ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143311 topics in this forum
-
அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.! மட்டக்களப்பு மைலத்தமடு மற்றும் மாதவனை பிரதேசங்களில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களால் கால்நகைள் காயப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பூர்வீகமாக தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவந்த மேய்ச்சல் தரை பகுதியான மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைக்காகவென அரச ஆதரவுடன் அத்துமீறியுள்ள குடியேற்றவாசிகளால் தமிழ் மக்களின் கால்நடைகளை வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் இச் செயற்பாடு நேற்றைய தினம் (டிச-24) உச்சம் பெற்று தமிழ் ம…
-
- 26 replies
- 2k views
-
-
ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிடுவார் December 29, 2020 யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால் முதல்வர் பதவியை இழந்த இம்மானுவேல் ஆர்னோல்ட் அந்தப் பதவிக்காக மீண்டும் போட்டியிடுவார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அறிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வடமாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் நாளை தெரிவு இடம்பெறவுள்ளது. இந்த நிலையிலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சார்பில் இம்மானுவேல் ஆனல்ட் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். #இம்மானுவேல்_ஆர்னோல்ட் #யாழ்ப்பாணம்_மாநகரசபை #பாதீடு #…
-
- 0 replies
- 579 views
-
-
புதிய அரசியலமைப்பில் வட-கிழக்கை தனிப்பிராந்தியமாக அங்கீகரிக்குக - கூட்டமைப்பு முன்மொழிவு.! '"புதிய அரசமைப்பில் மத்திய மற்றும் பிராந்தியங்களின் ஐக்கியத்தைக் கொண்டதாக அரசு முறைமை அமைய வேண்டும். அதில் ஒரு பிராந்தியமாக தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு - கிழக்கு இருத்தல் வேண்டும்." - இவ்வாறு புதிய அரசமைப்பை உருவாக்கத்துக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஒரு மக்கள் கூட்டத்துக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால் அவர்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் வெளிப்புற சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை நினைவுபடுத்துகின்றோம்" என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய அரசம…
-
- 0 replies
- 505 views
-
-
சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தினால் மாத்திரமே எதிர்காலத்தில் நிதி உதவி- அமெரிக்கா Rajeevan ArasaratnamDecember 28, 2020 சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மாத்திரமே இலங்கைக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கப்படும் என்ற நிபந்தனையை அமெரிக்கா விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக தனது இறைமையை வலியுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டல் மாத்திரமே நிதி உதவி வ…
-
- 3 replies
- 971 views
-
-
வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கை அமைப்புகளுக்கு நிதி வழங்குகிறார்கள் – ரஷ்ய தூதுவர் கோவிட்-19 ஆதரவு என்ற பெயரில் வெளிநாடுகளிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இலங்கையிலுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு நிதியை அனுப்பலாம் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மற்றேறி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் இலங்கை உள்ளகப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகராவைச் சந்தித்தபோது ரஷ்ய தூதுவர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையிலுள்ள முஸ்லிம் தர்ம ஸ்தாபனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் நிவாரணம் வழங்கல் என்ற பெயரில் போதை வஸ்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலமாக வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் இவ்வுதவிகளை மேற்கொண்டு வருகின்றன என அமைச்சு அதிகார…
-
- 2 replies
- 441 views
-
-
சடலங்களை தகனம் செய்யும் விவகாரம் – உரிய தீர்வு வழங்காவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் தொடரும்: ரிஷாட் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/protest-Muslims-2-720x450.jpg முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில் நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக இன்று (பதன்கிழமை) காலை கொழும்பு – பொரளை பொது மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில…
-
- 3 replies
- 803 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரவுள்ளதாக குறிப்பிடப்படும் புதிய பிரேரணை குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும். நாட்டின் இறையாண்மையை சர்வதேச மட்டத்தில் எப்போதும் விட்டுக் கொடுக்க முடியாது. என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/141727/dadadada.jpg ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம் பெறவுள்ள 46 ஆவது கூட்டத்தொடர் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்கா ,பிரித்…
-
- 5 replies
- 892 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் நல்லூரில் போராட்டம் C.L.SisilDecember 28, 2020 சி றைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதி களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும், அவர் களின்விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்றது. ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.00 மணி முதல் நல்லூர் கந்தசுவாமி கோயில் பின்புறமாகவுள்ள நல்லைஆதீன முன்றிலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:- சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள த…
-
- 0 replies
- 694 views
-
-
முஸ்லிம் கட்சிகள் நமக்குத் தேவையா என்பதை சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் By Sayanolipavan (எப்.முபாரக் )முஸ்லிம் கட்சிகள் நமக்குத் தேவையா என்பதை சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று(27) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்களினால் பல்வேறு காரணங்களை முன் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இதன் அடிப்படை குர்ஆன், ஹதீஸ் என்று கூறப்பட்டது. இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் இக்கட்சிக்கு அமோக ஆதரவு வழங்கப்பட்டது. அதிகாரத்தைப் பெற்ற தலைவர் அஷரப் அவர்களும் தன்னால் முடியுமான பல ப…
-
- 0 replies
- 647 views
-
-
கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உதயம்! December 27, 20204:29 pm கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்குறார்ப்பன கூட்டம் இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்ற அமைப்பினை இன்று உருவாக்கி உள்ளனர். இதன் அங்குறார்ப்பன கூட்டம் கொரோணா பாதுகாப்பை கருத்தில் கொண்டு இணைய வழி ஊடாக இன்று இடம்பெற்றது. இதில் புதிய நிர்வாக சபை உருவாக்கப்பட்டதுடன் எதிர் காலத்தில் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகவும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, ஊடகவியலாளர்களின் நலன்புரி நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டது. புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக 1) தலைவர…
-
- 0 replies
- 339 views
-
-
கொழும்பில் மாத்திரம் 78 கொரோனா நோயாளிகள் வீட்டில் மரணமடைந்துள்ளனர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 6 மாதங்களில் கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 78 பேர் தமது வீடுகளிலேயே மரணித்துள்ளதாக, கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்தார். இக்காலப் பகுதியில் வீடுகளில் உயிரிழந்த 383 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே அவர்களில் 78 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது. வீடுகளில் மரணிப்போருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட போதும் வீட்டில் உயிரிழந்த முதல் கொவிட் தொற்றாளர் கட…
-
- 0 replies
- 437 views
-
-
கிளிநொச்சியில் யானை உயிரிழப்பு: ஒருவர் கைது கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதிக்கு கடந்த சனிக்கிழமை இரவு வந்த இந்த காட்டு யானை, வயலினை அழித்துள்ளதுடன் அப்பகுதியில் உயிரிழந்து கிடந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராமசேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். மேலும் உயிரிழந்த யானை, தந்தத்துடன் காணப்படுவதுடன் குறித்த பகுதி அடர் காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த யானை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட…
-
- 0 replies
- 347 views
-
-
புதிய அரசியலமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை - சம்பந்தன் கவலை: (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் எமக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக காணப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவல்லதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் அடுத்தவாரம் நிபுணர்குழுவிடத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற முடிவில் மாற்றமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்புக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின…
-
- 5 replies
- 748 views
-
-
வரலாறு ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் – ‘அழிக்கப்படும் சாட்சியங்கள்’ நூல் வெளியீட்டில் விக்கினேஸ்வரன் 34 Views “எமது வரலாறுகள் நன்மையானதோ தீமையானதோ அனைத்தும் ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமாகின்றது. முன்னர் தான் நாம் எமது சரித்திரங்களை எழுதிவைக்கவில்லை. தொடர்ந்தும் அவ்வாறு வாளாதிருப்பது எமக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும்” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். “அழிக்கப்படும் சாட்சியங்கள்” நூல் வெளியீடு யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற போது நிகழ்த்திய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் முக்கியமாகக்…
-
- 0 replies
- 498 views
-
-
கிண்ணியாவில் கொட்டும் கடும் மழையிலும் ஜனாசா எரிப்பினை எதிர்த்து கவன் சீலைப் போராட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (27) இடம்பெற்றது. கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யாது எரிப்பது கண்டணத்துக்குரியது. இதனால் மத சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சிவில் சமூக ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட இக் கவனயீர்ப்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள மகஜரும் கிண்ணியா பிரதேச செயலாளரிடம் இதன் போது கையளிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதுடன் கிண்ணியா உலமா சபை, சூரா சபை,வர்த்தக சம்மேளனம், அனைத்து பள்ளிவாயல் சம்மேளனம் உட்பட உள்ளூராட்சி மன்ற தவிசாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு வெள்ளை துணியிலான கவன் ச…
-
- 1 reply
- 589 views
-
-
நேற்று மாலை (26 .12 .2020) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள “கலம்’ அமைப்பின் கட்டடத்தில் 6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எளிமையாக ஆரம்பமாகியது . 20 பேர் மட்டுமே கொள்ளக்கூடிதாக அரங்கு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. கொவிட் 19 க்கு எதிரான சுகாதார நடவடிக்கைகள் இறுக்கமாக பேணப்பட்டிருந்தன. விழாவுக்கான ஒழுங்குகளை கிருதர்சன் நிக்கொலஸ் மேற்கொண்டு நிகழ்வை ஆரம்பித் வைத்தார். அகிலன் பாக்கியநாதன் உட்பட சபையிலிருந்த திரைப்பட ஆர்வலர்களள் மங்கள விளக்கேற்றியதைத் தொடந்து திரைப்பட காட்சி ஆரம்பமாகியது. முதலாவது Mug (2018) என்ற போலந்து திரைப்படம் காண்பிக்கப்பட்டது . இப்படம் 68 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளிக் கரடி விருதுக்காக ஜுரிக…
-
- 0 replies
- 525 views
-
-
வலுவான பொறுப்புக் கூறல் பொறிமுறைக்குள் இலங்கையை வைத்திருங்கள் – ஹனா சிங்கரிடம் சிறிதரன் வலியுறுத்து BharatiDecember 27, 2020 “ இலங்கையின் சமகால நிலைமைகளையும் இனவழிப்பின் நேரடிச் சாட்சியங்களையும் நேரடியாக கண்டிருப்பவர் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அக்கடிதத்தின் முழு விபரம் வருமாறு: ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இலங்கை அ…
-
- 0 replies
- 516 views
-
-
இராணுவம் படுகொலை செய்த முதலாவது ஊடகவியலாளர் நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு By Ragavi இலங்கையில் முதலாவது படுகொலை செயட்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் அமரர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது. கிழக்கு ஊடகவியராளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் சகோதரரான கவிஞர் ஓய்வுபெற்ற அதிபர் அக்கரைப்பாக்கியன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை பாக்கியராசா, மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது படுகொலை செய்யப்பட்ட …
-
- 0 replies
- 300 views
-
-
36 வன்முறைக் கும்பல்களில்.... 24 குழுக்கள் இலங்கையில்..! நாட்டில் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 24 குழுக்கள் தொடர்ந்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை நாட்டில் 36 குழுக்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் பல குழுக்கள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வன்முறைக் கும்பல்களில் சில உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பொலிஸ…
-
- 0 replies
- 287 views
-
-
கொழும்பு மக்களுக்கு முதலாவதாக கொரோனா தடுப்பூசி December 27, 2020 இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவது தொடர்பாக நாளை (28) நீண்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதற்காக இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய பிரிவினரின் தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் இது தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா். அதேவேளை சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு, சனநெரிசல் மிகுந்த கொழும்பு மக்களுக்கு முதலாவதாக இந்தத் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக …
-
- 0 replies
- 434 views
-
-
மறைந்த மருதூர் ஏ மஜீத் பல்துறை வித்தகர் -அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பில் கிழக்கிலங்கை, சாய்ந்தமருது மண்ணிலிருந்து கோலோச்சிய பெருந்தகை மருதூர் ஏ. மஜீத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நண்பர் மருதூர் ஏ. மஜீத்தை பல்துறை வித்தகர் என்றால் மிகையாகாது. கல்வியலாளராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும், மூலிகை மருத்துவத்தில் ஈடுபாடுடையவராகவும், தற்…
-
- 0 replies
- 321 views
-
-
சிறீலங்கா வங்கிகளை புறக்கணிக்க வெளிநாட்டு வங்கிகள் முடிவு 30 Views சிறீலங்கா வங்கிகளின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான கடன் கோரிக்கைகளை வெளிநாட்டு வங்கிகள் புறக்கணிப்பதால் சிறீலங்காவில் உள்ள வியாபாரிகள் கடுமையாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் வர்த்தகர்களை இது அதிகம் பாதித்துள்ளது. இலங்கை வங்கியினால் வழங்கப்பட்ட கடன் உறுதி பத்திரத்தை பிரித்தானியா, சுவிற்சலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் வங்கிகள் கடந்த வாரம் நிராகரித்துள்ளன. இது சிறீலங்காவானது மிகப்பெரும் பொருளாதார அழிவை நோக்கிச் செல்வதைக் காண்பிப்பதாக வர்த்தகப் பிரமுகர் ஒருவர் தெர…
-
- 0 replies
- 478 views
-
-
முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்- உலக தமிழர் பேரவை அறிக்கை முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயல் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் உலக தமிழர் பேரவை இதனை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றியை பாராட்டும் அதேவேளை கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் என கருதப்படுபவர்கள் அனைவரினதும் உடல்களையும் கட்டாயமாக தகனம் செய்வதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதாக உலக தமிழர் பேரவை தெரிவ…
-
- 5 replies
- 593 views
-
-
வைத்தியசாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரம் வெளியாகியது BharatiDecember 26, 2020வைத்தியசாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரம் வெளியாகியது2020-12-26T19:13:52+05:30 FacebookTwitterMore கொரோனாத் தொற்று உட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதி நாட்டில் கொரோனாத் தொற்று பல கொத்தணிகளாக உருவெடுத்த…
-
- 1 reply
- 409 views
-
-
இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்கள், அந்தமான் - நிக்கோபாரில் எதிர் கொள்ளும் துன்பியல் வாழ்வு. இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, அந்தமான் மற்றும் நிக்கோபாரின், தொலை தூர கச்சல் தீவில் கட்டாயமாக குடியேற்றப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகம், கடந்த ஐந்து தசாப்தங்களாக பாரிய இன்னல்களை எதிர்கொள்கின்றனர். முறையான மீள்குடியேற்றம் மற்றும் அடிப்படை வாழ்வாதார வசதிகளை கோரி, கடந்த ஒரு மாதமாக இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக கலாநிதி எஸ் வெங்கடநாராயணன் எழுதிய பதிவில் குறிப்பிட்டுள்ளார். 1964 ஆம் ஆண்டில் ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படைய…
-
- 1 reply
- 798 views
-