Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியா வருகிறாரா ரணில் விக்ரமசிங்கே? பிரதமர் மோடியை சந்தித்து நிதி கேட்க உள்ளதாக தகவல்.! இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் பிரதமர் மோடியை சந்தித்து, நிதி உதவி கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை அடுத்து அங்கு மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால், ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. கோத்தபயாவும், மகிந்தாவும் பதவி விலகி, அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. …

  2. '' கோட்டா கோ கம" குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் புதிய பிரதமர் ரணில் கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் என புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இதனையடுத்து மதவழிபாடுகளில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கோட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “ கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் . நாடு கட்டியெழுப்பப்பட்டு இளம் தலைமுறையினருக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும். ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்படும்…

  3. வெறுப்பைப் பரப்புவதிலும், வன்முறையைத் தூண்டுவதிலும் ஈடுபட்ட... அனைவரையும், சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் – நாமல் இலங்கை முன்னோக்கி செல்வதற்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வெறுப்பைப் பரப்புவதிலும் வன்முறையைத் தூண்டுவதிலும் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், அதே நேரத்தில் தனியார் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறியுள்ளார். https://athavannews.com/2022/1281621

    • 1 reply
    • 289 views
  4. மக்கள் பிரச்சனைகளை ஆராய குழுக்களை நியமித்தார் பிரதமர்! பொருளாதார நெருக்கடி நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். …

  5. பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி (நா.தனுஜா) பிரதமரின் இல்லங்களைக்கூட தீயிட்டுக்கொளுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்துவதெனில், அந்த கலகக்காரர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்களாவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார். 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆகிய இடங்களில் கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் தனது உத்தியோகபூர்வ டுவி…

  6. மஹிந்த உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய சி.ஐ.டி.க்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல் ( எம்.எப்.எம்.பஸீர்) கோட்டா கோ கம, மைனா கோ கம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 7 பேரைக் உடனடியாக கைது செய்ய சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (13) முறைப்பாடொன்றினை செய்துள்ளார். சட்டத்தரணி சேனக பெரேராவே 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தனிப்பட்ட மனுவாக ( ப்ரிவடெ ப்லைன்ட்) இதனை இவ்வாறு தாக்கல் செய்துள்ளார். முன்…

  7. மலேசியாவுக்கு... தப்பிச் சென்றாரா, பிள்ளையான்? முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று இன்று (வியாழக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது. அங்கிருந்து ஐரோப்பிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்படி, மூன்று ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களை அதற்கான வசதிகளை செய்து தருமாறும் அவர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறையில் இருந்த அவர், சமீபத்தில் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.co…

  8. யாழில் ஐ.தே.க ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம் May 12, 2022 ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து யாழ்ப்பாண நகரின் பிரதான வீதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர் https://globaltamilnews.net/2022/176589 .

  9. பொதுஜன பெரமுனவினர் ரணிலுக்கு ஆதரவு ? : மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி ? Published by T. Saranya on 2022-05-13 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் யோசனையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்க பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

  10. மக்களின் குரலுக்கு... மதிப்பளிக்காமல், ஜனாதிபதி... ரணிலை பிரதமராக்கியுள்ளார் – அனுர ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம், மக்களின் குரலுக்கு மதிப்பளிக்காமல் எடுக்கப்பட்ட தீர்மானம் என ஜே.வி.பி.யின் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து குடிமக்களும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒருமனதாக அழைப்பு விடுத்தனர். அவர்கள் அனைவரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கொள்ளையடிக்கப்பட்ட பொது நிதியை மீட்டெடுக்கவும், அந்த செயல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுத்தனர் என அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் தலைவர் …

    • 2 replies
    • 227 views
  11. அமைச்சு பதவிகள் வேண்டாம் - புதிய அரசும் வேண்டாம்! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா அல்லது அரசாங்கத்தை அமைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இன்று (13) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஏற்கபோவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அமையப்போகும் அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அமைச்சு பதவிகள் வேண்டாம் - புதிய அரசும் வேண்டாம்! (adaderana…

    • 2 replies
    • 460 views
  12. பொலிஸாரின் வீடுகளுக்கு... சேதம் விளைவிக்குமாறு, சமூக ஊடகங்களில்... பதிவேற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி கைது! ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பொதுமக்களை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். உயர் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வீடுகளுக்கு சேதம் விளைவிப்பதில் கவனம் செலுத்துவதற்காக, அண்மைய குழப்பத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குழுக்களை அழைத்து சந்தேக நபர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் நிட்டம்புவ பொலிஸில் சரணடை…

  13. இரு தினங்களுக்கு... மூடப்படுகின்றன, மதுபானசாலைகள்! வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். குறித்த தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயற்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281748

  14. இனப்பிரச்சினை தொடர்பில் யாரும் சிந்திக்கும் நிலையில் இல்லை; கோவிந்தன் கருணாகரம்! கோட்டா கோ கோம் போராட்டத்தினை வழிநடத்துகின்றவர்களோ,புதிய அரசாங்கத்தினை அமைக்கவுள்ளவர்களோ,ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளோ பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றபோதிலும் இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணமாகவுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் யாரும் சிந்திக்கும் நிலையில் இல்லையென தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில…

    • 0 replies
    • 252 views
  15. இலங்கையில் அமெரிக்க டொலர் - 364/=, தங்கம் - 170,400/= இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக இன்று (13) பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.01 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் இன்று (13-05-2022) தங்க நிலவரம்... தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 658,421 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,230 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 185,850 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,300 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,400 …

    • 0 replies
    • 187 views
  16. ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இடைக்கால அரசாங்கம் அமைந்து விடக்கூடாது - சம்பிக்க (எம்.மனோசித்ரா) நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்ற ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இடைக்கால அரசாங்கம் அமைந்து விடக்கூடாது. மாறாக நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க கூடிய குறுகிய மற்றும் மத்திய கால தீர்வுகளை கொண்ட சர்வகட்சி அரசாகவே அது அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க, அவ்வாறான அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை துறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். உத்தேச இடைக்கால அரசாங்கம் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளிலேயே சம்பிக ரணவக்க இ…

  17. ஊரடங்குக்கு... மத்தியில், 35ஆவது நாளாக தொடரும்... மக்கள் எழுச்சிப் போராட்டம்! நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொழும்பு கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 35ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதி அதற்கு பொறுப்பு கூற வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வழமைப்போன்று நேற்று இர…

  18. ரணிலுக்கு... ஐக்கிய மக்கள் சக்தி, ஆதரவளிக்காது – ரஞ்சித் மத்தும பண்டார பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஆதரவையும் வழங்காது என அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடவுள்ளது. இந்நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்றத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரின் பெயரை கட்சி முன்மொழியும் என தெரிவித்தார். அத்தோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக…

  19. புதிய பிரதமருக்கு... ஆதரவு வழங்குவதா இல்லையா... என்பது குறித்து, சுதந்திரக் கட்சி இன்று தீர்மானம் புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து சுதந்திரக் கட்சி இன்று ஆராயவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281727

  20. கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்கப் போகிறதா இலங்கை.? உச்சமுனி தீவை சுவிஸுக்கு தந்ததால் பரபரப்பு.! கொழும்பு: இலங்கை தமக்கு சொந்தமான உச்ச முனி தீவை சுவிட்சர்லாந்துக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. இதனையடுத்து இந்தியாவுடனான சர்ச்சைக்கு காரணமான கச்சத்தீவை இந்தியாவிடமே இலங்கை கொடுக்குமா? அல்லது நீண்டகால குத்தகைக்கு தருமா? என்கிற எதிர்பார்ப்பும் விவாதமும் எழுந்துள்ளது. இலங்கையில் அரசியல் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஒரு பக்கம் போராட்டம்.. இன்னொரு பக்கம்.. மாஜி பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரை என பற்றி எரிகிறது இலங்கை. இலங்கையைவிட்டு ராஜபக்சேவும் அவரது கூட்டாளி மாஜி அமைச்சர்களும் தப்பி ஓடிவிடக் கூடாது…

    • 1 reply
    • 461 views
  21. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில்... முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம்(வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. https://athavannews.com/2022/1281657

  22. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின்... இரண்டாம் நாள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமானது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினால், யாழ்ப்பாணத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அதேநேரம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் வட மாகாணத்தின் ஏனைய சில பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

  23. புதிய அமைச்சரவையில்... ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களை, இணைத்துக் கொள்ள வேண்டுமாயின்.... உடனடியாக அறிவிக்கவும் – சஜித்திற்கு, கோட்டா கடிதம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானத்தை மாற்ற முடியாது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதாக முன்னர் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அவை இன்னும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசி…

  24. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும்... நாடாளுமன்ற உறுப்பினர்களை, சந்திக்கிறார் ஜனாதிபதி கோட்டா! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெறவுள்ள முதலாவது சந்திப்பு இ…

  25. புதிய பிரதமருடன்... இணைந்து, பணியாற்ற எதிர்பார்கின்றேன் – ஜனாதிபதி! இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281681

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.