Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் – முதல்வர் நம்பிக்கை வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றதென யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் நாயன்மார்கட்டு குளப்புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”வரவு செலவுத் திட்ட தயாரிப்பின் போது அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி அவர்களுடைய கோரிக்கைகளையும் உள்…

    • 0 replies
    • 304 views
  2. மட்டக்களப்பில் இறந்தவர்களை நினைவுகூர்ந்த 10 பேரும் பிணையில் விடுவிப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில், உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தமைக்காக கைதுசெய்யப்பட்ட 10 பேரும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றால் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடந்த மே மாதம் 18ஆம் திகதி உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தனர் என்றுகுற்றம்சாட்டி மட்டக்களப்பைச் சேர்ந்த 10 பேரை போலிஸார் கைதுசெய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தனர். உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதை எந்தச் சட்டத்தாலும் தடுக்க முடியாது என அவர்கள் சார்பில் மன்றில் முற்பட்ட சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்தநிலையில், மன்று அவர்களை பிணையில் செல்வ…

  3. நில ஆக்கிரமிப்பை கண்டித்து கடற்படைக்கு எதிராக போராடியதனால் கஞ்சா குற்றச்சாட்டா ? உரிமையை கேட்டது குற்றமா? மாதகல் மக்கள் கவனயீர்ப்பு நில ஆக்கிரமிப்பை கண்டித்து கடற்படைக்கு எதிராக போராடியதனால் கஞ்சா குற்றச்சாட்டா ? உரிமையை கேட்டது குற்றமா? மாதகல் மக்கள் கவனயீர்ப்பு http://www.mathagal.com/userfiles/mathagal-kanja-arrest-fb.jpg கஞ்சா கடத்திய சந்தேகத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,குறித்த இருவரும் …

    • 0 replies
    • 191 views
  4. பா.நிரோஸ் வரவு -செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைக்கும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் தெரிவித்தது. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு புறக்கணிக்கப்பட்டு உள்ளமையானது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியெனவும், தமிழ் மக்களுக்கு இதனூடாக எதிர்க்கட்சி தலைவர் சஜித், அநீதி இழைத்துள்ளதாகவும் ஆளுந்தரப்பினரும் குற்றஞ்சுமத்தினர். பாராளுமன்றத்தின் நேற்றைய (07) அமர்வில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள்…

  5. (எம்.மனோசித்ரா) வடக்கில் 3 தீவுகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த மின் திட்டங்களை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நெடுந்தீவு , அனலைத்தீவு மற்றும் நயினதீவில் சீனா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை கைவிடுவதாக கடந்த 2 ஆம் திகதி சீனா அறிவித்திருந்தது. மூன்றாம் தரப்பினரால் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் சீனா குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் செவ்வாய்கிழமை (7) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட போது அமைச்சரவை இண…

  6. (எம்.நியூட்டன்) யாழ். ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் இன்று புதன்கிழமை யாழ். மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. காலை 10 மணியளவில் யாழ். மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் து.ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டி வைத்த…

  7. சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்கு வருகைத் தந்த கப்பல் தொடர்பில், கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கப்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கப்பலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து, அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட விவசாய உரத்தை இலங்கை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது. இதையடுத்து, விவசாய உரத்தை ஏற்றி வந்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் சுமார் 70 நாட்கள் இருந்த நிலையிலேயே, தற்போது அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து மாயமாகியுள்ளது. இவ்வாறு மாயமான கப்பல் எங்கே சென்றது என்பது குறித்து தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இலங்கையினால் நி…

  8. தன்மீது பொய்யான தகவலை தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சவால் விடுத்துள்ளார். வடக்கில் தொழிலில் ஈடுபடும் 500 இழுவை வலை படகுகளிடமிருந்தும் நான் ஒரு இரவுக்கு ஒரு படகிடமிருந்து 5000 ரூபா கப்பமாக பெறுவதாக சுமந்திரன் எம்.பி. தனது சிறப்புரிமையை பயன்படுத்தி சபையில் கூறியுள்ளார், அவர் முடியுமானால் இந்தக் கருத்தை பொதுவெளியில் ஊடகங்களுக்கு சொல்ல முடியுமாவென கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சவால் விடுத்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட கடற்றொழில் அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு (07.12.2021) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த விவாத்தில் தொடர்ந்தும்…

  9. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் தமிழ் தேசத்தின் இருப்பை அழிக்க உதவுகின்றனவா? Posted on December 8, 2021 by தென்னவள் 19 0 தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றியமைத்து தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் அழிப்பதற்கான வேலைத் திட்டங்களுக்காகவா உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் இலங்கைக்கு உதவிகளை வழங்குகின்றனவென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சு,வன ஜீவராசி கள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு …

    • 0 replies
    • 315 views
  10. புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என தெரியாது; கைவிரிக்கிறார் மாவை சேனாதிராசா புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என்பது தெரியாது என்பதுடன் அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- December 8, 2021 “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்தை பிற்போடுமாறு தலைவர் இரா.சம்பந்தனே நேரடியாக இந்தியத் தூதரகத்திடம் கோரியுள்ளார். அவர் ஏன் அவ்வாறு கோரினார் என்பது எனக்கு தெரியாது. எனது மகனின் திருமணத்தை முன்னிட்டு கூட்டமைப்பின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை. நான் பங்கேற்காவிட்டாலும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் நானே கோரியிருந்தேன்.” இவ்வாற…

  11. எதிர்க்கட்சி பிரதான விவாதத்தை கூட்டமைப்புக்கு தாருங்கள் - தமிழ் தேசிய கூட்டமைப்பு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது அமைச்சுகளுக்காக நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆகியோர் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமக்கு வாய்ப்பளிக்குமாறு கோரி ஆளும் கட்சியின் எம்.பிக்கள் 33 பேரும் சபாநாயகரிடம் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர். வரவு செலவு திட்ட விவாதத்தை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சி இணக…

  12. வடமாராட்சியில் கரையொதுங்கிய சடலங்களில் ஒன்றை சிம்பன்சி குரங்கு என புதைப்பு? December 8, 2021 வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் சிம்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி காவற்துறையினர் புதைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறைத் திணைக்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் 5 சடலங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக கரை ஒதுங்கிய சடலத்தை காவற்துறையினர் புதைத்துள்ளனரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த சடலம் சிம்பன்சி குரங்கின் சடலம் என அந்தச் சடலம் புதைக்…

  13. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த கால சிவில் சமூக செயற்பாடுகள் , நடாத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாகவும் குறிப்பாக மாவீரர் தின நிகழ்வுகள் சம்பந்தமாகவும் பல்வேறு கோணத்தில் கேள்விகள் தொடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த விசாரணைகள் ஊடாக எம்மை சிவில் சமூக செயற்பாடுகளில் இரு…

  14. “குடியிருப்பு பகுதிகள் காடுகளாக அறிவிக்கப்படக்கூடாது”-தர்மலிங்கம் சித்தார்த்தன் December 7, 2021 குடியிருப்பு பகுதிகள் காடுகளாக அறிவிக்கப்படக்கூடாது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் உரையாற்றுகையில், “குடியிருப்பு பகுதிகள் காடுகளாக்கப்பட்டு அந்த பிரதேசங்கள் பின்னர், வடக்கின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. வவுனியா நெடுங்கேணியில் இது போன்ற குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது” என குற்றம்சுமத்தியுள்ளார். இதேவேளை அம்பாறை வட்டமடு பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் காணிப்பிரச்சனை…

  15. எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கிறாரா சஜித்? சபை நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியினர் புறக்கணித்துவரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிப்போகும் என்கிற அச்சத்தால், சபை நடவடிக்கைகளில் சஜித் பிரேமதாஸ விரைவில் கலந்துகொள்வார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தின் இன்றைய (07) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜோன்ஸ்டன், ஐக்கிய மக்கள் சக்தி சபை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ள நிலையில், சபைக்கு ரணில் வந்திருப்பதால் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மிகுந்த அச்சத்தில் உள்ளதாக அக்கட்சியின் எம்.பி ஒருவர் என்னிடம் தொலைபேசியில் கூறினார் என்றார். மேலும் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிப்போகும் என்கிற அச்சத்தில் உள்ள எதிர்க்…

    • 0 replies
    • 253 views
  16. அரசாங்கம் பின்பற்றுவது கப்ரால் வழியா? ராஜபக்ஷ வழியா? – ரணில் கேள்வி அரசாங்கம் கப்ரால் வழியை பின்பற்றுகிறதா அல்லது ராஜபக்ஷ வழியை பின்பற்றுகிறதா என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் இந்த கேள்வியை எழுப்பினார். குறிப்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திடீர் இந்திய விஜயம் குறித்து கவலைகளை வெளியிட்டு ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்திருந்தார். மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளாத நிலையில் அரசாங்கம் கப்ரால் வழியை பின்பற்றுகிறத…

    • 0 replies
    • 188 views
  17. யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் - பொலிஸ், கடற்படை மீது அச்சம்! யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் சடலங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேசந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை. அதனால் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த சடலங்கள் க…

  18. கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் உள்ளூராட்சி சபைகள் தோற்கடிக்கப்படுகின்றன – சுரேஷ் கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் அவை தோற்கடிக்கப்படுகிறது. தங்களின் கட்சி சார்ந்த தேவைகளுக்காக தோற்கடிக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களின் செயற்பாடுகளில் பிழைகளை கண்டு இருக்கலாம் அல்லது அவர்கள் நன்றாக செயற்படுகிறார்கள் என மக்கள் மத்தியில் அபிப்பிராயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இவற்றை உடைக்க வேண்டும் ஆயின் அவர்களை தோற்கடிக்க வேண்டும். கட…

    • 0 replies
    • 327 views
  19. வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி – சபையை இழக்குமா கூட்டமைப்பு? தமிழ்தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு 9 மேலதிக வாக்குளால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. வவுனியா வடக்குபிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. கடந்தமாதம் இடம்பெற்ற அமர்வில் சபையின் 2022 ஆம் ஆண்டிறக்கான பாதீடு முன்வைக்கப்பட்ட நிலையில் அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றையதினம் அது மீளவும் முன்வைக்கப்பட்டது. இதன்போது மக்கள் சார்பான வேலைத்திட்டத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்…

    • 0 replies
    • 260 views
  20. 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும் -இரா.துரைரெத்தினம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்றத் தலைவருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் -ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் இன்று (திங்கட்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 1990ம் ஆண்டு இருந்து இன்றுவரையும் மாகாணமுறை நிருவாகம் அமுலில் உள்ளது இது நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தில் உள…

  21. யாழிலுள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்ற கோரி போராட்டம்! யாழ்ப்பாணம்- கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான குறித்த களஞ்சிய சாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரியே அப்பகுதியை சேர்ந்த மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். இதேவேளை அப்பகுதியை சேர்ந்த ஜே / 81 பிரிவை சேர்ந்த மக்கள் ஸ்ரீ மீனாட்சி சனசமூக நிலையம் ஊடாக, குறித்த களஞ்சியசாலை மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு உள்ளதாகவும் களஞ்சிய சாலைக்கு முன்பாக கன…

  22. இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 35 000 கண்கள் யாருடையவை? சர்ச்சை பதிவு! கண் தானமாக இலங்கையிடமிருந்து 35,000 விழிவெண்படலங்களை பாகிஸ்தான், பெற்றதாக அந்நாட்டின் மருத்துவர் ஒருவர் கூறியிருந்தார். சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவதனவை ஒரு குழுஅடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவிக்கையில் குறித்த கண் மருத்துவர் இத்தகவலை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 35 000 கண்கள் யாருடையவை என மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் பதிவொன்றினை தனது முகநூலில் இட்டுள்ளார். https://jvpnews.com/article/35-000-eyes-were-donated-sri-lanka-to-pakistan-1638…

    • 0 replies
    • 352 views
  23. நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதத்திற்காக மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதும், இன்று பகல்12.30 மணியளவிலேயே சபை அமர்வுகள் முடிந்து விட்டன. நாடாளுமன்ற சம்பிரதாயப்படி வாக்கு வெட்டு பிரேரணை (cut Motion) சமர்ப்பிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்காமையினால், நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெறவில்லை. நாடாளுமன்றத்திற்குள் தமது பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் இன்றும் நாடாளுமன்றத்திலிருந்த வெளிநடப்பு செய்தனர். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 11ஆம் நாள் விவாதம் இன்று இடம்பெறவிருந்தது. …

  24. தமிழ் பெண்கள் முஸ்லிம்களால் திட்டமிட்டு மதம் மாற்றப்படுகிறார்கள் – ஜனாதிபதி செயலணிக்கு எடுத்துரைப்பு முஸ்லிம்களால் மிகவும் திட்டமிடப்பட்ட வகைகளில் தமிழ்ப் பெண்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர் என்று ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணிக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்களால் எடுத்து சொல்லப்பட்டுள்ளது. ஞானசார தேரர் தலைமையிலான செயலணி கடந்த நாட்களில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட் டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு இம்மாவட்ட மக்களின் கருத்துகளை செவிமடுத்து பதிவு செய்தது. இதன்போது தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்கள் தெரிவித்தவற்றை செயலணி பதிவு செய்துள்ளது அவற்றில் சில வருமாறு, கிழக்கு மாணத்தி…

    • 13 replies
    • 1.2k views
  25. ‘நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம்”- முன்னாள் போராளி December 6, 2021 நடந்த மாதம் நடைபெற்ற மாவீரர் நாளில் விளக்கேற்றியது குறித்து நேற்று முன்தினம் மூன்றரை மணிநேரம் பயங்கரவாத பிரிவினரால் விசாரணைகளுக்குட்படுத்தப் பட்டுள்ளதாக முன்னாள் போராளி செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், வாழை மரத்தில் ஏன் விளக்கு ஏற்றுகின்றீர்கள் என்று தொடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு, அது எமது பாரம்பரிய கலாசார முறை என்றும் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நாங்கள் போரில் உயிரிழந்தவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.