ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்! என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் கிழக்கு மாகாண ஆளுனர் வெளிடப்படவுள்ளதாக கூறும் வர்த்தமானி குறித்து எழுந்துள்ள சிக்கல் நிலைமைகளை கலந்துரையாடுவதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் அநு…
-
- 0 replies
- 534 views
-
-
தெஹிவளையில் வைத்து.. ரிஷாட் கைது முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிஷாட் பதியுதீன் தெஹிவளையில் வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷாட் பதியுதீன் தற்போது குற்றப்புலனாய்வுக் காவலில் உள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிஷாட்டை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குற…
-
- 23 replies
- 2.6k views
-
-
20 குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகரால் அறிவிக்கப்படவுள்ளது. அமைச்சரவை அனுமதிப் பெற்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் கடந்த 10 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
வடக்கில் இராணுவ சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும்
-
- 3 replies
- 928 views
-
-
தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் – சிவசக்தி ஆனந்தன் 34 Views “இலங்கை தமிழர்களை இனியும் இந்தியா பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், அரசியல் தீர்வொன்றை நிலைபெறச் செய்வதற்கு உடனடியானதும் காத்திரமானதுமான தலையீடுகளை இந்தியா செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33ஆண்டுகளைக் கடந்துள்ளபோதும் தற்போது வரையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் மாறிமாறி ஆட்சிப்பீடமேறிய ஆட்சியாளர்கள் அலட்சியம் ச…
-
- 1 reply
- 852 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி பி (B) வலயத்தில் வெளியாறுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதானது தமிழ் மக்களின் இனப்பரம்பலை திட்மிட்டு குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுளே இடம்பெற்று வருகின்றன. மகாவலி பி வலயத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களே இவ்வாறு அ…
-
- 1 reply
- 796 views
-
-
‘ஜனநாயகத்திற்கு அநீதியான இருபதாவது திருத்தத்தை கைவிடுங்கள்’ October 20, 2020 Share 28 Views ஜனநாயகத்திற்கு அநீதியான, சுயாதீனத்திற்கு விரோதமான இருபதாவது திருத்தத்தை கைவிடுங்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்த வேண்டுகோளில், இலங்கையில் இரண்டு மொழிகளைப் பேசுகின்ற மூவின மக்கள் வாழுகின்றனர். காலத்திற்கு காலம் அரசியல் ரீதியாக கொண்டுவரப்படும் சட்டங்களும், திருத்தங்களும் சமூக மட்டத்தில் சவாலுக்கு உட்பட்டு பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும் வகையில் அமைந்து…
-
- 0 replies
- 661 views
-
-
நாடாளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல – சுகாதார அமைச்சர் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/05/Pavithra-Wanniarachchi1.jpg கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியின் படி நாடாளுமன்றம் ஒரு பொது இடமாக கருதப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது என்பதால் மன்றத்தின் நடவடிக்கைகள் எந்தவித தடையும் இல்லாமல் தொடர முடியும் என குறிப்பிட்டார். நாடாமன்ற உறுப்பினர்கள் சுகாதார வழிகாட்ட…
-
- 0 replies
- 400 views
-
-
பயிர்செய்கை நிலங்களை விடுவிக்க நடவடிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற விளை நிலங்களை விடுவித்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் நேற்று (19) வனப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ய…
-
- 0 replies
- 571 views
-
-
யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – தெரிவத்தாட்சி அலுவலகர் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/05/manivanan.jpg யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமை முடிவுறுத்தப்பட்டுள்ளது என அந்தக் கட்சியின் செயலாளரால் கடந்த 13ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 535 views
-
-
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங் கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் நேற்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் திகதி வரை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை விளக்கமறியலில் வைக்கு மாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்றிரவு ரிசாத் பதியுதீன் அனுப்பப்பட்டுள்ளார்.சுகாதார அறிவுறுத்தல்களின் அடிப்…
-
- 0 replies
- 409 views
-
-
நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை – கலையரசன். October 19, 2020 நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை சனாதிபதி தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என தவராசா கலையரசன் தெரிவித்தார்.இன்று பொத்துவில் ஊறணி அறநெறி பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிவநெறி அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.மேலும் தெரிவிக்கையில்.. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எமது இன ரீதியான விகிதாசாரம் பின் நோக்கியே செல்கின்றது. அதிலும் கிழக்கு மாகாணம் கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இவற்றிற்கான காரணம் யுத்த சூழலாக குறிப்பிட்டோம். தற்காலத்தில் அரசாங்கம் எடுக்கும் …
-
- 0 replies
- 396 views
-
-
முரளியின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்கவேண்டாம் என்று பலராலும் வற்புறுத்தப்பட்ட வந்த நிலையிலும், தான் அப்பட்டதில் நடிக்கப்போவதாக விஜய் சேதுபதி அறிவித்த சில மணிநேரத்தில் முரளி தான் சேதுபதியை தனது திரைப்படத்திலிருந்து விலத்திவிட்டதாக அறிவித்ததையடுத்து, சேதுபது விலகிக்கொண்டுள்ளார். தனது வாழ்க்கையினை இளையதலைமுறையினர் பார்த்து பயன்பெறவேண்டும் என்பதற்காகவே அதனைப் படமாக எடுக்கச் சம்மதித்ததாகவும், இதனாலேயே தமிழ்நாட்டில் ஒரு சிறந்த நடிகரான விஜய் சேதுபதியினை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் தன்மீது தவறான புரிதலினை உடையோர் செய்துவரும் விஷமப் பிரச்சாரத்தினால் சேதுபதியின் எதிர்காலம் பாதிப்படையலாம் என்பதாலேயே இப்படத்திலிருந்து அவரை விலகும்படி தான் கோரியதாகவும் முரள…
-
- 0 replies
- 409 views
-
-
இந்தியா இலங்கைக்கு வழங்கும் உதவியில் வடக்கு கிழக்கில் பௌத்தமத வழிபாட்டிடங்கள் அமைக்கக் கூடாது: மோடிக்கு விக்னேஸ்வரன் கடிதம் 28 Views இந்தியா இலங்கைக்கு வழங்க உத்தேசித்துள்ள 15 பில்லியன் பண உதவியில் வடக்கு கிழக்கில் பௌத்தமத வழிபாட்டிடங்கள் அமைக்கப்படக் கூடாது என்ற உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் அறிவது, அண்மையில் எமது நாட்டின் பிரதமரிடம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டம…
-
- 0 replies
- 384 views
-
-
62 சந்தேக நபர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்க நீதி மன்று உத்தரவு 40 Views இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 08பேர் இன்று மட்டக்களிப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல பாகங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றுக்கு அழை…
-
- 0 replies
- 362 views
-
-
தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சந்தித்துப் பேச்சுவார்த்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனை அவரது நல்லூரிலுள்ள வாஸஸ்தலத்தில் நேற்றிரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.சி.வி.விக்னேஸ்வரனின் நல்லூரிலுள்ள வாஸஸ்தலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது பொதுவான அரசியல் விடயங்களே பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அரசியலில் கடந்த காலத்தில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் இவ்வாறு சந்தித்து, பேசியிருப்பது தமிழ் அரசியல் பரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் காலத்தில் தமிழ் அரசியல் களத்தில…
-
- 3 replies
- 559 views
-
-
தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் தீர்வும் தானாக வந்து சேரும்.! - ராஜபக்ச அரசு அறிவுரை.! இலங்கை மூவினத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. இங்கு தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்." - இவ்வாறு சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாட்டின் அரசமைப்பை மதித்து - அரசை மதித்துத் தமிழர்கள் நேர் வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புகளையும் தமிழர்கள் சந்திக்க வேண்டி வந்திருக்கமாட்டாது. நாம் எமது படை வ…
-
- 6 replies
- 1.1k views
-
-
மன்னாரில் நடத்த முடியாதென்றும் தெரிவித்திருந்தார். பின்னர், அவரையும் சுமந்திரன் வளைத்துப் போட்டார். ஆனால், சுமந்திரன் விடுகிறாரில்லை“ என கட்சியின் தலைமையிடம் சரணடைந்ததாக, தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார். https://www.pagetamil.com/151665/
-
- 2 replies
- 1.5k views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டால் நுகர்வோருக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட முடியாமல் போவதுடன் எதிர்வரும் காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயர்வடைவதற்கான அபாய நிலைமை உருவாகும் என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கலாநிதி என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். “கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் என தங்களை அடையாளப்படுத்திய…
-
- 56 replies
- 5.6k views
-
-
பௌத்த மத தலைவர்களின் ஆதரவுடன் 20வது திருத்தத்தை கொண்டுவர வலியுறுத்தல் 35 Views பௌத்தமத தலைவர்களின் ஆதரவுடனேயே 20வது திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என முருத்தெட்டுவாவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். வேறு எவருடைய செல்வாக்கு காரணமாகவும் 20வது திருத்தத்தை கொண்டுவந்தால் பௌத்தமத தலைவர்கள் அதற்கு அனுமதியளிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். பௌத்த மகாசங்கத்தின் ஆலோசனையை அங்கீகாரத்தை பெற்று 20வது திருத்தத்தினை கொண்டுவரமுயன்றால் பௌத்தமகாசங்கம் பதில்களை வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கத்தினை அதிகாரத்துக் கொண்டுவந்த மக்கள் மறக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், புதிதாக உள்வாங்கப் பட…
-
- 0 replies
- 465 views
-
-
பிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு Princiya Dixci / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 12:45 http://static2.tamilmirror.lk/assets/uploads/image_3c2b7956db.jpg எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிரான வழக்கு விசாரணைகள், நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள், நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காதமையால், இவ்வழக்கு விசார…
-
- 0 replies
- 490 views
-
-
வவுனியா மாவட்ட மாகாண பிரதி விவசாய பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய அ. சகிலாபானு பதவி உயர்வுடன் மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் குமுது பெரேராவால் இந் நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பணியாற்றிய இவர் வவுனியா விவசாய கல்லூரியுடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா பண்ணையில் பெருமளவு மோசடியுடன் நட்டத்தில் இயங்குவதாக கணக்கு காண்பிக்கப்பட்டு வந்த நிலையில் சகிலா பானு பதவியேற்ற பின்னர், வவுனியா பண்ணையை இலாபமீட்டும் வெற்றிகமான பண்ணையாக்கினார். அங்கு இடம்பெற்ற மோசடி பற்றிய விபரங்களை, வடக்கு விவசாய திணக்கள…
-
- 0 replies
- 691 views
-
-
இந்தியவீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்திய வீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, குறுகிய காலப்பகுதிக்குள் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு பணிகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபத…
-
- 1 reply
- 424 views
-
-
யாழில் சமூகத் தொற்றென பதற வேண்டாம் – கேதீஸ்வரன் October 19, 202004 யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்று என மக்கள் அச்சமடையத் தேவையில்லை. எனினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றுவது அவசியம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், “புங்குடுதீவில் கொரோனா தொற்றென இனங்காணப்பட்ட பெண் பயணித்த பஸ்ஸின் நடத்துனருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் மக்கள் சமூகத்தொற்று என குழப்பமடையத் தேவையில்லை. ஏனெனில் ஏற்கனவே புங்குடுதீவு பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடனேயே அவருடன் பயணித்த அல்லது அவருடன் பழகிய அனைவரையும் நாங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளோம். அவ்வாறு தனிமைப்படுத்…
-
- 0 replies
- 406 views
-
-
இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் அயோத்தி ஶ்ரீ ராமர் கோயிலுக்கான அடிக்கல்! அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோயிலுக்கான அடிக்கல் ஒன்றினை இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராமாயணத்தில் போற்றப்படும் இலங்கையின் கோயிலாகவே நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயம் காணப்படுகிறது. அந்த ஆலயம் புனர்நிமாணம் செய்யப்படும்போது குறித்த கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் பின்பு இதுவரை பூஜிக்கப்பட்ட ஒன்றெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் அயோத்தியில் கட்டப்படும் ஶ்ரீ இராமணின் கோயிலுக்கான அடிக்கற்களில் ஒன்றாக இதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் மற்றும் ஹாவாஹெலிய ஶ்…
-
- 0 replies
- 405 views
-