Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒக்டோபர் மாதம் முதல் 89 இலங்கை தமிழர்கள் டியோகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்- பிரிட்டன் உறுதிசெய்துள்ளது Digital News Team 2022-02-15 20 சிறுவர்கள் உட்பட 89 இலங்கை தமிழர்கள் 2021 ஒக்டோபர் மூன்றாம் திகதி முதல் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதை பிரிட்;டிஸ் அரசாங்கம் உறுதி செய்துள்ளது என ஆசிய பசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு தெரிவித்துள்ளது. நடுக்கடலில் காப்பாற்றப்பட்ட இவர்கள் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என பிரிட்டன் உறுதி செய்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா அகதிகள் முகாமிலிருந்து வெளியேறி நடுக்கட…

  2. கச்சதீவு செல்லும் பக்தர்கள் மூன்று தடுப்பூசிகளையும் செலுத்தியிருத்தல் அவசியம் - யாழ். அரச அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை 500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு செல்வோர் கொவிட்-19 க்கு எதிரான மூன்று தடுப்பூசி டோஸ்களையும் செலுத்தி இருத்தல் அவசியம் என்று யாழ். அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கச்சதீவு தேவாலய உற்சவம் எதிர்வரும் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, கொரோனா சுகாதார நட…

  3. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் நான்காம் மாடிக்கு அழைப்பு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனுக்கு , கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸார் ஊடாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவர் விசாரணை பிரிவில் முன்னிலை ஆகும் போது அன்றைய தினம் குறித்த அமைப்பு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.thaarakam.com/news/6de7b477-ad34-43be-a583-5dc69d8fe5be

  4. அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன் மணல் அகழ்வு மன்னாரில் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியே அவுத்திரேலிய நிறுவனத்தால் கனிய மணல் அகழ்வு இடம்பெறுகிறது என மன்னார் சுற்றாடலை பாதுகாப்போம் எனும் அமைப்பினர் குற்றம் சாடியுள்ளனர். மன்னார் பிரிஜின் லங்கா நிறுவன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர். அந்த அமைப்பினர் மேலும் தெரிவித்ததாவது: மன்னாரில் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக கனிய மணல் ஆய்வுகள் மிகவும் ரகசியமான முறையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கனிய மணல் அகழ்வால் மன்னார் தீவுப் பகுதி குறுகிய காலத்தில் முற்று முழுதாக கடலில் மூழ்கும் நிலை ஏற்படும். எங்களால் இயன்றவரை இது த…

  5. போர்க்குற்ற விவகாரத்தில்... இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியாது – அரசாங்கம் போர்க்குற்றம் தொடர்பாக எந்தச் சூழ்நிலையிலும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக சர்வதேச சட்டங்கள் மிகத் தெளிவாக உள்ளமையால் இலங்கைக்கு எந்தவிதமான ஆபத்தும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பொறுப்புக்கூறல் பிரச்சினைக்கு சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினர் பதிலளித்த விதம் குறித்து அதிர்ச்சியும், ஆச்சரியமுமடைவதாகவும் கூறினார். குறிப்பாக அப்போதைய அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்…

  6. 3 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவது குறித்து இன்று இறுதி தீர்மானம் நாடடில் நிலவும் மின்சார நெருக்கடியில் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்தமை போன்ற பல காரணிகள் மின்வெட்டுக்கான காரணங்களாக உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, 03 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை இதற்கு முன்னர் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியிருந்தது. இந்நிலையில், மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மின்சாரத்தை துண்டிப்பத…

  7. 49 ஆவது அமர்வில் யாருக்கு நீதி கிடைக்கும்? February 15, 2022 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை கலந்துகொள்வதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையான சமூகம் ஏற்றுக்கொள்ளும் என வலியுறுத்தினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று (14.02.22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவ…

  8. திருத்தம் செய்யப்படுகின்றது... தொல்லியல் கட்டளைச் சட்டம்! தொல்லியல் கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வரைபு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தொல்லியல் கட்டளைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரகாரம், தொல்பொருட்களைத் திருடும் நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை அல்லது 500,000 ரூபா அபராதம் விதிக்கப்படலாம் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1266885

  9. (ஆர்.யசி) நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் இன்றைய கடன் நெருக்கடிக்கு ஒட்டுமொத்தமாக ராஜபக்ஷவினரே பொறுப்புக்கூற வேண்டும். ராஜபக்ஷவினரின் ஆட்சி இனிமேலும் தொடருமானால் பிரபாகரன், சஹரான் அல்லது ரோஹன விஜயவீரவினால் கூட இதுவரை செய்ய முடியாத அளவிற்கு அழிவுகள் இடம்பெறும் எனவும் அவர் கூறினார். நாட்டின் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து தனது நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் இதனை கூறினார். இந்த நாட்டின் மொத்த கடன்களில் …

    • 1 reply
    • 249 views
  10. Freelancer / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 07:20 - 0 - 87 இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலைதூக்குவது தொடர்பில் கொழும்பு ஆயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கவலை தெரிவித்தார். சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரம தாக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார் என்றும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, இன்று (14) தெரிவித்தார். இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு சற்று முன்னர் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், சர்வதேச ரீதியில் இலங…

    • 1 reply
    • 517 views
  11. புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || யாழுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

    • 32 replies
    • 1.7k views
  12. பிரபல ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவின் பிலியந்தலையில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் கற்களையும் மலத்தையும் வீசி தாக்குதலுல் நடத்தியுள்ளார்கள் .பாதுகாப்புப் பணியாளர்களை துப்பாக்கி முனையில் பிடித்தபடி தாக்குதல் நடத்தியவர்கள் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த கும்பல் வெள்ளை வேனில் வந்ததாக வீட்டு வளாகத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். https://www.dailymirror.lk/latest_news/Journalist-Chamuditha-Samarawickramas-residence-attacked/342-231037

    • 9 replies
    • 769 views
  13. இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம் இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன மற்றும் ஜப்பான் முதலான நாடுகளின் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இணையவழி முறைம…

  14. உலக அமைதி என்பது... வன்முறையற்ற உலகிற்கான அபிப்பிராயம் – ஷிரந்தி ராஜபக்ஷ உலக அமைதி என்பது வன்முறையற்ற உலகிற்கான அபிப்பிராயம் என உலக அமைதி மாநாடு 2022இல் (கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான மாநாடு) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றிய பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். உலகளாவிய அமைதி சம்மேளனத்தின் அழைப்பிற்கு ஏற்ப காணொளி தொழில்நுட்பம் ஊடாக தென்கொரியாவின் சியோலில் நடைபெறும் ‘உலக அமைதி மாநாடு 2022’ இல் கலந்துகொண்டு பிரதமரின் பாரியார் இவ்வாறு வலியுறுத்தினார். மூன்று தினங்கள் நடைபெறும் இம்மாநாடு கடந்த 11ஆம் திகதி ஆரம்பமானதுடன், 150இற்கும் அதிகமான உலக நாடுகளை சேர்ந்த மதத் தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைதிக்கான ஆர்வலர்கள், ஊடகவியலாளர்க…

    • 2 replies
    • 284 views
  15. நிரந்தர அதிகாரப் பகிர்வு பொறிமுறையை... நடைமுறைப்படுத்த, இலங்கை தவறிவிட்டது – மைத்திரி இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்து 12 வருடங்கள் கடந்துள்ளபோதும் அதிகார பகிர்விற்கான நிலையான பொறிமுறை உருவாக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். தென்கொரியாவில் கடந்தவாரம் இடம்பெற்ற சமாதானம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோதே மைத்திரிபால சிறிசேன இதனை கூறினார். யுத்தம் முடிவிற்கு வந்ததை தொடர்ந்து அமைதி, சமாதானம், நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை உறுதிப்படுத்த பான்கி மூன் முன்னேற்றகரமான தீர்மானங்களை முன்னெடுத்தார். இருப்பினும் சர்வதேசம் எதிர்பார்க்கும் தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் எதிர்பார்த்த பலனைப் பெறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக…

    • 1 reply
    • 322 views
  16. முல்லைத்தீவில் வேப்ப மரத்தை வெட்டி அகற்றிவிட்டு அரசமரம் நட்டு வளர்க்கும் படையினர் கே .குமணன் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில் மணலாறு செல்லும் பாதை பிரிந்து செல்லும் மூன்று சந்தியில் செழிப்பாக வளர்ந்துவந்த வேப்ப மரம் ஒன்றை வெட்டி அகற்றிவிட்டு அரச மரக்கன்று ஒன்றை அதே இடத்தில் நாட்டி வளர்க்கும் வேலையை படையினர் மேற்கொண்டுள்ளார்கள் . குறித்த பகுதியில் கடந்த சிலவருடங்களாக செழிப்பான வகையில் வளர்ந்த வேப்பமரம் ஒன்று காணப்படுத்துள்ளது. அந்த மரம் அந்த சந்தியில் இருந்ததுக்கான ஆதாரமாக 2016 ஆம் ஆண்டு கூகுள் நிலப்படங்களில் அந்த மரம் காணப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் அந்த சந்தியில் காணப்பட்ட வேப்ப மரம் இராணுவத்தினரால் வெ…

    • 30 replies
    • 1.5k views
  17. இலங்கை அரசாங்கம் அம்பிகா சற்குணநாதனை துன்புறுத்துவதற்கு அச்சுறுத்துவதற்கு முயல்கின்றது – எட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக குற்றச்சாட்டு Digital News Team 2022-02-14T11:52:06 இலங்கையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனிற்கு ஆதரவாக எட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உபகுழுவிற்கு அம்பிகா சற்குணநாதன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிலையிலேயே மனித உரிமை அமைப்புகள் அம்பிகா சற்குணநாதனிற்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளன. இலங்கை அரசாங்கம் அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை துன்புறுத்தல் அச்சுறுத…

  18. சுவாமி விபுலாநந்தர் பிறந்த வீதி கார்ப்பட் வீதியாகிறது! February 14, 2022 (காரைதீவு நிருபர் சகா) உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவு வீதி கார்ப்பட் வீதியாக புனரமைக்கப்படுகிறது. ஜனாதிபதியின் 10லட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் இவ் விபுலாநந்தவீதி 500மீற்றர் நீளத்தில் கார்ப்பட் ஆகிறது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை கார்ப்பட் வீதியமைக்கும் வேலைத்திட்டத்தை நேற்று ஆரம்பித்தது.வீதியின் இருமருங்கிலும் “டிஸ்க்” ரக வடிகான் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 12வருடங்களுக்கு முன்பு இவ்வீதி கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டபோதிலும் வீதிபூராக மழைகாலங்களில் வெள்ளம் ஆங…

  19. மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று அரசாங்கத்திடம் கையளிப்பு, வெள்ளிக்கிழமை வரை அவகாசம் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான பதிலை வழங்குவதற்கு வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 2009 இறுதிபோரின் போது இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான ஆவணங்ளை திரட்ட கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் எட்டப்பட்டது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் தொடங்கும் அதன் நாற்பத்தி ஒன்பதாவது அமர்வில் மிச்செல் பச்லெட் எழுத்து மூலமான அறிக்கையை சமர…

  20. கடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய மீண்டும் இந்தியாவிற்கு செல்கின்றார் பசில் ! இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியமை வெற்றியளித்துள்ளது என்றும் நாட்டிற்கு பயனுள்ள முடிவுகளை வழங்கியது என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கைக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்தியா உறுதி வழங்கியுள்ளது என்றும், அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது கடந்த விஜயத்தின் போது இதற்கான அடித்தளத்தை உருவாக்கியதாகவும் அ…

  21. இலங்கையின் நிலைமை மிக மோசமாகிவிட்டது, ஆட்சி மாற்றமே உடனடி தேவை என்கின்றார் சந்திரிக்கா இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர் எனவும், நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று தன்னால் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய ஆட்சியால் நாடு சீரழிந்துள்ளது என்றும் நாடு மீண்டு எழ முடியாத நிலையில் நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் சென்றுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆட்சி மாற்றமே தற்போதைய உடனடித் தேவை என குறிப்பிட்ட சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயகத்தை நேசிக்கும் பிரதிநிதிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். …

  22. மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வு காண்பதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்தில் கொள்ளவேண்டும்- டைம்ஸ் ஒவ் இந்தியா பேட்டியில் ஜிஎல்பீரீஸ் இருதரப்பு உறவுகளை மேலும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளின் மத்தியில் இந்தியாவின் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அயல்நாடு இந்தியாவின் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் எதிராகஎந்த நாடும் தனது நாட்டை பயன்படுத்துவதற்கு அனுமதிக்காது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு தனது இந்திய விஜயத்தின்போது தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி காரணமாக அதன் சொத்துக்களை சீனாவிற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ வழங்கும் ஆபத்து இல்லை எனவ…

    • 2 replies
    • 306 views
  23. அபாயா ஆடையால் திருகோணமலை இந்து கல்லூரியில் சர்ச்சை பைஷல் இஸ்மாயில் - அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முக இந்து கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது. ஆசிரியையின் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை சண்முக இந்து கல்லூரிக்கு முன்பாக, மாணவிகள் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர். 2017ஆம் ஆண்டு இப்பாடசாலையில் அபாயா பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், அப்பாடசாலையில் ஏற்கெனவே கடமையாற்றி வந்த ஆசிரியை மீண்டும் பாடசாலைக்கு இன்று (02) சென்றுள்ளார். இந்நிலையில் ,குறித்த பாடசாலை அதிபர் கார…

  24. இலங்கையில் விலைகள் அதிகரிப்பதால் மக்கள் உண்ணும் உணவை குறைக்கின்றனர் – சத்துக்குறைந்த உணவை உண்கின்றனர்- ஐநா இலங்கையில் பொருளாதாரரீதியில் பலவீனமான நிலையில் உள்ள குடு;ம்பங்கள் உண்ணும் உணவை குறைத்துகொண்டுள்ளன அல்லது சத்துக்குறைந்த ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்கின்றன என ஐநா அமைப்பொன்று தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியில் பலவீனமான நிலையில் உள்ள மக்களின் உணவுப்பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலை என்பன எதிர்மறையான தாக்கத்திற்குள்ளாகியுள்ளன என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனம் தனது சர்வதேச தகவல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. …

  25. இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை 02 இந்திய இழுவை படகுகளுடன் கைது செய்துள்ளனர்.. இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்களால் உள்ளூர் மீனவ சமூகம் மற்றும் இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை வழக்கமான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வடமத்திய கடற்படை கட்டளையானது தலைமன்னாருக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.