Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாடு செல்லும் இலங்கை ஆசிரியர்கள்: கேள்விக்குறியாகும் மாணவர்கள் எதிர்காலம் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை மாணவர்கள். கோப்புப் படம். இலங்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள அரச ஊழியர்களை, பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களில் பெருமளவினராக இருக்கிற ஆசிரியர்களும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல தயாராகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த நடவடிக்கைகளை …

  2. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த பிரபல புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம அவரது 80 ஆவது வயதில் காலமானார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் துப்பாக்கியால் தாக்குவதை சேன விதானகம படம்பிடித்திருந்தமை உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது சேன விதானகம டெய்லி நியூஸ் பத்திரிகையில் புகைப்பட ஊடகவியலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம காலமானார் | V…

  3. இந்திய துணைத் தூதுவர், மட்டக்களப்புக்கு விஜயம்! இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் சமமாகவே வழங்கப்படுவதாகவும் எந்த பிரிவினையையும் இந்திய அரசாங்கம் பார்ப்பதில்லையெனவும் இலங்கைக்காக இந்திய துணைத்தூதுவர் எம்.நடராஜ் தெரிவித்தார். இந்தியாவிற்கான யாழ் துணைத்தூதவர் எம்.நடராஜ் நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் செய்ததுடன் இன்று உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு விஜயம் செய்தார். விஜயம் செய்த துணைத்தூதுவரை சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடி தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். இதன்போது சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு ம…

  4. கச்சதீவை... பெற்றுக் கொள்ளலாம் என, இந்தியா கனவிலும்... நினைக்க கூடாது – வர்ணகுலசிங்கம். தமிழகத்தில் உள்ள 2000 விசைப்படகுகளை நிறுத்தினால் இந்தியா எங்களுக்கு வழங்கிய உதவியின் இரண்டு மடங்கை நாம் திருப்பி அவர்களுக்கு வழங்குவோம் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். தொண்டமானாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே நா.வர்ணகுலசிங்கம் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் நிவாரண பொதிகளை வழங்கி விட்டு கச்சதீவை பெற்றுக்கொள்ளலாம் என இந்தியா கனவிலும் நினைக்க கூடாது. கச்சதீவை பெறுவதாக இருந்தால் எங…

    • 1 reply
    • 722 views
  5. மின்வெட்டை அமுல்படுத்தினால்... இந்தியாவிடம் உதவி கோரும்படி, என்னிடம் கேட்க வேண்டாம் – மின்சார சபைக்கு... ரணில் எச்சரிக்கை! இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு செய்தால் இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள இந்தியா உதவுமென உறுதியளிக்க முடியாது என எச்சரித்தார். இலங்கைக்கு எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு இந்தியா மட்டுமே உதவுவதாகவும் இவற்றை இலங்கைக்கு கொள்வனவு செய்வதற்கு வேறு எந்த நாடும் உதவவில்லை எனவும் பிரதமர் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு எந்த நாடும் எங்களுக்கு உதவவில்…

  6. 'இலங்கையில் அடுத்த சில மாதங்களில் உணவுத் தட்டுப்பாடு' - எச்சரிக்கும் ஐ.நா 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் (இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (08/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை மேலும் சரிவை சந்திக்கும் என்றும் உணவு கிடைப்பது குறையும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: …

  7. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை... இராஜினாமா செய்கிறாரா, பசில்? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அந்த வெற்றிடத்திற்கு, நாட்டின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை நியமிக்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்தோடு, நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நாடாளுமன்றத்திற்கு வந்து பங்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அவ்வாறான எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என அ…

    • 1 reply
    • 217 views
  8. கச்சதீவை... இந்தியாவுக்கு, கொடுக்க கூடாது – அன்ரனி ஜேசுதாசன் கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்கும் எந்த ஒரு முடிவையும் இலங்கை அரசாங்கம் எடுக்க கூடாது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கோரிக்கையொன்றை விடுத்தார். யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாடு பொருளாதார ரீதியாக பின்னடைந்து இருக்கின்ற நிலையில் நாட்டின் பகுதிகளை வேறு நாடுகளுக்கு விற்பனைக்கோ குத்தகைக்கு வழங்குகின்ற செயற்பாடுகளை செய்ய வேண்டாம் என்றார். மேலும் கடற்றொழிலாளர்கள் மண்ணெண்ணையை பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக இ…

  9. விறகு பயன்படுத்தும்... இலங்கைப் பெண்களின், ஆயுட்காலம் அதிகம் – சரத் வீரசேகர நவீன மற்றும் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தைவிட விறகு பயன்படுத்தும் இந்நாட்டு பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நவீன சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் செல்வந்த நாடுகளில், தனிமனித ஆயுட்காலம் சராசரியாக 80 மற்றும் 85 ஆண்டுகள் ஆகும். எரிவாயு கொள்வனவு செய்ய சிரமப்படும், விறகுகளை பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் சரா…

    • 45 replies
    • 2.3k views
  10. ரயில் கட்டணங்கள்... அதிகரிப்பு குறித்து, பந்துல விளக்கம்! ரயில் கட்டணங்கள் தொடர்பாக கொள்கையொன்றை வகுக்க வேண்டுமெனவும் பேருந்து கட்டணத்தில் பாதியையாவது ரயிலுக்கு அறவிட வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேரத்தில் அதிவேக ரயிலை இயக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிபொருளுக்காக மட்டும் 1.3 மில்லியன் ரூபாய் செலவாகும் என அமைச்சர் தெரிவித்தார். 500 ஆசனங்களுக்கு ஒரு பயணியிடம் இருந்து 2000 ரூபாய் அறவிடப்பட்டாலும் 1 மில்லியன் ரூபாய் பெறப்படுவதா…

  11. சுதந்திரக் கட்சியின்... மத்திய செயற்குழு கூட்டம் – நிமல் மற்றும் மஹிந்த அமரவீர பங்கேற்கவில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது. கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசாங்க அமைச்சர்களாக பதவியேற்ற நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. எவ்வாறாயினும், கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு இந்தக் கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தற்போதைய அரசாங்கத்தில் அ…

  12. தமிழக அரசின்... அன்பளிப்பு உலர் உணவு பொதிகள், காத்தான்குடியில் வழங்கிவைப்பு! இந்திய தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலப் பிரிவில் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர் தலைமையில் குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது பிரதேச செயலகத்தின் கிராம உத்தியேமாகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.யறூப் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு உலர் உணவுப்பொதிகளையும் வழங்கிவைத்துள்ளனர். காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 18 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வறுமைக் கோட்டி…

    • 1 reply
    • 330 views
  13. 200% அதிகரிக்கப்பட்ட... பொருட்களின் விலை : ஜனாதிபதி மீது, எதிர்க்கட்சி சாடல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் 200 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அவர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பொருட்களின் மீதான கட்டுப்பாட்டு விலைகளை விதித்து கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் வர்த்தமானி ஜனாதிபதியால் இரத்துச் செய்யப்பட்டமையே இதற்கு காரணம் என்றார். அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முடிவுகளே தற்போதைய பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டினார். …

  14. சர்வதேச நாணய நிதியத்தின், தலைவருடன் பேசினார்... பிரதமர் ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். தொலைபேசி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து ஊழியர் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்ய வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இலங்கைக்கும் ஊழியர் மட்டத்துக்கும் இடையிலான உடன்படிக்கையின் முடிவிலேயே நிதி உறவுப் பேச்சுக்கள் தங்கியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். …

  15. நிதி நெருக்கடி: பசிலின் திட்டங்களுக்கு... நிதி வழங்குவதை நிறுத்த, அமைச்சரவை தீர்மானம் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது வரவு செலவுத் திட்டத்தில் 2022ஆம் ஆண்டு முன்மொழிந்த பல அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதை வேறுபடுத்துவதற்கு அல்லது முழுமையாக நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூலதன நிதியை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி திட்டங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்…

  16. கைது செய்வதை... தடுக்குமாறு கோரி, ஜோன்ஸ்டன் ரிட் மனு தாக்கல் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். வைகாசி 9 ஆம் திகதி கொழும்பில் பதிவாகியிருந்த அமைதியின்மை தொடர்பான வழக்கின் சந்தேக நபராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார். இதனை அடுத்து சி.ஐ.டியினர் கடந்த ஒரு வாரமாக அவரை வலைவீசி தேடிவருகின்ற போதும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் க…

  17. எரிவாயு விநியோகம், இடம் பெறாது – வரிசையில்... காத்திருக்க வேண்டாம்: லிட்ரோ நாட்டில் இன்று (புதன்கிழமை) லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாதென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் இன்று விநியோகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. https://athavannews.com/2022/1285936

  18. பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட... குறை மதிப்பீட்டு பிரேரணை மீதான, விவாதம் இன்று! அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் பிரதமரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. 695 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தக் கூடுதல் மதிப்பீடு நேற்று பொது நிதி தொடர்பான குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் தலைமையில் இந்த நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது. துணை மதிப்பீட்டில் உள்ள 695 பில்லியன் ரூபாயில் 395 பில்லியன் மீள் செலவினமாகவும் 300 பில்லியன் மூலதனச் செலவினமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. …

  19. யாழிலுள்ள... பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் இல்லை யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேவேளை சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இன்று(7) இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் எரிபொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்த கேட்டதையடுத்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இன்றைய தி…

  20. 'கோ ஹோம் கோட்டா' என்பதை பலர் தற்போது மறந்து விட்டனர் - சபையில் சஜித் ஆதங்கம் (இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்களினால் கடந்த இரண்டரை வருட காலத்தில் நாடு எதிர்கொண்ட நெருக்கடி நிலைமையினை நினைவில் வைத்து பிரதமர் நெருக்கடிகளை மீள்திருத்த வேண்டும். அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களை நாட்டு மக்கள் மறக்கவில்லை. கோ ஹோம் கோட்டா என்பதை பெரும்பாலானோர் தற்போது மறந்து விட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ சபையில் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்று வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிர்மாணிப்பு கட்டுமான தொழிற்துறையினர்,சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால் மேலும் பாதிக்கப்பட…

    • 2 replies
    • 325 views
  21. 35வீதம் குறைவாக... ரஷ்யாவிடம் இருந்து, எரிபொருளை வாங்குமாறு... வாசு வலியுறுத்து! உலக சந்தையின் சாதாரண விலையை விட 35வீதம் குறைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் எரிபொருளை கொள்வனவு செய்வதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எரிபொருளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தயார் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் எரிசக்தி அமைச்சிடம் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், அந்த கோரிக்கைக்கு அமைச்சு இதுவரை ப…

    • 1 reply
    • 297 views
  22. ரணில், பதவியேற்பதற்கு... சில மணி நேரங்களுக்கு முன்னர், ஜனாதிபதி... என்னை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார்: சரத் பிரதமர் பதவியை ரணில் ஏற்றுக்கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி என்னை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “பெரும்பாலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எனக்கு ஆதரவளித்தால் மட்டுமே நான் பிரதமர் பதவியை ஏற்பேன் என்று ஜனாதிபதியிடம் கூறினேன். எனவே, அவர் பிரதமராக வருவதற்கு வழிவகுத்த பெருமையை ரணில் விக்ரமசிங்க எனக்கு வழங்க வேண்டும். தற்போதைய நாடாளுமன்றத்தில் உள்ள 50வீத நாடாளுமன்ற…

  23. இலங்கையில்... பலரும், வேலை இழக்கும் அபாயம் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றமை காரணமாக எதிர்காலத்தில் பல துறைகளில் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குரிய போதிய வருமானம் இல்லாததால் இந்த நிலை ஏற்படலாம் என கூறப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டின் பல துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1285920

  24. இலங்கையில் ரூ.1,500 விலையில் கிடைத்த யூரியா ரூ.42,500 ஆனது: நெல் விளைச்சல் என்ன ஆகும்? யூ.எல்.மப்ரூக் பிபிசி தமிழுக்காக 26 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அதனை வழிமொழிந்துள்ளதோடு, அந்த நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களை உஷார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த நெல் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவானதே - தற்போதைய சிறுபோகத்தில் கிடைக்கும் என, விவசாய திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதனால் மக்களின் பிரதான உணவுப…

  25. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விசேட உரை: "நாட்டுக்கு மிக கடுமையான மூன்று வாரங்கள்" 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் உரையில் வெளியான முக்கியமான 20 விடயங்களை சுருக்கமாக தொகுத்து வழங்குகின்றோம். 01.எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகமானது, எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு மிக சிரமமானது. 02. இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு மாத்திரம் 500 மில்லியன் டாலர்கள் எரிபொருளுக்காக செலவிட வேண்டியுள்ளது. 03.எரிபொருள் விலை அதிகரிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.