Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோப்பாய் காவல்துறையினருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 32 Views சகோதரர்களான அக்கா தம்பியை கட்டி வைத்து கடுமையான சித்தரவதை செய்ததாக கோப்பாய் காவல்துறையினருக்கு எதிராக, பாதிக்கப் பட்டவர்களால் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, திருட்டு சம்பவம் ஒன்றில் சந்தேகநபரான புத்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இருபாலை பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தலைமறைவாகி இருப்பதாக, கோப்பாய் காவல்துறையினர் கடந்த 21 ஆம் திகதி குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கு அந்த நபர் இல்லை என்றதும் திரும்பி சென்றுவிட்டு அன்றைய தினம் இ…

  2. வெடிபொருட்களுடன் முன்னாள் போராளி யாழில் கைது! May 28, 2021 வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளி ஒருவர் கிளைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருள்களுடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் இராணுவச் சிப்பாய் ஒருவரை தாக்கி விட்டு தலைமறைவாகி இருந்து பின்னர் நீதிமன்றில் சரணடைந்து அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியே அவரது மீன்வாடியில் வைத்து இன்று மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து கிளைமோர் வெடிகுண்டு, சார்ஜர், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினா் தெரிவித்தனர். …

    • 4 replies
    • 821 views
  3. நடைப்பயிற்சிக்காக வீதிக்கு வந்த அதிகாரியின் மனைவி; தடுத்த பொலிஸாருக்கு இடமாற்றம் 22 Views பயணத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவி வீதியில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் கொழும்பில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றுள்ளது. மருதானையில் உள்ள பொலிஸ்சோதனைசாவடியில் பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் மேலதிகாரியின் மனைவி நடைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிமறுத்து அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. மருதானை ஆனந்தா கல்லூரி சந்தியில் பொரளை மருதானை வீத…

  4. மட்டு. ஏறாவூரில் அரச காணியில் மக்களை குடியேற விடாமல் தடுத்து நிறுதிய அதிகாரிகள் 30 Views மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரச காணியில், நீண்ட காலமாகவே யுத்தப்பாதிப்புளால் நிர்க்கதியாக உள்ள மக்கள் குடியேற முயற்சித்தபோது மண்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், செல்வந்தர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை அபகரிக்கும் போது யுத்ததினால் பாதிக்கப்பட்டு இருக்க இடமின்றி பெருமளவான தமிழ் மக்கள் வாழ்ந்துவருவதாக மட்டக்களப்பு, ஏறாவூர் பற்று பிரதேசசபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் தெரிவித்தார். மட்…

  5. பயணத்தடையில் ஜூன் 7 வரை எவ்வித தளர்வுமில்லை – விசேட குழுவின் கூட்டத்தில் முடிவு 31 Views தற்போது நடைமுறையில் இருக்கும் பயணத்தடையை ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை தளர்த்தாதிருப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். கொவிட் தடுப்பு விசேட குழு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பயணத்தடையின் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பயணத்தடையை தளர்த்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கடந்த 25ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டவேளையில் ப…

  6. வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை- செல்வம் அடைக்கலநாதன் 50 Views வடக்கு- கிழக்கு மக்கள் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க தவறிவிட்டது. அதாவது அரசாங்கத்தின் முறையான திட…

  7. யாழில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை May 29, 2021 யாழ் மாவட்டத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அரசினால் நாடு பூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் அரசின் தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாள…

  8. இனவாதத்தை இடைநிறுத்தி நாட்டை தாருங்கள், முன்னேறிய நாடாக திருப்பி தருகிறோம் -மனோ 12 Views முன்னணியில் இருந்த எமது நாட்டின் வீழ்ச்சிக்கு அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருந்து வருகின்றமைதான் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார். அவரது ஊடக அறிக்கையிலேயே் இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியு…

    • 1 reply
    • 391 views
  9. கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றி எரியும், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்க முன்னதாக இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலுள்ள இரு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகவும் எனினும், குறித்த இரண்டு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க இக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின், நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் புது தகவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போது, இதனைத் தெரிவித்த அவர், இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்ட இரசாயன திரவியம் கசிந்ததால் இந்த தீ ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்த 1,4…

  10. இந்திய உயர்ஸ்தானிகரிற்கு க.வி.விக்னேஸ்வரனின் அவசர கடிதம் 77 Views கோவிட் தடுப்பு ஊசிகள் மிக அவசரமாக வடகிழக்கு மக்களுக்கு தேவையாக உள்ளது என பிரதி யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் அவசரக் கோரிக்கைக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் அவர் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வகையில் அதிகளவிலான கோவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் கோவிட் தடுப்பு ஊசிகள் மிக அவசரமாக எமது வடகிழக்கு மக்களுக்கு தேவையாக உள்ளது. இவ் ஆபத்தான நிலமைபற்றி யாழ் இந்தியத் துண…

  11. இலங்கை துறைமுக நகர பொருளாதர ஆணைய சட்டம் நிறைவேற்றம்: சீன ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 மே 2021, 09:03 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொழும்பு ஆழ்கடல் துறைமுகம். கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட மூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (2021 மே 27) கையெழுத்திட்ட நிலையில், கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவை அமைக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், கடந்…

  12. கொரோனா தடுப்பில் ட்ரோன் கமரா அடிப்படை மனித உரிமை மீறல் -பி.பொன்ராசா 11 Views யாழ்ப்பாணத்தில் பயணத்தடையை மீறி வீதிகளில் தேவையற்று பயணம் செய்பவர்களைக் கண்காணிப்பதற்காக என்ற பெயரில் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்துவது தனிமனித உரிமைகளை மீறும் செயலாகும். எனவே இத்திட்டத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் என வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் பி.பொன்ராசா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். மாவட்டத்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் குளியல் அறைகள் இல்லை. மக்கள் இன்றும் அவர்களின் வீடுகளில் உள்ள திறந்த கிணறுகளிலேயே குளிக்கின்றனர். இந்நிலையில் ட்ரோன் கமரா பயன்படுத்தப்படுவது அவர்களின் சுய கௌரவத்தை பாதிக்கும். கொரோன…

  13. தீ பரவியுள்ள ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலிலிருந்து வௌியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளது என கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தர்ஷனி லஹதபுர தெரிவித்தார். தீ பரவும் கப்பலிலிருந்து Nitrogen Dioxide வாயு வௌியேறுவதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாகவும், கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரத்தை அண்மித்த பகுதிகளிலும் அமில மழை பெய்யக்கூடும் என அவர் கூறினார். இதனால், வீடுகளுக்கு வௌியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருட்கள் இருக்குமாயின் அவற்றை மூடி வைக்குமாறும் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்கள் மழையில் நனைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் சாத்தி…

  14. நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கத் திட்டம் நாட்டில் நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு மீண்டும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இம்முறை இந்த கொடுப்பனவு எவ்வளவு மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அமைச்சரவை மற்றும் உரிய பிரிவுகள் ஒன்றுக்கூடி இது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளும்.இந்த கொடுப்பனவினை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கொவிட் பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாடு முழ…

  15. இலங்கையில்... அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு, தமிழ் மக்களின் சம்மதமும் வேண்டும்- உருத்திரகுமாரன் இலங்கையில் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் சம்மதமும் பெறப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்லாது நிலத்தை அண்டிய கடலிலும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்ற கருத்தமர்வுகளில் “இலங்கை தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’ தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்” என்ற தொனிப்பொருளில் கருத்தாய்வு இடம்பெற்றது. பல்வேறு அறிஞர் பெருமக்கள் பங்கெடுத்திருந்த இந்தக் கருத்த…

    • 5 replies
    • 509 views
  16. “பி.சி.ஆர் விவகாரம்” – யாழ்.பல்கலை மருத்துவபீடத்தின் குற்றச்சாட்டுக்கு ஆ.கேதீஸ்வரன் பதில் 78 Views கடந்த சில நாட்களாக குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கோவிட்-19 தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கு வடமாகாணத்தின் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அசண்டையே காரணம் என்ற வகையில் செய்திகள் வெளிவந்துள்ளதை அவதானித்து கவலையடைவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவிட் பெரும் தொற்று இலங்கையில் ஆரம்பித்த காலத்தில் வடமாகாணத்தில் கோவிட் தொற்றுக்குரிய பிசிஆர் பரிசோதனை வசத…

  17. ஆடைத்தொழிற்சாலையை மூடிவிடமுடியும். ஏதோ இதை தடைசெய்துவிட்டால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என எண்ணவேண்டாம். கொரோனா தொற்றை தடுத்துக் கொண்டு பட்டினியும் வராமல் பொருளாதாரத்தை வீழ்சியடையாமலும் கவனமாக வெற்றி நடைபோட மக்கள் கவனமாக உணர்ந்து செயற்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று பலரிடம் இருந்து ஆடைத்தொழிற்சாலையில் இருந்து தொற்றுவருகின்றது முறைப்பாடுவருகின்றது ஆடைத்தொழிற்சாலையை மூடிவிடமுடியும் அதில் அதிகமான பிள்ளைகள் அதிகமாக பணியாற்றுகின்றார்கள் என்பதற்க…

  18. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து! கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும் சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து! – Athavan News

    • 0 replies
    • 222 views
  19. அனைத்து குழப்பங்களுக்கும் பவித்திராவே காரணம் -இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின் போது சுகாதாரதுறையை உரியவிதத்தில் நிர்வாகம் செய்யாதமைக்கான பொறுப்பை அமைச்சர் பவித்திர வன்னியாராச்சியே ஏற்கவேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் முழு நடவடிக்கையும் குழப்பநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலானா அரசாங்கம் இதனை சரிசெய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பலர் முன்னெடுக்கின்ற நிலையில் …

    • 0 replies
    • 440 views
  20. பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரின் விஷேட அறிவிப்பு இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலில் எந்தவி உண்மையுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையை மேலே படத்தில் காணலாம். பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரின் விஷேட அறிவிப்பு (adaderana.lk)

    • 0 replies
    • 269 views
  21. தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்படித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் முறைப்பாடளித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாகவே கப்பலின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு – Athavan News

    • 0 replies
    • 289 views
  22. புதிய சட்டமா அதிபராகப் பதவியேற்றார் சஞ்சய் ராஜரத்தினம்! பிரதி மன்றாடியார் நாயகமாகச் செயற்பட்டுவந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் புதிய சட்டமா அதிபராக பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ள அவர், இலங்கையின் 48ஆவது சட்டமா அதிபர் ஆவார். சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கடந்த 24ஆம் திகதி தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதுடன், இதற்குமுன்னர் சஞ்சய் ராஜரத்தினத்தை புதிய சட்டமா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றப் பேரவைக்குப் பரிந்துரைத்தார். இதற்கமைய, இவரை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அண்மையில் நாடாளுமன்றப் பேரவை இணக்கம் வெளியிட்டிருந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 வ…

    • 3 replies
    • 427 views
  23. கடலோரமாக... ஒதுங்குகின்ற, பொருட்கள் எதனையும் பொதுமக்களை தொட வேண்டாமென எச்சரிக்கை! கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் கடற்பரப்பில் ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நீர்கொழும்பில் கரையொதுங்கியுள்ள பொருட்கள் தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கசியும் இரசாயன திரவியங்களின் படிமங்களாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும் அதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், கடற்படையினர் கட…

  24. கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்தும், கொரோனா நோயாளி தப்பியோட்டம்! கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார். தனக்கு கடும் நெஞ்சுவலி என்று அவர் தெரிவித்ததன் அடிப்படையில் நேற்றைய தினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை கிளிநொச்சிப் பொலிஸாரும் பாதுகாப…

  25. "ட்ரோன்" கண்காணிப்பின் அடிப்படையில்... யாழில் 10 பேர் கைது! யாழ். நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்தலில் விதிமுறைகளை மீறிய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் இன்று காலை யாழ் நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கமரா கண்காணிப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் முகக்கவசம் அணியாது வீதியில் நின்றமை, பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுக்காக இவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.