ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
யாழில் மாபெரும் தீப்பந்த போராட்டம் 56 Views சிறீலங்கா அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டம் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நல்லூர் பின் வீதியில் உள்ள போராட்ட களத்தில் இடம்பெற்றது. சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரையோடு ஆரம்பித்த தீப்பந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உரைகளும் இடம்பெற்றது. சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோர…
-
- 0 replies
- 456 views
-
-
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு உடையணிந்து போராட்டம் 51 Views உலக மகளீர் நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு உடையணிந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது நான்கு ஆண்டுகளை கடந்து இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களுடைய தொடர் போராட்டத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்காத நிலையில் “இன்று உலக மகளீர் நாளில் நாம் வீதிகளில் தொடர்ச்சியாக போராடி வருகிறோம்…
-
- 0 replies
- 217 views
-
-
ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் 46ம் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் எம். ஏ. சுமந்திரனின் கருத்து: "இந்த பிரேரணை தோற்கடிக்கப்படுமாக இருந்தால் இன்றைக்கும் வெற்றிக் களிப்பிலே; வெற்றி மமதையிலே 'தமிழர்களை நாங்கள் தோற்கடித்தோம், தமிழர்களுடைய போராட்டத்தை நாங்கள் அடக்கிவிட்டோம். இனிமேல் அவர்கள் தலைத்தூக்க முடியாது, அதை அடக்கின எங்களுடைய போர்வீரர்களை எவரும் விசாரிக்க கூடாது; விசாரிக்க விடமாட்டோம்' என்று சொல்லிக்கொண்டிருக்கிற அரசாங்கத்திற்கு ஒரு வெற்றியை வாங்கிக்கொடுக்கிற செயலாகத்தான் இந்த பிரேரணை தோற்கடிக்கப்படுவதிருக்கும். ஆகையினாலே நான் அனைவருக்கும் பொதுவாக கேட்டுக்கொள்ளுகிற ஒரு விடயம்: இந்த குழப்ப நிலையை தொடரவிடவேண்டாம…
-
- 0 replies
- 253 views
-
-
இந்திய கடற்படையால் சிறீலங்காவைச் சேர்ந்த படகுகள் பறிமுதல் 28 Views அங்கீரகிக்கப்படாத தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் மூன்று சிறீலங்கா படகுகள் இந்திய கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள விஜின்ஜாம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தி இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. அகர்ஷா துவ, சது ராணி 03 மற்றும் சாது ராணி 08 ஆகிய படகுகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 19 நபர்களுடன் மார்ச் 5 திகதி மினிக்காய் தீவிலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பரப்பில் பயணித்த இந்த மூன்று படகுகளும் ‘ வராஹா ‘ என்ற இந்திய கடற்படையினருக்கு சொந்தமான கப்பல் தடுத்து நிறுத்த…
-
- 2 replies
- 509 views
-
-
ஸ்ரீலங்காவை ஐ.சி.சி. முன் நிறுத்துக :: ஐ.நா.விடம் தமிழக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஐவர் கோரிக்கை.! ஸ்ரீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையமும், அதன் அங்கத்துவ நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜ.நா. பொதுச்செயலாளர், மனித உரிமை ஆணையாளர் உறுப்பு நாடுகள் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு 5 அவசர கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியாவின் தமிழ்நாடு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஐந்து பேர் கையொப்பமிட்டு கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். நீதிபதி K.P சிவசுப்பிரமணியம், நீதிபதி A.K ராஜன், நீதிபதி அரிபரந்தாமன், நீதிபதி…
-
- 1 reply
- 426 views
-
-
ஐ.நா தீர்மானம் – கண்காணிக்கப்படும் இணைக்குழு நாட்டு தூதுவர்கள் 54 Views சிறீலங்கா அரசினால் தானது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக சந்தேகம் தோன்றியுள்ளதாக சிறீலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மகினொன் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எனது தனிப்பட்ட கலந்துரையாடல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. நான் அந்த கலந்துரையாடல்களுக்கு ஊடகவியலாளர்களை அழைக்கவில்லை. கொழும்பு 07 இல் உள்ள கனடா கவுஸ் எனப்படும் எனது வதிவிடத்திற்கு வந்த விருந்தினர்களுடன் இடம்பெற்ற உரையாடல்கள் இரண்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளன. சிறீலங்காவுக்கான பங்களாதேஸ் தூதுவர் ரறக் அரிபுல் மற்றும் கனேடியத் …
-
- 0 replies
- 341 views
-
-
யாழ். செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து படையினர் குவிப்பு! யாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த பகுதி சிறப்பு அதிரடிப்படையினரால் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. இதனையடுத்து, குறித்த பையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர். மேலும் சம்பவம் தொ…
-
- 1 reply
- 381 views
-
-
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப்போராட்டத்தை நாளை காலைக்குள் கைவிடவேண்டும் என பொலிஸார் மிரட்டல் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணர்வு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்…
-
- 0 replies
- 220 views
-
-
என்னை முதல்வர் பதவியிலிருந்து அகற்றவேண்டும் என ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் துடிக்கிறார்கள்..! பல லட்சம் பணத்தையும் அதற்காக செலவிடுகிறார்கள்.. யாழ்.மாநகர முதல்வர் பதவியிலிருந்து என்னை அகற்றவேண்டும். என ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் துடிக்கிறார்கள். என குற்றஞ்சாட்டியிருக்கும் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பல லட்சம் பணத்தை அதற்காக செலவிட்டுள்ளதாகவும் கூறினார். சமகால நிலமைகள் தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணியுங்கள் என கூறிய ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் சிலர் என்னை தற்போது யாழ்.மாநகர முதல்வர் பதவியில் இருந்து அகற்றவேண்டும்.…
-
- 0 replies
- 347 views
-
-
கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் முன்னணி இணைந்து செயல்படாது – கஜேந்திரகுமார் 3 Views தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் இணைந்து செயல்படாது என்று அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவரின் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அத்துடன், “நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின்போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும்கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்க…
-
- 0 replies
- 259 views
-
-
நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான் -அருட்தந்தை மா.சத்திவேல் 20 Views நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரிவித்த அவர், “அரசியல் கைதிகள் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கான காரணம் ஒட்டுமொத்த அரசியல் தமிழ்த் தலைமைகளுமே. சிவில் சமூகங்கள் பொறுப்பேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதாவது அரசி…
-
- 0 replies
- 691 views
-
-
முஸ்லிம் மக்களின் மத நூல்களுக்கு சிறீலங்காவில் தடை An ancient hand scripted Quran 38 Views அனைத்துலக சமூகத்தின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக கொரோனா நோயினால் மரணிக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பது என சிறீலங்கா அரசு எடுத்த முடிவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போதும், தற்போது முஸ்லிம் மக்களின் மத நூல்களை இறக்குமதி செய்வதற்கு சிறீலங்கா அரசு தடைகளை விதிக்கவுள்ளதாக சிறீலங்காவில் ஜனநாயகத்தினை ஏற்படுத்துவதற்கான ஊடகவியலாளர் அமைப்பு தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த தடை உத்தரவை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும், ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க் குற்றவாளி என இனங்காணப்பட்டவருமான மேஜர் ஜெனரல் கமால் குணர…
-
- 0 replies
- 482 views
-
-
இன்று மாலைக்குள் தீர்வு இல்லையேல், இனி உணவுத்தவிர்ப்பு போராட்டம்தான் : சுகாதாரத் தொண்டர்கள் அறிவிப்பு! 5 Views இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர் இன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்குமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் கடந்த ஏழு நாட்களாக ஈடுபட்டு வருகிறார்கள். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தை…
-
- 0 replies
- 226 views
-
-
கடும்போக்கு சிங்களவரைத் திருப்திப்படுத்தவே ஜனாஸா விவகாரத்தைப் பயன்படுத்தியது அரசு - இரணைதீவில் சுமந்திரன்! "முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் இலங்கை அரசு பெரும்பான்மையின மக்களைத் திருப்திப்படுத்த செய்த ஒரு விடயமே தவிர விஞ்ஞான ரீதியான பிரச்சினை இல்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும், பங்குத்தந்தையர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூற…
-
- 0 replies
- 425 views
-
-
பிரேரணை நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துங்கள் – கூட்டமைப்பு கோரிக்கை 2 Views இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணையை நிறைவேற்றுவதை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் எந்த ஒரு விடயத்திலும் அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகுவதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை நிராகரிப்பதாகவும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்த நிலையில், அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக தமிழ்த…
-
- 2 replies
- 412 views
-
-
ஜெனிவா குறித்த சம்பந்தனின் நிலைப்பாட்டை ஏற்பதற்கு ரெலோ மறுப்பு – செல்வம் அறிவிப்பு 2 Views ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரதான நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள 46/01 இலக்கப் பிரேணையை அதன் தற்போதைய நகல் வடிவத்தில் ஏற்று அங்கீகரிக்குமாறு அங்கத்துவ நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கையுடன் தாங்கள் உடன்படவில்லை என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ தெரிவித்துள்ளது. ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியும், அக்கட்சியின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமியும் இந்தத்தகவலை தெரிவித்தனர். சம்பந்தனின் கருத்து கூட்டமைப்பின் நில…
-
- 1 reply
- 385 views
-
-
ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் அரசாங்கம் மும்முரம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு உறுப்பு நாடுகளுடனும் அரசாங்கம் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன், ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் இது தொடர்பாக கடிதங்களை அனுப்பியுள்ள நிலையில், அமைச்சர் தினேஷ் குணவர்தன தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நா…
-
- 3 replies
- 604 views
-
-
இலங்கையில் பாரதிய ஜனதாக் கட்சி - யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு.! இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் தெரிவிக்கையில்.... இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் கட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும். கட்சியின் தலைவராக…
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
கிழக்கில் கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படவில்லை! கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் கறுப்பு ஞாயிறு இன்று (07) அனுஷ்டிக்கப்படவில்லை.அதேவேளை, வழமைபோல தேவாலயங்களில் திருப்பலி பூஜைகள் நடைபெற்றுள்ளதுடன், இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் கறுப்பு உடை அணிந்து பங்கு கொள்ளுமாறும் கறுப்பு நாளாக அனுஷ்க்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். எனினும், மட்டக்களப்…
-
- 0 replies
- 299 views
-
-
டக்ளஸ் VS அங்கஜன்! “பொம்மையாக, அரசியலுக்கு வரவில்லை நெருப்பாறு கடந்து வந்தவன் “ March 6, 2021 சமுர்த்தி திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு ஒரு நெருக்கடியான சூழலில் நானே கொண்டுவந்தேன். சமுர்த்தி செயற்பாடுகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம். ஆனால் எவரும் தமது சுயநலன்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடத்த முற்படக்கூடாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(06.03.2021) நடைபெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சௌபாக்கியா வாரத்தினை அங்குரார்ப்பணம் செய்து பயனாளிகளுக்கு உதவித்திட்ட காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அ…
-
- 0 replies
- 392 views
-
-
வவுனியாவில் இராணுவத்தினரால் தகவல் சேகரிப்பு – மக்கள் அச்சம் 4 Views வவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வவுனியா புதிய சேலர் சின்னக் குளத்தில் கடந்த இரண்டு நாள்களாக வீடு வீடாகச் சென்ற இராணுவத்தினர் இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பதிவின்போது, வாழ்வாதார உதவிகள் வழங்கப்போகின்றோம் என இராணுவத்தினர் குடியிருப்பாளர்களிடம் தெரிவித்ததாகவும், வீட்டில் வசிப்பவர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம், வயது, தொலைபேசி இலக்கம் என்பன கோரப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர். தற்போதைய சூழலில் இராணுவத்தினரால் இவ்வாறு தகவல் சேகரிக்கப்படு…
-
- 0 replies
- 341 views
-
-
அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு ரனிதா ஞானராஜா தெரிவு! By கிருசாயிதன் March 6, 2021 இலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் ‘International Women of Courage‘ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.விருது வழங்கும் விழா எதிர்வரும் 8 ஆம் திகதி காணொளி தொழில்நுட்பத்தினூடாக நடைபெறவுள்ளது.உலகில் தைரியமிக்க பெண்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகின்றது.இதன்போது, அமெரிக்காவின் முதல் பெண்மணி Dr. ஜில் பைடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து தனது கருத்துக்களை பகிரவுள்ளார்.ரனிதா ஞானராஜா, அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில்…
-
- 1 reply
- 577 views
-
-
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், லசந்தா மகள், அகிம்ஸா எழுதிய. கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம். 2007ம் ஆண்டு, இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவரான எனது தந்தை லசந்தா விக்ரமதுங்கே, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்சே அரசாங்க நிதியில் 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த ஆயுத ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினார். அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு, எனது தந்தை தலைமை ஆசிரியராக இருந்த, சண்டே லீடரின் அச்சகம், நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பலால் தாக்கப்பட்டது. ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டனர், பத்திரிகைகளுக்கு தீ வைக்கப்பட்டது. ஜனவரி 8, 2009 அன்று, ஊழல் நிறைந்த ஆயுத ஒப்பந்தம் குறித்து எனது த…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஆர்.யசி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீது நடத்தப்படும் வாக்கெடுப்பில் நாம் தோற்றாலும் கூட சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை வழங்கப்போவதில்லை. யார் வலியுறுத்தினாலும் போர் குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் நடத்த இடமளிக்க மாட்டோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த விடயங்களில் இந்தியா இப்போது அமைதியாக இருந்தாலும் இறுதி நேரத்தில் எமக்கு ஆதரவாகவே செயற்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போ…
-
- 1 reply
- 423 views
-
-
நானோ இந்த அரசாங்கமோ ஈஸ்டர் ஞாயிறை விற்று அதிகாரத்துக்கு வரவில்லை. ஈஸ்டர் தாக்குதலை எம் மீது சுமத்தி அரசியல் இலாபம் பெற சிலர் முயற்சிக்கின்றனர். இந்த தாக்குதல் 2019ம் ஆண்டு நடந்தது. இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (6) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் உள்ளிட்ட அரசே பொறுப்பு. சிலர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீது இதனை சுமத்திவிட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர். 19வது திருத்தத்தை கொண்டு வந்து அவரது அதிகாரத்தை குறைத்தோர் இப்போது மௌனமாக உள்ளனர். தாக்குதலுக்கு பொறுப்பானோர் யார் என்பது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் தெளிவா…
-
- 2 replies
- 1.1k views
-