Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போராட்டத்திற்காக யாழ். நோக்கி சென்றவர்கள் பொலிஸாரால் தடுப்பு யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன சாரதி பொலிசாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதில் கலந்து கொள்வத…

    • 2 replies
    • 265 views
  2. ஒரு கப், பால் தேநீரின் விலை... 100 ஆக அதிகரிப்பு, உணவகங்களில் பால் தேநீர் விநியோகம் நிறுத்தம் !! ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக சில உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், உள்ளூர் பால்மா உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள…

  3. இலங்கை முழுவதும் உணவகங்கள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டுள்ளதாக தகவல் March 20, 2022 சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீடித்து வருவதனால் இலங்கை முழுவதும் உணவகத் தொழிலில் ஈடுபட்டுவதந்த சுமார் 5 இலட்சம் பேர் வேலையிழக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றமை அத்துறைசார்ந்தவர்களுக்கு வேலையிழப்பு, வருமானமிழப்பு ஏற்படுவது ஒருபுறமிருக்க சாதாரண மக்களையும் இது பாதிக்கவே செய்கிறது. அதிகரித்த விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத நிலையில் உணவகங்களையே நம்பியிருக்கும் நிலையில் உள்ள மக்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது. இவை ஒருபுறமிருக்க எரிபொருளுக்கான விலையும் அதிகரித்து வர…

  4. புதுக்குடியிருப்பு மாணவர்கள் கடத்தல் சம்பவம் – நடந்தது என்ன- பொலிசார் விளக்கம்! முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் மாணவர்கள் வெள்ளைவானில் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் பொலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது உண்மை தகவல் தெரியவந்துள்ளது. மாணவர்கள் நேற்று(19.03.2022) மாலைநேர வகுப்பிற்கு செல்வதாக சொல்லிவிட்டு புதுமாத்தளன் கடற்கரைக்கு சென்றுள்ளார்கள். அங்கு போதை பாவனைக்கு உள்ளான மாணவர்களே வீதியில் வீழுந்துள்ளார்கள். இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் தலைமையிலான குழுவினர்கள் உடன் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றார்கள். மாணவர்கள் பெற்றோருக்கு ஒரு தகவலை வழங்கிட்டு மாலைநேர கல்விக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று ஞாயிற்று…

  5. நல்லூரை தவிர்த்து மாவிட்டபுர கந்தனை வழிபட்ட பிரதமர் மஹிந்த – இறுதி நேரத்தில் மாற்று ஏற்பாடு! பிரதமர் மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டை இரத்து செய்து 9.30 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் சென்று வழிபட்டுள்ளார். நல்லூரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது என வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நல்லூர் ஆலய விஜயத்தை முன்னிட்டு ஆலயச் சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளும் மூடப்பட்டு காணப்பட்டது. ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி கோவில் வீதி என்பன பொலிசாரினால் வழிமறிக்கப்பட்டு மாற்றுப்பாதை ஊடாக பொதுமக்கள் அனுப்பப…

  6. எரிவாயு விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் கூறும் காரணங்கள்! 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரினால் லிட்ரோ நிறுவனம் தற்போது 2,000 ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே இதனைத் தெரிவித்துள்ளார். "12.5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டருக்கு நிகர இழப்பு 2,000 ரூபாய். அதுதான் இன்றைய நிலை. அதிகரிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் எரிவாயு சிலிண்டரின் செலவு12.50 ரூபாய் அதிகரிக்கிறது." " மார்ச் ஒப்பந்த அடிப்படையில் நாங்கள் மற்றொரு எரிவாயு கப்பலை வாங்கினால் அது லிட்ரோ நிறுவனத்தின் இறுதி பயணமாகும்." "லிட்ரோ நிறுவனம் இந்த விலையின்…

    • 0 replies
    • 322 views
  7. முகநுால் காதலால் விபரீதம்- இரு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் March 19, 2022 முகநுால் காதலால் ஏற்பட்ட விபரீதத்தில் காணாமல் போயிருந்த முல்லைத்தீவு சிறுமிகள் இருவரும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிகள் இருவரும் கடந்த 16ம் திகதி அன்று மாலைநேர வகுப்பிற்கு என புறப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர்கள் அவர்களை தேடிய நிலையில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். குடும்பத்தினர் மற்றும் கிரமத்தவர்கள், காவல்துறையினர் இணைந்து தேடிய நிலையில் நேற்று(18) மாலை புதுக்குடியிருப…

  8. நல்லூருக்கு வருகை தரும் மகிந்தவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு! March 19, 2022 பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் நல்லூர் ஆலய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஆகியன இணைந்து இன்று நடாத்திய ஊடக சந்திப்பின்போதே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில், இலங்கை பிரதமர்…

  9. இலங்கை பொருளாதார நெருக்கடி: தடைப்பட்ட காகித இறக்குமதி, வினாத்தாள் அச்சடிப்பதில் சிரமம் - ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எதிர்கால சந்ததியை தற்போதே பாதிப்பை நோக்கி நகர்த்த ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கடதாசி (பேப்பர்) இறக்குமதி தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாடசாலை மட்டத்தில் நடைபெறும் முதலாம் தவணை தேர்வுகளை நடத்துவதில் அதிகாரிகள் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளனர். கடதாசி தட்டுப்பாடு காரணமாக, தேர்வு வினாத் தாள்களை அச்சிட முடியாத நிலைக்கு இலங்கை…

  10. போராட்டத்தை அடுத்து.... கந்தரோடை விகாரைக்கு செல்லும், திட்டத்தை கைவிட்டார் பிரதமர் மஹிந்த ! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக வரவிருந்த தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட தீர்மானித்திருந்தார். கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீடிரென கந்தரோடை விகாரைக்கான தனது விஜயத்தை இரத்து செய்தார். இதனை அடுத்து அப்பகுதியில் பிரதமரது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கிருந்து…

    • 1 reply
    • 349 views
  11. நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனம் வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதற்கான சன்னஸ் பத்திரத்தை கௌரவ பிரதமர் வழங்கி வைத்தார் அன்றும் வடக்கு மக்களை பாதுகாத்த நாம், அந்த மக்களை பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் இன்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் வழங்கும் வகையில் யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமஹா விகாரையில் இன்று (19) இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். யாத்ரீகர்களுக்குத் தேவை…

    • 2 replies
    • 666 views
  12. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின், விலை... 600 ரூபாயால் அதிகரிப்பு !! எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 260 ரூபாயினாலும் 01 கிலோகிராம் பால் மா பொதியின் விலை 550 முதல் 600 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி 01 கிலோகிராம் பால் மா பொதியின் புதிய விலை சுமார் 1845 ரூபாயாக இருக்கலாம் என்றும் 400 கிராம் பக்கெட்டின் விலை 800 ரூபாயாக இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகரிப்பு குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் மாவின் விலையை …

  13. பிரதமர் மஹிந்த கலந்து கொள்ளும் நிகழ்வில்... செய்தி சேகரிக்க, ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு ! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் யாழுக்கு வருகைதந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள புத்த விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அந்நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1272492

  14. கடனுக்கான இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை, மூன்று வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் – பசில் இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடனை மூன்று வருடங்களின் பின்னர் தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டுமே தவிர எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் நேற்று நாடு திரும்பியதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையின் அண்டை நாடான இந்தியா இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கைக்கு துணை நிற்கிறது என்பதை நிரூபித்துள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இயற்கை விவசா…

    • 1 reply
    • 205 views
  15. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்... மீண்டும் மூடல் !! சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் மூடப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. சுத்திகரித்தல் செயற்பாட்டுக்கான கச்சா எண்ணெய் இல்லாததால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சில மாதங்களாக பல தடவைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1272453

  16. மகிந்த யாழ் வருகை – பௌத்த ஆக்கிரமிப்பைக் கண்டித்து யாழ் மாவட்டச் செயலகத்தை முடக்கிப் போராட்டம் March 19, 2022 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை எதிர்த்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், பயங்கரவாதச் சடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், வடக்கு – கிழக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்களைக் கண்டித்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு போராட்டத்தை இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 9.30 மணியளவில் மேற்கொண்டனர். இதன் போது போராட்டத்தில்…

  17. இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் சீனாவின் உதவியை நாடியுள்ளது இலங்கை இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும்,அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான கடன் உதவி குறித்தும் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் சீன வங்கிககளிற்கு இலங்கை 100 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக செலுத்தவேண்டும். நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளும் வரை இந்த கடன்களை செலுத்துவதை ஒத்திவைக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இலங்கையின் உள்ளுர…

    • 3 replies
    • 367 views
  18. இந்தியாவுடனான ஒப்பந்த இரகசியங்களை வெளிப்படுத்துங்கள் - முஜிபுர் ரஹ்மான் (எம்.மனோசித்ரா) இந்தியாவிடம் ஒரு பில்லியன் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எவை என்பதை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். மத்தள விமான நிலையம், சம்பூர் அல்லது யாழ் தீவுகள் என இந்தியாவிற்கு எதனை வழங்க திட்டமிட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் , உரிய தீர்மானங்களை பொறுத்தமான நேரத்தில் எடுக்காமைக்க…

  19. பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான... கடதாசிக்கு தட்டுப்பாடு – பாடசாலைகளில், பரீட்சைகள் நடைபெறும் திகதிகளில் மாற்றம்! மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்விப் பணிப்பாளரினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் ஏனைய பொருள்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 6ஆம், 7ஆம், 8ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு, 4ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை பரீட்சைத் திகதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு…

  20. சாரதி அனுமதிப்பத்திரத்தை... அச்சிடும், அட்டைகளுக்கு தட்டுப்பாடு – முக்கிய தீர்மானம் வெளியானது! ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், சாரதி அனுமதிப்பத்திரத்தினை அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வீட…

  21. (எம்.நியூட்டன்) யாழ். கந்தரோடையில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுகின்றது என அப்பகுதி இளைஞர்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து, வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அழைத்துச்சென்று இன்று வெள்ளிக்கிழமை நிலைமைகளை அவதானித்துள்ளார் குறிப்பாக அங்கு நின்றிருந்த பொளத்த மதகுருவிடம் வினவியிருந்தார். குறித்த சந்திப்பின் போது அதிகளவான இராணுவத்தினர் பிரசன்னமாகியிருந்ததாக அங்கிருந்தவர்களால் அவதானிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ். கந்தரோடையில் …

  22. ஜனாதிபதியை முகநூலில் விமர்சித்த ரூபவாஹினியின் பெண் ஊடகவியலாளர் அவரது நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கப்பட்டார்- சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்த ரூபவாஹினி ஊடகவியலாளர் பரமி நிலப்த ரணசிங்க அவரது நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கப்பட்டமை அரசாங்கம் ஊடகவியலாளர்களை கண்காணிக்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை குறித்த தனது உணர்வுகளை முகநூல் ஊடாக வெளிப்படுத்தியமைக்காக என்னை ரூபவாஹினியிலிருந்து தடை செய்துள்;ளனர் என பெண் ஊடகவியலாளர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். …

  23. இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்கள் இறக்குமதி இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்குக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய, அத்தியாவசிய உணவுப் பொருள், மருந்துகள், சீமெந்து, துணி வகைகள், விலங்குணவுகள், விசேட உர வகைகள், தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை இறக்குமதியாளர்கள் இதன் போது பதிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறான பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய விரும்பும் இறக்குமதியாளர்கள் www.trade.g…

    • 0 replies
    • 303 views
  24. மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவி விலக வேண்டும் – சாணக்கியன்! மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பாக காலியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மிக விசேடமாக சொன்ன விடயங்களைப் பார்த்தால், தன்னை மக்கள் ஜனாதிபதியாக வர…

    • 0 replies
    • 189 views
  25. எரிபொருள், எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – மாலைதீவில் நீர் விளையாட்டில் குதூகலிக்கும் நாமல்? இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளது. இதனையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது. மாலைத்தீவிலுள்ள நீர்விளையாட்டுகளின் பயிற்றுவிப்பாளர் ஒருவர், நாமல் ராஜபக்சவின் புகைப்படத்தை வெளியிட்டு, இலங்கை அமைச்சருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அந்நிய செலாவண…

    • 1 reply
    • 334 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.