ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றிய நிலையில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைக்கவுள்ளதாக அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இவ் வீதியை புனரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில…
-
- 13 replies
- 2.2k views
-
-
முஸ்லிம்களினால் உரிமை கோரப்படாத கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் பணி நேற்று (09) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தை சேர்ந்த 19 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினர் உரிமை கோர மறுத்து வந்தனர். இந்நிலையில் அவ்வாறு உரிமை கோரப்படாத சடலங்களையும் கொரோனா சட்டத்தின் கீழ் தகனம் செய்ய முடியும் என்று சுகாதார பணிப்பாளருக்கு சட்டமா அதிபரால் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று ஐந்து உடல்களும், இன்று மேலும் சில உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத முஸ்லிம்களின் உடல்கள் தகனம்! | NewUthayan
-
- 16 replies
- 1.5k views
-
-
அனைத்துக் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் 47 Views மற்றவர்களை ஒற்றுமைப்படுத்தி விட்டு தங்களது தனித்துவத்தினை பேண வேண்டும் என்று நினைத்தால் அதில் வெற்றி பெறமுடியாது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தற்போது வடகிழக்கில் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் இணைப்பதா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் இணைவதா என்பது குறித்து சிந்தித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 624 views
-
-
பிள்ளையான் முன்னிலையில் தாக்குதலுக்குள்ளான பெண் வைத்தியசாலையில்
-
- 1 reply
- 632 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு BattinewsDecember 12, 2020 திருகோணமலை கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க…
-
- 0 replies
- 364 views
-
-
நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அபகரிக்கத் திட்டம்! பௌத்த துறவிகள் விஜயம் 27 Views நெடுந்தீவுப் பகுதிக்கு நேற்றைய தினம் பயணித்த தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் மற்றும் பெளத்த துறவிகள் அடங்கிய குழுவினர் வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் நோக்கில் இரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையென்பது தமிழ் பௌத்த அரசன் வாழ்ந்த இடம் என இவர்கள் கருத்துரைத்ததோடு, யாழ்ப்பாணம் விகாரதிபதியும் உடன் பயணித்து அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு அப்பகுதியின் நில உரிமை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உரித்து தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர்.இதன்போது அப்பகுதிகளை படமாக்கியதுடன் அப்பி…
-
- 9 replies
- 1.6k views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் புதிதாக 130 பில்லியன் ரூபாய்களை அச்சடித்துள்ளதாகவும், இந்த திட்டமானது இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்போவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டை விடவும் 2021 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமையப்போகின்றதாகவும், பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படப்போவதுடன், கடன் நெருக்கடியில் நாடு விழப்போகின்றது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதி அமைச்சு மற்றம் நிதி இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் …
-
- 27 replies
- 2.9k views
-
-
மருதனார்மடத்தில் ஓட்டோ சாரதிக்குக் கொரோனா – எழுமாற்றான பரிசோதனையில் கண்டுபிடிப்பு 9 Views யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் மருதனார்மடம் சந்தையில் கடை வைத்திருக்கும் குறித்த நபர் ஓட்டோ வைத்திருக்கின்றார் எனவும், ஓட்டோ சாரதிகளுக்கு நேற்று எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார். இதேவேளை, இன்று மருதனார்மடம் பகுதியில் மீளவும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொ…
-
- 0 replies
- 384 views
-
-
தென் ஆபிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் டிசம்பர் 9ஆம் நாளாகிய சர்வதேச ஊழல் ஒழிப்பு நாளை முன்னிட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில் சிறீலங்காவில் கோத்தாவின் அமைச்சரவையில் உள்ள 10 அமைச்சர்களை பட்டியலிட்டு அவர்கள் மீதுள்ள ஊழல் குறித்த வழக்குகளை சுட்டிக்காட்டியுள்ளது. சிலர் கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு வேறு உள்ளாகியுள்ளனர். ஊழல் குறித்த வழக்குள்ளவர்களை அமைச்சர்களாக நியமிப்பது எவ்வளவு பாரதூரமானது என்பதையும் தமக்கு எதிரான வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நிரபராதிகள் எனக் காணப்படும் வரை அவர்களை அதியுயர் பதவிகளில் நியமிப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற விதியை மீறுவதாக அமைந்துவிடும் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. உதய…
-
- 2 replies
- 700 views
-
-
ஷானி அபயசேகரவிற்கு எதிராக போலி முறைப்பாட்டினை சுமத்துமாறு வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பெண்ணிடம் வேண்டுகோள் – அம்பலப்படுத்தியது பிபிசி சிங்களசேவை இலங்கையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிஐடியின் ஷானிஅபயசேகரவிற்கு எதிராக போலிகுற்றச்சாட்டுகளை சுமத்துமாறு வெளிநாட்டு வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் கேட்டுக்கொள்ளப்பட்டமை குறித்த விபரங்களை பிபிசியின் சிங்கள சேவை அம்பலப்படுத்தியுள்ளது. தன்னை பொலிஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திய நபர் ஒருவரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். சுவீடனில் வசிக்கும் சமலி மதநாயக்க என்ற பெண்ணொருவர் 2019 இல் முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிவைத்தியலங்காரவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். தன்னை …
-
- 1 reply
- 368 views
-
-
வரவு-செலவுத் திட்டத்தில் நீதி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான வாக்களிப்பு விவாதத்தில் எம். ஏ. சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.இதன் போது:- நீதித்துறையில் அரசியல் தலையீடு- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பொறுப்புக் கூறல்- நீதி கிடைப்பதிலுள்ள நீண்ட தாமதம்,- சிறுபான்மை இனத்தவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் நீதித்துறை வெளிப்படுத்தும் பாகுபாடு- அதிகரிக்கும் தடுப்புக் காவல் படுகொலைகள்- சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனமின்மைஎன்பன குறித்து விரிவாகப் பேசினார்.“அரசாங்க மாற்றம் நீதித்துறையைப் பாதிப்பதில்லை, ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்கள் மாறினாலும் ஒரே நீதிபதிகளே தொடர்ந்து சேவையிலிருப்பர்.ஆனால் ஆளும் கட்சி, இன்றைய எதிர்க் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் நீதித்துறைய…
-
- 1 reply
- 316 views
-
-
கண்டி மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள விவசாயிகளின் பொருளாதார அபிவிருத்தியை இலக்காக கொண்டு, பழச் செய்கை திட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. விவசாயத் துறை அமைச்சு, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட நாவலப்பிட்டிய, கம்பளை, உடுநுவர மற்றும் ஹேவாஹெட்ட ஆகிய நான்கு தொகுதிகளில், இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, ஏற்றுமதியை இலக்காக கொண்டு, பழச் செய்கைகளை மேற்கொள்வதற்காக, இரண்டாயிரம் குடும்பங்களுக்கு 700 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், பழச் செய்கையை மேற்கொள்வதற்கு, ஒரு குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 319 views
-
-
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையில் பதற்றம்- பொலீசார் குவிப்பு 54 Views மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சபை அமர்வு நடைபெற இருந்த நிலையில் அமைதியற்ற சூழ் ஏற்பட்டதன் காரணமாக சபை கால தாமதமின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள வாழைச்சேனை பிரதேச சபையானது அடுத்த ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை கடந்த வாரம் சமர்பிக்கப்படவிருந்த நிலையில் சபை தவிசாளரினால் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதேவேளை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தின் தலைமையில் இன்று மீண்டும் சபை அமர்வு கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்ப…
-
- 2 replies
- 826 views
-
-
வடமாகாணத்தில் “நடுத்தர வருமான வீட்டு வசதித் திட்டம்” அறிமுகம் 61 Views வடமாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையானது, நடுத்தர வருமானமுடைய நகரப் பிரதேசங்களில் வசிக்கும் வீடற்ற குடும்பத்தவர்களுக்கு வீடுகளினை வழங்குவதற்காக “நடுத்தர வருமான வீட்டு வசதித் திட்டம்” ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில், இந்த திட்டம் தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள்,விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப்படிவங்களை பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்,கரைச்சி மற்றும் வவுனியாவில் பெற்றுக்கொள்ள முடியும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை 2020,மார்கழி,31ம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ நகர அபிவிருத்…
-
- 0 replies
- 448 views
-
-
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோயில் இருந்த பகுதியில் கோயில் கட்டுவதற்கு அனுமதிக்க இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மேல் நீதிமன்றில் இணக்கம் காணப்பட்டது. நீதிபதி எம் .இளஞ்செழியன் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இணக்கம் காணப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் கோயில் கட்டுவதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் எனினும் அந்த நிலத்தில் கோயில் கட்டும் நிலையத்தை தங்கள் தரப்பே காட்டும் என்றும் அரச தரப்பில் முன்னிலையான சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்ரூ தெரிவித்தார். ஆனால் அதனை மனுதாரா் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் ஆட்சேபித்தார். இதேவேளை கன்னிய…
-
- 3 replies
- 1.1k views
-
-
உள்ளுராட்சி மன்ற விடயங்களில் மத்திய அரசு தேவையற்ற தலையீட்டைக் கொள்ளக்கூடாது. இவ்விடயங்கள் பிரதமரின் விடயத்திற்குள் வருவதால் இவ்விடயத்தினை இந்தஇடத்தில் முன்வைக்கின்றேன் என பாராளுமன்றில் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார். நிதி அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில், கோப்பாய் பிரதேச சபையின் அச்செழு அம்மன் வீதியைப் புனரமைப்பதற்கு மத்திய அரசாங்கம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது. நிச்சயமாக அது ஓர் உள்ளுராட்சி சபை வீதியாக இருப்பதனால் அப் பிதேச சபைத்தவிசாளர் இடமோ சபையிடமே அனுமதியின்றி நடவடிக்கைகள் நடைபெற்றமையினால் தவிச…
-
- 0 replies
- 366 views
-
-
மனித-யானை மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானையின் இறப்புக்கள் இலங்கையில் ஆண்டுதோறும் பதிவாகின்றன என்று அரசாங்கக் கணக்குக் பற்றிய குழு (கோபா தெரிவித்துள்ளது. அதேநேரம் மனித-யானை மோதலால் அதிக எண்ணிக்கையிலான மனித இறப்புகள் பதிவாகும் நாடுகளின் பட்டியில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது. இலங்கையில் மனித-யானை மோதலை சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பாக கோபா குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு அதன் கண்டுபிடிப்புகள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தது. மனித - யானை மோதலால் இலங்கையில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 272 யானைகள் உயிரிழப்பதாக கூறப்பட்டது. எனினும் கடந…
-
- 0 replies
- 293 views
-
-
மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது- ஜீவன் by : Yuganthini மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும், மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள் தொடர்பிலும் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலவாக்கலை, வட்டகொடையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனவரி மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் …
-
- 1 reply
- 344 views
-
-
இன்று முதல் சுகாதார நடைமுறைகளில் சில தளர்வுகள் இன்று முதல் யாழ் மாவட்டத்தில் பேணப்பட்ட சுகாதார நடைமுறைகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் க மகேசன் தெரிவித்தார். தற்போது உள்ள கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமையானது கடந்த அக்டோபர் நவம்பர் மற்றும் டிசம்பரில் இன்றுவரை 26 நபர்கள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் இந்த தொற்று உறுதி செய்யப் பட்டவர்களை விட தொற்று உள்ளவர்களுடன் தொடர்புகளை பேணிய 874 குடும்பங்களைச் சேர்ந்த1 905 பேர் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். இன்ற…
-
- 0 replies
- 310 views
-
-
குச்சவெளி வழக்கு: 2021க்கு ஒத்திவைப்பு வடமலை ராஜ்குமார் குச்சவெளி விவசாய காணிகளில் பிரவேசிப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு 2021பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (11) ஆம் திகதி, திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொண்ட போது மேற்கண்டவாறு இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டது. இவ்வழக்கில் வழக்காளிகள் சார்பாக சட்டத்தரணி கேசவன் சயந்தன் மற்றும் பிரசாந்தினி உதயகுமார் ஆகியோர் ஆஜராகி இருந்தார். இதன் போது தொல்பொருள் திணைக்களம் சார்பாக ஆஜராகியவர்கள் இடைக்கால தடை உத்தரவை நீக்க…
-
- 0 replies
- 314 views
-
-
சவுதியின் மதபோதகர்கள் இலங்கை முஸ்லீம்களின் மனதை மாற்றும் போதனைகளில் ஈடுபடுகின்றனர்-உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழு சவுதிஅரேபியாவிற்கு செல்லும் இலங்கை முஸ்லீம்கள் அங்குள்ள மதபோதகர்ளால் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சவுதிஅரேபிய போதகர் ஒருவர் இலங்கை முஸ்லீம் ஒருவருக்கு போதிக்கும் வீடியோ குறித்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் காணப்படும் விடயங்கள் குறித்து ஏசிஜேயூ அமைப்பின் தலைவரிடம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். குறிப்பிட்ட வீடியோவில் சவுதிஅரேபிய மதகுரு இஸ்லாமை கைவிடுதல் கொலை செய்தல் போ…
-
- 0 replies
- 337 views
-
-
கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால் தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால்தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது. எனவே, அவ்வொப்பந்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இந்தியா அரசாங்கத்தால் வடக்கு, கிழக்குக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 4 ஆயிரம் வீடுகளை மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான், இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மலையகத்துக்கு பெற்றுக்கொடுத்தார். திட்டம் சிறப்பாக செய்யப்பட்டுவந்தது. ஆனால் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் சிலர் அத…
-
- 0 replies
- 307 views
-
-
மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து ஆராயுமாறு பிரதமர் அறிவுறுத்தல் by : Yuganthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/mahindha-1.jpg மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல், விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக தேர்தலை நடத்துவ…
-
- 0 replies
- 309 views
-
-
கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர். பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளனர். தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு – Thin…
-
- 26 replies
- 2.1k views
-
-
மகாகவி பாரதியாரின் 138வது பிறந்த தின நினைவு நிகழ்வு December 11, 2020 மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள பாரதியார் நினைவுச் சிலை அடியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது பாரதியார் நினைவுச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதியார் நினைவுத் தூபிக்கு இந்திய துணைத் தூதுவர் மலர்மாலை அணிக்க, தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் பாரதியாருக்கு மலர்மாலை அணிவித்தனர். இதன் பின்னர் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. …
-
- 0 replies
- 555 views
-