ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
ஈஸ்டர் தாக்குதல்: சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுகின்றது – பொலிஸ்மா அதிபர் ஈஸ்டர் தாக்குதலில் குறித்து பலரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தெரிவித்தார். இத்தகைய அறிக்கைகளை வெளியிடுபவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றத்தின் முன் எடுத்துச் செல்லக்கூடிய உண்மைகளை மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கு முன் சி.ஐ.டி.க்கு தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 2019 ல் சஹரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் நடத்திய தாக்குதல் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டவை அல்ல என்றும், அது …
-
- 0 replies
- 258 views
-
-
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் சிறைச்சாலை வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னரே, சிறைச்சாலை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். Tamilmirror Online || ரிஷாட் எம்.பி தனி அறையில் அடைப்பு
-
- 2 replies
- 462 views
-
-
மூன்றாவது... தடுப்பூசியை செலுத்துவதில், சிக்கல் ஏற்படலாம் – சரத் பொன்சேகா இலங்கையின் தடுப்பூசி திட்டம் தாமதமாகத் தொடங்கப்பட்டதால் மூன்றாவது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இருப்பினும் இலங்கை அரசாங்கம் தற்போது சிறந்த முறையில் அத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் எவ்வித உதவிகளும் இன்றி அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற சில நாடுகளினால் தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் இத்தாலியு…
-
- 0 replies
- 225 views
-
-
காணாமலாக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தை... நியாயப்படுத்தும், செயற்பாடுகளில் ஐ.நா. ஆணையாளர் ஈடுபடக்கூடாது – உறவுகள் காணாமலாக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தை நியாயப்படுத்தும் செயற்பாடுகளில் ஐ.நா ஆணையாளர் ஈடுபடக்கூடாது என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் பன்னிரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என அந்த அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். குறித்த அமைப்பினரால் இன்றைய தினம் (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையின் முழு வடிவம் பின்வருமாறு… “வ…
-
- 0 replies
- 192 views
-
-
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு... 10 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பொதி! சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொதிகளையே இவ்வாறு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு, பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும்,…
-
- 0 replies
- 335 views
-
-
இலங்கையில் கொவிட் வைரஸ தொற்று தீவிரமைடைந்தடைந்த போதிலும் ஜோதிடரின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை முடக்காமல் இருந்தார் என பிரபல ஊடகமான கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனுராதாபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடரான ஞானக்க என்பவர், அவரது நம்பிக்கைக்குரியவராகியுள்ளார். தீய சக்திகளை விரட்டுவதற்கான ஆலோசனை பெறுவதற்கும் பூஜைகளுக்காகவும், ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஜனாதிபதி அனுராதபுரத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்ததாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஜோதிடரின் ஆலோசனைக்கு அமையவே ஜனாதிபதி முக்கிய தீர்மானங்கள் அனைத்தையும் எடுப்பார் எ…
-
- 3 replies
- 840 views
-
-
2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்! தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு கொடுப்பனவையும் இதுவரை பெறாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே இந்த கொடுப்பனவு வழஙக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர் விசேட தேவையுடையோர் ஆகிய அரசாங்க கொடுப்பனவுகளை பெறுவோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்…
-
- 6 replies
- 876 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 218 ஆம் ஆண்டு வெற்றி நாளான (25) இன்று முல்லைத்தீவில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் பண்டாரவன்னியனுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டது. கொவிட் 19 பரவல் காரணமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலைமையால் வருடந்தோறும் பண்டாரவன்னியன் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்படும் முல்லைத்தீவு நகர்ப்பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் பண்டாரவன்னியனின் திரு படத்துக்…
-
- 0 replies
- 418 views
-
-
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மரணம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும். https://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-அமைச்சர்-மங்கள-சமரவீர-மரணம்/175-279509
-
- 25 replies
- 2.2k views
-
-
எல்லை தாண்டிய... இந்திய இழுவை படகுகளால், தொடர் பாதிப்பு – மீனவர்கள் கவலை வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை இழந்து வருவதாக வடமராட்சி பிரதேச மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பல வருடங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நாளாந்தம் வடமராட்சி கடற்பரப்பில் இழுவை மடி தொழிலில் ஈடுபடுவதால் கடல் வழங்கள் அழிக்கப்படுவதுடன், தங்களின் வலைகளும் நாசாமாகி வருகின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சரிடம் பல தடவைகள் முறையீடு செய்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கரையிலிருந்து சுமார் மூன்று கடல் மைல் தூரம் வரை இந்திய இழுவைமடி படகுகள் வருவதாகவும் கடற்படை…
-
- 0 replies
- 405 views
-
-
நீண்ட கால... கடன் திட்டத்தின் கீழ், எரிபொருளை வாங்குவது குறித்து அரசாங்கம் UAE உடன் பேச்சு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளது. நீண்ட கால கடன் வசதியின் கீழ் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகத்தின் பதில் தலைவர்- சைஃப் அலனோபியுடன் குறித்த சந்திப்பு இடமபெற்றுள்ளது. தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக இந்த நீண்ட கால கடன் வசதியின் கீழ் அவற்றினை பெற்றுக்கொள்வது குறித்து களத்துறையாடப்பட்டதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1235970
-
- 0 replies
- 480 views
-
-
வாராந்தம், 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை... இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி தீவிர நிலைமையிலுள்ள கொரோனா நோயாளர்களுக்கு திரவ மருத்துவ ஒட்சிசன் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை வாராந்தம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதன்படி நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சமர்ப்பித்த யோசனைக்கே அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பரவிவரும் திரிபடைந்த வைரஸ் காரணமாக ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், போதுமானளவு ஒட்சிசனை நாட்டில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு இயலுமான வகையில் வாராந்தம் 3 இலட்சம் லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்காக யோசனை முன்வைக்கப்பட்…
-
- 0 replies
- 288 views
-
-
சுற்றுலாப் பயணிகளுக்கு... 180 நாட்களுக்கு, செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்திருந்த நிலையிலேயே, அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விசா அனுமதி வழங்கும் செயன்முறையின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கைத்தொலைபேசி செயலியை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு…
-
- 0 replies
- 283 views
-
-
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்... அஜித் ரோஹணவுக்கு கொரோனா! சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அவரது உடல்நிலை தொடர்பாக கவலையடையத் தேவையில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2021/1235995
-
- 0 replies
- 352 views
-
-
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் துணைவியாரான, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார். திடீரென சுகயீனமடைந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே காலமானார். தமிழ் அரசியல் கைகளின் வழக்குகள் உள்ளிட்ட இலங்கையில் பிரபல்யமான இருந்த பல வழக்குகளில் ஆஜராகி, தனது வாதத்திறமையால் நியாயத்தை பெற்றுக்கொடுத்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா என்பது குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்
-
- 5 replies
- 668 views
-
-
இலங்கையில் காரோட்ட பந்தயவீரர்களில் ஒருவரான கந்தன் பாலசிங்கம் தனது 74 ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார். உலகளாவிய ரீதியில் மனிதர்களின் உயிர்களை பறித்தெடுக்கும் கொரோனா என்ற அரக்கன் கந்தன் பாலசிங்கத்தையும் விட்டு வைக்கவில்லை. திறமையான காரோட்ட வீரராக மாத்திரம் அல்லாது, தொழில்சார் கார் திருத்துனராகவும் கந்தன் பாலசிங்கம் பிரபல்யம் அடைந்து இருந்தார். 1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கைதடியில் பிறந்த கந்தன் பாலசிங்கம், 1999 ஆம் ஆண்டு, கொக்கல சுப்பர் குரோஸ் கார் பந்தயத்தில் முதற் தடவையாக பங்கு பற்றி தனது திறமையினை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து , எஹெலிய கந்த, திஸ்ஸ மகாராம ,கட்டுக்குருந்த, பன்னல, மீரிகம, குருணாகல், அநுராதபுரம், எம்பிலிபிட்டிய, கல்து…
-
- 2 replies
- 478 views
-
-
‘யுத்த நிலைமை மாறவில்லை` - செல்வராசா கஜேந்திரன் போர் முடிந்து பன்னிரெண்டு வருடங்களாகியும் இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடக்கு, கிழக்கு காணப்படுகின்றது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த 16ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் பகுதியில், தீர்த்தக்கரை என்னும் இடத்தில் இராணுவ முகாம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கின்றது என்றார். இந்த இராணுவ முகாம் யுத்தம் முடிந்து கடந்த பன்னிரெண்டு வருடங்களாகியும் தொடர்ந்தும் இன்னமும் அந்த இடத்திலே தான் முகாம் இருக்கின்றது எனத் தெரிவித்த அவர், அந்த முகாம் அமைந்திருக்கின்ற பகுதி…
-
- 0 replies
- 264 views
-
-
தினமும்... சுமார் 15 பில்லியன், ரூபாய் நட்டம் – விரைவில் நாட்டை திறக்க வேண்டும்: கப்ரால் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால், அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். எனவே நாடு முடக்கப்படுவதை தொடர்ந்தும் நீடிக்காது, முடிந்தவரை குறுகிய காலத்தில் திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது, நாட்டின் வளர்ச்சி வீதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பன பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, நாட்டை முடக்குவதால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க வேண்டுமாயின், நாம் நாட்டை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் மேலும…
-
- 0 replies
- 351 views
-
-
அமைச்சர்களின் சம்பளத்தை... கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானம்! அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (திங்கட்கிழமை) மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் நாளை கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தமது ஒரு மாத சம்ப…
-
- 0 replies
- 187 views
-
-
நான்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவு! நான்கு முக்கிய விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவு! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகள் விடுதலை, தாயகப் பரப்பில் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மெய்நிகர் இணைய வழியின் ஊடாக நேற்று தமக்குள் பேச்சு நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படு…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஹிஷாலினி உயிரிழப்பு – 5ஆவது சந்தேக நபராக, ரிஷாட் பதியுதீன் பெயரிடப் பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், உயிரிழந்த ஹிஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனி…
-
- 0 replies
- 544 views
-
-
ரிஷாட் பதியூதீன்... வைத்தியர் ஒருவரை, அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் – விசாரணைகள் முன்னெடுப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உதவி சிறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வைத்தியர் பொரளை பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் நோயாளர் ஒருவருக்கு கடந்த 15ஆம் திகதி குறித்த வைத்தியர் சிகிச்சை வழங்கிய சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனால் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர…
-
- 0 replies
- 282 views
-
-
அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஒட்சிசனை உடனடியாக வழங்குவதற்கு சீனாவின் உதவியை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பிலுள்ள சீனத் தூதர் சீ ஷென்ஹொன்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இது குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான தொடர்ச்சியான ஆதரவுக்கு சீன அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, சீனாவின் உறுதியான உதவிக்கு வெளிவிவகார அமைச்சர் தனது பாராட்டை தெரிவித்தார். இந்நிலையில், இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதில் சீனாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை சீனத் தூதர் மீண்டும் வலியுறுத்தினார்…
-
- 13 replies
- 645 views
-
-
மூன்றாவது... தடுப்பூசி திட்டம் – இராணுவத் தளபதி கொரோனா தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கோவிட் – 19 செயலணியின் பிரதானியான, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், சகல சுகாதார பணியாளர்களுக்கும் முதலில், மூன்றாவது தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுகாதாரப் பிரிவு அறிவித்துளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2021/1235590
-
- 3 replies
- 470 views
-
-
தற்போது நடைமுறையில் உள்ளது முடக்கல்நிலையா? தனிமைப்படுத்தல் ஊரடங்கா? அத்தியாவசிய சேவைகள் எவை என்பதிலும் குழப்பம் அரசாங்கம் பத்து நாள் முடக்கல் நிலையை அறிவித்ததுமுதல், முடக்கல் நிலைக்கு பல முரண்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படுவதாலும்யார் வெளியில் செல்லலாம் எந்தவகையான நிறுவனங்கள் செயற்படலாம் என்பதுகுறித்து முரண்பாடானபட்டியல்கள் வெளியாகிவருவதாலும்பொதுமக்கள் குழப்பத்தில் சிக்குண்டுள்ளனர். அரசாங்கம் கூட்டாக ஒரு முடிவை எடுக்கமுடியாத நிலையில் உள்ளது என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. மக்கள் ஏன் குழப்பமடைந்துள்னர். மக்கள் தற்போது நடைமுறையில் உள்ளது ஊரடங்கா அல்லது முடக்கல் நிலையா என்பது குறித்த குழப்பத்தில் சிக்குண்டுள்ளனர். ஒவ்வொரு அமைச்சும் தனது பட்ட…
-
- 1 reply
- 595 views
-