Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மேற்குலக நாடுகள்.... இலங்கைக்கும், உதவிகளை வழங்க வேண்டும் – சீனா வலியுறுத்து! உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள் முன்வந்துள்ளதை போன்று, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கும் தமது உதவிகளை வழங்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் கணக்கின் ஊடாக இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இலங்கை சர்வதேச சந்தையில் 47 சதவீதம் கடன் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அதில் 10 சதவீத கடனையே சீனாவுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக கொழும்பிலுள்ள சீன …

    • 1 reply
    • 262 views
  2. இலங்கை நெருக்கடி: "உணவுக்காக மக்கள் மத்தியில் கலவரம் ஏற்பட வாய்ப்பு" - சம்பிக்க ரணவக்க ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PATALI / FACEBOOK படக்குறிப்பு, பாட்டலி சம்பிக்க ரணவக்க (இன்றைய (மே 23) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையில் "எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெறுவதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெறுவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற மக்கள் மத்தியில் கலவரம ஏற்பட வாய்ப்புள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள…

  3. ரணில் விக்கிரமசிங்கவால் ஒரு மாத காலத்திற்கு கூட ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது - ராஜித சேனாரத்ன (எம்.மனோசித்ரா) இரகசிய ஒப்பந்தம் மூலம் இடைக்கால அரசாங்கத்தினை அமைத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு மாத காலத்திற்கு கூட ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது. பிரதி சபாநாயகர் விவகாரத்திலேயே உண்மையான ரணில் விக்கிரமசிங்கவின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரகசிய ஒப்பந்தத்தின் ஊடாகவே இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளார். அவர…

  4. சர்வக்கட்சி அரசாங்கத்தால் மொட்டு உதிரும் அபாயம் மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டு சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வரசாங்கத்தின் அமைச்சரவை இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை. அவ்வப்போது புதியவர்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகித்தவர்களில் பலரும், சர்வகட்சி அரசாங்கத்திலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், கடந்த அரசாங்கத்திலிருந்து விலகி, பாராளுமன்றத்த…

  5. இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் - ஒரு பார்வை இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், இந்தியா பல்வேறு வகையான உதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியா இதுவரை 12க்கும் அதிகமான கப்பல்களில் சுமார் 4,00,000க்கும் அதிகமான மெட்ரிக் டன் அளவுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் வழங்கியுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரகம் தெரிவிக்கின்றது. இலங்கைக்கு தேவையான ஒரு தொகுதி மருந்து வகைகளை இந்திய தூதர் கோபால் பாக்லே, கடந்த ஏப்ரல் 29ம்…

  6. பெற்றோலில் கலப்படம் – எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை! மூன்றாம் தரப்பினரிடம் பெற்றோல் வாங்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் எரிபொருளைச் சேர்ப்பதும், பெட்ரோலியப் பொருட்களை மற்ற திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டாம் எனவும், அது தொடர்பில் தெரிவிக்குமாறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். https://athavannews.com/2022/1283332

  7. மட்டு. வெல்லாவெளியில் இருந்து... மகாஓயாவிற்கு, பெற்றோல் கடத்திய இருவர் கைது! மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசததில் இருந்து அம்பாறை மகா ஓயா பிரதேசத்திற்கு கப்ரக வாகனம், பெற்றோல் கடத்திச் சென்ற பொலிஸ் சாஜன் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட இருவரை 910 லீற்றர் பெற்றோலுடன் வெல்லாவெளி வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பிரதேசத்தில் இருந்து அம்பாறை நோக்கி சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் சென்ற பிக்கப் ரக வாகனத்தை வெல்லாவெளி பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் பொலிசார் நிறுத்தி சோதனையிட்டபோது அந்த வாகனத்தில் வெல்லாவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து வியாபாரத்துக்க…

  8. ”யுத்த காலத்திலும் பரீட்சைகளை புலிகள் தடுக்கவில்லை” May 23, 2022 2005- 2010 ஆம் ஆண்டு வரை தான் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது நாட்டில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. இதன்போது வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரீட்சைகள் அனைத்தும் தடையின்றி நடத்தப்பட்டன, இதன்போது முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூட எந்தவொரு பரீட்சையையும் நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தவில்லை என்பதையும் என கல்வி அமை்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22.05.22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இன்று (23.05.22) ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் தோற்றுவதற்காகச் செல்லும்…

  9. மூன்றாம் தரப்பினரிடம் இருந்து... எரிபொருள் கொள்வனவு – அமைச்சர் விடுக்கும் கோரிக்கை மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒருசிலர் எரிபொருளை சேமித்து வைப்பதாகவும் கலப்படங்களை மேற்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தமக்கு தெரியவந்துள்ளது என கூறியுள்ளார். ஆகவே அவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஆகவே இவ்வாறான தொழில்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், இது குறித்து அதிகாரிகளிடம் முறைப்பாடு வழங்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். https://athavannews.com/2022/128…

  10. நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ்... பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம்! நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் துரிதமாக விவசாயம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். முதலீட்டுக்கு பயன்படுத்தப்படாத காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பயன்படுத்தப்படாத காணிகளில் அப்பகுதிகளுக்குரிய பயிர்களை பயிரிடுவதற்காக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட…

  11. உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர, கொள்கையளில்.. மாற்றம் ஏற்படவில்லை – அநுர உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கொள்கையளில் மாற்றம் ஏற்படவில்லை என நாடாளமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் சினிசிட்டா மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ரணிலும், கோட்டவும் ஒரே அணியாக இருப்பது வெளியில் நன்றாக தென்படுகின்றது. ஒருவரை ஒருவர் காப்பாற்றும் செயற்பாடு இதற்கு சான்று. மஹிந்த ராஜபக்ஸ அன்று மக்களின் பணத்தை களவாடியதாலேயே 2015 இல் அவரை தோற்கடித்து மைத்திரி – ரணில் ஆட்சிக்கு மக்கள் வாக்களித்தனர…

  12. ஜோன்ஸ்டன் உள்ளிட்ட... சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சி.ஐ.டியில் முன்னிலையாகின்றனர்? நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இவர்கள் இன்றைய தினம்(திங்கட்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 09ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1283306

  13. நீதிமன்ற உத்தரவு: பேஜெட் வீதியில் உள்ள இல்லத்தில் இருந்து, வெளியேறினார்... மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் பேஜெட் வீதியின் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு இங்கு அவர் வெளியேறியுள்ளார். இதனை அடுத்து கொழும்பு 7 இல் உள்ள அரசாங்கத்தின் இல்லத்தில் குடியேறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஜெட் வீதியில் உள்ள குடியிருப்பை விட்டு வெளியேற தனக்கு நான்கு வாரங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி வருத்தம் தெரிவித்தார். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக…

  14. உலகை அச்சுறுத்தும்... குரங்கம்மை நோய் குறித்து, இலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு! உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய் தொடர்பாக நாட்டு மக்கள் தேவையற்ற பீதியடைய அவசியமில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியாக கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரை குரங்கம்மை நோய் காரணமாக 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, களைப்பு போன்ற அறிகுறிகள் மூலமே இந்த நோய் ஏற்படக்கூடும் என்பதோடு, இந்த நோய் அறிகுறி தொடர்பில் சாதாரண பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார…

  15. அமைச்சுப் பதவிகளுக்காக.... பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் போட்டி? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் அமைச்சுப் பதவிகளுக்காக கடும் போட்டி நிலவி வருவதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அவ்வப்போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தும், வேறு தரப்பினர் ஊடாகவும் அழுத்தங்களை பிரயோகித்து இப்பதவிகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவை 25 உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், 23 அமைச்சரவை அமைச்சர்களில் 13 பேர் ஏற்கனவே பதவியேற்றுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு சுமார் 10 அமைச்…

  16. அரசியலமைப்பின் 21வது திருத்த வரைவு... இன்று அமைச்சரவையில், சமர்ப்பிக்கப்படுகின்றது! அரசியலமைப்பின் 21வது திருத்த வரைவு இன்று(திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதுள்ள சுயாதீன ஆணையங்களுடன் கூடுதலாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் கொள்முதல் ஆணைக்குழு ஆகியன சுயாதீன ஆணைக்குழுக்களாக மாற்றப்படவுள்ளன. தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக்குவதற்கு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படு…

  17. வீடுகளுக்கு தீ வைப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு! வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பௌதீக மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர, இன்றும் ஆணைக்குழுவில் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான முறைப்பாடுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் வீடு…

  18. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்! கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களிலும் 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் இநதப் பரீட்சை இடம்பெறுகிறது. இந்தமுறை பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களுள் 4 இலட்சத்து 7ஆயிரத்து 129 பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியான பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பரீட்சைக்கு 590 விசேட தேவையுடையவர்களும் தோற்றவுள்ளனர். …

  19. மேலும் சில அமைச்சர்கள்... இன்று, பதவிப் பிரமாணம்? புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 அமைச்சர்கள் அடங்கியதாக இந்த புதிய அமைச்சரவை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் மேலும் 9 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கமைய பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக காணப்படுகின்றது. அதன்படி, நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம் கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர், சுசில் பிரேம ஜயந்த – …

  20. எந்தவொரு அமைச்சு பதவியையும், ஏற்கப் போவதில்லை – சம்பிக்க! எந்தவொரு அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் பதவியை ஏற்பதற்கு சம்பிக்க ரணவக்க தயார் என்றால் அவருக்கு ஆதரவளிக்க தயார் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார். அந்த அமைச்சிற்கு தலைமைதாங்குவதற்கு சம்பிக்க ரணவக்கவே பொருத்தமானவர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பொருத்தமான நபருக்காக தனது பதவியை விட்டுக்கொடுக்க தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும், எந்தவொரு அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான அரசா…

  21. போரில் உயிர்நீத்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அஞ்சலி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது இல்லத்தில் விளக்கேற்றி அஞ்சலி செய்தியுள்ளார். முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாம் இழந்தவை ஏராளம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனது முகநூல் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 13 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் சிங்களவர், தமிழ், முஸ்லிம் என பிரிந்துள்ளோம். அந்தப் போரினால் நான் ஒரு கண்ணை இழந்தேன். இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.…

    • 11 replies
    • 726 views
  22. கட்சி தலைவர் சொல்லித்தான் நாம் செய்தோம் என்றனர்!

    • 0 replies
    • 235 views
  23. தமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடை பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன. மனிதாபிமான உதவியாக இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பால் மா, அரிசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் ரூபா பெறுமதியான முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. குறித்த பொருட்கள் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்திய தமிழக மக்களால் வழங்கப்பட்டதும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் …

  24. பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமை நீக்கப்படும் May 21, 2022 இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21-வது திருத்தச்சட்டத்தின் மூலம் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை நிரந்தரமாக நீக்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் இரட்டைக்குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களும் ரத்து செய்யப்படும் எனத் தொிவித்துள்ள அவா் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமையும் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா். https://globaltamilnews.net/2022/176982

    • 8 replies
    • 573 views
  25. தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள்.... பொலிசாரிடம், பாதுகாப்பு கோரிக்கை. இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று ( ஞாயிற்க்கிழமை ) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர் . கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, அச்சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழக்குமாறு கோரியுள்ளார் . மேலும் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது எனவும் அவர் பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1283268

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.