்கினார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஒருங்கிணைத்தார். அவர் பேசுகையில், சிங்கள அர…
-
- 0 replies
- 744 views
-
-
வடமாகாண ஆளுநர் கருத்து சபையின் அங்கீகாரம் ஆகாது - உயர் நீதிமன்றம் திவிநெகும' சட்டவரைவுக்கு ஏனைய எட்டு மாகாணங்களிலும் முறையாக அனுமதியைப் பெற்றுவிட்டு வடக்கு மாகாணத்தில் மட்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்பின் கோட்பாட்டை மீறும் வகையில் உள்ளது. * "திவிநெகும' நடைமுறைக்கு 2/3 பெரும்பான்மை அவசியம் * வரைவில் பல பிரிவுகள் அரசமைப்புக்கு முரணானவை * அதில் ஒரு பிரிவுக்கு வாக்கெடுப்புத் தேவை * அனைத்து மாகாண சபைகளிலும் கருத்து முறையாகப் பெறப்படவேண்டும் எனவே ஆளுநரின் அனுமதியை அங்கீகாரமாக கருத முடியாது. மாகாண சபையின் கருத்து முறையாக பெறப்பட வேண்டும். இவ்வாறு திட்ட…
-
- 0 replies
- 431 views
-