ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
சீனா வழங்கிய 6 லட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. 11 Views சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய 6 லட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன. இந்த தடுப்பூசி, முதல்கட்டமாக இலங்கையில் வசிக்கும் சீன குடிமக்களுக்குத்தான் வழங்கப்படும் என்று தொற்றுநோய்ப் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் பல ஆயிரக்கணக்கான சீனர்கள் பணியாற்றி வருகிறார்கள். சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபாக்ச பெற்றுக் கொண்டார். உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து இந்த கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தப் பிறகே, இது இலங்கை குடிமக்களுக…
-
- 1 reply
- 324 views
-
-
மட்டக்களப்பு மாநகரசபை தொடர்பில் இடைக்காலத் தடையுத்தரவு! மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (வியாழக்கிழமை)மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ”மாநகர சட்டத்தின்படி மே…
-
- 0 replies
- 427 views
-
-
தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்து அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- துரைரெட்னம் 0 ஜனநாயக ரீதியாக செயற்பட்ட அமைப்புக்களை தடை செய்தமை குறித்து இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென ஈ.பி.ஆர்.எல் .எப். பத்மநாபா மன்ற தலைவர் இரா.துரைரெட்னம் வலிறுத்தியுள்ளார். மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனநாயக ரீதியாக இயங்கும் அமைப்புக்கள் தமிழர்களாக இருந்தால், அவ்வமைப்புக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண…
-
- 0 replies
- 242 views
-
-
(எம்.மனோசித்ரா) சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் மிக ஆபத்தான நிலையில் இலங்கை உள்ளது என எச்சரித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கிணற்று தவளைகளாக வாழ்வதில் எந்த பயனும் கிடையாது. இதனை மையப்படுத்தியே தற்போது அரசாங்கத்தின் போக்கு காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார். பத்தரமுல்ல - கோட்டே சோலிஸ் ஹோட்டலில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில் , இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 இல் நிறைவடைந்ததன் பின்னர் பல உலக நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்தன. மறுபுறம் ஒரு மீறல்களை மையப்படுத்தி விசாரணைகளுக்கும் வலியுறுத்தின. குறிப்பாக வெள்ளை கொடி விவகா…
-
- 2 replies
- 569 views
-
-
மாநகரசபை உறுப்பினர்களை கட்சியிலிருந்து விலக்கும் மனு தள்ளுபடி March 31, 2021 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் சிலரைக் கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்குவதாக அண்மையில் அகில இலங்கை காங்கிரஸ் அறிவித்தது. இதற்கு எதிராக யாழ் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வி.மணிவண்ணன், பா.மயூரன் தாக்கல் செய்த மனுவையடுத்து, அவர்களை கட்சியை விட்டு நீக்கும் முடிவிற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக, அகில இலங்கை த…
-
- 0 replies
- 252 views
-
-
இலங்கை அரசாங்கம் வடகொரியா போன்று செயற்பட முடியாது – மங்கள ஐ.நா. தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வடகொரியா, வெனிசுவேலா அல்லது எரேட்ரியா போன்று செயற்பட முடியாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் ஐ.நா.வின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவது மற்றும் பிற விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கை அரசாங்கம் தனது இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமே தவிர மோதலில் அல்ல என குறிப்பிட்ட மங்கள சமரவீர, இராஜதந்திரம் ஊடாக அனைத்து வகையான தீர்வுகளுக்கும் விடை கிட்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதாரம் மந்த ந…
-
- 0 replies
- 271 views
-
-
கத்தோலிக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் ஈஸ்டர் ஞாயிறு தினத்தை கருத்தில் கொண்டு கத்தோலிக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் அடுத்த சில நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அறிக்கையினை வழங்க இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1206407
-
- 0 replies
- 177 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இலக்கான... சியோன் தேவாலயத்தை நேரில் சென்று பார்வையிட்டார் அமெரிக்க உயர்ஸ்தானிகர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்தை அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி அன்டோனி எப்.ரேன்சுலியும் அவரது குழுவினரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்ட அன்டோனி எப்.ரேன்சுலியும் அவரது குழுவினரும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்துக்கொண்டனர். மேலும் நல்லாட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள் கட்டுமான பணிகள் இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இவை…
-
- 0 replies
- 239 views
-
-
’நியாயப்படுத்தல்களை அரசாங்கம் ஏற்காது’ மகேஸ்வரி விஜயனந்தன் மேற்குல நாடுகளுக்கு அடிபணிந்து அரசாங்கம் செயற்படாமை காரணமாகவே எமக்கு எதிராக அடிப்படையற்ற போலிக் குற்றச்சாட்டுகள், மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டன என்று தெரிவித்த அமைச்சர் உதயகம்மன்பில, அக்குற்றச்சாட்டுகளை நாம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளோம் என்றும் எனவே, அந்தக் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த முன்வைக்கும் எந்தவொரு விடயத்தையும் அரசாங்கம் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றார். இதேவேளை, மஹரகம பிரதேசத்தில், நேற்று முன்தினம் (29) பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், சாரதியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு, கதைய…
-
- 1 reply
- 477 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிடம் முன்வைத்துள்ளார். சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அனுமதி பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க தான் யோசனை முன்வைத்ததாகவும் அவர் கூறுகின்றார். இந்த அனுமதி பத்திர நடைமுறையானது, நாட்டு படகுகளுக்கு மாத்திரமே செலு…
-
- 4 replies
- 758 views
-
-
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவரித் திணைக்களத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலில் மதுவரிப் பரிசோதகர் வசீகரனின் தலைமையில் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நேற்று மாலை முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் ஒரு கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி சுமார் ஒரு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில்…
-
- 0 replies
- 435 views
-
-
இன்று முதல் சில பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டுக்கு தடை நாட்டில் சில வகையான பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக்கினால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகளைக் கவனத்திற்கொண்டு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் விவசாய இரசாயனம் அடங்கிய போத்தல் மற்றும் பக்கற்றுகள் என்பன தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக்கைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காது துடைப்பான்கள் முழுமையாகத் தடை செய்யப்பட்ட…
-
- 0 replies
- 275 views
-
-
6000 வாள்கள் தொடர்பில் விசாரணை செய்ய இரு விஷேட குழுக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6000 ம் வாள்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்பத்தில் சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அவன்தி பெரேரா இதனை தெரிவித…
-
- 0 replies
- 560 views
-
-
Aboutதேர்தல் முறைமை நிச்சயமாக மாற்றப்படவேண்டும்- மாவை மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்ட…
-
- 0 replies
- 277 views
-
-
வீட்டுத்திட்டத்தில் அரசாங்கத்தால் நிர்க்கதியாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் பெருமளவான மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தற்போது வரை முழுமையடையாத நிலையில் காணப்படுகின்றது. புதிய அரசாங்கத்தினால் புதிய வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தொடர்சியாக கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்ளையே குறித்த வீட்டுத்தி…
-
- 0 replies
- 221 views
-
-
மூன்று தசாப்த கால யுத்தத்தின் வலிகளை மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற சமூகமாக நாங்கள் இருக்கின்றோம்! - வியாழேந்திரன் By கிருசாயிதன் (கல்லடி நிருபர்)கிழக்கு மாகாணத்தில் மற்றய சமூகங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியோடு எம் தமிழ் சமூகத்தை ஒப்பிடும்போது கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பல்வேறுபட்ட வேதனைகள் மற்றும் இன்னல்களையும் வலிகளையும் மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் இருக்கின்றோமென மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி அபிவிருத்திப் பணியினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.அதிமேதகு ஜனாதிபதியின் "நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்த…
-
- 0 replies
- 211 views
-
-
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் என எவரும் கிடையாது! March 30, 2021 இலங்கையில் இருந்து மக்கள் எவரும் பலாத்காரமாக வெளியேற்றப்படவில்லை அதனால் புலம் பெயர்ந்தோர் என எவரும் இல்லை. அவ்வாறு கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில, புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கீகரிக்கவில்லை எனவும் வலியுறுத்தி உள்ளார். வெளிநாட்டவர்களுடனான, நெருக்கமான உறவுகளை அரசாங்கம் தொடர்ந்தும் பேணும். எனினும் புலிகளின் சித்தாத்தங்களை அல்லது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அனைத்து குழுக்களையும் அரசாங்கம் தடை செய்யும் என்றும் அவர் குறிப்பி…
-
- 0 replies
- 556 views
-
-
ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பாக மாவை தலைமையில் ஆராய்வு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு- வெல்லாவெளி பகுதியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்தில், மாவை சோ.சேனாதிராஜாவுக்கும் அக்கட்சியின் மட்டு.பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை)இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், முன்னாள் போராளிகளின் அரசியற் செயற்பாடுகள், சமகால அரசியல் நிலைமைகள், அடுத்து நடைபெறவுள்ள தே…
-
- 0 replies
- 224 views
-
-
கிளிநொச்சியில் புலிகளின் முகாம் அமைந்த பகுதியில் ஐவர் கைது..! கிளிநொச்சி வட்டக்கச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட நடவடிக்கை இடம்பெறுவதாக இராணுவப் புலனாய்வாளர் மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கானிங் கருவி மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் கார் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப…
-
- 0 replies
- 295 views
-
-
தமிழக மீனவர்களின் 6 விசைப்படகுகளை சிறீலங்கா கடற்படையினர் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி 15 Views படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் முன்னிலையாகாததால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 6 விசைப்படகுகளை சிறீலங்கா கடற்படையினர் பயன்படுத்த ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகு மூலம் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுபோல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான சட்டம் சிறீலங்கா மீன்வளத் துறையினால் கடந்த 2018 ஜனவரி 24 அன்று சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவ…
-
- 0 replies
- 384 views
-
-
வெளி மாவட்டத்து கடலுணவுகள் விற்பனைக்கு பொன்னாலையில் தடை 14 Views பொன்னாலைக் கடலில் பிடிக்கப்படும் கடலுணவுகளை மாத்திரம் பொன்னாலை சந்தையில் விற்பனை செய்வது என்றும், சந்தை வளாகத்தில் இதுவரை கடலுணவுகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு மாற்று ஒழுங்கு செய்து கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (30) வலி.மேற்கு பிரதேச சபை செயலாளர், பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா மற்றும் உறுப்பினர் து.சுஜிந்தன், கடற்றொழில் பரிசோதகர், கிராம சேவையாளர் உட்பட தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலிலேயே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொன்னாலை இறங்குதுறையில் வடக்கு மாகாண சபை நிதியில் அமைக்கப்பட்ட சந்தையி…
-
- 0 replies
- 345 views
-
-
(இராஜதுரை ஹஷான்) தேர்தல் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்த முயற்சிக்கிறது. மாகாண சபை முறைமை இலங்கைக்கு பொருத்தமற்றது. மாகாண சபை தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுப்படுவோம் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். எம்பிலிபிடிய பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு நாட்டு மக்கள் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. மாறாக …
-
- 2 replies
- 353 views
-
-
நல்லூர் ஆலயச் சூழலில்... கழிவு எண்ணெய், ஊற்றியது விசமிகள் இல்லையாம்! நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோயிலில் விசமிகளால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக இன்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் ஆலயத் தரப்பு இதனை மறுத்துள்ளது. அத்துடன், ஆலயத்தின் தேர் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில காதல் ஜோடிகள் அமர்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். நல்லூர் ஆலயச் சூழலுக்கு வரும் காதலர்கள் அங்கு அமர்ந்து கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் வேண்டத்தகாத செயல்களில…
-
- 20 replies
- 1.2k views
-
-
போராட்டம் 50 நாட்களை எட்டுகின்றது: ‘பிரச்சனையை தீர்த்துவையுங்கள்’ -கிராமமக்கள் கோரிக்கை 22 Views வவுனியாவில் அமைந்துள்ள ஸ்ரீநகர் கிராம மக்கள் தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறுகோரி முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 50 நாட்களை எட்டுகின்ற நிலையில் அவர்களால் இன்று துண்டுப்பிசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டது. குறித்தி துண்டுப்பிரசுரத்தில், ‘எமது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக எமது சனசமூகநிலைய முற்றத்தில் இரவு பகலாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்,காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கு. வீடு அற்றவர்களுக்கு வீடு,வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட …
-
- 0 replies
- 205 views
-
-
குற்றவாளிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா? காணாமல் போனோரின் உறவுகள் 38 Views சிறீலங்காவிடம் நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியிருப்பது மிகவும் வேதனையான விடயம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “எமது உறவுகளின் உண்மைநிலையை வலியுறுத்தி மூன்றுவருடங்களிற்கும் மேலாக நாம் போராட்டங்கள…
-
- 0 replies
- 194 views
-