Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை, பொய்யான செய்திகள் பரவுகின்றன – பிரதமர் மஹிந்த எரிபொருள் நெருக்கடி என்ற தவறான கருத்து காரணமாகவே மக்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எரிபொருள் இருப்பு நான்கு நாட்களுக்கு மட்டுமே இருக்கின்றது என தவறான செய்திகள் பரவுவதாக தெரிவித்த அவர், நாட்டில் எவ்வித எரிபொருள் நெருக்கடியும் இல்லை என கூறினார். அரசியலில் குறைந்த அனுபவம் கொண்டவர்களினால் வெளியிடப்படும் இவ்வாறான அறிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார். மேலும் இவ்வாறான செய்திகள் காரணமாக நாடு முழுவதும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ …

    • 5 replies
    • 341 views
  2. Relations between Britain and Sri Lanka are likely to hit a new low after David Miliband addresses a meeting of Tamil activists from around the world at the Houses of Parliament today. The Foreign Secretary is due to make the opening speech at the inaugural meeting of the Global Tamil Forum, which campaigns for selfdetermination for Sri Lanka’s ethnic Tamils and to bring to justice perpetrators of alleged war crimes during the island’s 26-year civil war. William Hague, the Shadow Foreign Secretary, is to make the closing address to the meeting, which will be attended by several other MPs in an unprecedented display of cross-party support for Sri Lanka’s Tamils a…

    • 0 replies
    • 754 views
  3. இலங்கையில் மீறல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் அமெரிக்க செனட் சபை வலியுறுத்தல் இலங்கை உள்­ளிட்ட நாடு­களில், பாரிய கொடூ­ரங்­களில் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்­டிய தேவை உள்­ள­தாக அமெ­ரிக்க செனட் சபை தெரி­வித்­துள்­ளது. இலங்கைக்கான நிதி­யுத­வியை 92 வீதத்­தினால் குறைக் கும், டொனால்ட் ட்ரம்ப் அர­சாங்­கத்தின் திட்­டத்தை நிரா­க­ரித்து, அமெ­ரிக்க செனட் சபையின், ஆசிய பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான உப குழு கடந்­த­வாரம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறப்­பட்­டுள்­ளது. “பல நாடு­களில், மர­பணுச் சோத­னைகள் மூலம், பாரிய கொடூ­ரங்­களில் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத…

  4. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு... மரணச் சான்றிதழுடன் 100,000 ரூபாய் இழப்பீடு: ராஜபக்ஷ அரசாங்கம் அறிவிப்பு! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமக்கு உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும் என்றும் இழப்பீடும் தேவையில்லை என்றும் தெரிவித்தே அவர்கள் தொடர்ந்தும் பல வருடங்களாக போராடி வருகின்றனர். https://athavannews.com/2022/1271959

    • 14 replies
    • 684 views
  5. இந்தியாவில் காணப்படும் அதிகாரப் பரவலாக்கலை ஒத்த தீர்வே இலங்கைக்குப் பொருத்தமானது என ஆனந்த சங்கரி தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் சகல மக்களும் அமைதியாக வாழும் சூழல் இலங்கையில் ஏற்படும் எனத் தெரிவித்துள்ள ஆனந்த சங்கரி தான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் இந்த வகையிலான அதிகாரப் பகிர்விற்காகக் குரல் கொடுக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். புனர்வாழ்வு முகாம்களில் இருக்கும் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் ஆனந்த சங்கரி தெரிவித்திருக்கிறார். SOURCE: http://www.eelamweb.com/

    • 3 replies
    • 605 views
  6. பெப்ரவரி மாதம்... நாடாளுமன்ற அமர்வில், கலந்துகொள்ளாத தமிழ் தலைவர்கள் !! கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஒருமுறை கூட கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மாதத்தில் ஒருமுறை கூட கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அடங்குகின்றனர். மேலும் அமைச்சர் திலும் அமுனுகம, காமினி லொக்குகே ஆகியோரும் குமார வெல்கம ரொஷான் ரணசிங்க, ஜயந்த வீரசிங்க, திரான அலஸ் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட குறித்த ப…

  7. இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பான் கீ மூனின் நடவடிக்கைகளுக்கு அணிசேரா நாடுகள் எதிர்ப்பு இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நடவடிக்கைகளுக்கு அணி சேரா நாடுகள் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் பான் கீ மூனின் திட்டம் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து கோராது பான் கீ மூன், நிபுணர்கள் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக அணிசேரா நாடுகள் அமைப்பு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது. நியூயோர்க்கில் அமைந்துள்ள அணிசேரா நாடுகளின் இணை…

    • 0 replies
    • 616 views
  8. புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தில் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளிநாட்டு இராஜதந்திரிகள் வரவேற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இடைக்கால அறிக்கை தொடர்பாக வழிநடத்தல் குழுவின் எம்.ஏ.சுமந்திரன், ஜெயம்பதி விக்கிரமரட்ண ஆகியோர் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், நீண்ட இழுபறிக்குப் பின்னர் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றதில் சிறிலங்காப் பிரத…

  9. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு... மீண்டும் 5,000 ரூபாய்! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273764

  10. ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகிறார். எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஹோலியங் சூ அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் அபிவிருத்தித் திட்டங்களின் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். குறிப்பாக 2013 தொடக்கம் 2017 ஐ.நா. அபிவிருத்தி உதவி கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் முதல் வருடத்தில் அடையப்பெற்றுள்ள முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராயவுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ, இலங்கை விஜயத்தின்போது வடமாகாணத்தின் மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து…

  11. ஒற்றையாட்சி என்ற பதம் ஒருபோதும் மாறக்கூடாது காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலும் தீர்மானம் இல்லை என்கிறது சு.க. (ஆர்.யசி) வடக்கின் நிலைப்­பாடும் விக்­கினேஸ்­வ­ரனின் பிரி­வினை செயற்­பா­டு­க­ளுமே அதி­கார பகிர்வு தொடர்பில் அச்­சத்­துடன் சிந்­திக்க வேண்­டிய நிலைமையை ஏற்­படுத்தியுள்ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கிய அதி­கார பகிர்வானது நாட்டில் பிள­வி­னையே உரு­வாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தெரி­வித்­தது. அதி­கா­ரப்­ப­கிர்­விற்கு நாம் தயார் ஆயினும் காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கு­வதில் தீர்­மானம் இல்லை எனவும் அந்தக் கட்சி குறிப்­பிட்­டது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வாராந்த செய்­தி…

  12. ராஜபக்சே சிபாரிசில் இலங்கையில் சிகிச்சை- கம்பீர், நெஹ்ரா மீது பிசிசிஐ கடும் கோபம் வெள்ளிக்கிழமை, மார்ச் 26, 2010, 15:08[iST] டெல்லி: ராஜபக்சேவின் சிபாரிசின் பேரில், இலங்கைக்குப் போய் ஆயுர்வதே சிகிச்சை எடுத்துக் கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கெளதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா மீது இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கோபம் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இனப்படுகொலையை படு சுதந்திரமாக செய்து வரும் ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வதே சிகிச்சை செய்து திரும்பியுள்ளனர் கம்பீரும், நெஹ்ராவும். இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷானின் சிபாரிசின் பேரில் அவர்கள் ராஜபக்சேவை சந்தித்து அவரது ஏற்பாட்டின் பேரில் ஆயுர்வதேச சிகிச்சை செய்து கொண்டனர்…

    • 7 replies
    • 1.7k views
  13. சர்வதேச குழந்தைகள், சர்வதேச முதியோர் தினங்களை முன்னிட்டு ஜனாதிபதி சிறப்புச் செய்தி சகலவிதமான தடைகளையும் தகர்த்தெறிந்து, ஐக்கிய நாடுகள் சபையினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை எல்லா வகையிலும் பெற்றுத் தருவதைத் தமது அரசாங்கம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அழகு, தூய்மை, குற்றமற்ற தன்மை என்பவற்றின் அடையாளமாகவே குழந்தைகள் விளங்குகின்றனர். நாடு, சமயம், இனம், மொழி போன்ற எல்லைகளைத் தாண்டி, இவ்வுலகின் குழந்தைகள் அனைவருமே எதிர்காலத்தைக் கட்டியெழுப்பப் போகிறவர்கள். அவர்களுக்கு உரித்த…

  14. எமது வரலாற்று சிறப்பையும் பண்பாட்டையும் பேணும் இடத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டலா? நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டப்படுவது எமது கலாசாரத்தை அவமதிக்கும் செயல் என யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் 30.03.2010 செவ்வாய்க்கிழமை நாவாந்துறை சனசமூக முன்றலில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தமக்கு ஆதரவு இல்லாத நிலையில், அரசாங்கம் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்று கூறி வாக்கு பறிக்கும் வேலையை மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரல் ஊடாக அவசர அவசரமாக 28.10.2010 ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியுள்ளது. 'ஹோட்டல் நல்லூர்' என பெயரிட்டு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கான அ…

  15. தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயத்துடன் பொலிஸ் இன்ஸ்பெக்டரின் சடலம்! – போர்க்காலத்தில் கொழும்பில் புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர். [Monday, 2014-02-17 07:46:34] துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பொலிஸ் புலனாய்வு இன்ஸ்பெக்டர் ஒருவர் நேற்று காலை சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். அதுருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடகம, வயல்வெளி பகுதியில் நேற்றுக் காலை இவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்திய ட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜே.வி.எம். சமரகோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்த…

  16. தென்னாபிரிக்காவின் முறைப்படியான அழைப்பு இல்லாமலேயே, சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு, அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான உயர்மட்டக்குழு கடந்த 20ம் நாள் தொடக்கம், 22ம் நாள் வரை தென்னாபிரிக்காவில் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான பயணத்தை மேற்கொண்டது. எனினும், இதற்கு தென்னாபிரிக்காவிடம் இருந்து முறைப்படியான அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான பிரதி அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் இப்ராகிமுடன் தாம் தொடர்பு கொண்ட போதே, சிறிலங்கா குழு அழைப்பின்றியே பயணம் மேற்கொண்ட …

  17. வீட்டிலேயே விரோதிகள் Share ஒரு பொய்யை நூறு தரம் திரும்­பத் திரும்­பக் கூறி­னால் கடை­சி­யில் அது மெய்தான் என்று பன்­னாட்­டுச் சமூ­கம் கருத முற்­ப­டும். ஆனால் அந்­தப் பொய் உண்­மை­யில் ஒரு ஏமாற்­றும் நோக்­கி­லா­னது என்­பது தெரி­ய­வ­ரும்­போது, அத­னால் ஏற்­ப­டத்­தக்க பாதிப்பு மிகப் பெரி­ய­தா­யி­ருக்­கும்்் ” , என ர-ஷ்­யத் தலை­வர் விளா­டி­மீர் புடின் ஒரு சந்­தர்ப்­பத்­தில் தெரி­வித்­தி­ருக்­கி­றார். இந்த உண்­மையை மன­தில் இருத்­திக் கொண்டு மேற்­கொண்டு தொடர்­வோம். ‘‘இன்று எமக்கு எதி­ரி­கள் என எவ­ரு­மில்லை. சக­ல­ரும் எமது நண்­பர்­களே’’ என அரச தலை­வர் ஐ.நா . சபை­யில் வைத்­துக் கருத்த…

  18. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின், கூட்டத்தொடரில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கத்துக்கான பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இது நியாயமற்ற கோரிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் அனைத்துலக வலைப்பின்னல், தமது நாடுகடந்த அமைப்புகளின் மூலம், சிறிலங்காவில் அமைதி மற்றும் உறுதிப்பாட்டையும், நல்லிணக்க செயல்முறைகளையும் சீர்குலைக்க தொடர்ந்தும், தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. …

  19. தமிழகத்திலிருந்து 55 பேர் நாடு திரும்பினர் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்குச் சென்ற 55 பேர் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கான இலவச வானூர்திச் சிட்டைகளை ஐக்கிய நாடுகளின் அகதிகள் தூதுவராலயம் வழங்கியுள்ளது. அதேவேளை நாடு திரும்பியுள்ள 12 குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்துக்கான ஆரம்பக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/

  20. சீமெந்தின் விலை... அதிகரிக்கப் படுகின்றது. இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை நாளை(செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 50 கிலோ சீமெந்தின் புதிய விலையாக 2 ஆயிரத்து 750 ரூபா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278517

  21. கிளி. நீதிமன்றம் இன்று சிறிலங்கா அரசு திறப்பு சுமார் 30 வருட காலத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. நீதிமன்ற கட்டிடம் யுத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தினுள் அமைந்திருந்த பிறிதொரு கட்டிடத்தில் நீதிமன்றப் பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த நீதிமன்ற கட்டிடத்தினை புனரமைப்பதற்கான பணிகளை நீதி அமைச்சு மேற்கொண்டுள்ளது. விரைவில் புனரமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தில் நீதிமன்றச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு நாட்டில் வேறு பணிகளி…

  22. சட்­டமா அதி­ப­ருக்கு ஆலோ­சனை வழங்­கிய ஜனா­தி­பதி மைத்­திரி அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லை­யி­லுள்ள அர­சியல் கைதி­களின் வழக்கை மீண்டும் வவு­னியா மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­று­வது தொடர்பில் சட்ட மா அதி­ப­ரூ­டாக நீதி­மன்றில் விட­யங்­களை முன்­வைக்க சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கிறார். ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கிறார். இந்தச் சந்­திப்பு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்றுப் பிற்­பகல் நடை­பெற்­றது. இதன்­போது மூன்று அர­சியல் கைதி­களின் வழக…

  23. அவசரகால நிலையில்.... அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள்... பாதிக்கப்படாது என நம்புகின்றோம் – மனித உரிமைகள் ஆணைக்குழு நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து கவலையடைவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போராட்டங்கள் அமைதியானதாகவும், சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளின் வரம்பிற்குள்ளும் இருந்ததால் ஏன் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அத்தோடு அவசரகால நிலையில் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடல், கைது உள்ளிட்ட விடயங்களில் அடிப்படை …

    • 2 replies
    • 268 views
  24. '' கோட்டா கோ கம" குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் புதிய பிரதமர் ரணில் கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் என புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இதனையடுத்து மதவழிபாடுகளில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கோட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “ கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் . நாடு கட்டியெழுப்பப்பட்டு இளம் தலைமுறையினருக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும். ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்படும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.