Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. . கருவாட்டுக் குழம்பு. தேவையான பொருட்கள்: சதையுள்ள கருவாடு 700 கிராம், கத்தரிக்காய் 300 கிராம், பச்சை மிளகாய் 6, வெங்காயம் 2, கடுகு 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, மிளகாய்த் தூள் 2 - 3 மேசைக்கரண்டி, தாழிக்க எண்ணை, பழப்புளி கொஞ்சம், விரும்பினால் தக்காளிப் பழம் போடலாம். செய்முறை: கருவாட்டை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு சுடு தண்ணீர் ஊற்றி, ஒரு மணித்தியாலம் ஊற விடவும். பின் அதன் தோலை நீக்கி வடிவாக இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவினால் அதில் உள்ள உப்பு போய் விடும். கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும். இனி.... நீளமாக அரிந்த வெங்காயத்தை பாத்திரத்தில்…

  2. அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம் -3 வணக்கம் கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நி…

    • 14 replies
    • 2k views
  3. யாராவது போன்டா செய்யும் மறையை இணைக்கவும்..நன்றி . பி.கு போன்டா செய்யும் முறை ஏற்க்கனவே இங்கு இணைக்கப்பட்டதுதான்.ஆனால் ஒரே எண்னெய் பிடிப்பாய் உள்ளது அந்த முறை.

  4. காளான் பஜ்ஜி தேவையான பொருட்கள்: பட்டன் காளான் - 15 கடலை மாவு - 100 கிராம் சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா - 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். செய்முறை: காளானை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து எண்ணையில் பொரித்து எடுக்க சுவையான பஜ்ஜி ரெடி. காலிஃப்ளவரையும் துண்டுகளாக்கி உப்பு நீரில் சுத்தம் செய்து, அரை வேக்காடாக வேக வைத்து, நீரை வடித்து விட்டு, இதேபோல் …

  5. முட்டைகோசுப் பொரியல் தேவையான பொருட்கள்: முட்டைகோசு - 1 தேங்காய் - 1 தக்காளி - 50 கிராம் வெங்காயம் - 25 கிராம் பூண்டு - 10 கிராம் மிளகு - அரைத்தேக்கரண்டி சீரகம் - அரைத்தேக்கரண்டி இஞ்சி - ஒரு துண்டு கொத்தமல்லி - ஒரு கட்டு மிளகாய்ப்பொடி - ஒரு மேசைக்கரண்டி புளி - 5 கிராம் சர்க்கரை - ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி - அரைத்தேக்கரண்டி எண்ணெய் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: தேங்காயை உடைத்துத் துருவி பாதியை எடுத்து வைத்து விட்டு மீதியைப் பால் பிழிந்து கொள்ள வேண்டும். கொத்தமல்லியை வேரை நீக்கி, அத்துடன் எடுத்து வைத்த தேங்காய் துருவல், மிளகு, சீரகம், உரித்த பூண்டு இதனுடன் இஞ்சியையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள…

  6. மணத்தக்காளி வத்தக் குழம்பு தேவையான பொருள்கள்: புளி – எலுமிச்சை அளவு தேங்காய் – அரை மூடி நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன் மணத்தக்காளி வற்றல் – 2 டேபிள்ஸ்பூன் * உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு வெல்லம் – சிறிது (விரும்பினால்) தாளிக்க: நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 6,7 துவரம் பருப்பு – 3 டீஸ்பூன் பெருங்காயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உளுந்து அப்பளம் – 1 மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை: * புளியை 2,3 தடவைகளாக நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். * தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து விழுது மாதிரி அரைத்துக் கொள்ளவும். …

  7. சுவையான புளிச்ச கீரை துவையல்.. தேவையான பொருட்கள் * புளிச்ச கீரை - ஒரு கட்டு * காய்ந்த மிளகாய் - 10 * முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி * பச்சை மிளகாய் - 3 அல்லது 4 * பூண்டு - 7 அல்லது 8 பல் * வெங்காயம் - ஒன்று * வெந்தயம் - அரை தேக்கரண்டி * உப்பு - தேவைக்கேற்ப * எண்ணெய் - தேவைக்கேற்ப * வதக்கி சேர்க்க: * காய்ந்த மிளகாய் - 6 * பூண்டு - 6 பல் செய்முறை: புளிச்ச கீரையை இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். மேற் சொன்ன மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி…

  8. சிம்பிள் வெஜ் புலாவ் தேவையான பொருட்கள் ; சீரக சம்பா பச்சை அல்லது பாசுமதி அரிசி - அரைகிலோ எண்ணெய் - 50- மில்லி நெய் - 50 மில்லி இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் ஏலம் - 2 கிராம்பு - 2 பட்டை - 2 சிறியதுண்டு பிரியாணி இலை அல்லது ரம்பை இலை - சிறிது புளிக்காத மோர் - ஒரு கப் வெங்காயம் - 1 தக்காளி - சிறியது-1 மிளகாய் -2 கேரட்,உருளை,பீன்ஸ்,பச்சை பட்டாணி - சேர்ந்து கால் கிலோ மல்லி புதினா - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை காய்கறிகளை நறுக்கி வைக்கவும்,அரிசியை அலசி குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும். புலாவ் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் காயவிட்டு ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்க்கவும்.வெங்காயம் சிவறாமல் நன்கு வதக்கி…

  9. பருப்பு ரசம்.. தேவையானவை.. முழு பூண்டு - 1 வெங்காயம் - 2 தக்காளி - 1 மிளகுதூள்- 3 ஸ்பூன் (காரம் தேவைபடுபவர்கள் கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்) காய்ந்த மிளகாய் - 5 பருப்பு - 1 டம்பளர்.. தாளிக்க; கடுகு - 1 ஸ்பூன்.. உளுந்து - 1 ஸ்பூன் கறி வேப்பிலை சிறிதளவு. செய்யும் முறை: பருப்பை ஒருபாத்திரத்தில் நீர் விட்டு.. நன்றாக குக்கரில் வேகவைத்து .. சூடு ஆறியதும் மிக்ஸியில் அடித்து கூழானதும்.. தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.. ஒரு வாணலில் எண்ணை விட்டு கடுகு போட்டு தாளித்து அதனுடன் வெட்டிய வெங்காயம்.. தக்காளி.. நசுக்கிய பூண்டு..கிள்ளிய காய்ந்த மிளகாய்.. மற்றும் மிளகுதூளை இட்டு நனறாக வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.. பிறகு பருப்பு கடையலை…

  10. சுவையான பீர்கங்காய் கடையல்.. தேவையானவை: பீர்க்கங்காய் -1 வெங்காயம்- 2 பூண்டு -1 பல் தக்காளி - 2 துவரம் பரும்பு - 1 1/2 டம்ளர் பச்ச மிளகாய் - 6 காரம் அதிகமாக தேவைபடும் ஈழத்தோழர்கள் இன்னும் தேவை படும் அளவுக்கு சேர்த்து கொள்ளலாம் (குறிப்பாக தோழர் தமிழ்சிறி ) தாளிக்க கடுகு - ஸ்பூன். எண்ணைய் - ஸ்பூன் உளுந்து - ஸ்பூன். கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு. செய்முறை: பீர்கங்காயையும் வெங்காயத்தினையும் நன்றாக கழுவி துண்டு துண்டாக நறுக்கி.. வைத்து கொள்ளவும் பிறகு ஒரு முழு பூண்டை உரித்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி..அதில் நுனி கிள்ளிய பச்சை மிளகாய் மற்றும் துவரம் பருப்பினை இட்…

  11. வெண்டைக்காய் காரகுழம்பு தேவையானப் பொருட்கள்: வெண்டைக்காய் -250 கிராம் பூண்டு -5 பற்கள் கார குழம்பு சாம்பார் பொடி -- 2 ஸ்பூன் புளி -- 1 உருண்டை வெங்காயம் -- 10 தக்காளி -- 1 நல்லெண்ணைய் -- 3 ஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன் வெந்தயம் -- 1/2 டீஸ்பூன் பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை -- அரைத்த தேங்காய் -- 3 ஸ்பூன் சீரகம்,மிளகு -- 1 1/2 டீஸ்பூன் செய்முறை: * தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும் தேங்காய்,சீரகம்,மிளகை நைசாக அரைக்கவும் * வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயம்,பெருங்காயம் போட்டு கறிவேப்பிலை ,போட்டுதாளிக்கவும் * வெங்காயம் போட்டு வத…

  12. சேமியா கிச்சடி தேவையானப் பொருட்கள்: 4 பேருக்கு சேமியா : 350 கிராம் ம.தூள் : ஒரு சிட்டிகை வெங்காயம் : ஒன்று ப.மிளகாய் : 2 தக்காளி : 2 எண்ணெய் : தே.அளவு கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, க.பருப்பு : தலா ஒரு டீஸ்பூன் செய்முறை: கறிவேப்பிலை, தக்காளி வெங்காயம், ப.மிளகாயை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். ஐந்து டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். மற்றொரு அடுப்பில் கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனவுடன் தக்காளி சேர்த்துக் கிண்டவும். சிறிது வெந்தவுடன் சேமியாவைப் போட்டு கிண்டவும். தீயை சிம்மில்…

  13. Started by ரதி,

    இங்கு யாழில் அநேகமானோர் மரக்கறி சாப்பிடும் சைவக்காராக உள்ளீர்கள்...ஏன் அசைவத்தை தவித்தீர்கள் எனத் தெரியவில்லை சில நேரம் கோழிக் கடையில வேலை செய்து அசைவத்தின் மீது வெறுப்பு வந்து விட்டதோ தெரியவில்லை...இந்த சாதம் நான் மரக்கறி சாப்பிடும் நாட்களில் செய்கிறனான்...தனிய இருப்பவர்கள் அல்லது அவசரமாக சமையல் செய்ய இருப்பவர்கள் விரும்பினால் செய்து பார்க்கலாம் சத்தானதும்,சுவையானதும் ஆகும் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். செய்யத் தேவையான பொருட்கள்; பாசுமதி அரிசி கொஞ்சம்[அதிக அரிசி போட்டால் அதிக சாதம் வந்து விடும் ஆகவே அளவாகப் போடுங்கள் மைசூர் பருப்பு அரிசிக்கு ஏற்றளவு புரோசின் மரக்கறி கோளி புளவர்,புரோக்களி,ஸ்பினாச் விரும்பினால் கரட் மஞ்சள் சிறிதளவு உப்பு தேவையான அளவு …

    • 26 replies
    • 6.4k views
  14. புதினா சாதம் தேவையானவை வடித்த சாதம் - 1 கப் மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப்ப அரைக்க புதினா - 1 கட்டு கொத்தமல்லி இலை - கொஞ்சம் பச்சை மிளகாய் – 2 இஞ்ஞி - 1 சின்ன துண்டு லெமன் ஜூஸ் - ½ தே.க தாளிக்க எண்ணெய் - 1 தே.க கடுகு - ½ தே.க மிளகாய் வற்றல் - 1 பெருங்காய தூள் - ¼ தே.க கறிவேப்பிலை - கொஞ்சம் செய்முறை சாதத்தை நல்ல உதிரியாக வடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து அரைத்துள்ள மசாலவை போட்டு உப்பு சேர்த்து நல்ல பச்சை வாசனை போக வதக்கவும். வடித்துள்ள சாதத்தை அதில் கலந்து நல்ல கிளறவும். லெமன் ஜுஸ் விட்டு, கொஞ்சம் நெய்யும் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். நல…

  15. சமோசா-சுவையான திரையரங்கு இடைவேளை உணவு... ஸ்டஃப்பிற்கு தேவையான பொருட்கள்(சமோசாவின் உள்ளிருக்கும் கறி) உருளைக்கிழங்கு - 4 பட்டாணி - 1/2 கப் முந்திரி பருப்பு-25 கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி மிளகு - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவைக்கு வத்தல் தூள் - 1/4 தேக்கரண்டி மாங்காய் பவுடர் - 1 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி நெய் - 3 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 4 கப் (பொரிக்க) செய்முறை மிக சிறியதாக நறுக்கிய கேரட் உருளைக்கிழங்கையும்,பட்டணியையும் சேர்க்கவும்.சிறிது நேரம் கிளரி அதில் கரம் மசாலா,மிளகு,வத்தல் தூள்,மாங்கய் பவுடர்,சீரகத்தூள் சேர்த்து கலந்து விடவும் அத்துடன் கொத்த…

  16. வேர்கடலை சட்னி வேர்க்கடலை சட்னியை விரைவாகவும் ருசியாகவும் செய்து இட்லி, தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.. தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்து தோல் உரித்தது) தே‌ங்கா‌ய் - 4 ப‌த்தைக‌ள் காய்ந்தமிளகாய் - 4 எண்கள் உப்பு - தேவைக்கேற்ப பு‌ளி - ப‌ட்டா‌ணி அளவு தா‌ளி‌க்க - கடுகு, உளுத்தம் பருப்பு, க‌றிவே‌ப்‌பிலை, எண்ணெய் - 3 டீஸ்பூன் செய்முறை: ஒரு கடா‌ய் வை‌த்து அ‌தி‌ல் ‌சில சொ‌ட்டு எ‌ண்‌ணெ‌ய் ‌வி‌ட்டு கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய்களை‌ப் போ‌ட்டு வறு‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். தே‌ங்காயை ப‌ல்ப‌ல்லாக நறு‌க்‌கி ‌மி‌‌க்‌சி ஜா‌ரி‌ல் போடவு‌ம். அ‌த்துட‌ன் வேர்க்கடலை, வறு‌த்த மிளகாய், உப்பு, பு‌ளி அனைத்தை…

  17. வாழைத்தண்டு கறி தேவையான பொருட்கள் : வாழைத்தண்டு - ஒரு அடி தண்டு கடுகு - கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன் வற்றல் மிளகாய் - இரண்டு உப்பு - தேவையான அளவு கறிவே‌ப்பிலை - ஒரு கொத்து தேங்காய்த் துருவல் - ஒரு மூடி பயத்தம் பருப்பு - இரண்டு கைப்பிடி அளவு செய்முறை : வாழைத் தண்டை மேல் புறமாக லேசாக சீவிவிட்டு, வட்ட வடிவில் துண்டுகளாக்கவும். பின்னர் நார் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய தண்டு கருத்துப் போகாமல் இருக்க, மோர் கலந்த நீரில் வாழைத் தண்டைப் போடலா‌ம். இ‌ல்லையெ‌ன்றா‌ல் சாதாரண த‌ண்‌ணீ‌ரி‌ல் போடலா‌ம். கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்ததும் நறுக்கிய வாழைத் தண்டைப் ப…

  18. புதினாத் துவையல் தேவையானவை புதினா இலை - 2 க‌ப் தேங்காய் - 1 துண்டு பச்சை மிளகாய் - 3 உளு‌த்த‌ம் பரு‌ப்பு - 1 கை‌ப்‌பிடி பு‌ளி - ப‌ட்டா‌ணி அளவு உப்பு - தேவைக்கேற்ப எ‌ண்ணெ‌ய் - ‌‌சி‌றிது கடுகு - ‌தா‌ளி‌க்க செ‌ய்யு‌ம் முறை புதினா இலையை ஆ‌ய்‌ந்தெடு‌த்து, ஒரு வாண‌லி வை‌த்து எ‌ண்ண‌ெ‌ய் ஊ‌ற்‌றி வத‌க்‌கி‌ எடு‌த்துக் கொ‌ள்ளவு‌ம். அதே வாண‌லி‌யி‌ல் ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி உளு‌த்த‌ம் பரு‌ப்பையு‌ம் வறு‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். தே‌ங்காயை ‌வி‌ல்லைகளாக‌ப் போ‌ட்டு வத‌க்‌கி எடு‌த்து வை‌க்கவு‌ம். ‌மி‌க்‌ஸி ஜா‌‌ரி‌ல் தே‌ங்கா‌ய் ‌வி‌ல்லை, பரு‌ப்பு, பு‌தினா இலை, ப‌ச்சை ‌மிளகா‌ய், ‌சி‌றிது பு‌ளி, உ‌ப்பு போ‌ட்டு கொரகொரவென…

    • 5 replies
    • 2.7k views
  19. கே‌ழ்வரகு கூ‌ழ் கூழுக்கும் தமிழர் வாழ்வுக்கும் உள்ள தொடர்பு பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை.. இன்றும் எங்கள் வயலில் வேலைக்கு வருபவர்கள் மதிய உணவாக விரும்பி கேட்பது மோரில் கரைத்த கூழ்யே ஆகும்.. எளிமையான சத்து நிறைந்த உணவு இது ஆகும்.. தேவையானவை கே‌ழ்வரகு மாவு - 3 க‌ப் ப‌ச்ச‌ரி‌சி ரவை - 2 க‌ப் உ‌ப்பு - தேவையான அளவு த‌யி‌ர் - 1 க‌ப் செ‌ய்யு‌ம் முறை முத‌ல் நா‌ள் இரவு கே‌ழ்வரகு மா‌வி‌ல் உ‌ப்பு‌ப் போ‌ட்டு தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கைகளா‌ல் ந‌ன்கு கரை‌த்து மூடி வை‌த்து ‌விட வே‌ண்டு‌ம். மறுநா‌ள் மாலை‌யி‌ல், ஒரு பெ‌ரிய பா‌‌த்‌திர‌த்‌தி‌ல் ப‌ச்ச‌ரி‌சி ரவையை கழு‌வி த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி வேக வை‌க்க வே‌ண்டு‌ம். ப‌ச்ச‌ரி‌சி வெ‌ந்து வர…

  20. Started by ரதி,

    விடுமுறை நாளில் வித்தியாசமான சாப்பாட்டை சமைத்து உண்டு மகிழுங்கள்...இதோ உங்களுக்காக யெலோ ரைஸ்[மஞ்சல் சோறு] அதோடு தொட்டுக் கொள்ள கத்தரிக்காய் பாகி,கோழிக்கறி,அவித்த முட்டை செய்யத் தேவையான பொருட்கள்; அரிசி[பாசுமதி] வெங்காயம் கறுவா,ஏலக்காய்.கிராம்பு உள்ளி மஞ்சல் கருவேப்பிலை,றம்பை எண்ணெய் உப்பு வெஜிடபிள் stock அல்லது கோழி stock இனி செய்முறையைப் பார்ப்போம்; பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் விடவும்... சூடானதும் வெட்டிய வெங்காயம்,உள்ளி போட்டு வதக்கவும்...வதங்கி பொன்னிறமாக வந்ததும் வாசனைத் திரவியங்களைப் போடவும் அத்தோடு கருவேப்பிலை,றம்பையை சேர்க்கவும் பின்னர் அரிசியையும்,மஞ்சலையும் போட்டு வெஜிடபிள் அல்லது கோழி அளவாக விட்டு பதமாக எடுக்கவும். இதற்கு தொ…

  21. வடை கறி தேவையானவை: கடலைபருப்பு 1 கப் துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன் தக்காளி 3 வெங்காயம் 2 பூண்டு 4 பல் இஞ்சி 1 துண்டு மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன் உப்பு,எண்ணைய் தேவையானது கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது) செய்முறை: கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன் தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும். அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும். ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.அதனுடன் மசாலாபொடி,உப்பு,இரண்டு கப் தண்ணீர் கலந்து வேகவைக்கவேண்டும். பின்னர் அரைத்து வேகவைத்த மாவை கலந்து …

  22. பரோட்டா தேவையான பொருள்கள் மைதா மாவு உப்பு எண்ணெய் செய்முறை: முதலில் மைதா மா‌வி‌ல் தேவையான அள‌வு உப்பு சேர்த்து, கொ‌ஞ்ச‌ம் கொ‌ஞ்சமாக தண்ணிர் விட்டு சப்பாத்தி‌க்கு மாவு ‌பிசைவது போ‌ல் ‌பிசை‌ந்து கொ‌ள்ளவு‌ம். கொ‌ஞ்ச‌ம் தளதளவெ‌ன்று இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌பி‌ன்ன‌ர் அரை மணி நேரம் ஊற‌வி‌டவு‌‌ம். ஊ‌றிய மாவை உரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்து சப்பாத்தி‌க்கு ‌திர‌ட்டுவது போ‌ல் பெ‌ரிய அள‌வி‌ல் அனை‌த்து ஊரு‌ண்டைகளையு‌ம் ‌எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு திரட்டி‌க் கொள்ளவும். ‌பிறகு கொ‌ஞ்சமாக மைதா மாவை எடு‌த்து ‌சி‌றிது எண்ணெய் ஊற்றி பசைப்போல் செய்து கொள்ளவும். திரட்டி வைத்துள்ள மாவை ஒன்றன் மீது ஒன்று பசைத்தடவி அடுக்க வேண்டும். பிறகு அனைத்தையும் …

  23. புடலங்காய் கூட்டு தேவையான பொருட்கள் * பொடியாக நறுக்கிய புடலங்காய் - 1 கப் * பாசிபருப்பு – 1 / 4 கப் * ரசபொடி – 1 தேக்கரண்டி * மஞ்சள்தூள் - 1 / 4 தேக்கரண்டி * பெருங்காயத்தூள் - 1 / 4 தேக்கரண்டி தாளிக்க * நெய் - 1 தேக்கரண்டி * கடுகு - 1 / 4 தேக்கரண்டி * உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி * சீரகம் - 1 /4 தேக்கரண்டி * வரமிளகாய் - 2 * கருவேப்பிலை - ஒரு கொத்து செய்முறை 1. பாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும். 2. முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் புடலங்காயைப் போடவும். 3. இரண்டும் சேர்ந்து நன்றாக வெந்ததும் மஞ்சள்தூள், ரசபொடி, உப்பு, பெரு…

  24. யாழ் கள உறவுகளே உங்களிள் யாருக்காவது சுவீஸ்லாந்து நாட்டவர்களின் உணவு வகைகளும் அதன் செய்முறைகளும் தெரிந்தால் இந்த திரியின் கீழ் இணைத்து விடவும் மிகவும் உதவியாக இருக்கும்.

  25. திருநெல்வேலி அல்வா தேவையான பொருட்கள்: கோதுமை - 250 கிராம் சர்க்கரை - 500 கிராம் பால் - ஒன்றரை கப் நெய் - 100கிராம் செய்முறை: கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும். நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு, மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே மூன்று மணி நேரம் வைக்கவும். மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு கப் பாலைச் சேர்க்கவும். பாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும். சுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும். கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.