ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
இலங்கையின் முக்கிய வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு பாலை வனமாக்கப் படுகின்றன ஏதோ ஒரு வகையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும்பொருட்டு இக்காடுகள் அழிக்கப்படுகின்றன என்பது புலனாகின்றது. இக் காடழிப்புகள் அரசாங்கத்தின் அனுமதியோடு நடைபெறுகின்றதா அல்லது சட்டவிரோதமான முறையில் நடைபெறுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இனந்தெரியாதோரால் பெறுமதியான காட்டு மரங்கள் அண்மைக்காலத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கந்தளாய் பிரதேசத்தின் வான்எல, சூரியபுர, ஜயந்திபுர போன்ற பகுதிகளிலே இவ்வாறு காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு வருகின்…
-
- 3 replies
- 584 views
-
-
போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை மூலமே தீர்வுவேண்டும் யாழ் மாநகர சபையில் தீ்மானம்! போர்க்குற்ற மீறல்களுக்கு சர்வதேச விசாரணை மூலமே தமிழருக்கு தீர்வுவேண்டும் யாழ்.மாநகர சபையில் தீ்மானம்! “இலங்கையில் இடம்பெற்ற போரின்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் மூலம், அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தின் மூலம் நீதி வழங்கப்படவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மாநகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்துக்கு ஈ.பி.டி.பி கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. யாழ். மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றபோது, விளம்பர பலகை விவகாரம் விவாதிக்கப்பட்டதால், திட்டமிட்டபடி ஏனைய விடயங்கள் விவாதத்துக்கு எடுக்கப்படவில்லை. …
-
- 1 reply
- 378 views
-
-
சீனா... இரண்டு இலங்கை விஞ்ஞானிகள் குறித்து, வெளிப்படுத்த வேண்டும்- ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ கேணல் சினோவாக் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்கும் செயற்றிட்டத்தில் சீனாவுடன் இணைந்து இலங்கை செயற்படுவதாக கூறப்படுகின்றது. இதற்காக கண்டியிலுள்ள பல்லேகெல்லேவில் மருந்துவ ஆலை இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் தடுப்பூசிகளைப் பயன்படுத்திய சில நாடுகள், அதாவது சினோஃபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசி செயற்றிட்டத்தை நிர்வகித்த போதிலும்கூட வைரஸின் புதிய பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அவர்கள் தற்போது ஃபைஸரை ஒரு பூஸ்டராக நிர்வகித்து வருகின்றனர் என உலக நாடுகள் குறிப்பிடுகின்றன. …
-
- 1 reply
- 577 views
-
-
அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு கோரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு ஒன்றை கடிதத்தை அனுப்பியிருந்தது.அதனடிப்படையில், தாக்குதலுக்கு காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்ற கத்தோலிக்க திருச்சபை முடிவு செய்துள்ளது.அத்துடன் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தங்கள்…
-
- 5 replies
- 473 views
-
-
இலங்கையும் தற்போதைய சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடுகளை திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே சிறிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் தமது நாடும் இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று (வெள்ளிக்கிழமை) மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த விசேட உரையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பாக மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டு…
-
- 2 replies
- 458 views
-
-
இராஜதுரை ஹஷான் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் சகல அரச ஊழியர்களும் தங்களின் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே நாட்டை முழுமையாக முடக்க முடியும். நாட்டை முடக்கினால் நடுத்தர மக்களுக்கும், குறை வருமானம் பெறுபவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என சுதேச வைத்திய முறைமைகள் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். களுத்துறையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொவிட் தாக்கத…
-
- 17 replies
- 1.1k views
-
-
ஒட்டுசுட்டான் மண்ணை எடுத்து சுப்பிரமணியம் பாஸ்கரன் நவீன உலக மாற்றத்தின் புதிய புதிய வருகையால், மட்பாண்டங்களின் உற்பத்தியும் பயன்பாடுகளும் அருகி வந்தாலும் தற்போதும் பல இடங்களில் இத்தொழில்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்பாண்டப் பொருட்ளை இன்றும் பலர் விருப்பத்துடன் பயன் படுத்தி வருகின்றனர். காரணம், இவை மருத்துவ குணம் நிறைந்தவையாகக் கானப்படுகின்றன. இதனால், இன்றைய சூழலில் மட்பாண்டப் பொருட்களின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது என்பது நிதர்சனமான உண்மையாகும். அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதன் மூலம் பல நோய்த் தாக்கங்கள் ஏற்படுகின்றது என்பதால் தற்பொழுது இப்பொருட்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது இந்த தொழிலை தெ…
-
- 1 reply
- 647 views
-
-
திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்- செல்வம் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதினால் பொதுமக்கள்தான் அதிகளவு அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது, நாட்டில் தீடீரென கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்த வேளையில், மருத்துவர்களும் சுகாதார தரப்பினரும் இணைந்து நாட்டை முடக்கி கொரனாவை கட்டுப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தனர் என அவர் சு…
-
- 0 replies
- 161 views
-
-
இலங்கை முழுமையாக முடக்கப்படுமா?- நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் ஜனாதிபதி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, இன்று (வெள்ளிக்கிழமை) விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார். குறித்த உரையில், நாட்டை முடக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அவர் தெரியப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த உரையினை நிகழ்த்துவதற்கு முன்னதாக, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் தலைமை பீடாதிபதிகளை இன்று காலை சந்திக்கும் ஜனாதிபதி, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார். இதேவேளை அரசாங்கத்தின் 10 பிரதான பங்காளிக் கட்சிகள், ஏனைய சில கட்சிகள், சமூக…
-
- 10 replies
- 518 views
-
-
ஊரடங்கு உத்தரவின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி! August 21, 2021 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (20.08.21) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதுடன், இது தொடர்பான அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பொலிஸ் நிலையங்கள் கிராம அலுவலகர்கள் அனைத்து துறைகளைச் சேர்ந்த களவிஜய அதிகாரிகள் உள்ளுராட்சி அமைப்புக்கள் ( தேவையான ஆளனியுடன் இயங்க முடியும்) நாளாந்த பயன்பாட்டுக்கான தேவைகள் (மின்சாரம், நீர், தொலைத்தொடர…
-
- 0 replies
- 189 views
-
-
புதிய அரசியலமைப்பு- கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளை இனிமேலும் தாமதிக்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் பிறிதொரு தினத்தில் அந்த சந்திப்பு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பை நடத்துவதற்கான திகதி, மீள நிர்ணயிக்கப்படும் என அறிவித்து இரண்டு கடிதங்கள…
-
- 3 replies
- 384 views
-
-
அரை இறாத்தல் பாண் – பருப்புக் கறியின் விலை 150 ரூபாவாகவும், பிளேன் ரீ ஒன்றின் விலை 25 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் – அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்திகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்களின் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து பேக்கரி பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கான முடிவு நியாயமானது என அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். பாண் மற்றும் பிற பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பதற்கான பேக்கரி…
-
- 1 reply
- 419 views
-
-
யாழ்ப்பாணத்தின் நிலைமை குறித்து... கவலை வெளியிட்டார், மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்புகளும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கவலை வெளியிட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுமக்களும் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டிய காலமாக இது காணப்படுகின்றது. மேலும் வைத்தியசாலைகளில் கூட இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே இத்தகைய சூழ்நிலையினை அனைவரும் உணர்ந்து, தமது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும். …
-
- 9 replies
- 638 views
- 1 follower
-
-
நாளாந்தம் பதிவாகும் கொரோனா மரணங்களில், 60 வயதிற்குட்பட்டவர்களின் மரண வீதம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. கடந்த 15 ஆம் தேதி முதல் இன்றுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களில், 60 வயதிற்குட்பட்டவர்களின் மரண எண்ணிக்கை 37 க்கும் 40 க்கும் இடையில் காணக்கூடியதாக உள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் மரணங்களில் 39 பேர், 60 வயதிற்குட்பட்டவர்கள். நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 186 ஆகும். அவர்களில் நான்கு பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள். இவர்களில் ஒருவர் பெண். ஏனைய மூவரும் ஆண்கள் ஆவர். மேலும் 35 பேர், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களாவர். அவர்களில் 18 பெண்களும் 17 ஆண்களும்…
-
- 1 reply
- 243 views
-
-
30ஆம் திகதி வரை பொதுமுடக்கம் அமுல் By Sayanolipavan இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை ஒருவாரத்துக்கு முழுமையாக முடக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். இதுதொடர்பில், மகாநாயக்கர்களுக்கு தெளிவுப்படுத்தியதன் பின்னர், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உத்தியோபூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இன்றிரவு 10 மணிமுதல் நாடு முடக்கப்படும் என சுகாதார அமைச்சர கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஆனால், அத்தியாவசிய சேவைகள் யாவும…
-
- 0 replies
- 225 views
-
-
பிரதமரே! “உங்கள் மௌனத்தைக் கலையுங்கள்” August 20, 2021 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மௌனம் களைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் ‘பேரிடர் மேலாண்மை சட்டம்” நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் நினைவுப்படுத்தினார். இந்த சட்டத்தின் பிரகாரம், பேரிடர் மேலாண்மை குழுவொன்றை ஏற்படுத்தக்கூடிய பொறிமுறை, அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்;. ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் 15 பேர் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பின…
-
- 0 replies
- 339 views
-
-
கிளிநொச்சியில் மிக மிக இரகசியமாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் (OMP) திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் கடந்த 12.08.2021 அன்று காலை அலுவலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிப்புறத்தில் எவ்வித பெயர் பலகையும் பொருத்தாது அலுவலகத்தின் உள்ளே காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் என கடதாசியில் பிரதி எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டு அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருக்கில் மாவட்டச் செயலக பயிற்சி நிலையம் அமைந்துள்ள காணியில் உள்ள பெண் தலைமைதாங்கும், மற்றும் கணவனை இழந்த பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிலைய அலுவலகத்தின் ஒரு பகுதியில் கிளிநொச்சி மாவட…
-
- 4 replies
- 543 views
-
-
இலங்கைக்கு வரவுள்ள... ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்கள் அடங்கிய கப்பல்! இலங்கைக்கு தேவைாயான ஒட்சிசனை இந்தியாவில் இருந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகத்தில், கடற்படைக்கு சொந்தமான கப்பலில், ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த கப்பல், இன்று இலங்கையை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1235289
-
- 0 replies
- 208 views
-
-
யாழில்... இராணுவத்தினரின், நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில், இராணுவத்தில் 512 ஆவது பிரிகேட் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, யாழ்ப்பாணத்திலும் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்…
-
- 0 replies
- 198 views
-
-
நாட்டை முடக்குமாறு... மகாநாயக்க தேரர்களும், ஜனாதிபதியிடம் கோரிக்கை நாட்டை குறைந்தது ஒரு வாரத்துக்கு முழுமையாக முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். பௌத்த பீடங்களின் ஆலோசனையை மதித்து ஆட்சியை முன்னெடுக்கும் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா தொற்று பரவலானது நாடு முழுவதும் ஒரு பேரழிவு சூழ்நிலையை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, ஒரு வாரத்திற்கு முடக்கம் இருக்கும் போது மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலுயுறுத்தியுள்ளனர். மேலும் சுகாதார நி…
-
- 0 replies
- 355 views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலிகளை நடத்தாது இருக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இன் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் சுகாதார துறையினர் இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை அமுல் படுத்தி உள்ளனர். அதற்கமைவாக மதஸ்தலங்களில் எவ்வித கூட்டு பிரார்த்தனைகளையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்க…
-
- 0 replies
- 570 views
-
-
நயினாதீவு வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை August 19, 2021 கொரோனோ பெருந்தொற்று காரணமாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தினுள் மறுஅறிவித்தல் வரையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஆலய அறங்காவலர் சபை அறிவித்துள்ளது. அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று (covid-19) தாக்கத்தின் தீவிரத்தன்மை காரணமாக மறு அறிவித்தல் வரை ஆலயத்திற்குள் அடியார்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதைத் தெரிவிப்பதுடன் அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை முற்றாக தவிர்த்து தங்கள் இல்லங்களில் இருந்து அம்பாளை மனக்கண்ணினால் வேண்டி வழிபாடு செய்யுமாறு கேட்டு கொள்கின்றோம்.என குறிப்பிடப்பட்…
-
- 1 reply
- 581 views
-
-
கொரோனா மற்றும் நிமோனியாவுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை உட்பட சுமார் 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு நாட்டில் பற்றாக்குறை நிலவுவதாக அறியமுடிகிது. இவற்றிலும் குறிப்பாக 'டோசிலிசுமாப் (Tocilizumab) என்ற மருத்து இல்லாததால், கடுமையான கொரோனா நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்குவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டில் சில முக்கிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விஷேட அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ் ஜயசிங்க மேற்குறிப்பிட்ட மருந்து இல்லாததன் காரணமாக காலமானார். அவர் இந்த நாட்டில் உருவாகிய மருத்துவர்களில் முதன்மையானவரும் பல மருத்துவ…
-
- 0 replies
- 271 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் கடன் அட்டை மற்றும் வங்கி அட்டை ஆகியவற்றை உபயோகித்து இணையவழியூடாக பணம் செலுத்தும் செயற்பாடுகள் நேற்று புதன்கிழமை முதல் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கையிலுள்ள வங்கி அட்டைகளை பாவிக்கும் தரப்பினர் இதனால் பெறும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதோடு, இந்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளதால் தமது நாளாந்த செயற்பாடுகளை முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையிலிருந்து இணையவழி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இதனால் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அத்தோடு முகப்புத்தகம் , வர்த்தக மேம்பாட்டு வேலைத்திட்…
-
- 0 replies
- 315 views
-
-
கொரோனா காலத்திலும் இடமாற்றமாம் August 19, 2021 நாடு முழுவதுமாக கொரோனா பேரலையில் சிக்கியிருக்க வடமாகாணசபை அதிகாரிகளோ பணியாளர்களை இடமாற்றத்தின் கீழ் பந்தாடத்தொடங்கியிருப்பதாக இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முறையிடப்பட்டுள்ளது.குறிப்பாக தற்போது முன்களப்பணியாளர்களாக செயற்பட்டுவரும் சுகாதார சேவைகள் திணைக்கள சாரதிகள் முதல் உள்ளுராட்சி மன்ற பணியாளர்கள் வரையாக இடமாற்றத்தினை அரங்கேற்ற வடமாகாணசபை அதிகாரிகளில் ஒரு சாரார் முன்னின்று செயற்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாகாணசபையில் பணியிலுள்ள அதிகாரிகள் பலரும் பத்து முதல் 25 வருடங்கள் வரையில் வடமாகாணசபையிலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ காலமோட்டிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய ச…
-
- 0 replies
- 222 views
-