Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென்னிலங்கை மீனவர்கள்; உரியதரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன் தற்போது கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதிக்கு வெளிமாவட்ட மீனவர்கள் வருகைதருவதாக நாயாற்றுப் பகுதி மீனவர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர். கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு வெளிமாவட்ட மீனவர்கள் முடக்க நிலையையும் மீறி நுழைவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அழிவைத் தோற்றுவிக்கும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறு முடக்க காலத்தில…

  2. கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை நிறுவுவதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயார் – நிதி அமைச்சர் கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை அமைப்பதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக அரசாங்கம் சீனாவிற்கு உறுதியளித்துள்ளது.அத்தோடு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவின் ஆதரவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரியுள்ளார்.சீன சபாநாயகர் லி ஜான்-ஷுவுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போதே நிதி அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார். கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உட்பட மற்ற முதலீடுகளுக்கு சீனா உதவும் என்று சீன மக்கள் காங்கிரஸின் நிலைக…

  3. ஊரடங்கினை நீடிப்பதா, இல்லையா – நாளை தீர்மானம் September 2, 2021 இலங்கையில் தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தினை தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் நாளை (03) தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொவிட்19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளை கூடவுள்ளதாகவும் இதன்போது, தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளாா் இதேவேளை, தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட…

  4. (இராஜதுரை ஹஷான்) ஆப்கானிஸ்தானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள தலிபான் அமைப்பினால் இலங்கையில் 70 வீதம் ஆதிக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படையாத அமைப்புக்கள் வலுப்பெறும். தப்லிக் ஜமாத் அமைப்பை அரசாங்கம் தடை செய்வதுடன், இஸ்லாமிய அடிப்படையாத கொள்கையுடைய அமைப்புக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/61537/thumb_ganasara.jpg ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முற்றாக இல்லாமல் போயுள்ளது என்று ஒருபோதும் கருத கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவிய…

    • 3 replies
    • 475 views
  5. நாடு பூராகவும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ். நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனையோர் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் அவ்வாறான அறிவுறுத்தல்களையும் மீறி பொதுமக்கள் தற்பொழுது வீதிகளில் வழமை போல நடமாடி வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனை…

  6. (ஆர்.யசி) நாட்டில் வேகமாக பரவிக்கொண்டுள்ள டெல்டா வைரஸின் தாக்கத்தினால் கடந்த மாதத்தில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், தென்னாபிரிக்க வைரஸ் இலங்கையில் பரவும் நிலை ஏற்பட்டால் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் அபாய நிலை உள்ளதாகவும் சுகாதார, வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில் இதுவரை நாட்டின் கொவிட் தாக்கங்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர கூறுகையில், சி.1.2 என்ற தென்னாபிரிக்க வைரஸ் மற்றும் "மூ" கொலம்பிய வைரஸ் ஆகியவை தற்போது பாவனையில் உள்ள தடுப்பூசிகளுக்கு கட்டுப்பட…

  7. கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாற்றில் முதல்முறையாக சதனை படைத்துள்ளது. இந்நிலையில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று முதல் முறையாக 9,000ஐ கடந்து அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது. இன்றைய நாளின் (01) கொடுக்கல் வாங்கலின் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,163.13 ஆக பதிவாகியிருந்ததாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. முன்னதாக 2021 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த போது, 8,920.71 ஆக பதிவாகி இருந்தது. இன்றையதினம் பரிமாறப்பட்ட பங்குகளின் மொத்த புரள்வு 14.56 பில்லியன் ரூபாவாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு …

  8. வடக்கு- கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் முயற்சியில் அரசாங்கம்! - இரா.சாணக்கியன் நெல் பறிமுதல் என்ற போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு- கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மேலும், அரிசி விலையினை அரசாங்கம் குறைக்கவேண்டுமானால் முதலில் இலட்சக்கணக்கான நெல் மூடைகளை பதுக்கிவைத்துள்ள மில் உரிமையாளர்களிடம் இருந்து அதனை பறிமுதல் செய்ய வேண்டுமென என அவர் குறிப்பிட்டுள்ளார். அதனைவிடுத்து வருடக்கணக்காக படிப்படியாக முன்னேறிவந்த அப்பாவி விவசாயிகளின் நெல்லை பறிக்கீன்றீர்கள் என்றால் அது எந்த வகையில் நியாயம் என இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள…

  9. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.நாளாந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரமாக கண்டறியப்பட்டாலும் சமூகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே வைரஸ் நோயாளர்களின் அளவை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் கொரோனா நோயாளர்களி…

  10. நாம் மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை கட்டியெழுப்ப தீர்மானித்துள்ளோம் – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அரசாங்கத்தை கைப்பற்றிய கூட்டமைப்பு உள்ளது. நாம் மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை கட்டியெழுப்ப தீர்மானித்துள்ளோம்.அதன்படி நாட்டிலுள்ள இடதுசாரி, தேசப்பற்று கட்சிகள் மற்றும் நாடாளுமன்றுக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைத்து கொண்டு கூட்டமைப்பை வலுப்படுத்த மத்திய குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.அதன்படி எதிர்காலத்தில் அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என தன் சிரேஸ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்க்ஷமன் பியதாஸ தெரிவித்துள்…

  11. புதிய வைரஸ் திரிபுகளினால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவடையும் சாத்தியம் புதிய வைரஸ் திரிபுகளினால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.கொரோனா தொற்றினால் நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலைமையை விட சற்று இலகுவான நிலைமை ஏற்படுவதாக இருந்தால், எனது கணிப்பின் பிரகாரம் செப்டம்பர் இறுதியாகும்போது தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடையும். நோயாளர்கள் குறைவடைந்து இரண்டு வாரங்கள் செல்லும்போது மரணங்களும் குறைவடையும் என தெரிவித்தார். அத்துடன் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி…

  12. வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு நாளை! September 1, 2021 வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு உள்பட்டு நடத்தப்படும் என்று வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகர சப…

  13. (நா.தனுஜா) அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதன் வெகுவான வீழ்ச்சி இன்றைய தினம் பதிவானது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாளாந்த வெளிநாட்டு நாணயமாற்று வீதத்தின் அடிப்படையில், இன்று செவ்வாய்கிழமை அமெரிக்க டொலரொன்று 204.89 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி நேற்று 202.90 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் பல வாரகாலமாக 202 ரூபாவாகப் பேணப்பட்டுவந்த அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினம் சடுதியாக 204.89 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது. …

  14. அவசரகால நிலை நாடு பூராவும் பிரகடனப்படப்படுத்த பட்டிருக்கிறது. இது நேற்று நள்ளிரவிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது. Tamilmirror Online || நாடு பூராவும் அவசரகால நிலை பிரகடனம்

  15. ஆயிரம் நாட்களுக்குள் காணாமல்போனோரின் விவகாரத்திற்கு இறுதித்தீர்வு - சுரேன் ராகவன் (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 1,000 நாட்களுக்குள் இறுதித்தீர்வொன்றை எட்டமுடியும் என்று எதிர்பார்க்கின்றேன். இக்காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை வழங்கும் அதேவேளை, மன்னிப்புக்கோரவேண்டிய இடங்களில் அதனையும் செய்வதுடன் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தக்கூடியவகையில் அரசியல் மற்றும் சமூக ரீதியிலான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண ஆளுநருமான கலாநிதி சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்…

  16. சிறுவர்களைத் தாக்கும் 'மிஸ்-சி' : 46 சிறுவர்கள் பாதிப்பு : மூவர் உயிரிழப்பு - பெற்றோருக்கு வைத்தியர் வாசனின் அறிவுரை (எம்.மனோசித்ரா) இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களை தாக்கும் பல உறுப்பு அழற்சி நிலை 'மிஸ்-சி' (Multisystem Infalmmatory Syndrome in Children - MIS-C) என்ற நோய் பெரும்பாலான உடற்பாகங்களை அல்லது தொகுதிகளை பாதிக்கக் கூடியதாகும். எனினும் இது வரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களில் நூற்றுக்கு ஒரு வீதத்திற்கும் குறைவானோரே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 8 - 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுமாயின் தாமதிக்காது வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறுவர் நோய் தொ…

  17. இந்திய உயர்ஸ்தானிகராக மிலிந்த பொறுப்பேற்றார் (சி.எல்.சிசில்) இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக மிலிந்த மொறகொட நேற்று புதுடில்லியில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்னரே அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டி ருக்கின்றார். அமைச்சரவை அந்தஸ் துடன் கூடிய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொறகொட, நேற்று பதவியேற்றுக் கொண்டதாகவும், இது குறித்த நிகழ்வு எளிமையான முறையில் நடைபெற்றது எனவும் இந்தியா விலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை உயர் ஸ்தானிகராலய பணியாளர்கள் பாரம்பரிய வழக்கப்படி மிலிந்தவையும், அவரது மனைவி ஜெனிபர் மொறகொடவையும் உயர் ஸ்தானிகராலயத்தில் வெற்றிலை கொடுத்து வரவ…

  18. காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் – நீதி அமைச்சர் காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டு நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.யுத்தம் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்தபோதிலும் இன்னும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதானது, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் எனவும் இந்நிலைய…

    • 2 replies
    • 397 views
  19. பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற 30 பேருக்கு கொரோனா பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையிலுள்ள வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு சென்றவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 30 பேரும் வைத்தியர்களின் ஆலோசனை பேரில், வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டியவர்கள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படவேண்டியவர்கள் , வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என பிரித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட…

  20. அதிபர் – ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி அதிபர் – ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதிபர் – ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு அடுத்த வரவு -செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படும் வரை இந்தத் தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இணையவழி முறைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம், ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அமைச்சரவையின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா…

  21. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, இன்று உத்தரவிட்டார். மேலும் ரிஷாட்டின் மனைவி மற்றும் மாமனார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையும் நீதவான் நிராகரித்தார். முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ரிஷாட் பதியுதீனின் மனைவி,மனைவியின் தந்தை, மைத்துனர், சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரே விளக்கமறியலில்…

  22. காணாமல் போனோர் புலம்பெயர்ந்து வசித்திருந்தால் அவர்களை எமக்கு முன் நிறுத்தமுடியுமா என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், எமது உறவுகள் மீண்டும் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே நாம் எமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எமது உறவுகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளிற்கு சென்று அவர்களது பெயர்களை மாற்றி வாழ்வதாக அமைச்…

  23. (நா.தனுஜா) உலகசந்தையில் சீனியின் விலையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இலங்கையில் அனைத்து செலவுகளையும் சேர்த்ததன் பின்னர் ஒரு கிலோகிராம் சீனியை 98 ரூபாவிற்கு சந்தைக்கு வழங்கமுடியும். ஆனால் அரசாங்கத்தினால் அதற்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கிய முறைகேடான வாய்ப்புக்கள் மற்றும் கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து இடம்பெற்றுவரும் பாரிய சீனிமோசடி ஆகியவற்றின் காரணமாகவே தற்போது ஒருகிலோகிராம் சீனியின் விலை 220 ஆக அதிகரித்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி உரியவாறான திட்டமிடல்கள் அற்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் பயிர்ச்செய்கையும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. எனவே …

  24. முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் இனசுத்திகரிப்பையிட்டு வெட்கி தலை குனிகிறேன் என்று சொன்னது ஏன், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். நான் இப்படி சொன்னதற்கான காரணம் அது இனசுத்திகரிப்பு. விசேடமாக தமிழ் மக்கள் மீது நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் சொல்கிறோம். இனப்படுகொலையை சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க…

  25. சர்வதேச நாணய நிதியத்தின், வளங்களை பயன்படுத்துங்கள் – அமெரிக்கா வலியுறுத்து இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தை கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. உறுதியான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும் மாற்றங்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் நிதியமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஆபத்து தொடர்பாகவும் விவாதித்ததாகவும் அவர் கூறினார். அத்துடன் இலங்கையின் பொருளாதாரம் பற்றிய கவலை தொடர்பாகவும் குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் தற்போது சிறந்த ஆரோக்கிய நிலையில் இல்லை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.