Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் 7 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் நீண்டகால கடத்தல் குழு கைது! யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிகளில் நீண்டகாலமாக ஹெரோயின், ஐஸ், குடு மற்றும் கஞ்சா கடத்தல் செய்துவந்த பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள், யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடல் வழியாக போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி நீண்ட காலமாக யாழ். மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தக் கடத்தல்காரர்கள் இன்று (ஞாயிற்றுக…

  2. வடபகுதி மீனவர்களுக்கு இராணுவத் தளபதி பிரியந்த பெரேரா எச்சரிக்கை 34 Views இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் வடபகுதி மீனவர்களுக்கு இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா எசசரித்துள்ளார். இந்திய மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள் பேணிவரும் தொடரபுகள் காரணமாக வடபகுதியில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவரமடையக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா எச்சரித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாண மாவட்டத்திலுள…

  3. முடக்கலுக்கு செல்வது பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் - ஜனாதிபதி கொவிட் நோய்த் தொற்று பிரச்சினைக்கு இறுதி தீர்வு தடுப்பூசி மாட்டுமே ஆகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் பொறுப்பு என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, கொவிட் 19 நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும். மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது. இந்த சவாலை சிறப்பாக வெற்றிகொள்வதற்கு கொவிட் நோய்த் தொற்று பரவிய முதல் சுற்றின்போது செய்ததைப் போன்று சுகாதார அதிகாரி…

  4. கிழக்கில் தமிழர்களின் இனப் பரம்பலை திட்டமிட்டு குறைத்த அரசாங்கம் -கோவிந்தன் கருணாகரம் 16 Views கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு தமிழர்களின் இனப்பரம்பலை கடந்த காலத்தில் குறைத்த அரசாங்கம், இன்று இறுதியாக 74வீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இனப்பரம்பலை குறைப்பதற்காக மிகவும் சாதுரியமாக தங்களது காரியங்களை எல்லைப்புறங்களில் அரங்கேற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் குற்றம்சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு,கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு விழ…

  5. சர்வதேச நிபுணர்களின்... பிரத்யேக கண்காணிப்புக் குழுவில், இலங்கை பிரதிநிதிகள் தவிர்ப்பு!!! ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக விசாரணை மற்றும் கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகளை இணைக்கப்போவதில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் குறித்த முடிவுக்கு இலங்கை அரசாங்கம் முறையான பதிலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு போருக்கு பின்னர் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது தீர்மானத்தின் விதிகளை விரைவாக அமுல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமீபத்தில் கூறியது. அதன்படி போரின் போது மற்றும் அதற்குப் பிறகான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தக…

  6. இலங்கையில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள்... ஜூன் முதல் ஜூலை மாதங்களில் காலாவதியாகின்றன!! இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் குறைந்த அளவிலான பங்குகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. குறித்த தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற கிட்டத்தட்ட அரை மில்லியன் இலங்கையர்களில் 350,000 பேருக்கு செலுத்தக்கூடிய பங்குகள் மட்டுமே தற்போது கையிருப்பில் காணப்படுகின்றது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, தற்போது வரை மொத்தம் 925,242 பேருக்கு ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் குறித்த தடுப்பூசியின் 356,000 அளவுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த பங்குகளில் …

  7. தமிழ் தலைவர்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டதே துன்பத்திற்கான காரணம் – மனோ 19 Views ஆரம்ப காலம் முதற்கொண்டு தமிழ்த் தலைவர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டே வந்ததுடன், பல தவறுகளையும் செய்து வந்துள்ளனர் அதனால் தான் தமிழ் இனம் தற்போது பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருவதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு மனோ காணேசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இப்போ சரத் பொன்சேகாவை ஏன் பாராட்டினீர்கள்? அவரும் போர்க்குற்றவாளிதானே என ஒருதரப்பினர் என்னை இணைய-வெளியில் விமர்சனம் செய்கிறார்கள். சரத் பொன்சேகா, அதை செய்தார், இதை செய்தார் என குற்றப்பத்திரிக்கை எழ…

  8. நாடாளுமன்றின் குறைந்த செயற்திறன் கொண்டவர்களாக அடையாப்படுத்தப்பட்ட 10 எம்பிகள் பட்டயலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான இணைய தளம் வெளியிட்டுள்ளது. இதன்படி பொது ஜன பெரமுன சார்பில் கருணாதாச கொடிதுவக்கு, நிபுண ரணவக்க, மர்ஜான் பலீல், ஜானக பண்டார தென்னகோன், ட்ரிரன் அலெஸ் ஆகியோரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கு.திலீபன்,முஸ்லிம் தேசிய கூட்டணி சார்பில் அலி சப்பிர் ரஹீம், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தலைவர் சி.சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் ஆகியோர் இந்த 10 பேரில் காணப்படுகின்றனர். குறைந்த செயற்திறன் கொண்ட எம்பிகள் பட்டியலில் தமிழர் மூவர்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  9. கொழும்பு துறைமுக நகரம் என்பது முற்றுமுழுதாக சீனாவிற்காக இலங்கை தீவிற்குள்ளேய உருவாக்கப்பட்ட மற்றுமொரு தீவு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது நாடு இருண்ட யுகத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார். எமது ஐ.பி.சி தமிழின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் விஜயதாஸ ராஜபக்ச யாரை காப்பாற்றியதாக பெருமைக் கொண்டாரோ தற்போது அவரிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது விஜயதாஸ ராஜபக்ச ஜனாதிபதியை பற்றி கூறிய அனைத்து விடயங்களும் உண்மையானவையே என்றும் தெரிவ…

    • 1 reply
    • 593 views
  10. ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் வீடுகள் நள்ளிரவு சுற்றிவளைப்பு – அதிகாலை இருவரும் கைது 2 Views அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில் அவர்களுடைய வீடுகளை சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடுமையான சோதனைகளை மேற்கொண்ட பின்னர் இன்று அதிகாலை அவர்களை கைது செய்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவே அவர்கள் இருவரும் கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர். ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நள்ளிரவில் அவரது இல்லத்தை சுற்றிவளைத்துள்ளதாக…

  11. கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் தொடர்பிலும் இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றியும் விளக்குகிறார் எம். ஏ. சுமந்திரன்

  12. சர்வதேச விசாரணை தேவை என்பதை உணர்த்தும் அரசின் நடவடிக்கை – கஜேந்திரகுமார் 25 Views கோட்டாபய அரசாங்கம் தமிழ் மக்கள் கோரும் சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை நியாயமானவை என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுக்களை உருவாக்கி நியாயமான தீர்ப்பு முறையில் நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்தியுள்ளது. இதனைத்தான் தமிழ் மக்களும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கூறுகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விச…

  13. நயினாதீவில்... தேசிய வெசாக் நிகழ்வுகள், திட்டமிட்டவாறு நடைபெறும்! தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நயினாதீவு நாக விகாரையில் இடம்பெறும் என யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதன் போது ஊடகவியலாளர் , நாக விகாரையில் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறுமா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேசிய வெசாக் நிகழ்வு என்பது தேசிய நிகழ்வு. அதனை நிறுத்துவது தொடர்பில் எமக்கு எந்த அறிவுறுத்தலும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அதனால் நிகழ்வு …

  14. புத்தரின் சின்னங்களைக் காட்டி நிலங்களை அபகரிக்கும் நீங்கள் பொலநறுவை, அனுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்கும் நிலம் தருவீர்களா? - கோவிந்தன் கருணாகரம் April 24, 2021 கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் அடையாளம் காட்டி நிலங்களை அபகரிக்கின்றீர்கள். இந்து மன்னர்கள், ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுர பிரதேசங்களில் இந்து தாபனம் அமைக்க நூறு ஏக்கர் காணியை தர முடியுமா என்று கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ( ஜனா) கல்முனை பிரதேச தரம் இறக்கல், போர்ட் சிற்றி பிரேரணைக்கு ஆதரவு பெறவா என்றும் பாராளுமன்றத்தில் வினவியுள்ளார்.அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்…

  15. கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர். எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அதனை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. அன்றி தமிழீழத்…

  16. ஒன்றிணைந்து யாழில் கொரோனாவை தடுப்போம்! - யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அனைவரும் இணைந்து யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவோம் என மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார். இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற விசேட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நாட்டில் அதிதீவிரமாக பரவும் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல், தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளல். வடக்கு மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டினை எவ்வா…

  17. 11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர் : பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார் பொன்சேகா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட் ஊழல் வாதிகள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இவர்களுக்கு உள்ளதென எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்…

    • 13 replies
    • 1.1k views
  18. நல்லூர் கந்தனை தங்கத்தினால் அலங்காரம் செய்தவர்களில் ஒருவரான இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.அவரின் உடலம் அன்றையதினமே தகனம் செய்யப்பட்டுள்ளது. சிவசண்முகநாதன் யாழ்‌ இந்துக்‌ கல்லூரி பழைய மாணவர் ஆவார். சமகாலத்தில் தென்னிந்தியாவில்‌ சினிமா தொழில்‌ துறை சார்ந்த சில நிறுவனங்களுக்கு உரிமையாளராக செயற்பட்டுள்ளார். நல்லூர்‌ கந்தனின்‌ உற்சவமூர்த்திகளை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் நல்லூர்‌ கந்தனின்‌ ஆறுமுகசுவாமி பகுதியை பொன்னால்‌ செய்த வேலைப்பாடுகளை இந்தியாவிலும்‌ நல்லூரிலும்‌ முன்னின்று வழி…

    • 21 replies
    • 2.2k views
  19. புலிகளை மீள உருவாக்க முயன்றதாக யாழில் நால்வர் கைது! இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபர்களுடன் உரையாடல் தொடர்பு இருந்ததாகவம் புலிகளை மீள உருவாக்க முயன்றதாகவும் குற்றஞ்சாட்டி இன்று (17) அதிகாலை யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத விசாரணை பிரிவால் (ரிஐடி) நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பால் தெரிவிக்கப்படுகிறது. இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும், கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து…

    • 27 replies
    • 2.5k views
  20. (நா.தனுஜா) புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஏனைய பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள். இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு தெற்காசிய நாடுகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம். அதேவேளை இருதரப்ப…

    • 19 replies
    • 1.8k views
  21. உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, மீளமைக்கப்பட்டு இன்று.. திறக்கப்பட்டது! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையில், கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை …

  22. இலங்கையில் புதுவகையான கொரோனா வைரஸ் ? April 22, 2021 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த பதிவில் காணப்படுவதாவது, இலங்கையில் இதுவரை காணப்படாத புது வகையான கொரோனா வைரசு இனங்காணப்பட்டு கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளது. இது குறித்த விஞ்ஞான ரீதியானஆய்வு மற்றும் தகவல் மதிப்பீட்டாய்வு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், பொது மக்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்துதல் அவசியம். நோய்த் தடுப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுவதன…

  23. யாழ். பல்கலைக்கழகத்தில்.. மீள அமைக்கப்பட்டுள்ள, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா திறந்துவைப்பார் என பல்கலை மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி எட்டாம் திகதி இடித்தழிக்கப்பட்டது. இதையடுத்து, அதனைக் கண்டித்து மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்ததுடன், மக்களின் எழுச்சி மற்றும் பன்னாட்டு…

  24. பொது ஒழுங்கை பாதுகாக்க முப்படையினருக்கு அழைப்பு -வர்த்தமானி வெளியீடு 24 Views நாடு முழுவதும் இன்று (22) முதல் பொது ஒழுங்கை பராமரிக்க முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக dailymirro செய்தி வெளியிட்டுள்ளது. சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவு (அத்தியாயம் 40) மூலம் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி, கொழும்பு, கம்பஹா, களுத்தறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, ம…

  25. தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்! – மாணவர்கள் காயம் 103 Views தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும், அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக்கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையி…

    • 21 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.