ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டம் : பரீட்சைகளை ஒத்திவைத்தது வடமாகாண கல்வித் திணைக்களம் சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நாளை சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் 2021 ஆம் ஆண்டு தரம் 6,7 மற்றும் 8 ஆகிய மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளை நடைபெறவிரு…
-
- 0 replies
- 419 views
-
-
கோட்டை... புகையிரத நிலையத்திற்கு, வந்த மாணவர்கள்: நான்கு பக்கமும்... தடைகள் அமைத்த, பொலிஸார் ! காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நோக்கி செல்லும் பல வீதிகள் பொலிஸாரால் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278254
-
- 1 reply
- 464 views
-
-
ரம்புக்கனையில் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்சானின் மனைவி பிரியங்கனி தெரிவித்திருப்பது என்ன எனக்கு பொலிஸார் படையினர் மீது எந்த வெறுப்பும் இல்லைஆனால் அவர்கள் எனது கணவரை கொலை செய்த அரசாங்கத்தின் கருவிகள். அவர்கள் அவரை சுட்டுக்கொன்று ஐந்து நாட்களாகிவிட்டன.இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. நான் நீதி நிலை நாட்டப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றேன். தனது குழந்தைகள் குறித்து சமிந்த பெரும் கனவுடன் இருந்தார் நான் எப்படி தனியாக அதனை நிறைவேற்றப் போகின்றேன் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் பெறுவதற்காகவே சென்றார்-அவர் ஆர்ப்பாட்டங்களில் க…
-
- 0 replies
- 333 views
-
-
கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து தடை - பொலிஸாரின் அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸாரினால் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்கள் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே வீதிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், லேக் ஹவுஸ் முன்றலில் உள்ள நெலும் மாவத்தை பகுதி போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது கலதாரி ஹோட்டலுக்கு அருகாமையில் பொலிஸார் வீதித் தடைகளை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப…
-
- 0 replies
- 222 views
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை... சமாளிக்க, உதவுவதற்கு தயார் – சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுவதற்கு தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது. நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து சர்வதேச நாணய நிதியம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அத்துடன், பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது. மேலும் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக ஏனைய அனைத்து …
-
- 2 replies
- 347 views
-
-
அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று யாழ் விஜயம் (லியோ நிரோஷ தர்ஷன்) ஆமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். இரு நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது அங்கு பல சந்திப்புகளை முன்னெடுக்க உள்ளதுடன் நல்லூர் கந்த சுவாமி கோவிலுக்கும் விஜயம் செய்து சிறப்பு வழிப்பாடுகளில் ஈடுப்பட உள்ளார். இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் பின்னர் இங்கு இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்ற தூதுவர் ஜுலி சங் கொழும்பில் பல்வேறு சந்திப்புகளில் கலந்துக் கொண்டிருந்தார். இலங்கையில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் அவரது முதலாவது வெளி மாகாணத்திற்கான விஜயமாக வட மாகாணம் அமைந்துள்ளது. வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகரா…
-
- 4 replies
- 504 views
-
-
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும், உத்திகளை... மறுபரிசீலனை செய்யுங்கள்: ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரைவான நிதி முயற்சிக்கு இலங்கை தகுதிபெறாததாலும், இந்திய கடன் வரி அடுத்த மாதம் முடிவடைவதாலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தனது உத்திகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் சில இலங்கை வங்கியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், பொருளாதாரம் மேலும் சீரழிந்து போவது குறித்து எச்சரித்தார். மேலும் தெரிவித்த அவர், “உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது. சுமார் 30 சதவீத உரம் ரஷ்யாவிலிருந்து வருகிறது. அடுத்த அறுவடைக் காலத்திலும் இலங்கை ஒரு பிரச்சினையை சந்தி…
-
- 0 replies
- 164 views
-
-
காலிமுகத்திடலை... சுற்றியுள்ள பகுதியில், ஆணிகளுடனான வீதித்தடை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று ( (ஞாயிற்றுக்கிழமை ) ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவுள்ளது என ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர் . இதேவேளை காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில் ஆணிகளுடனான வீதித்தடை அமைக்கப்பட்டுள்ளது . மேலும் ஆணிகளுடனான வீதித்தடைகளால் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1278257
-
- 0 replies
- 137 views
-
-
பொலிஸாருக்கும்... பொது மக்களுக்குமிடையில், முரண்பாடு. கொழும்பு காலி முகத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் பல்வேறு பேரணிகள் கொழும்பு காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொழும்பு லோட்டஸ் வீதிக்கருகில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1278248
-
- 0 replies
- 122 views
-
-
“ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற, அமைப்பால்... அட்டனில் போராட்டம் அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ( (ஞாயிற்றுக்கிழமை ) இளைஞர், யுவதிகள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் அட்டன் பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் உள்ள பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டகாரர்கள் அட்டன் எம்.ஆர். நகரத்தில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்து, மணிக்கூட்டு கோபுரத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அடுத்…
-
- 0 replies
- 169 views
-
-
பொலிஸாருக்கு.... பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், விடுத்துள்ள பணிப்புரை! பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமையாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் அம்பியூலன்ஸ், பாடசாலை வாகனங்கள், அலுவலக போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்க கூடாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுத்தாமல் முன்னெடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்…
-
- 0 replies
- 153 views
-
-
எரிபொருளுக்காக... இனிமேல் நீண்ட வரிசையில், காத்திருக்க தேவையில்லை – எரிசக்தி அமைச்சு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை படிப்படியாக முடிவுக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்களில் எரிபொருள் ஏற்றிய அதிகமான கப்பல்கள் வரவுள்ளதால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டும் அடுத்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1278227
-
- 0 replies
- 160 views
-
-
OUT ஆகாவிட்டால், OUT ஆக்கப்படுவார் – 115 தயார்! April 24, 2022 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையெனவும், சிறுபான்மை ஆதரவைக் கொண்ட பிரதமர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, சபாநாயகரிடம் சத்தியக்கடதாசியை கையளிக்கவுள்ளனர். அந்த சத்தியக்கடதாசியில் கைச்சாத்திட இணக்கம் தெரிவித்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 யை கடந்துவிட்டதாகவும் அறியமுடிகின்றது. கையொப்பம் இடப்படும் சத்தியக்கடதாசி, அடுத்தவாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஸ விலக வில்லையெனில், பிரதமருக்கு எதிரான …
-
- 0 replies
- 157 views
-
-
பல் கலைக்கழக மாணவர்களின்... போராட்டம், ஆரம்பமாகியுள்ளது. UPDATE 02 : பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. “இளைஞர்களின் கனவுகளுக்கு இறுதி ஊர்வலம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. UPDATE 01 : கொழும்பின் பிரதான வீதிகளில் இரும்பு வேலிகள் கொழும்பில், அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றை இன்று ( ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கவுள்ளனர் . இந்நிலையில், கொழும்பின் பிரதான இடங்களுக்குச் செல்லும் வீதிகளில் நிலையான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன . இதேவேளை அவ்வழியாக பயணிக்க வேண்டிய பஸ்கள், வேறு வழிகளுக்கு திரும்பிவிடப்படு…
-
- 1 reply
- 165 views
-
-
சுகாதார அமைச்சின்... இணையத்தளம் மீது, "தமிழ் ஈழ சைபர் படை" எனும் குழுவினால், சைபர் தாக்குதல். சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘தமிழ் ஈழ சைபர் படை’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவினால் இவ்வாறு குறித்த இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி (http://www.health.gov.lk/) எனும் இணையத்தளத்தின் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278232
-
- 0 replies
- 152 views
-
-
திருகோணமலை – ராஜவந்தான் மலைக்கு, வழிபாடுகளுக்குச் சென்ற தமிழர்கள்... பௌத்த பிக்குவால் தடுத்துநிறுத்தம் திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள ராஜவந்தான் மலைக்கு இன்று காலை தமிழ் மக்கள் மற்றும் சைவ மதகுருக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகச் சென்றபோது பௌத்த பிக்கு ஒருவர் வீதியை மறித்து மக்களை தொடர்ந்து செல்லவிடாது தடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அங்குச் சென்ற மக்களை இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் மிகவும் கீழ்த்தரமாக பேசியும் அவர்களின் தொலைபேசிகளை பறித்து எறிந்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதன் போது அங்கு நின்ற பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் மக்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்களையும் எடுத்ததாகவும் தெ…
-
- 1 reply
- 200 views
-
-
என்னை... பதவி விலகுமாறு கூறுவது, முறையற்றது – மஹிந்த இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தன்னை பதவி விலகுமாறு கூறுவது முறையற்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு தானே தலைவராக இருப்பேன் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒரு வருட காலத்திற்கு அனைத்து கட்சிகளின் இடைக்கால அரசாங்க பிரதிநிதித்துவத்தை அமைப்பதற்காக பிரதமர் உட்பட முழு அமைச்சரவையையும் இராஜினாமா செய்யுமாறு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரியதையடுத்து, அவர் இதனை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1278131
-
- 6 replies
- 265 views
-
-
பியல் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த... ஆகியோருக்கு முன்னர் இருந்த இராஜாங்க அமைச்சு பதவி. நாடாளுமன்ற உறுப்பினர்களான பியல் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் முன்னர் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என ஜனாதிபதி ஊடக பிறவு தெரிவித்துள்ளது. லொஹான் ரத்வத்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவார். இதேவேளை, பியல் நிஷாந்த, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமை…
-
- 1 reply
- 146 views
-
-
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்... அடையாள வேலை நிறுத்தத்தில், ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு! நாடளாவிய ரீதியில் நாளை (திங்கிட்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. எரிபொருள் விலையேற்றம், பேருந்து கட்டணங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் 30 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக ஆசிரியர் அதிபர்களின் தொழ…
-
- 0 replies
- 95 views
-
-
ஜனாதிபதிக்கு... எதிரான, நம்பிக்கையிலாப் பிரேரணை: சுமந்திரன் நடவடிக்கை நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை ஒன்றினை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அந்தவகையில் குறித்த பிரேரணையை கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கவுள்ளார். எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களும் ஜனாதிபதிக்கு எதிரான குற்ற பிரேரணை தொடர்பான முன்மொழிவுகளை தன்னிடம் வழங்கியதாக சுமந்திரன் தெரிவித்தார். இருப்பினும் கு…
-
- 0 replies
- 111 views
-
-
உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் – சபாநாயகர் தலைமையில், விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, அன்றைய தினம் முற்பகல் 10 மணியளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1278188
-
- 0 replies
- 100 views
-
-
அத்தியாவசிய... உணவுப் பொருட்களுக்கான, கட்டுப்பாட்டு விலை மீண்டும் !!! அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் நிதி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்தார். எவ்வாறாயினும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியானது கட்டுப்பாட்டு விலையை மீள அமுல்படுத்துவதில் தடையாக உள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் நிதி அமைச்சருடனான சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் குணபால ரத்னசேகர குறிப்பிட்டார். அரிசி, கோதுமைமா, ப…
-
- 0 replies
- 196 views
-
-
சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும்... 16ஆவது நாளாக தொடரும், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம்! கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடும் மழைக்கு மத்தியிலும் இந்தப் போராட்டம் கைவிடப்படாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும் நேற்றையதினம் ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லங்ஷானின் இறுதிக் கிரியைகள் காலிமுகத்திடலிலும் மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடர்ந்து, அங்கிருந்து வெள்ளைக் கொடிகள், மலர்வள…
-
- 0 replies
- 88 views
-
-
புகையிரத நிலையத்தில்... பயணிகளின், எண்ணிக்கை அதிகரிப்பு பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து புகையிரத திணைக்களத்துக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார் . புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாததால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1278135
-
- 0 replies
- 162 views
-
-
பொருளாதாரத்தை மீட்பதாகக் கூறி... சுகாதாரத் துறையை, தனியார் மயமாக்க... அரசாங்கம் முயற்சி – GMOA குற்றச்சாட்டு! முழு சுகாதாரத் துறையையும் தனியார்மயமாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சாட்டியுள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ, நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதார அமைப்பு விரக்தியில் இருப்பதாக தெரிவித்தார். பொருளாதாரத்தை புத்துயிர் பெறவைக்கின்றோம் என்ற போர்வையில் சுகாதாரத்துறையை தனியார்மயமாக்க அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கத்தில் உள்…
-
- 0 replies
- 319 views
-