ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
உதயனில் கொல்லப்பட்ட பணியாளர்களுக்கு அஞ்சலி!!! உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பணியாளர்களுக்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் தலைமை அலுவலகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கொரோனாத் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவினருடன் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. உதயன் பத்திரிகையின் குழுமத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஈ.சரவணபவன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உதயன் பணியாளர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். 2006ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி, ஊடக சுதந்திர தினத்துக்கு முதல் நாள் இரவு உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச்…
-
- 0 replies
- 489 views
-
-
சீன பாதுகாப்பு அமைச்சர், இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு! சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர், கடந்த ஒக்டோபரில் சீன மூத்த இராஜதந்திரி யாங் ஜீச்சியின் (Yang Jiechi) வருகையைத் தொடர்ந்து சீன அதிகாரி ஒருவர் மேற்கொண்ட இரண்டாவது மிக உயர்ந்த பயணமாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1212991
-
- 22 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழகத்தை ஆளப் போகும் முதல்வரை வாழ்த்தி வரவேற்போம் -மனோ கணேசன் 30 Views தமிழக ஆளும் கட்சியை, தமிழக முதல்வரை வாழ்த்தி வரவேற்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியா, தமிழக தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் முன்னணியில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் மூலமாக அறியக் கூடியதாக உள்ளது. இந்த நிலையில் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தனது முகநுாலில் கருத்து தெரிவிக்கையில், “தமிழக தேர்தல் முடிவுகள் இன்று. அதில் நேரடியாக தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல. ஆனால் அதுபற்றி நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது.…
-
- 0 replies
- 626 views
-
-
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் அனுமதி! கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1213840
-
- 0 replies
- 227 views
-
-
முள்ளியவளை பகுதியில் ஆங்காங்கே வெடிபொருட்கள் - அச்சத்தில் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள இலிங்கேஸ்வரன் என்பவருடைய வயல் காணியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வயல் காணிக்குள் கைக்குண்டு இருப்பதை அவதானித்த காணி உரிமையாளரால் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை பொலிஸார் கைக்குண்டை சென்று பார்வையிட்டுள்ளதோடு நீதிமன்ற அனுமதியைப் பெற்று செயலிழக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபரின் காணியில் இருந்த குண்டை பார்வையிட சென்றவேளை இன்னுமொரு குண்டும் இருப்பது பொலிஸாரால் நேற்று இனம் காணப்பட்டுள்ளது. மக்கள் மேற்கண்ட பகுதிகளில் …
-
- 1 reply
- 390 views
-
-
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரம் வெளியானது நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகைத்தரவேண்டும். தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும். பொது போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்லவேண்டும். மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்…
-
- 0 replies
- 194 views
-
-
12 வருடங்களாக மகனின் விடுதலையை எதிர்பார்த்திருந்த அரசியல் கைதியின் தந்தை உயிரிழப்பு May 1, 2021 மகனின் விடுதலையை எதிர்பார்த்து 12 வருடங்களாக காத்திருந்த தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் செல்லாச்சி அம்மையார் வீதியை சேர்ந்த எஸ்.இராசவல்லவன் (வயது 79) என்பவரே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சோந்த இராசவல்லவன் தபோரூபன் (வயது 39) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கான வழக்கு இடம்பெற்று கடந்த 2019 ஆம் ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. மகன் கைது செய்யப்பட்ட பின்னர் தந்தை …
-
- 0 replies
- 304 views
-
-
கண்டி... குண்டசாலையிலுள்ள, பொலிஸ் பயிற்சி நிலையத்தில் 37 பேர் தனிமைப்படுத்தல்! கண்டி, குண்டசாலையில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றில் நேற்று(சனிக்கிழமை) இரண்டு பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 37பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முந்தினம் ஓருவர் குறித்த பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பயிற்சி நிலையத்தில் பொலிஸ் கடமையில் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கான பயிற்சிகள் நடாத்தப்பட்டுவருகின்றது. இதில் நாடெங்கிலும் இருந்து சுமார் 120பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயிற்சிகளை முன்னெடுத்து…
-
- 0 replies
- 302 views
-
-
மன்னாரில் விதிமுறைகளை மீறிய இரண்டு தேவாயலங்கள் தனிமைப்படுத்தப்பட்டன! மன்னாரில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக இரண்டு தேவாலயங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதிகளில் உள்ள இரண்டு தேவாலயங்களிலும் இன்று (சனிக்கிழமை) திருவிழா திருப்பலி இடம்பெற்றது. இந்நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பக்தர்களை ஒன்றுகூட்டிய குற்றச்சாட்டில் குறித்த இரண்டு தேவாலயங்களும் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த தேவாலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்…
-
- 0 replies
- 381 views
-
-
இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணங்கள் மேற்கொள்ளத் தடை – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு 1 Views இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்று காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. நீண்ட கால வீசா அனுமதியுடையவர்கள் மற்றும் குறுகிய கால அனுமதியுடையவர்கள் உள்ளிட்ட இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் லோரன்ஸ் வொங்இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை இரவு 11.59 மணி முதல் இந்த உத்தரவு…
-
- 0 replies
- 559 views
-
-
இன்று காலை ஏற்பட்ட விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெய்வாதீனமான உயிர்தப்பியுள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அவரின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது எனினும் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சுமந்திரன் பயணித்த வாகனம் கடுமையாக விபத்துக்குள்ளானதில் முழுமையாக சேதமடைந்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போது, அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியில் வழுக்கி, பலமுறை உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் வேறு வாகனம் ஒன்றின் மூலம் அவர் கல்முனை நோக்கி பயணித்துள்ளார். https://tamilwin.com/article/road-accident-in-colombo-1619756644
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழர்களின் வரலாறுகளை அழிப்பதில் அரசு தீவிரம் – சிறிதரன் 18 Views தமிழர்களின் வரலாறுகளைச் சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “இலங்கையில் சித்திரப் பாடத்தினை எடுத்தால் பல சொற்கள் சிங்களத்தில்தான் சொல்லப்படுகின்றது. சித்திரப் பாடத்தில் இருக்கின்ற தமிழ் வரலாறுகள் அழிக்கப்படுகின்றன. காசியப்பனின் காலம், சிகிரியாவின் மலைகூட சிவபெருமானையும், உமாதேவியாரையும் குறிப்பிடுகின்ற சிற்பங்கள் எல்லாம் இன்று சிங்கள முனிவர்களிற்குரியதாக அல்லது சிங்கள கலைஞர்களுக்குரியத…
-
- 2 replies
- 379 views
-
-
சீன பாதுகாப்பு அமைச்சரின், வாகன தொடரணியின்போது... பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது. சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகன தொடரணியின்போது, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்தில் பத்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பை நோக்கி சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகன தொடரணி வந்து கொண்டிருந்தவேளையில், பொரளையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே சந்தேகநபர் க…
-
- 2 replies
- 646 views
-
-
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதியுங்கள்: சிறிதரன் எம்.பி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்கள் தாங்கள் இறந்து போன தங்கள் இறந்து போன உறவுகளை தங்களோடு வாழ்ந்த மக்களை தங்களுடன் சேர்ந்து இருந்த உறவுகளை கண்ணீர் சிந்தி நினைக்கின்ற மே 18 அந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைவு கூர இந்த அரச அனுமதிக்க வேண்டும். இந்த அரசாங்கம் அதனை தவிர்த்து விட முயன்று வருகிறது. ஆனால் அது அரசாங்கத்தினுடைய தமிழ் மக்களுக்குச் செய்கின்ற மிகப…
-
- 2 replies
- 488 views
-
-
யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது! கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின், வருடாந்திர பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். நாட்டிலுள்ள அனைத்து ஆல…
-
- 22 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் 192 பேர் கால்களை இழந்துள்ளனர்! May 1, 2021 மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு காரணங்களால் சுமார் 859 பேரின் கால்கள் பாதிப்புற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் 192 பேர் ஒருகால் அல்லது இரண்டு, கால்களையும் இழந்துள்ளனர். இவர்களுள் 14 பேருக்கு மாத்திரம் தான் செயற்கைக் கால்களை வழங்கியுள்ளோம். மிகுதியாகவுள்ள கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கைக் கால்களை வேண்டியுள்ளது என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்துள்ளார். டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள வாணி சமூக பொருளாதார சுயமேம்பாட்டு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கி…
-
- 0 replies
- 532 views
-
-
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி விவகாரம் – வழக்கு தள்ளுபடி 21 Views பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி பேரணிக்கு எதிராக கல்முனை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று கல்முனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று குறித்த வழக்கு விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘கல்முனை நீதவான் இல்லாத சமையத்தில் ஒரு பதில் நீதவான் முன்னிலையில் அழைப்பாணைகளை பெற்றிருந்தார்கள். நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை விசாரிப்பதற்கான எந்தவிதமான நியாயதிக்கங்களும் கிடையாது. ஆகையிலானால் அழைப்பாணையை பெற்ற சட்ட மாணவர் …
-
- 20 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 475 views
-
-
உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீன அமைச்சரின் வருகை அமைந்தது- சந்திரசேகரம் உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அமைந்திருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீனாவை மட்டுமல்லாது அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிள் அதிகாரப் போக்கையும் எதிர்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “இலங்கை மீதான ஏகாதிபத்தியவாதிகளுடைய அழுத்தம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. தற்போது புதிய போட்டிய…
-
- 3 replies
- 707 views
-
-
வவுனியாவில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட வீடுகள் பூர்த்தி செய்யப்படாமையால் மக்கள் கவலை 17 Views வவுனியாவின் பல கிராமங்களில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட வீடுகள் பூர்த்தி செய்யப்படாமல் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் 120 வீடுகள் இவ்வாறு கட்டி முடிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. இப்பகுதியில் கொட்டகைகளில் வாழ்ந்த மக்களிற்கு வீடுகள் வழங்குவதாக தெரிவித்து அவர்களின் பங்களிப்புடன் வீடுகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக வீடுகள் கட்டி முடிக்கப்படாத நிலையில் காணப்படுவதாக கவலை அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை அன்றாடம் கூலித்தொழிலை…
-
- 0 replies
- 525 views
-
-
யாழ். குடத்தனையில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு ; வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பியோட்டம்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் , கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடத்தனை பகுதியில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் வந்…
-
- 0 replies
- 297 views
-
-
மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடலுக்குத் தடை! நாட்டில் கொரோனா தொற்று அச்சநிலையைத் தொடர்ந்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு மறு அறிவிப்பு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வழிபாட்டு தலங்களில் ஒரேநேரத்தில் ஆகக் கூடியது 25 பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொரோனா பரவலையடுத்து கொழும்பு தேசிய நூதனசாலை இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூதனசாலையின் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக காலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/…
-
- 0 replies
- 287 views
-
-
பொதுமக்கள் தாங்கள் விரும்பும்.. கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தெரிவுசெய்ய முடியாது – சுகாதார அமைச்சு! பொதுமக்கள் தாங்கள் விரும்பும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தேர்வு செய்ய முடியாது என சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக அவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கை இதுவரை அஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசியைப் பயன்படுத்தியது. சீன சினோபார்ம் தடுப்பூசியின் பங்குகள் தற்போது இலங்கையில் உள்ளன. அதனை உள்ளூர்வாசிகள் பயன்படுத்த அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். ரஷ்யாவிலிருந்து வாங்கிய ஸ்புட்னிக் வி தடுப்பூசி விரைவில் இலங்கைக்க…
-
- 3 replies
- 342 views
-
-
போர்க் குற்றம் : இலங்கை உயர் ஸ்தானிகராக சுமங்கல டயஸின் நியமனத்தை நிராகரித்தது கனடா 65 Views முன்னாள் விமானப்படை தளபதியும், போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டவருமான சுமங்கல் டயஸ், தமது நாட்டிற்கான இலங்கை உயர் ஸ்தானிகாரக நியமிக்கப்பட்டதை கனடா நிராகரித்துள்ளதாக “தமிழ் கார்டியன்“ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் கனேடியர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த முடிவுக்காக சுமங்கல டயஸை நிராகரிக்க அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து கனேடிய அரசாங்கம் அவரது நியமனத்துக்கு உடன்படவில்லை. டயஸ் தற்சமயம் இத்தாலியில் துாதராகப் பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் விமானப்படை தளபதி டயஸ் , ஆயுத மோதலின் இறுதி கட்டங்களில் சிரேஸ…
-
- 3 replies
- 473 views
-
-
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் ஊடுருவல்? கடற்படையினர் கடும் பாதுகாப்பு இந்தியாவில் கொரோனாத் தொற்று மோசமடைந்திருப்பதால் அதற்கு அஞ்சி அங்கிருந்து பொதுமக்கள் இலங்கைக்குள் ஊடுருவலாம் எனக் கருதப்படுகிறது. அதைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக் கடற்படையினர் தமது கடலோரக் கண்காணிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இலங்கைக் கடற்படையின் இந்தக் கெடுபிடிகளால் இலங்கை மீனவர்கள் – குறிப்பாக வடக்கு, கிழக்கு மீனவர்கள் – அசெளகரியங்களை எதிர்கொள்ள வேண்டி நேர்ந்திருக்கின்றது என விசனம் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் பேசாலை மீனவர்கள் கடற்படையினரிடம் பதிவு செய்தே இனிக் கடலிற்குள் செல்ல முடியும் எனக் கடற்படையினர் அறிவித்துள்ளனர். இதற்கமைய பேசால…
-
- 0 replies
- 406 views
-