ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
(ஆர்.ராம்) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/131723/dsd.jpg அதுதொடர்பில் தெரியவருவதாவது, “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய கொண்டிருக்கின்ற கரிசனைகளுக்கும், அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்களும் முழுமையான நன்றிகள். தமிழ் மக்கள் தமது கருமங்களை சுதந்திரமாக ஆற்றக்கூடியவாறாக இரண்டாக இருந்த நாட்டை 1933 ஆம் ஆண்டு பிரித்தானியாவே ஒன்றாக மாற்றியமைத்தது. அதன் பின்னரே தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகள் ஆக்கப்பட்டார்கள். தற்போது வரையில் …
-
- 12 replies
- 735 views
- 1 follower
-
-
ராஜபக்ஷ குடும்பம் மிக விரைவில் வீடு செல்வது உறுதி இன்று நாட்டில் அரிசி, உரம், டொலர் தொடர்பான பிரச்சனைகள் எல்லாமே ஒரு நாடகம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பில் இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் இந்த துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஒரு உரையை ஆற்றுவதாக இருந்தால் அது பலரிடம…
-
- 2 replies
- 570 views
-
-
குவைத் எயார்வேஸ் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானம் குவைத் எயார்வேஸ் விமான சேவை இந்த வாரம் முதல் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.newswire.lk/wp-content/uploads/2022/01/download-53.jpeg விமான நிறுவனங்கள் "டொலர் நெருக்கடி" மற்றும் விமானங்களை அதிகரிக்க விமான நிறுவனங்களின் தயக்கம், உள்ளூர் அலுவலகங்கள் நிலுவைத் தொகையை செலுத்த மறுத்ததல் போன்ற காரணங்களால் குவைத் ஏயார்வேஸ் கூட்டுத்தாபனம், இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமானங்களை நிறுத்தியுள்ளதாக அல்-ஜரிடா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, குவைத் ஏயார்வேஸ் கடந்த செப்டம்பரில் இலங்கைக்கான தனது நடவடிக்கைகளை உ…
-
- 2 replies
- 363 views
-
-
கிளிநொச்சி பொது வைத்தியசாலை தீ விபத்து: வைத்தியசாலை சாதனங்கள், மருத்துவ உபகரணங்களுக்கு பாரிய சேதம் (சி.எல்.சிசில்) கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நேற்று (20) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வைத்தியசாலையின் பல சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு மருத்துவமனையின் ஒரு கட்டிடத்தில் முதலில் தீ பரவியது, பின்னர் பல இடங்களுக்கு வேகமாகப் பரவியது, மருத்துவமனை நிர்வாகக் குழுவால் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் இராணுவத்துக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய கத்தின் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்தின் போது நோயாளிகள் பாதுகாப்பான இட…
-
- 3 replies
- 504 views
-
-
காணாமல்போன மகனைத் தேடிய தாய் மரணம் - தொடரும் துயரம் வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (21) மரணமடைந்துள்ளார். வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த 78 வயதான கருப்பையா ராமாயி என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பி…
-
- 4 replies
- 417 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-21 17:27:17 இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் முன்பாக இன்று காலை காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இந்த போராாட்டத்தை முன்னெடுத்திருந்தன. போராட்டத்தை முன்னெடுத்த மீனவர்கள் அங்கிருந்து பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்றனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி , மற்றும…
-
- 4 replies
- 366 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஆண்டில் சிறுபோகத்தில் இராணுவத்தையும் இணைத்து விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு - கருணாகரன் January 21, 2022 (வரதன்) சேதனப்பசளை பாவனை பாரிய விவசாய புரட்சி திட்டமாகும்.இராணுவத் தினர் மூலம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி சேதனப் பசளையை உற்பத் தியை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பசுமை செயலணி திட்டத்தை முன்னெடுக்கின்றது. நாட்டின் பாதுகாப்பு உணவு சுகாதாரம் ஆகிய பாதுகாப்புக்கள் முக்கியமானவை.உணவு பற்றாக்குறை நாட்டில் ஏற்பட கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை முன்னெ டுக்கிறது.எமது விவசாயிகள் பாதிக்கப்படகூடாது என்பதற் காகவே இந்த பசுமை செயல்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது மட்டு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தை 33 …
-
- 3 replies
- 306 views
-
-
Published by T. Saranya on 2022-01-21 15:12:54 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று நேற்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது சரத் வீரசேகர சிகிச்சைகளுக்காக நாராஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார தரப்பினர் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று | Virakesari.lk
-
- 0 replies
- 468 views
-
-
நிரந்தமான தீர்வொன்றை அடைய பிரித்தானியா வழிவகை செய்ய வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை நிரந்தமான தீர்வொன்றை அடைந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் இந்த கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்தார். நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக பிரித்தானிய கொண்டிருக்கும் கரிசனை மற்றும் அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் சம்பந்தன் நன்றி தெரிவித்தார். இரண்டாக இருந்த நாட்டை 1933 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியா ஒன்றாக்கிய பின்னர்…
-
- 3 replies
- 344 views
-
-
(ஆர்.யசி) 13 வது திருத்த சட்டத்தை தும்புத்தடியால் கூட தொட்டும் பார்க்க மாட்டோம் என்று நிராகரித்து விட்டு இன்று சுடலை ஞானத்தில் அதையே தூசி தட்டி இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்தவர்கள் இன்னும் பல ஆண்டுகள் கழித்து ஜனாதிபதியின் இன்றைய கொள்கை பிரகடனங்களையும் தூசு தட்டி பார்க்கக்கூடும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தெரிவித்ததானது, 'ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் இந்த ஆண்டிற்கான ஆரம்ப உரை நாட்டு மக்களுக்கு ஒளி வீசும் நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. வளர்ந்து வரும் நாடாகிய இல…
-
- 4 replies
- 403 views
-
-
இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்ட நிலையில் அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்தநிலையிலேயே இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பதிவில் இரா.சாணக்கியன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பைப் பேணியவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதனை மேற்கொள்ளுமாறும் இரா.சாணக…
-
- 0 replies
- 181 views
-
-
சர்ச்சைக்குரிய கட்டுவான் – மயிலிட்டி வீதி – கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இராணுவம்! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதிவிடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு , கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவான் – மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கடந்த 32 வருடங்களுக்கு மேலாக காணப்படுகிறது. குறித்த 400 மீற்றர் நீளமான வீதியினை விடுவிக்க பல்வேறு கால கட்டங்களில் , பல்வேறு தரப்பினரும…
-
- 0 replies
- 289 views
-
-
மோடியிடம் செல்ல முன் சொல்லி இருக்கலாம்’ மகேஸ்வரி விஜயனந்தன் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும் அது இறைமையுள்ள நாடு என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, நேற்று (19) நினைவூட்டினார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்தத் தவறியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெ…
-
- 2 replies
- 385 views
-
-
ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர் – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். 11 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் கிடைக்காத நியாயம் இதனை வெளிப்படுத்துவதாகவும் கூறினார். இந்த சம்பவம் குறித்த விசாரணை இடம்பெறும் போதே அதில் சம்பந்தப்பட்டவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகின்றது என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். அதேபோல், புதிய அரசியலமைப்பு குறித்து பேசும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே, 20 ஆவது திருத்தம் மூலம் சர்வாதிகார ஆட்சியை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்தா…
-
- 0 replies
- 171 views
-
-
"நாங்க பதுளையில ருந்து 10 வருசத்துக்கு முதல இங் வந்து குடியேறினாங்க" "நான் பிறந்தது பதுளையில"
-
- 1 reply
- 271 views
-
-
ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !! கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடனை டொலராக மாற்றுவதற்கான சரியான அளவு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து தீர்மானம் எட்டப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வரலாற்று ரீதியாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் ஜப்பான், நிதி உதவி மட்டுமல்லாமல் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது. ஜப்பானில் இருந்து பெறப்…
-
- 16 replies
- 1k views
-
-
(ஆர்.யசி) ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் எதிர்க்கட்சி பக்கத்திலுள்ள தமிழ் கட்சிகளுக்கு குறைந்தளவான நேரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதம் 20 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது விவாதத்திற்காக 7 மணித்தியாலங்கள் அதாவது 420 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் அரச தரப்பில் 23 உறுப்பினர்கள் உரையாற்ற 252 நிமிடங்களும் எதிர்க்கட்சிகளில் 13 உறுப்பினர்கள் உரையாற்ற 168 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் 8 உறுப்பினர்கள் உரையாற்ற 111 நி…
-
- 0 replies
- 230 views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK.COM/UDAYAGAMMANPILAFANPAGE படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் எரிசக்தி அமைச்சர் ஆக இருக்கும் உதய கம்மனபில இந்தியா தற்போதைக்கு தன்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத நாடாக இருக்கும் இலங்கைக்கு உதவக்கூடும். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு காலங்காலமாக பின்னிப்பிணைந்து உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தமிழர் பிரச்னை மிகவும் உணர்வுபூர்வமானது, ஆனால், அதுவே இரு தரப்பிலும் கசப்புணர்வை தூண்டவும் காரணமாகலாம் என்ற வகையில் ஒரு நிகழ்வு இலங்கையில் நடந்திருக்கிறது. ஜனவரி 13ஆம் தேதி இலங்கைக்கான இந்திய தூதரகம், இலங்கைக்கு 900 மில்லியன் டாலர்கள் உதவியை இந்தியா வழங்குவதாக அறிவித்தது. பிறகு இந்த வாரம் ச…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் கட்டுவாபிட்டி தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்மது ஹஸ்தூனின் மனைவியான தற்போதும் மர்மமாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்ரனின் கீழேயே, பெண்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு இஸ்லாமிய தேசமொன்றுக்கான 'பையத்' செய்துகொள்ளப்பட்டுள்ளதாக சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சாராவின் கீழ் பயிற்சி பெற்று, இஸ்லாமிய தேசம் ஒன்றினை உருவாக்க பையத் எனும் உறுதி மொழியை 16 பெண்கள் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர், 2019 ஏப்ரல் 26 சாய்ந்தமருது தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை தெரியவந்த…
-
- 1 reply
- 292 views
-
-
(எம்.மனோசித்ரா) 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கையிடம் கோராமல் ஏன் இந்தியாவிடம் கோரியிருக்கின்றோம் என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா முன்வந்து உதவிக்கரம் நீட்டிய போது, அந்த உதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றிருக்கிறது. அதன் காரணமாகவே 1987 இல் ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அது இன்றும் அமுலில் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஏவ்வறாயினும் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தம் புகுத்தப்பட்ட காரணத்தினால் அது ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வாக கருத முடியாமலிருக்கிறது. அதனை தாண்டி…
-
- 0 replies
- 224 views
-
-
3 நாட்களில் 100 இலட்சத்திற்கு மேல் வருமானம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவு) திறந்து வைக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதியில் 50,000 வாகனங்கள் பயணித்துள்ளதோடு 100 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 15-01-2022 சனிக்கிழமை அன்று மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டதையடுத்து, முதல் 12 மணித்தியாலங்களுக்குள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 16-01-2022 மதியம் 12.00 மணிக்குப் பிறகு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 231 views
-
-
தமிழர்கள் ஆணையை வழங்கியது அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அல்ல – சுமந்திரன் காட்டமான பதில் on Twitter தமது கொள்கைகளை கைவிட்டு கூட்டமைப்பினர் ஒருபோதும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியின் கொள்கை உரையில் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தவொரு முக்கியமான கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். நாடு பாரிய சவால்கள…
-
- 6 replies
- 456 views
-
-
(ஆர்.யசி) ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையானது மிக மோசமான உரை எனவும், எமது கரிசனைகள் குறித்து எதனையுமே கருத்தில் கொள்ளாத ஜனாதிபதியின் உரை ஏமாற்றத்தை தருவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கடும் தொனியில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரை தொடர்பில் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களிடமும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் அமர்வுகளை நேற்று ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது கொள்கை விளக்கவுரையையும் ஆற்றியிருந்தார். அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டிருந்த வேளையில் பாராளுமன்றத்தின் முதலாம் மாடியில் உள்ள நூலகத்தின் வாயில் அருகே நின்றுக்கொண்டிருந்த சம்பந்தன் அவ…
-
- 2 replies
- 292 views
-
-
கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது! கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள குறித்த நூலகம் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் அமையவுள்ளது. குறித்த நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ்.இந்திய துணை தூதுவர் ராம ராஜேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிதிகள் விழா இடம்பெறம் மண்டபத்த…
-
- 8 replies
- 1k views
-
-
வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் – இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு எதிராக மனுத்தாக்கல்! வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் தொடர்பில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறையை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி திஷ்ய வெரகொடவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதிவாளர் ஜெனரல் டபிள்யூ.எம்.எம்.பி. வீரசேகர, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச் முனசிங்க ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை கையொப்பமிட்ட மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்தில் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாக, ஒவ்வொரு நபரும…
-
- 1 reply
- 348 views
-