ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் – ஹிருணிகா வேதனை தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நாங்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம்,ஆனால் ஜனாதிபதி தற்போது அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்- மக்கள் நீதித்துறையை எப்படி நம்பமுடியும் என ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.நாங்கள் எங்கள் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் என பிபிசிக்கு தெரிவித்துள்ள அவர்ஜனாதிபதி எங்களை நரகத்தை நோக்கி அழைத்துச்செல்கின்றார் என தெரிவித்து நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன் எனவும் அவர் ஹிருணிகா தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 957 views
-
-
மட்டக்களப்பு – பாலியல் இலஞ்சம் பெற முயற்சிக்கும் அரச அதிகாரிகள் June 27, 2021 தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் அரச அதிகாரிகள் சிலர் பெண்கள் மீது பாலியல் சீண்டல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறித்து மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பெண்னொருவரின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றிய வில்வரெட்னம் கடந்த திங்கட்கிழமை உடனடி இடமாற்றமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக தற்காலிகமாக கிரான் பிரதேச செயலாளர் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பிரத…
-
- 2 replies
- 323 views
- 1 follower
-
-
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: கால எல்லை தொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும் -கெஃபே அமைப்பு 6 Views உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண் டும் என கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார். அண்மையில் மார்ச் 12 இயக்கத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த zoom தொழில் நுட்ப கலந்துரையாடர், தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற செயற்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அதேபோன்று அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க மற்றும் அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரு…
-
- 0 replies
- 220 views
-
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கோயில் வீதியில் விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த விடுதி முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. நல்லூர் கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். யாழில் விடுதி ஒன்று முற்றுகை! 6 பேர் கைது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 22 replies
- 1.2k views
-
-
கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பம் சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டுச் செல்லும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்திற்கமைய சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு சேதனப் பசளை உற்பத்தி மற்றும் காய்கறி உற்பத்தி எனும் தொனிப்பொருள் இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான 23 ஏக்கர் பண்ணையில் பயிர் செய்கைகள் மற்றும் சேதனைப் பசளை உற்பத்தி என்பன இடம்பெறவுள்ள இடத்தினை அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைசர்கள் உள்ளிட்டோர் நேரில் பார்வைய…
-
- 0 replies
- 214 views
-
-
நீரோடைக்குள் பாய்ந்த இராணுவ வாகனம்! இரு இராணுவத்தினர் பலி – 4 பேர் படுகாயம் மட்டக்களப்பு – செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி நீரோடை ஒன்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம் கறுப்பு பாலம் அருகில் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்கு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்ற இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். …
-
- 16 replies
- 828 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின்.... முன்னாள் உறுப்பினர்கள் உட்பட, 93 கைதிகள் விடுதலை! தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரைத் தவிர்த்து சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் முகாம…
-
- 47 replies
- 2.3k views
-
-
விரைவில் பாராளுமன்ற உறுப்பினராக பசில் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் எம்.பி.யாக பதவியேற்ற பின்னர் அடுத்த மாதம் பாராளுமன்றத்துக்கு வருவார் என்று அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமைச்சரவை மறுசீரமைப்பில். நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், பசில் ராஜபக்ஷ ஜூலை 6 ஆம் திகதி எம்.பி.யாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக அறியமுடிகின்றது. பசில் ராஜபக்ஷவுக்கு இடமளிப்பதற்காக ரஞ்சித் பண்டாரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/வரவல-பரளமனற-உறபபனரக-பசல/175-274957
-
- 1 reply
- 461 views
-
-
ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு June 26, 2021 “சர்வதேச சூழலிலேயே எமக்கு சார்பான பல விடயங்களுக்காக வல்லரசு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் இவ்வேளையில் நாம் ஒருமித்த நிலைப்பாட்டில் அரசியல் விடயங்களை தாயகப் பரப்பில் கையாள்வதன் மூலம் சாதகமான உள்ளக அரசியல் சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்த முடியும்” எனச் சுட்டிக் காட்டியுள்ள ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநான், இது குறித்து நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ள மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை அழைத்துள்ளார். தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்த் தே…
-
- 0 replies
- 375 views
-
-
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு – நாடாளுமன்றில் குழப்பம்! எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாராத்திற்கான நாடாளுமன்ற அமர்வு இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…
-
- 1 reply
- 204 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. எனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில்; நான் வெற்றி பெற்ற பின்னர் என்னிடம் முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதற்காகவே அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக சிலர் மக்களிடம் காண்பிக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் நாட்டுக்கான எனது கொள்கையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த 69 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டுமென்பதாகவே க…
-
- 5 replies
- 492 views
-
-
(இராஜதுரை ஹஷான்) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பாராளுமன்றில் விடுத்த சவாலை வெற்றிக் கொண்டுள்ளோம். சவாலில் தோல்வியடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் நன்கு அறிவார். ஆகவே அதன்படி நடந்துக் கொள்வார் என எதிர்பார்க்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் மத்தியில் காணப்படும் சிறை கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரத்திற்கான தீர்வு, காணி விடுவிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கான தீர்வு எதிர்வரும் மாதம் தொடக்கம் சாதகமான முறையில் வழங்கப்படும். ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி முரண்பாடற்ற வகையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொள்வது எமது பிரதான இலக்காகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தா…
-
- 1 reply
- 232 views
-
-
16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக சுமந்திரன் அவர்கள். தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்படவிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகளே தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஐ. நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெறும் காலப்பகுதி இது. இலங்கையின் கடந்த கால செயற்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று ம. உ. ஆணையாளர் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கின்றன. GSP+ வரிச்சலுகை கேள்விக்குள்ளாகி உள்ளது. முன்னதாக, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தந்தையிடமும் சித்தப்பாவிடமும் நேரடியாகப் பேச முடியாத நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கிறார். அதற்குத் தானே காரணம் என்று அரச தரப்பு சுரேன் ராகவன் உரிமை கோருகிறார். அதனைத் தாங்க முடியாத ச…
-
- 3 replies
- 670 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்துவதாகக் கூறி பழைய கதைகளையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சீன இராணுவத்தின் உடையை ஒத்த ஆடையை அணிந்துள்ள சீன பிரஜைகள் யார்? என்றும், எரிபொருள் விலை குறைவடையுமா? இல்லையா? விவசாயிகளுக்கு எப்போது உரம் வழங்கப்படும்? இணையவழி கல்வியால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு எப்போது நிவாரணம் வழங்கப்படும்? என்பதை கூறுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். மாத்தறை மாவட்டத்தில் கம்புறுபிபட்டி நகர பஸ் தரப்பிடத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இதனைத் தெரிவித்த அவ…
-
- 2 replies
- 455 views
-
-
பலதரப்பு கடற்படை பயிற்சி நடவடிக்கை திருகோணமலையில் ஆரம்பம் Published by J Anojan on 2021-06-25 12:03:05 இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடைவடிக்கை திருகோணமலை கடற்படை தளத்தில் நேற்று (24) ஆரம்பமானது. (Cooperation Afloat Readiness and Training Exercise-2021 (CARAT-21) “நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” மூன்று கட்டங்களாக எதிர்வரும் 30ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுக மற்றும் கிழக்கு கடற்பரப்பில் நடைபெறவுள்ளது. பயிற்சியின் துறைமுக சார்ந்த பயிற்சிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் திருகோணமலை துறைமுகத்தில் செயற்கை நிரை அம…
-
- 4 replies
- 632 views
-
-
வியாழேந்திரன் பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயல்கின்றார் – கருணா குற்றச்சாட்டு! தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பில் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சம்பவம் முற்றுமுழுதாக ஒரு கொலை. இது தொடர்பில் உரியவாறு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றோம். ஏனென்றால் மெயப்பா…
-
- 15 replies
- 741 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம், வருத்தம் தெரிவித்த.. ஜனாதிபதி கோட்டா! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேற்று (புதன்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வெகு விரைவில் சந்திப்பிற்கான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி உற…
-
- 31 replies
- 2.9k views
- 1 follower
-
-
தெஹிவளை, மிருகக் காட்சிசாலையில்... மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா! தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1224661
-
- 4 replies
- 431 views
-
-
யாழில்... சேதன குப்பைகளை, இயற்கை உரமாக மாற்றும் புதிய தொழிற்சாலை யாழ்ப்பாணம்- வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டிலுள்ள ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நிதியுதவியின் ஊடாக இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென கூறப்படுகின்றது. மேலும் இந்த தொழிற்சாலை ஊடாக குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு, கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இந்த தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிட…
-
- 2 replies
- 634 views
-
-
எம்.றொசாந்த் “11 மாத காலத்தில் தண்டனைக் காலம் முடிவடைந்து விடுதலையாக இருந்தவருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுத்துள்ளார்” என குரலற்றவரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார். 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேற்று (24) ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூரியகாந்தி ஜெயச்சந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை நேரில் சந்தித்து முருகையா கோமகன் நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்றைய தினம் (நேற்று) விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளில் பலருக்கு தண்டனைக் காலங்க…
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கைக்கு கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மஹரவான வெளிச்சவீட்டுக்கு கிழக்கே 480 கடல்மைல் தூரத்தில் பயணித்த கப்பலின் இயந்திர அறையில் தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கொழும்பிலிருந்து - சிங்கப்பூர் நோக்கிச் பயணித்துக் கொண்டிருந்த எம்.எஸ்.சி. மெஸ்சினா என்ற சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்…
-
- 0 replies
- 257 views
-
-
விடுதலையானோரின் வாழ்வாதாரத்துக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்; தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 25 Views 16 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நீதியையும் மனித உரிமைகளையும் நேசிக்கும் அனைத்துத் தரப்புகளுமே பங்களித்துள்ளன. இவ்வாறு பங்களித்தது போல விடுதலையான இந்த உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் ஒன்றுபட்டுச் செயல்படுவோம். இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலன் நேற்று அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு; …
-
- 0 replies
- 308 views
-
-
மட்டக்களப்பில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் – மட்டு.நகரான் Share 5 Views வடகிழக்கு மக்கள் எதனைப் பாதுகாப்பதற்காகப் போராடினார்களோ, இன்று அவை சத்தமில்லாத வகையில் அபகரிக்கப்படுகின்றன. தமிழர்களின் வளங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் சூறையாடப்பட்டு வருகின்றன. மண்ணைக் காக்க ஆயிரமாயிரம் போராளிகள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ள நிலையில், இன்று சிங்கள தேசம் எமது மண்ணை எந்தவித இழப்புகளுமின்றி சூறையாடி வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் பாரியளவில் வளங்கள் சுரண்டப்படும் செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப் படுகின்றன. யு…
-
- 0 replies
- 750 views
-
-
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார் என சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றம் 2016 இல் துமிந்தா சில்வாவிற்கு மரணதண்டனை விதித்தது. மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் வழக்கினை மீண்டும் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விடுதலை செய்ய பரிந்துரைத்தது. இந்நிலையில், இன்று (24.06.2021) துமிந்த சில்வாவா ஜனாத…
-
- 9 replies
- 755 views
-
-
தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு 22 Views கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 48பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தொழிற்சாலை பேருந்து மற்றும் வாகனங்களில் தொடர்ந்தும…
-
- 0 replies
- 363 views
-