ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
(எம்.மனோசித்ரா) கொழும்பில் திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். ஆரம்பத்தில் காணப்பட்டதைப் போன்று மேல் மாகாணத்தில் அபாய நிலைமை மீண்டும் அதிகரித்துள்ளது. ஞாயிறன்று நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 75 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டிருக்கிறார்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுக்கே இதனை சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில் , இது வரையில் இனங்காணப்பட்டதை விட மிகக் கூடுதலானளவு தொற்றாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கி…
-
- 0 replies
- 313 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தால் தற்போது சிக்கலாக மாறியுள்ள இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக பிரேரிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் பாத் பைன்டர் நிறுவனத்தின் தலைவருமான மிலிந்த மொரகொட விடயம் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. மிலிந்த மொரகொடவை இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கும் ஜனாதிபதி கோட்டாபயவின் யோசனைக்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழு செப்டம்பர் 25ம் திகதி அங்கீகாரம் வழங்கியிருந்தது. வெளியுறவு அமைச்சின் வரலாற்றில் முதற்தடவையாக கபினற் அமைச்சர் தரத்திலான பதவியாக இந்தப்பதவி அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைவாக கபினற் அமைச்சருக்கு நிகரான தரத்திலான பதவியுடைய தூதுவர் ஒருவரை நியமிக்க முடியாது என இந்தியா …
-
- 0 replies
- 569 views
-
-
-எஸ்.நிதர்ஷன் ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, ஐ.நாவுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை என்ற வசனத்தை உள்ளடக்கவில்லை என்றும், சர்வஜன வாக்கெடுப்பை கNஐந்திரகுமார் விரும்பவில்லை என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுரேஷ் பிரேமச…
-
- 1 reply
- 631 views
-
-
இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ஒன்பதாம் திகதி இடம்பெற்ற விசேட நடவடிக்கையின் போது ஒன்பது மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலிற்கு தனிமைப்படுத்திய பின்னர் அவர்களை சட்ட நடவடிக்கைகளிற்காக அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியவேளை அவர்களில் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அந்த மீனவர் தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள கடற்படை ஏனைய மீனவர்களை தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் த…
-
- 0 replies
- 306 views
-
-
(சி.எல்.சிசில்) இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பரிந்துரைகளை வழங்கவென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலோர காவல் படையினருடன் கலந்துரையாடி இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் சட்ட விரோதச் செயற்பாடுகளை நிறுத்த நிரந்தரத் தீர்வைக் கண்டறிய மீன் பிடி அமைச்சுக்கு பரிந்துரைகளை வழங்கவுள்ளனர். இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக இலங்கை மீனவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன்…
-
- 0 replies
- 258 views
-
-
(ஆர்.ராம்) யாழ்.நயினாதீவு, நெடுந்தீவு, மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy Grid) அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளதன் ஊடாக தென்னிந்தியாவை சீனா மிகவும் நெருங்கி வந்துள்ளது என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/143847/suresh_01.jpg இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் இந்த நகர்வினை கட்டுப்படுத்துவதற்கு தமிழர்கள் அதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்றும் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் மத்த…
-
- 2 replies
- 940 views
-
-
இலங்கை உட்பட சில நாடுகளின் பொலிஸ் படைகளுக்கான சர்வதேச பயிற்சிகளை நிறுத்தக் கோரிக்கை! by : Litharsan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Campaign-Against-Arms-Trade.jpg இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொலிஸ் பயிற்சித் திட்டங்களை நிறுத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரம் என்ற அமைப்பு (Campaign Against Arms Trade) அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், பொலிஸ் கல்லூரி வழங்கும் அனைத்து சர்வதேசப் பயிற்சிகளையும் மதிப்பாய்வு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது. 2012இல் கல்லூரி நிறுவப்பட்டதிலிருந்து, குறைந்தபட்சம் 76 நாடுகளுக்கு பயிற்சி மற்றும் உதவிகளை வழங்கியுள்ளதாக ஆயுத வர்த்தகத்தி…
-
- 1 reply
- 392 views
-
-
தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் யாழ் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்றைய தினம் தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஜெனிவாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் கொலை விடயங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயம் என கட்டாயமாக சுட்டிக் காட்டப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த விடயம் தொடர்பில் தமிழ் கட்சிகள் எந்தவித கரிசனையும் செலுத்துவது இல்லை எனவும் எனவே இந்த நாட்டில் தமிழ்…
-
- 0 replies
- 516 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா!! by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/08/s300_Sarah_Hulton_photo.jpg கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான ஐ.நா. அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், குறித்த அறிக்கையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பாகவும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 317 views
-
-
இந்த நாட்டில் நாங்கள் ஒருபோதும் தனி நாடு கோரவில்லை என்றும் தமிழீழம் அல்லது தமிழ் நாடு உருவாக வேண்டுமென்ற கோரிக்கை தற்போது கிடையாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பிரிவினைவாதம் நிலவுகின்றதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கனேடிய தமிழ் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நாட்டில் ஐக்கிய இலங்கைக்குள் நாங்கள் ஒற்றுமையாக செயற்பட கூடிய சூழல் காணப்படுகின்றது. நாங்கள் ஒருபோதும் இரண்டாம், மூன்றாம் தர பிரஜையாக வாழமாட்டோம் என்பதில் உறுதியாகவுள்ளளோம். அத்தோடு தனிநாடு கோரும…
-
- 38 replies
- 4.5k views
-
-
அரசியல் கூட்டுக்களின் தலைவர்களின் கையொப்பம் போதுமானதென முன்மொழிந்தவர் கஜேந்திரகுமாரே: சுமந்திரன் (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கூட்டில் தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் மாத்திரம் கையொப்பம் இட்டால் போதுமானது என்று வவுனியாவில் வைத்து முன்மொழிந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே அந்த ஆவணத்தில் முதலில் கையொப்பமிட வேண்டும் என்று விக்னேஸ்வரனே பிரேரித்தார் என்று…
-
- 6 replies
- 909 views
-
-
சட்ட விரோத மண் அகழ்வுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நவகிரி ஆற்றுப்பகுதியில் மண் அகழப்படுவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், குறித்த பகுதியில் மண் அகழ்வினை நிறுத்தக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் கோரியும் குறித்த பகுதி விவசாயிகள் நேற்று கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். தமது பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகளைத் தடுத்து நிறுத்தி வயல் பகுதிகளைப் பாதிக்கும் வகையிலான நவகிரி ஆற்றுப்பகுதியைப் புனரமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயிகள் தெரிவிக்கையில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்…
-
- 0 replies
- 324 views
-
-
சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் கர்த்தாலுக்கு அழைப்பு சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். பெப்ரவரி 4 தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்க பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாளாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்…
-
- 0 replies
- 284 views
-
-
மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காக அரசியல் கைதிகள் விவகாரத்தை பயன்படுத்த திட்டம்? Digital News Team 2021-01-25T07:05:49 ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்ப்பை குறைப்பதற்காக அரசியல் கைதிகள் விவகாரத்தை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கம் உடனடியாக ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்குமாறு சட்டமாஅதிபர் திணைக்களம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஏனைய பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என வெளிவிவகார அமைச்சர் வாரஇதழ் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார் எனினும்…
-
- 0 replies
- 331 views
-
-
மீனவர் பிரச்சினைப் பேசித் தீர்க்க வேண்டியது – சுரேஷ் பிரேமச்சந்திரன் 16 Views தொடரும் மீனவர் பிரச்சினை, பேசித் தீர்க்க வேண்டுமே தவிர மாற்று நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த 18ம் திகதி இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட நான்கு மீனவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் சார்பான ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த மீனவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா எமது அருகில் இருக்கக் கூடிய நாடு. பாக்கு நீரிணையில் மன்னார் வளைகுடாவில், வட பகுதியில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தமிழ் மக்கள்தான் மீன் பிடிக்கி…
-
- 1 reply
- 366 views
-
-
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது. இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் என காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை உள்ளடக்கியதாக அறிக்கை காணப்படுகிறது. அறிக்கையின் முழு விபரம்: “யுத்தம் முடிவடைந்து ஏறக்குறைய 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பொறுப்புக்கூறல் ம…
-
- 1 reply
- 496 views
-
-
தென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் தீவக பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைப்பை உருவாக்குவதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நுரைச்சோலை அனல் மின்நிலையம் சீனாவினால் நிறுவப்பட்டது அந்த அனல் மின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக பாதிக்கப்படுவதும் மாதக்கணக்கில் திருத்துவது போன்ற விடயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்.தீவுப்பகுதியில் புதுப்பிக்கத்தக எரி சக்தி அமைப்பை உருவாக்குவ…
-
- 15 replies
- 1.4k views
-
-
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு-க.வி.விக்னேஸ்வரன் 18 Views எமக்கு எதிராக சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையாக நில அபகரிப்பு காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகத்தில் நடைபெற்று வரும் காணி அபகரிப்பு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள க.வி.விக்னேஸ்வரன், “இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், எமது நிலங்களை அபகரிப்பதற்கு பல்வேறு உபாயங்களை அரசாங்கங்கள் கையாண்டுவருகின்றன. நீர்ப்பாசன அபிவிருத்தி என்ற போர்வையில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஊடாக பல்லாயிரக்க…
-
- 2 replies
- 909 views
-
-
தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் கலந்துரையாடல் -விக்கினேஸ்வரன்,சிவாஜிலிங்கம் கருத்து 23 Views தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புக்களையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும். Video Player 00:00 02:54 வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி ச…
-
- 0 replies
- 303 views
-
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டு.வில் அனுஷ்டிப்பு திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ். ஊடக அமையம், தெற்கு ஊடக அமையம் மற்றும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து ‘படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்’ என்னும் தொனிப்பொருளில் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர்மலை அணிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்ற…
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கை கடற்பரப்பில் விபத்திற்குள்ளாகி சிக்கியுள்ள கப்பலின் தற்போதைய நிலை என்ன ? (ஆர்.யசி) அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலை துறைமுகம் நோக்கி பயணமாகிய லைபீரியா நாட்டு கப்பலான எம்.வி. யுரோசன் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதிய நிலையில் சிக்குண்டுள்ளது. கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் டொன்னும், 720 மெற்றிக் டொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கப்பலை நகரத்து பணிகளில் இலங்கை கடற்படையினரும், கரையோர பாதுகாப்பு அதிகார சபையும் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு ஆபிரிக்க நாடான லை…
-
- 0 replies
- 458 views
-
-
கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கும் பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்: முஜிபுர் (எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கத்தின் அனைத்து விடயங்களையும் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அப்படியானால் கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்குவதால் பிரச்சினை இல்லை என நிபுணர்கள்குழு தெரிவித்திருந்தும் அரசாங்கம் தொடர்ந்து சடலங்களை எரித்து வருகின்றது. முஸ்லிம்கள் ஜனாசாக்களை எரிக்கும் பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முடியும் என தெரிவித்து, சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையை அரசாங்கம் செயற்படுத்தாமல் இருப்பது தொடர்பாக…
-
- 0 replies
- 275 views
-
-
யாழ். கந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்! யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம் தொடர்பாக இராணுத்தினர் எனக் கூறி விசாரித்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறித்த கோயிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஐந்து மணியளவில் சென்றிருந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தியுள்ளனர். அத்துடன், கோயிலுக்குச் சொந்தமான தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பாக கேட்டறிந்துள்ளனர். அந்தக் கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என பூசகரிடம் வினவியுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக …
-
- 0 replies
- 549 views
-
-
தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அவசர கலந்துரையாடல் ஒன்று தற்போது நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பம் தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. நாட்டின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.மதத்தலைவர…
-
- 1 reply
- 350 views
-
-
போர்க் குற்றங்கள் பற்றிய ‘வாசிப்பு குழுவினை’ உருவாக்கும் இலங்கை -ITJP கூட்டறிக்கை 50 Views இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில், போர்க் குற்றங்கள் பற்றிய ‘வாசிப்பு குழுவினை’ உருவாக்கும் இலங்கை என்ற தலைப்பில் ITJP என்ற அமைப்பு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மனித உரிமை மீறல்கள் உண்மையில் நாட்டில் இடம் பெற்றதை கடந்த கால விசாரணைகள், ஆணைக்குழுகள் வெளிப்படுத்தியுள்ளனவா என்பதை ஆறு மாதகாலத்திற்குள் கண்டறிவதற்கு இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்னுமொரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். ஜெனிவாவிலுள்ள மனித உரிமை…
-
- 0 replies
- 413 views
-